திங்கள், 30 செப்டம்பர், 2019

இரண்டாம் பருவம் நோட்டு புத்தகங்கள் வழங்குதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறை


நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகளின் மீது நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரின் தலையீட்டினை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோருகிறது...



தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரிடம் 30.09.19்அன்று கோரிக்கைமனு படைப்பு...

அன்பானவர்களே!🙏 வணக்கம்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் முருகசெல்வராசன் 
மற்றும்
நாமக்கல் ஒன்றியச் செயலாளர் அ.செயக்குமார் ஆகியோர் நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களை 30.09.19(திங்கள்)பிற்பகல் 05.40மணியளவில் சந்தித்தனர்.
இச்சந்திப்பில்   பள்ளிப்பாளையம்,மல்லசமுத்திரம், வெண்ணந்தூர், இராசிபுரம், நாமகிரிப்பேட்டை,சேந்தமங்கலம்,
எருமப்பட்டி, நாமக்கல்,  பரமத்தி 
மற்றும்  கபிலர்மலை ஆகிய 10் ஒன்றிய ஆசிரியர்களின் கோரிக்கை விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்ட ஆசிரியர்களின் கோரிக்கைகளை ஒன்றியம் வாரியாக கேட்டுக் கொண்டுள்ள நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்கள் நாமக்கல் மற்றும் திருச்செங்கோடு கல்விமாவட்டங்களின் மாவட்டக்கல்வி அலுவலர்களின் வழியில் தொடர்புடைய வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு உரிய வழிகாட்டுதல் வழங்கப்பட்டு கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என்று நம்பிக்கை அளித்தார்கள். நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் இன்றையச் (30.09.19)சந்திப்பு நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பெரிதும் பயனும்,பலனும் தந்திடும் என்று நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றம் நம்புகிறது.நன்றி.
-முருகசெல்வராசன்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) ஒன்றிய செயலாளர்கள் கூட்டச் செய்திகள் இன்றைய நாளேடுகளில்



 🎆🌲