திங்கள், 16 ஏப்ரல், 2018

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ மாவட்ட தேர்தல்15-04-18(ஞாயிறு)~நாளிதழ் செய்திகளில்...

5% to 7% D.A ARREAR CALCULATION SHEET...

அரசு ஊழியர்கள் குழந்தை பராமரிப்பு விடுமுறையில் வெளிநாடு செல்லலாம்- மத்திய அமைச்சகம் தகவல்...


அரசு ஊழியர்கள் குழந்தைகள் பராமரிப்பு விடுமுறையின்பொழுது வெளிநாட்டிற்கு செல்லலாம் என அரசு அதிகாரிகளுக்கான அமைச்சகம் புதிய வழிகாட்டி முறைகளை வெளியிட்டுள்ளது.

அதில், குழந்தைகள் பராமரிப்பு விடுமுறையில் இருக்கும் ஊழியர் ஒருவர் வெளிநாட்டு பயணம் மேற்கொள்ளலாம். அதற்கு துறை அதிகாரிகளின் முறையான ஒப்புதலை முன்பே பெற்றிருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. அவர்கள் இந்த காலத்தில் விடுமுறை பயண சலுகையும் பெறலாம் என்றும் தெரிவித்துள்ளது.

பெண் ஊழியர்கள் தங்கள் முழு பணி காலத்தில், விதிகளின்படி, அதிக அளவாக 2 வருடங்கள் வரை (730 நாட்கள்) குழந்தைகள் பராமரிப்பு விடுமுறை எடுக்க அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

குழந்தைகள் 18 வயது அல்லது அதற்கு மேற்பட்டவர்கள் என்றால் இந்த விடுமுறை அனுமதிக்கப்படாது என விதிகளில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு தொடக்கம்...


தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு  தொடங்குகிறது. இந்த ஆண்டு 18 வயது வரையிலான குழந்தைகளின் விபரங்களை சேகரிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இலவசக் கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 6 முதல் 14 வயதுடைய இடைநின்ற அல்லது பள்ளிச் செல்லா குழந்தைகளை (இடம் பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகள் உட்பட) கண்டறிவதற்கு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல்-மே மாதங்களில் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் பள்ளிச் செல்லா அல்லது இடைநின்ற குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் கண்டறிவதற்கான குடியிருப்பு வாரியான கணக்கெடுப்பு பணி மற்றும் ஆரம்பக் கல்வி பதிவேடு புதுப்பித்தல் பணி ஏப்ரல், மே மாதம்  நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் நிதியாண்டு (2018-19) முதல் அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்எஸ்ஏ) மற்றும் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் (ஆர்.எம்.எஸ்.ஏ) ஆகிய இரு திட்டங்கள் இணைந்து செயல்படும் புதிய வியூகம் இருப்பதால் அடிப்படை விவரங்களை சேகரிக்கும் பொருட்டு இந்த கணக்கெடுப்பில் 6 முதல் 18 வயதுடைய பள்ளிச்செல்லா அல்லது இடைநின்ற குழந்தைகளையும் கண்டறிய திட்டமிடப்
பட்டுள்ளது.

தொடர்ந்து 30 வேலை நாட்கள் எவ்வித முன்னறிவிப்பும் இன்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாகக் கருத வேண்டும் என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளிக்கு அடிக்கடி வராமல் இருந்து இடைநிற்கும் வாய்ப்பு அதிகம் உள்ள குழந்தைகளும் இதில் அடங்குவர். மேலும் பள்ளியே செல்லாத குழந்தைகள், எட்டாம் வகுப்பு முடிக்காமல் இடைநிற்கும் குழந்தைகள், அனைவரும் 'பள்ளிக்கு வெளியே உள்ளவர்கள்' ஆவர்.  அரசாணைப்படி 6 - 14 வயதுடைய பள்ளிச் செல்லா அல்லது இடைநின்றோரை கண்டறிந்து பள்ளிகளில் அல்லது சிறப்பு பயிற்சி மையங்களில் சேர்க்க வேண்டும். இத்துடன் கூடுதலாக இந்த ஆண்டு 15-18 வயதுடைய குழந்தைகளில் இடைநின்றோரை கண்டறிந்து பட்டியல் தயாரித்து வைத்தல் அவசியமாகும், அனைத்து மாவட்டங்களிலும் ஏப்ரல் 16ம்தேதி கணக்கெடுக்கும் பணிகளை தொடங்க வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் சுடலைக்கண்ணன் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கட்டுமானப் பணிகள், செங்கல் சூளை, அரிசி ஆலை, கல்-குவாரி, மணல்-குவாரி, தொழிற்சாலைகள் மற்றும் விவசாயம் போன்றவற்றில் பணிபுரிய பல்வேறு மாநிலங்களிலிருந்து, மாவட்டத்திலிருந்து தொழில் நிமித்தமாக தமிழகத்திற்கு வருகின்றனர். எனவே தொழிற்சாலை, மார்க்கெட் பகுதிகளில், கணக்கெடுப்பு நடத்தும்போது குழந்தை தொழிலாளர் நலத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு துறை அலுவலர் மற்றும் காவல் துறையுடன் இணைந்து சோதனை நடத்த வேண்டும். வீடு வாரியான கணக்கெடுப்பில் குறிப்பாக ரயில் நிலையம், பஸ் ஸ்டாண்ட், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசை பகுதிகள், கடலோர மாவட்டங்களிலுள்ள கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். கூடவே மாற்றுத்திறனாளி குழந்தைகள் தொடர்பான விபரங்களையும் தனியே கணக்கெடுப்பு நடத்திட வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெப்பத்தாக்கம் (HEAT STROKES)~செய்யவேண்டியவை/செய்யகூடாதவை...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~ மாவட்ட தேர்தல்15-04-18(ஞாயிறு) : தேர்தலில் தேர்தெடுக்கப்பட்ட மாவட்ட பொறுப்பாளர்கள்...

சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாளில் வெளியிடப்படும் - அமைச்சர் அறிவிப்பு...


சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

அரசு பள்ளிகளில் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி உள்ளிட்ட சிறப்புப் பாடங்களை கற்றுக்கொடுக்க சிறப்பாசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இதுவரையில் சிறப்பாசிரியர் பணியிடங்கள் பதிவுமூப்பு அடிப்படையில் நிரப்பப்பட்டு வந்தன. இந்த ஆண்டு முதல்முறையாக சிறப்பாசிரியர் தேர்வுமுறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டது. அதன்படி, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் போட்டித்தேர்வு நடத்தி சிறப்பாசிரியர்களை தேர்வுசெய்ய அரசு முடிவு செய்தது.

இதைத்தொடர்ந்து, உடற்கல்வி, இசை, ஓவியம், தையல் ஆகிய பாடங்களில் 1,325 சிறப்பாசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஜூலை மாதம் 26-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டது. இதற்கான விண்ணப்பங்கள் ஜூலை 27 முதல் ஆகஸ்டு 18-ம் தேதி வரை ஆன்லைன் மூலமாக பெறப்பட்டன. செப்டம்பர் மாதம் 23-ம் தேதி எழுத்துத்தேர்வு நடத்தப்பட்டது. இத்தேர்வை 35,781 பேர் எழுதினர்.

எழுத்துத்தேர்வு முடிந்தவுடன் ஆசிரியர் தேர்வு வாரியம் கீ ஆன்சர் எனப்படும் உத்தேச விடைகளை வெளியிடுவது வழக்கம். அதன்படி, அக்டோபர் 10-ம் தேதி கீ ஆன்சர் வெளியிடப்பட்டது. பொதுவாக கீ ஆன்சர் வெளியிட்ட அடுத்த சில வாரங்களில் தேர்வு முடிவும், இறுதி விடைகளும் வெளியிடப்படும். ஆனால், சிறப்பாசிரியர் தேர்வில், கீ ஆன்சர் வெளியிட்டு 6 மாதங்களுக்கு மேல் ஆகியும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில் இன்று சிறப்பாசிரியர் தேர்வு முடிவுகள் 15 நாள்களில் அறிவிக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.  மேலும் பணி ஆணை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளர்.