வியாழன், 21 ஜனவரி, 2021

நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தின் 12 தொடக்கப் பள்ளிகளின் தூய்மைப்பணியாளர்களுக்கு 15 மாத கால ஊதியம் வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையை வலியுறுத்தி ஆசிரியர் மன்றத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தின்கணக்கு அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அலுவலகத்தின் கணக்கு அலுவலர் ஆகியோரிடம் (20/01/2021) அன்று விண்ணப்பம் படைக்கப்பட்ட நிகழ்வு.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி ஒன்றியத்தின் 12 தொடக்கப் பள்ளிகளின் தூய்மைப்பணியாளர்களுக்கு 15 மாத கால ஊதியம் வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையை வலியுறுத்தி  ஆசிரியர் மன்றத்தின் சார்பில் நாமக்கல் மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தின்
கணக்கு அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அலுவலகத்தின் 
கணக்கு அலுவலர் ஆகியோரிடம் (20/01/2021) அன்று விண்ணப்பம் படைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் இன்று ( 21/0/ 2021) பிற்பகல் 05.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக அலுவலர் அவர்களை சந்தித்து,எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரின் மீதான புகார்கள் குறித்து விரிவான வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்ட நிகழ்வு.

வணக்கம்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் இன்று ( 21/0/ 2021) பிற்பகல் 05.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக அலுவலர் அவர்களை சந்தித்து,
எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரின் மீதான புகார்கள் குறித்து விரிவான வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

/மெ.சங்கர்/

தமிழ்நாடு தொடக்கப்பள்ளிஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கோரிக்கை மாநாட்டின் மாவட்ட அளவிலான 15 அம்சக்கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் வகையில் தலையீடு செய்து உதவிட வேண்டுமாய் 21.01.2021- வியாழன் பிற்பகல் 05.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட நாமக்கல் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக அலுவலர் அவர்களிடம் 15அம்சக் கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்ட நிகழ்வு.

அன்புடையீர்! வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கோரிக்கை மாநாட்டின்  மாவட்ட அளவிலான  15 அம்சக்கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் வகையில்  தலையீடு செய்து உதவிட வேண்டுமாய்  21.01.2021- வியாழன்  பிற்பகல் 05.30 மணியளவில் நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை சந்திப்பதற்கு  மாவட்ட அமைப்பு முடிவாற்றியது.
நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையப் பெறாத நிலையில், நாமக்கல் முதன்மை கல்வி அலுவலரின் நேர்முக அலுவலர் அவர்களிடம் 15அம்சக் கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டு கோரிக்கைகளின் நியாயம் எடுத்துரைக்கப்பட்டது. 

மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மான்யம் காசோலை வழி செலவினங்களில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் அதற்கு உரிய வழிகாட்டுதல் வேண்டியும் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

எருமப்பட்டி வட்டாரக் கல்வி அலுவலரின் மீதான புகார்கள் குறித்து விரிவான வெளிப்படையான விசாரணை நடைபெற வேண்டும் என வலியுறுத்தி கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

நாமக்கல் மாவட்டக் கல்வி அலுவலக  கண்காணிப்பாளரிடம் மாவட்ட அளவிலான 15 அம்சக் கோரிக்கை விண்ணப்பம் மற்றும் நாமகிரிப்பேட்டை ஒன்றிய ஆசிரியர் கோரிக்கை குறித்தும் விண்ணப்பம் அளிக்கப்பட்டது.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் தலைமையில் ,
மாவட்டச் செயலாளர் மெ.சங்கர்,  
மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர்கள் அ.செயக்குமார் (நாமக்கல்), க.சேகர் ( பரமத்தி) எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் எம்.கே.ஆனந்தன்
ஆகியோர் இச்சந்திப்பில்  பங்கேற்றனர்.

/மெ.சங்கர்/

உயிர் நீத்த தியாகிகளுக்கு நாடு முழுவதும் 30ம் தேதி 2 நிமிடம் மவுன அஞ்சலி...

குறைக்கப்பட்ட பாடத்திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு கேள்வித்தாள்...

மாணவர்கள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகள் பின்பற்றுகிறார்களா?தினமும் இணையத்தில் தகவல் பதிவிட உத்தரவு...

தமிழகத்தில் 35 பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டது ~அரசாணை வெளியீடு...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட மாநாடு கோரிக்கைகள் குறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது)அவர்கள்,கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் மற்றும் ஊரக வளர்ச்சித்திட்ட இயக்குநர் ஆகியோரிடம் கோரிக்கை விண்ணப்பம் படைப்பு.

அன்புடையீர்! வணக்கம்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி
ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட ஆசிரியர் கோரிக்கை மாநாடு கடந்த 09.01.2021 அன்று நடைபெற்றது. இக்கோரிக்கை மாநாட்டின்  மாவட்ட அளவிலான  15 அம்சக் கோரிக்கைகள் விரைந்து நிறைவேற்றப்படும் வகையில்  தலையீடு செய்து உதவிட வேண்டுமாய்  இன்று (20.01.2021-புதன்) பிற்பகல் 05.00 மணியளவில் நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களை சந்திப்பதற்கு  மாவட்ட அமைப்பு முடிவாற்றியது.
நாமக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களை சந்திக்கும் வாய்ப்பு அமையப் பெறாத நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) அவர்களிடம் 15 அம்சக் கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டு கோரிக்கைகளின் நியாயம் எடுத்துரைக்கப்பட்டது. 

மேலும் ,பரமத்தி ஒன்றியம் சார்ந்த திருமதி.மு.செயந்தி இடைநிலை ஆசிரியருக்கும் 2020 மார்ச்சு  மற்றும் ஏப்ரல் மாதங்களுக்குரிய தொகுப்பூதியம் வழங்கப்படவேண்டும் எனும் தனிக்கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டது.

கூட்டுறவு துறைச்சார்ந்த 
05 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி நாமக்கல் மாவட்ட அனைத்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அவர்களை சந்தித்து கோரிக்கை விண்ணப்பம் படைக்கப்பட்டது. 

மேலும், நாமக்கல் சரக கூட்டுறவு சங்கங்களின் துணைப்பதிவாளர்  அலுவலகக் கண்காணிப்பாளர் அவர்களிடம் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.

பரமத்தி ஒன்றியத்தின் 12 தொடக்கப்பள்ளிகளின் தூய்மைப்பணியாளர்களுக்கு 15 மாத கால ஊதியம் வழங்கப்பட வேண்டுமெனும் கோரிக்கையை வலியுறுத்தி  மாவட்ட ஊராட்சிகளின் உதவி இயக்குநர் அலுவலகத்தின்
கணக்கு அலுவலர் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் அலுவலகத்தின் 
கணக்கு அலுவலர் ஆகியோரிடம் விண்ணப்பம் படைக்கப்பட்டுள்ளது.

இச்சந்திப்பில் எதிர் வரும் 22.01.2021க்குள் பரமத்தி ஒன்றியத்தின்  12 பள்ளிகளின் தூய்மைப் பணியாளர்களுக்கும் ஊதியம் விடுவிக்கப்படும் என்று மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கணக்கு அலுவலரும், நிர்வாக அலுவலரும்  நம்பிக்கைத்தந்து உள்ளனர்.

 தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலச்செயலாளர் முருகசெல்வராசன் தலைமையில் ,
மாவட்டச்செயலாளர் மெ.சங்கர், மாவட்டத் துணைச்செயலாளர் வெ.வடிவேல், மாவட்ட தணிக்கைக்குழு உறுப்பினர் த.தண்டபாணி, ஒன்றியச் செயலாளர்கள் அ.செயக்குமார் (நாமக்கல்), கா.சுந்தரம் (சேந்தமங்கலம்), கொ.கதிரேசன் (புதுச்சத்திரம்)
ஆகியோர் இச்சந்திப்பில்  பங்கேற்றனர்.

-மெ.சங்கர்,
மாவட்டச் செயலாளர்,
ஆசிரியர் மன்றம்
நாமக்கல் மாவட்டம்.