திங்கள், 22 ஜூன், 2020

*☀நாமக்கல் மாவட்டம் -பரமத்தி, எலச்சிபாளையம் மற்றும் எருமப்பட்டி ஒன்றியங்களில் பணியாற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதித்திடல் வேண்டும்...*

நாமக்கல் மாவட்டம் -பரமத்தி, எலச்சிபாளையம் மற்றும் எருமப்பட்டி ஒன்றியங்களில் பணியாற்றும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதித்திடல் வேண்டும்...

*✳நாமக்கல் மாவட்டம் -திருச்செங்கோடு கல்வி மாவட்டம்- பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகள் -முதன்மை கல்வி அலுவலர் நேரடி தலையீடும் , விரைவு தீர்வும் வேண்டுதல் ...*

நாமக்கல் மாவட்டம் -திருச்செங்கோடு கல்வி மாவட்டம்- பரமத்தி ஒன்றிய ஆசிரியர்களின் 3 அம்சக் கோரிக்கைகள் -முதன்மை கல்வி அலுவலர் நேரடி தலையீடும் , விரைவு  தீர்வும் வேண்டுதல் ...

EMIS.Portal-Trainning attended Details of the Teachers 2019-20 to entry in web portal


*🌐ஜூன் 22, வரலாற்றில் இன்று:எழுத்தாளர் டான் பிரவுன் பிறந்ததினம்.*

ஜூன் 22, வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் டான் பிரவுன் பிறந்த தினம் இன்று.

பரபரப்பான புனைவு புதின எழுத்தாளரான டான் பிரவுன் 1964-ஆம் ஆண்டு அமெரிக்காவின் நியூ ஹாம்சைரில் பிறந்தவர். டாவின்சி கோட் என்ற பிரபலமான புத்தகத்தை 2003ஆம் ஆண்டு டான் பிரவுன் வெளியிட்டார். இப்புத்தகம் உலகம் முழுவதும் பல மில்லியன் பிரதிகள் விற்றுத் தீர்ந்தது. இவரது புதினங்களில் வரும் முக்கிய கதாபாத்திரங்கள் சாதாரண நிலையிலிருந்து ஒரு புதிய வாழ்க்கையில் நுழைவது, அற்புதங்கள் நிறைந்த இடங்களுக்கு பயணம் செய்வது, கதையின் 24 மணி நேர கால அளவு ஆகியன டான் பிரவுன் புதினத்தில் பிரத்யேகமாக இடம்பெறுபவை.  இவரது நாவல்களில் டாவின்சி கோட் மற்றும் ஏஞ்சல்ஸ் மற்றும் டெமன்ஸ் ஆகியவை திரைப்படமாக வெளிவந்தன.

*🌐ஜூன் 22, வரலாற்றில் இன்று:வாச்சாத்தி வன்முறைக் கொடுமை நிகழ்ந்த தினம் இன்று.*

ஜூன் 22, வரலாற்றில் இன்று.

வாச்சாத்தி வன்முறைக்  கொடுமை நிகழ்ந்த தினம் இன்று.


இது தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு வன்முறை சம்பவம். சூன் 20-22, 1992 தேதிகளில் வாச்சாத்தி கிராமத்தில் தமிழ்நாட்டு காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் வருவாய்த்துறையினர் அக்கிராம
மக்கள் மீது நடத்திய கொடிய வன்முறை/வன்கொடுமைத் தாக்குதல்களே  வாச்சாத்தி வன்முறை எனப்படுகின்றது.

இந்தியாவின் தமிழ்நாட்டின் தர்மபுரி மாவட்டத்தின் அரூர் அருகே உள்ள ஆதிவாசி பழங்குடியினர் வசிக்கும் வறுமையான குக்கிராமமே வாச்சாத்தி கிராமமாகும்.

1992 சூன் 20ம் தேதி அங்கு 155 வனத்துறையினர், 108 காவல் துறையினர், 6 வருவாய்த்துறையினர் கொண்ட பெரும் படையே புகுந்தது.

 வாச்சாத்தி கிராமத்திற்குள் சந்தனக் கட்டைகளை பதுக்கி வைத்திருப்பதாக கூறி சோதனையிட வேண்டும் என்று கூறி வீடு வீடாக புகுந்து சோதனை செய்தனர்.

பின்னர் வீட்டில் இருந்த பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைவரையும் இழுத்து வந்து ஊரின் மையத்தில் இருந்த பெரிய ஆலமரத்தின் கீழே நிறுத்தினர்.

 பின்னர் கொடுமையாக அவர்களை நடத்தி சரமாரியாக அடித்தனர். பின்னர் 18 பெண்களை அருகே இருந்த வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர்.

காவல் துறையினர், வனத்துறையினர், வருவாய்த்துறை யினரின் இந்த வன்முறைச் செயலில் 34 பேர் உயிரிழந்தார்; 18 பெண்கள் வன்புணரப்பட்டனர். 28 சிறார்கள் பாதிக்கப்பட்டனர்.

கிராம மக்கள் சார்பில் அரூர் சட்டமன்ற உறுப்பினர் அண்ணாமலை 1992ஆம் ஆண்டு அரூர் காவல்நிலையத்தில் புகார் பதிவு செய்தார்.

ஆயினும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க பொதுச்செயலாளர் சண்முகம் மற்றும் நிர்வாகிகள் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

 மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வாச்சாத்தி கிராமத்தில் முழுமையான விசாரணை நடத்தவும், விசாரணைக்கு பின் நடந்த சம்பவங்கள் தொடர்பான அறிக்கையை தாக்கல் செய்யவும் அரசுக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தின் தென் மண்டல ஆணையர் பாமதி தலைமையிலான குழுவினர் வாச்சாத்தி கிராமத்தில் நேரடி விசாரணை நடத்தினர்.

 அதன் அடிப்படையில் விசாரணை அறிக்கை தயார் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த வழக்கின் விசாரணையை சி.பி.ஐ.க்கு மாற்ற வேண்டும் என்று பாதிக்கப்பட்டோர் தரப்பில் இருந்து வற்புறுத்தப்பட்டது. இதனையடுத்து கடந்த 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக கூட்டுக்குழுவை சேர்ந்த அனைவரையும் கைது செய்து சேலம் சிறைக்கு கொண்டு சென்று அடையாள அணிவகுப்பு நடத்தப்பட்டது.

அதே ஆண்டில் இந்த வழக்கின் விசாரணை கிருஷ்ணகிரி சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. பின்னர் 1996-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்பு நீதிமன்றத்தில் சி.பி.ஐ. தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 2006-ம் ஆண்டு சனவரி மாதத்தில் சி.பி.ஐ. தரப்பு வழக்குரைஞர் வாதம் தொடங்கி நடந்தது.

2008-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி இந்த வழக்கின் விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. வாச்சாத்தி பலாத்கார சம்பவத்தின் போது தர்மபுரி மாவட்டத்தில் பணியாற்றிய மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் ஆகியோரை வழக்கில் சேர்த்து விசாரிக்க வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பை சேர்ந்த 7 பேர் தர்மபுரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. தொடர்ந்து உயர் நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. உயர்நீதிமன்றம் விசாரணையை விரைவுபடுத்தி முடிக்க உத்தரவிட்டது.

இந்த வன்செயல் தொடர்பாக 269 பேர் மீது காவல் துறையினர் வழக்குத் தொடர்ந்தனர். இவர்களில் 155 பேர் வனத்துறையினர், இவர்களில் 4 பேர் ஐஎப்எஸ் அதிகாரிகள். 108 பேர் காவல் துறையினர், இவர்களில் ஒரு துணை ஆய்வாளரும் அடக்கம். மற்றும் வருவாய்த்துறையினர் 6 பேர்.

வாச்சாத்தி சம்பவத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 107 பேர். இவர்களில் நால்வர் மட்டுமே ஆண்கள் ஆவர். வழக்கு விசாரணையில் இருந்தபோது குற்றஞ்சாட்டப்பட்டவர்களில் 54 பேர் உயிரிழந்து விட்டனர்.

இந்த வழக்கின் இறுதி கட்ட விசாரணை தர்மபுரி மாவட்ட அமர்வு கோர்ட்டில் சூலை 5,2011 முதல் நடந்தது. இருதரப்பினரின் வாதமும் முடிவடைந்தநிலையில் 19 ஆண்டுகளுக்குப் பின்னர் 2011 செப்டெம்பர் 29 தேதி தீர்ப்பளிக்கப்பட்டது .

வாச்சாத்தி பாலியல் வழக்கில் மொத்தம் உள்ள 269 குற்றவாளிகளில் உயிரோடு உள்ள 215 பேரும் குற்றவாளிகள் எனத் (2011 செப்டெம்பர் 29) தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் பலாத்காரம் செய்ததாக 17 வனத்துறையினர் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டன.

வனத்துறையினர் 17 பேர் மீதான பாலியல் பலாத்கார குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டது. 17 பேரில் 12 பேருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனையும் 5 பேருக்கு 7 ஆண்டு கடுங்காவலும் விதிதக்கப்பட்டது. மற்றவர்களுக்கு ஓர் ஆண்டு முதல் மூன்று ஆண்டு வரை சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னும் சிலர் சில பிரிவுகளில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

*🌐ஜூன் 22,* *வரலாற்றில் இன்று:நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "அகில இந்திய பார்வர்ட் பிளாக்" கட்சியை தொடங்கிய தினம் இன்று(1939).*

ஜூன் 22,
வரலாற்றில் இன்று.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் "அகில இந்திய பார்வர்ட் பிளாக்" கட்சியை தொடங்கிய தினம் இன்று(1939).

*🌐ஜூன் 22, வரலாற்றில் இன்று:இத்தாலி புரட்சி எழுத்தாளர் மாஜினி பிறந்த தினம் இன்று.*

ஜூன் 22, வரலாற்றில் இன்று.

இத்தாலி புரட்சி எழுத்தாளர் மாஜினி பிறந்த தினம் இன்று.

19ம் நூற்றாண்டின் முற்பகுதி. இத்தாலி நாடு தமது இலக்கியப் பணியால் மட்டுமே விடுதலைப் பெற்றுவிட முடியாது என்பதை அனுவப்பூர்வமாக உணர்ந்த எழுத்தாளர் மாஜினி நேரடி புரட்சி இயக்கத்தில் ஐக்கியமாக விரும்பினார். முதலில் கார்போனோரி இயக்கத்தில் மாஜினி சேர்ந்து தீவிரமாக செயல்பட்டார். அவர் எதிர்பார்த்த அளவுக்கு அந்த இயக்கம் புரட்சிகரமாக இல்லாத்தால் ‘இத்தாலிய இளைஞர் சங்கம்’ என்ற புதிய புரட்சிகர அமைப்பை மாஜினி உருவாக்கினார்.

இந்த இயக்கத் தலைவராக இருந்து அவர் மேற்கொணட புரட்சிகர நடவடிக்கைகளைக் கண்டி இத்தாலி அரசாங்கம் மிரண்டு போனது. மாஜினியைக் கைது செய்து ஆறு மாத காலம் சிறையில் தள்ளியது. ஆறு மாத சிறை வாசத்திற்குப் பின் மாஜினி இத்தாலியில் இருக்கக் கூடாது என்று அரசாங்கம் நிபந்தனை விதித்தது. மாஜினி மார்க்சேல்சுக்கு சென்றார்.

மாஜினி சிறையில் இருந்த ஆறு மாத காலத்தில் மிகப் பெரிய புரட்சியை உருவாக்க பல செயல் திட்டங்களை மனதுக்குள் வரைந்து வைத்திருந்தார். பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரியா ஆகிய மூன்று நாடுகளும் இத்தாலியை ரோம், நேப்பிள்ஸ், மிலான் என்று மூன்று பகுதிகளாகப் பிரித்து தங்களுக்குள் பங்கு போட்டு அடக்கியாண்டு வந்தன.

உலகின் மிகப் பெரிய வல்லரசுகளான அந்த நாடுகளிடமிருந்து இத்தாலியைக் காப்பாற்றுவதென்பது சாதாரணப் பணியல்ல என்று மாஜினி புரிந்து வைத்திருந்தார். ஆகையால் இத்தாலி சென்று ஒரு கொரில்லாப் படையை உருவாக்க வேண்டும் என்று போனார். அங்கே ஒரு புதிய பத்திரிக்கையையும் தொடங்கி புரட்சிகரமான கட்டுரைகளை எழுதினார் மாஜினி. இத்தாலியின் வாலிபப் பட்டாளம் மாஜினியின் புரட்சிகர எழுத்துக்களால் ஆட்சியாளர்கள் மீது பாயத் தொடங்கின.

மாஜினி துவங்கிய புரட்சித்தீ ஆட்சியாளர்களை சினம் கொள்ளச் செய்தது. மாஜினியின் புரட்சிப்படை வீரர்கள் ஆங்காங்கே கைது செய்யப்பட்டனர். மாஜினியைப் பிடித்து தூக்கிலிட்டால் மட்டுமே தங்களது ஆட்சி நிலைக்கும் என்று மாஜினியை தேடிப் பேயாய் அலைந்தது அரசு.

மாஜினி நெப்போலியன் பிறந்த கார்சிகா தீவுக்குச் சென்று தலைமறைவாகத் திரிந்தார். அங்கு அவரது சூறாவளிப் பேச்சுக்கு இளைஞர் வசமாயினர். ஒரு படையைத் திரட்டினார். இத்தாலி விடுதலை அடையும்வரை இளைஞர்கள் கருப்புச்சட்டைதான் அணிய வேண்டும் என்று முடிவெடுத்தனர்.

அச்சமயம் சார்டீனியா தீவின் அரசனாக சார்லஸ் ஆல்பர்ட் என்பவன் ஆட்சியைப் பிடித்து ஆண்டு வந்தான். சார்லஸ் ஆல்பர்ட் ஒரு காலத்தில் மாஜினியின் நண்பனாக இருந்தவன். 1821ம் ஆண்டில் கார்ப்பனோரா கொலை வழக்கில் சம்பந்தப்படுத்தப்பட்டு மாஜினியோடு சிறை வாழ்க்கை அனுபவித்தான் இந்த சார்லஸ் ஆல்பர்ட்.

இப்போது தம்முடைய விடுதலைப் போருக்கான உதவியை தன்னுடைய பழைய நண்பரும் இப்போதைய சார்டீனியா தீவு மன்னருமாகிய சார்லஸ் ஆல்பர்ட்டிடம் கேட்கலாம் என முடிவு செய்து, கேட்டார் மாஜினி. ஆனால் புரட்சியாளனாக இருந்தபோது நண்பனாக இருந்த சார்லஸ் ஆல்பர்ட் அதிகார மமதையில் இருந்தான். மாஜினி தனக்கு அனுப்பிய கடித்தில் ‘அன்புள்ள சார்லஸ்’ என்று பெயரைச் சொல்லி அழைத்ததில் தனக்கு தன்மான இழுக்கு ஏற்பட்டதாகவும் கருதினான்.

மாஜினிக்கு உதவும் எண்ணமே இல்லாமல் இருந்த சார்லஸ் மாஜினியை உடனே நாடு கடத்தும்படி தன்னுடைய ராணுவப் படையினருக்கு உத்தரவிட்டான். அந்த உத்தரவு மாஜினிக்கு இழைக்கப்படும் துரோகம் என்று சார்லஸ் மன்னனின் படை வீர்ர்களே கொந்தளித்துக் கூறியதுடன் மன்னனை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.

சார்லஸ் இதனால் கடுஞ்சினமுற்று மாஜினியை சிறை செய்து குற்றம் சுமத்தினான். போராட்டத்திற்கான முழுப் பொறுப்பும் மாஜினியிடையதுதான் என்றும் அதற்கு சரியான தண்டணை தூக்கு தண்டனைதான் என்று தீர்ப்பளித்தான். கைகளிலும் கால்களிலும் விலங்குகள் பூட்டி சிறைக் கொட்டடியில் அடைக்கப்பட்ட மாஜினி, தூக்கிலிடும்முன் தப்பித்துவிட்டார்

தப்பி ஓடிய மாஜினி ‘மத்திய ஐரோப்பா’ எனும் பத்திரிக்கையை துவங்கி கட்டுரைகள் எழுதினார். எங்கு பார்த்தாலும் இவரது கோஷம் கேட்டு மக்கள் சிலிர்த்தெழுந்தனர். சேவாய் நகருக்குள் மாஜினியின் படை புகுந்து ஆர்பரித்தது. அரசாங்கம் அடிபணிந்தது.

மன்னன் சார்லஸ் பதவி இழந்து மிலான் விடுதலை பெற்றதும் பிரஞ்சு அரசாங்கம் மாஜினியை திடீரென கைது செய்து அவருக்கு இரண்டாவது முறையாக மரண தண்டணை விதித்தது. மாஜினிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு போர்க்கொடி தூக்கி இத்தாலி முழுவதும் கிளர்ச்சி நடைபெற்றது. மாஜினியை மரண தண்டணையிலிருந்து காப்பாற்ற பொதுவுடைமைத் தத்துவ மேதை காரல் மார்க்ஸ் அறை கூவலிட்டார். அதனைக் கேட்டு சிலிர்த்துப்போன இளைஞர் கூட்டம் இத்தாலி நாடாளுமன்றத்தை முற்றுகையிடத் தயாரானாது.

‘மாஜினியை விடுதலை செய்’ என்ற கோஷமே இத்தாலியெங்கும் விண்ணதிர்ந்தது. கத்தோலிக்க மதக் குருவான போப்பாண்டவர் மாஜினியை உடனே தூக்கிலிடுமாறு வற்புறுத்தினார். கடைசியில் மன்னர் மனம் மாறி புரட்சிகர இயக்கத்தின் தாக்குதலிலிருந்து தப்பிக்க மாஜினியை விடுதலை செய்தார்.

மாற்றுத் திறனாளிகளுக்கு கொரோனா நிவாரணம் ரூ.1000/- வீடுதோறும் சென்று வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு அதிகாரம் அளித்து விதிமுறைகள் வெளியீடு