சனி, 16 பிப்ரவரி, 2019

வாட்ஸ் அப் குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை ~ விரைவில் புதிய அப்டேட்...

வாட்ஸ் அப் நிறுவனம், குரூப்களில் புதிய நபர்களை சேர்க்கும் முறையில் மாற்றம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன

 வாட்ஸ் அப் செயலி என்பது உலகம் முழுவதும் உள்ள தகவல் பரிமாற்ற தொழில்நுட்பத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்தச் செயலியை கடந்த 2014-ஆம் ஆண்டு ஃபேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது. இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியை உலகம் முழுவதிலும் 1.3 பில்லியனுக்கும் அதிகமானோர் பயன்படுத்தி வருகின்றனர். பயனாளர்களின் தேவைக்கு ஏற்பவும், பயன்பாட்டுக்கு எளிதாகவும் அவ்வப்போது வாட்ஸ் அப் அப்டேட்டுகளை கொடுத்து வருகிறது. இந்நிலையில் வாட்ஸ் அப்பின் புதிய அப்டேட்டாக குரூப்பில் சேர்க்க பயனரின் அனுமதி தேவை என்ற முறை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது வாட்ஸ் அப்பில் தற்போது யார் வேண்டுமானாலும் தங்களது கணக்கில் இருக்கும் வாட்ஸ் அப் பயனர்களை குரூப்பில் சேர்த்து அட்மினாக ஆகலாம். இந்த முறை மூலம் நமக்கு விருப்பம் இல்லாத குரூப்பில் கூட நாம் இடம்பெற வேண்டி இருக்கும்.

இந்நிலையில் இந்த முறையில் மாற்றம் கொண்டு வர வாட்ஸ் நிறுவனம் முடிவு செய்துள்ளது. தேவையற்ற குரூப்களில் பயனர்கள் சேர்க்கப்படுவதை தடுக்கும் வகையில் இந்த அப்டேட் வர உள்ளது. 

Settings...

1. வாட்ஸ் அப் செட்டிங்சில் உள்ள பிரைவசி பகுதியில் குரூப்ஸ் என்ற ஆப்ஷன் கொடுக்கப்படும். (WhatsApp Settings > Account > Privacy > Groups)

 2. யாரெல்லாம் உங்களை குரூப்பில் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்ற கேள்வியுடன் மூன்று ஆப்ஷன்கள் இருக்கும். அதாவது Everyone, My Contacts, Nobody என்று இருக்கும். 

3. அதில் உள்ள Nobody என்ற ஆப்ஷனை நாம் தேர்ந்தெடுத்தால் யாராக இருந்தாலும் உங்களது அனுமதிக்கு பின்னரே குரூப்பில் சேர்க்க முடியும்.

 4. நீங்கள் எந்த பதிலும் கொடுக்காதபட்சத்தில் அவர்களின் அனுமதி கோரிக்கை 72 நாட்கள் வரை மட்டுமே காத்திருக்கும்.


மார்ச் 10ம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் ~ தமிழக அரசு அறிவிப்பு…

வருமான வரி கணக்கு தாக்கலுக்கு பான்-ஆதார் இணைப்பு கட்டாயம் ~ மார்ச் 31ம் தேதி வரை கெடு ~ வரிகள் ஆணையம் உத்தரவு…

1 ம் வகுப்பு மாணவர்களுக்கு புத்தக பை எடை1.5 கிலோ ~ மேகாலயா அரசு அதிரடி…

பள்ளிகள், கல்லுாரிகளில் வரும் 21ம் தேதி தாய்மொழி தினம் கொண்டாட உத்தரவு...

பள்ளிகள், கல்லுாரிகளில், வரும், 21ம் தேதி, தாய்மொழி தினம் கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது. 

நாடு முழுவதும், கல்வி நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில், ஆங்கிலம் பொது மொழியாகவும், பல மாநிலங்களில் ஹிந்தியும், சில மாநிலங்களில் மாநில மொழியும், அலுவல் மொழியாக உள்ளன. 

மாநில மொழிகள் மற்றும் அவரவர் தாய்மொழியை கவுரவிக்கும் வகையில், தாய்மொழி தினத்தை விமரிசையாக கொண்டாட, மத்திய அரசு, மூன்று ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது. இதன்படி, ஐக்கிய நாடுகள் சபையின், கல்வி, அறிவியல் மற்றும் கலாசார அமைப்பான, 'யுனெஸ்கோ' அறிவித்த, பிப்., 21ல், தாய்மொழி தினம் கொண்டாடப்படுகிறது.

இதையொட்டி, அனைத்து கல்லுாரிகள், பல்கலைகள் மற்றும் பள்ளிகளுக்கு, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தாய்மொழியை கவுரவிக்கும் வகையில், யுனெஸ்கோ அறிவித்துள்ளபடி, வரும், 21ல், தாய்மொழி தினத்தை, மாணவர்களுடன் இணைந்து கொண்டாட வேண்டும். அன்றைய தினம், அனைத்து கல்வி நிறுவனங்களிலும், அந்தந்த மாநில மொழிகளில், பேச்சு, கட்டுரை, வினாடி வினா, ஓவியம், இசை உள்ளிட்ட போட்டிகளை நடத்த வேண்டும்.மாநில மற்றும், உள்ளூர் மொழி பயன்பாட்டை ஊக்கப்படுத்தும் வகையில், மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.


பள்ளி கல்வி துறையில் இயக்குனர்கள் இட மாற்றம்...

தமிழக பள்ளி கல்வி துறையில் இரண்டு இயக்குனர்கள் இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினராக இடம் மாற்றப்பட்டுள்ளார். 

அங்கு உறுப்பினராக பணியாற்றும் உஷா ராணி மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

IFRMS எளிமையான முறையில் மாதந்தோரும் வரி கட்டுவது கட்டாயமாக்கப்படுகிறது...

வருவாய் ஆண்டு 2019-2020 ஆம் ஆண்டிற்கான  Income tax தொகை மார்ச் மாதத்தில் இருந்து பிடித்தம் செய்ய வேண்டும். IFRMS  இதற்கான வழிவகை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தங்களுக்கான
வருகின்ற மார்ச் மாதத்திலேயே தங்களுடைய சேமிப்பு மற்றும் வீட்டு வாடகை மற்றும் வீட்டுகடன் மற்றும் இதர செலவினங்களை தாங்கள் முன்பாகவே கணித்து தருதல் அவசியமாகிறது.
அப்படி கணித்து தரக்கூடிய தொகை வருட கடைசியில் மாற்றம் ஏற்பட்டால் மாற்றம் செய்யும் வசதி வழங்கியும் உள்ளது.

எனவே அரசு மூலமாக மாத சம்பளம் பெறுபவர்கள்மாதம் மாதம் தங்கள் சம்பளத்தில் இருந்து வருமான வரி கட்டாய பிடித்தம் செய்ய வேண்டும். 

நாமக்கல் மாவட்டத்தில் சஸ்பெண்டான 114 ஆசிரியர்கள் மீண்டும் அதே பள்ளியில் சேர்ப்பு ~ இறுதிவரை போராடி சாதித்த இடைநிலை ஆசிரியர்கள்…