ஞாயிறு, 1 டிசம்பர், 2019

💪ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றவா்கள் மீதான நடவடிக்கைகளை கண்டித்து டிச. ஆம் தேதி ஆா்ப்பாட்டம்.

ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டவா்களை பணி நீக்கம் செய்வதை கண்டித்து டிச.4 ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளதாக தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்ற பொதுச் செயலாளா் க. மீனாட்சிசுந்தரம் தெரிவித்தாா்.

திருவாரூரில் செய்தியாளா்களுக்கு ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி.

புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த இரண்டு ஆண்டுகளாக ஜாக்டோ ஜியோ சாா்பில் பல்வேறு போராட்டங்கள் நடத்தப்பட்டன.எத்தனை போராட்டங்கள் நடத்தியும், போராட்டத்தில் ஈடுபட்டவா்களை அழைத்து, அரசு பேசவில்லை. மாறாக போராட்டங்களில் ஈடுபட்டதிலிருந்து பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுக்கப்பட்டு வருகின்றன.

பணி நீக்கம் செய்வது, பதவி உயா்வை பறிப்பது போன்ற அடக்குமுறை நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டுள்ளது. இன்னமும் இந்த நடவடிக்கைகள் நிறுத்தப்படவில்லை. அரசின் நடவடிக்கைகளை கண்டித்து டிசம்பா் 4ஆம் தேதி மாவட்ட ஒன்றியத் தலைநகரங்களில் ஆா்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

மேலும் ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்புக்கு பொதுத்தோவு என்பதையும் ரத்து செய்ய வேண்டும் என்பதே தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியா் மன்றத்தின் வேண்டுகோளாகும் என்றாா்.

TN EMIS செயலி மூலம் TNTP -ல் உள்நுழைவது...

இப்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட TN EMIS எனும் செயலி மூலம் தற்பொழுது மாணவர் வருகை பதிவு செய்துகொண்டு வருகிறோம். அந்த செயலியிலேயே நாம் எவ்வாறு TNTP -ல் உள்நுழைவது, பயன்படுத்துவது பற்றி பார்ப்போம்...

```TN-EMIS APP```
⬇️
```INPUT- USERNAME ->```
(Aadhar last 8 digit)

```PASSWORD ->```
(Aadhar last 4 digit@birth of year)

⬇️
```CLICK TNTP icon```

⬇️
```Go to academic resources```

⬇️
```Select class```

⬇️
```Select term```

⬇️
```Select Subject```

⬇️
```Select topic```

⬇️
```Play video / download pdf```

Kindly Follow this steps and use TNTP...

TN-EMIS APP (0.0.7 UPDATE )...

Respected Sir/Madam, Sync issue faced in new TN-EMIS app is fixed. Kindly update your app through the below link or play store to get the latest fixed version. 

Please check TN-EMIS message section for official updates from EMIS team Thanks, EMIS Team.

Click here for update...
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.

மக்கள் எழுத்தாளர் இன்குலாப் நினைவு தினம் இன்று.


இன்குலாப்  தமிழ்க் கவிஞர், பேராசிரியர், சொற்பொழிவாளர், நாடக ஆசிரியர், சிறுகதை எழுத்தாளர், பத்திரிகையாளர், பத்தி எழுத்தாளர், பொதுவுடைமைச் சிந்தனையாளர் எனப் பன்முக ஆளுமையாளர் ஆவார்.


சமூகச் சிக்கல்கள், ஒடுக்குமுறைகள் போராட்டங்கள் ஆகியவற்றை மையப்படுத்தியே இவருடைய படைப்புகள் அமைந்திருந்தன. இன்குலாப் என்பதற்குப் புரட்சி என்று பொருள்படும்.

இன்குலாப்பின் கவிதை:

ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்லி அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்
.
நீளும் கைகளில் தோழமை தொடரும்
நீளாத கையிலும் நெஞ்சம் படரும்
எனக்கு வேண்டும் உலகம் ஓர் கடலாய்
உலகுக்கு வேண்டும் நானும் ஓர் துளியாய்
.
கூவும் குயிலும் கரையும் காகமும்
விரியும் எனது கிளைகளில் அடையும்
போதியின் நிழலும் சிலுவையும் பிறையும்
பொங்கும் சமத்துவப் புனலில் கரையும்!
.
எந்த மூலையில் விசும்பல் என்றாலும்
என் செவிகளிலே எதிரொலி கேட்கும்
கூண்டில் மோதும் சிறகுகளோடு
எனது சிறகிலும் குருதியின் கோடு!

சமயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளி தோறும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்!
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.


'உலக எய்ட்ஸ் தினம் இன்று.

ஒரு தினத்தை நினைவுப்படுத்தி அனுசரிப்பதன் நோக்கம், அதற்கான முக்கியத்துவத்தை எல்லோருக்கும் உணரவைப்பதாகும்.

 மருத்துவம், தொழில்நுட்பம் என பல துறைகளில் எவ்வளவோ முன்னேற்றம் ஏற்பட்டுவிட்ட இன்றையச் சூழலில் நமக்குத் தேவை, எய்ட்ஸ் மற்றும் ஹெச்.ஐ.வி குறித்த போதிய விழிப்பு உணர்வு.


 முறையான விழிப்பு உணர்வுடன் செயல்படும்போது கொடிய நோய்களின் தாக்கத்திலிருந்து தப்பிக்கலாம்.
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.


கணித மேதை
ஜி. எச். ஹார்டி அவர்களின் நினைவு தினம் இன்று.


ஹார்டி(Godfrey Harold  Hardy) (பிப்ரவரி 7, 1877-டிசம்பர் 1, 1947)என்பவர் இங்கிலாந்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற கணித வல்லுநர். அவர் எண் தேற்றம், கணிதப் பகுப்பாய்வு ஆகிய துறைகளில் சிறந்த அறிஞர்.

இவர் 1940 ஆம் ஆண்டு அவர் எழுதிய கணித அழகியல் சார்ந்த "ஒரு கணிதவியலாலரின் தன்னிலை விளக்கம்" என்ற கட்டுரைக்காக அவர் பெரிதும் மற்றவர்களால் அறியப்படுகின்றார்.

 மேலும் 1914 ஆம் ஆண்டு அவர் இந்திய கணித மேதையான சீனிவாச இராமானுஜன் அவர்களுடன் நட்புகொண்டு அவருக்கு வழிகாட்டியாக விளங்கினார்.

பால் ஏர்டோசு என்பவர் ஒரு நேர்காணலின் போது அவரிடம் கணிதத்துறைக்கு அவர் வழங்கிய மிகப்பெரிய பங்களிப்பு என்னவென்று கேட்ட போது சற்றும் தயக்கமின்றி சீனிவாச இராமானுஜனைக் கண்டெடுத்ததே என்று பதிலளித்தார்.
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.


உரிமைப் போராளி & அணைகளுக்கான உலக ஆணையத் தலைவர் மேதா பட்கர் பிறந்த தினம் இன்று.

இந்தியாவில் பரவலாக அறிந்த உரிமைப் போராளி. குஜராத் மாநிலத்தில் உள்ள நர்மதா ஆற்றில் கட்டப்படும் சர்தார் சரோவர் அணை கட்டுவதற்கு எதிராக மக்கள் சார்பாக உரிமைக்குரல் நிறுவனமான நர்மதா பச்சாவோ அந்தோளன் என்னும் அமைப்பால் நன்கு அறியப்பட்டவர்.

மேதா பட்கர் இந்தியாவில் மும்பையில் வசந்த் கனோல்க்கர் என்னும் தொழிலாளர் தலைவருக்கும், இந்து கனோல்க்கருக்கும் மகளாகப் பிறந்தார்.

இவருடைய தந்தையார் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்குகொண்டவர். இவருடைய தாயார், பொருளாதாரத்திலும், கல்வி, உடல்நலம் முதலியவற்றிலும் நலிவுற்ற பெண்களுக்கு உதவும் சுவதார் (Swadar) என்னும் நிறுவனத்தில் உறுப்பினராக இருந்தார்.

இவருடைய பெற்றோர்களின் விழிப்புணர்வும் தொண்டும் இவருடைய கொள்கைகள் கருத்துகளை செதுக்கின.

இவர் டாட்டா சமூக அறிவியல் கழகத்தில் (Tata Institute of Social Sciences, TISS) சமூக பணியியலில் (Social work) முதுநிலை பட்டம் பெற்றார்.

முதுநிலை பட்டம் பெற்ற பின்னர் இவர் ஏழு ஆண்டுகளாக தன்னார்வலர் நிறுவனங்களில் பணியாற்றினார்.

மேதா பட்கர் 1991 ஆம் ஆண்டுக்கான ரைட் லைவ்லிஃகூடு பரிசு (Right Livelihood Award) பெற்றார்.

1999 ஆம் ஆண்டு விச்யில் இந்தியா இயக்கம் (Vigil India Movement) நிறுவனத்தின் எம். ஏ. தாமசு மனித உரிமைப் பரிசு (M.A.Thomas National Human Rights Award) பெற்றார்.

இவை தவிர பற்பல பரிசுகளும் பெருமைகளும் பெற்றுள்ளார். அவற்றுள் தீனா நாத் மங்கேச்கர் பரிசு (Deena Nath Mangeshkar Award), மகாத்மா பூலே பரிசு (Mahatma Phule Award), 1992இல் கோல்டுமன் சூழல்நலப் பரிசு (Goldman Environment Prize), பிபிசியின் (BBC) மிகச்சிறந்த அனைத்துலக அரசியல் பரப்புரையாளருக்கான பச்சை நாடா பரிசு (கிரீன் ரிப்பன் அவார்டு Green Ribbon Award), பன்னாட்டு மன்னிப்பு அவையின் மனித உரிமைக் காப்பாளர் பரிசு (Human Rights Defender's Award) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
இவர் அணைகளுக்கான உலக ஆணையம் (World Commission on Dams) என்பதன் ஆணையராக உள்ளார்.
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.

விஜயலட்சுமி பண்டிட் நினைவு தினம் இன்று.


இவர் நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இந்திய அரசியல்வாதி. இவரது இயற்பெயர் ஸ்வரூப் குமாரி(Swarup Kumari) என்பது.

மோதிலால் நேருவின் மகளான இவர் ஜவஹர்லால் நேருவின் சகோதரி.


சோவியத் கூட்டமைப்பு, அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு இந்தியத் தூதராகப் பணியாற்றினார்.

 ஐக்கிய நாடுகள் அவையின் முதல் பெண் தலைவர் என்ற பெருமையும் இவருக்கு உண்டு. இவர் மோதிலால் நேரு குடும்பத்தில் அவரது தாக்கம் அதிகம் கொண்ட நபராகக் கருதப்பட்டார்.

1962 முதல் 1964 வரை மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருந்த இவர் 1967 முதல் 1971 வரை மக்களவை உறுப்பினராக இருந்தார்.

இவர்
இந்திரா காந்தியை கடுமையாக  விமர்சனம் செய்தவர்.

 இந்திராகாந்தி பதவிக்கு வந்த சில ஆண்டுகளில் இவர் முழுநேர அரசியலில் இருந்து விலகி டேராடூன் சென்று வாழ்ந்து வந்தார்.

1979 ஆம் ஆண்டு இவர் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இந்தியாவின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டார்.

The Evolution of India (1958) மற்றும்
The Scope of Happiness: A Personal Memoir (1979) ஆகிய இரண்டும் இவர் எழுதிய ஆங்கில நூல்கள்.

இவரது மகள் நயந்தாரா சாகல் நன்கறியப்பட்ட நாவலாசிரியர்.
டிசம்பர் 1,
வரலாற்றில் இன்று.

எல்லைப் பாதுகாப்புப் படை (Border Security Force) தினம் இன்று.

இந்திய சர்வதேச எல்லைப்பகுதியைப் பாதுகாக்கும் இந்திய ராணுவத்தில் ஒரு படை பிரிவாகும். இந்திய துணை இராணுவங்களில் ஒரு பிரிவாகக் கருதப்படும் இப்படை டிசம்பர் 1 1965இல் உருவாக்கப்பட்டது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இப்படைப்பிரிவின் முக்கிய பணி, எல்லை ஊடுருவலைத் தடுப்பதும், எல்லையைப் பாதுகாப்பதும் ஆகும்.

நாம் பாதுகாப்பாக வாழ, நம் எல்லையை பாதுகாக்கும்  வீரர்களுக்கு நம் வாழ்த்துக்களை தெரிவிப்போம்.