செவ்வாய், 30 அக்டோபர், 2018

தினமும் 5 நிமிடங்கள் தொடர்ந்து இந்த பயிற்சியை செய்தாலே 50% உடற்பயிற்சி நிறைவு செய்யலாம்

பல்லாண்டு காலமாக யோகாசனம் பற்றி அறியாமலேயே,
யோகாசனம் செய்வதால் கிடைக்கும் அத்தனை நன்மைகளையும் அனுபவித்தவர்கள் நாம்.


அது எப்படி சாத்தியம்? ஒன்றை பற்றி அறியாமலே அதன் பலனை எப்படி அடைய முடியும்? நம் முன்னோர்கள் காலம் காலமாக நமது வழிபாட்டு முறைகளுடன் வாழ்வியல் முறைகளையும் கலந்து தந்திருப்பதுதான் .தோப்புக்கரணம் என்னும் ஒற்றைப் பயிற்சியின் மூலமாக யோகாசனத்தின் அத்தனை நன்மைகளையும் பெற்றிருக்கிறோம்.இது மகிழ்ச்சிகரமான உண்மை.

தோப்புக்கரணம் என்பது தண்டனை ஆயிற்றே, அது எப்படி பயிற்சி ஆகும்?




தோப்புக்கரணம் பற்றி புராணம் சொல்வதையும்,அதற்கு பின்னால் உள்ள அறிவியல் உண்மைகளையும் பற்றியும் பார்ப்போம்.


கஜமுகாசுரன் என்னும் அசுரன் ஒருவன் இருந்தான்.அவன் தான் பெற்ற வரத்தின் வலிமையால் தேவர்களை அடிமைப்படுத்தி, அவர்களுக்கு, பலவிதமான கொடுமைகள் செய்து வந்தான். தன்னைக் காணும்போதெல்லாம் தோப்புக்கரணம் போட வேண்டும் என்றும் தொல்லை செய்து வந்தான்.

தேவர்களும் வேறுவழியின்றி அவன் சொல்வதை எல்லாம் செய்துவந்தனர். தங்களின் துயரம் தாங்காமல், விநாயகப்பெருமானிடம் முறையிட்டனர். தேவர்களின் பிரார்த்தனையில் மனம் கசிந்த விநாயகர், கஜமுகாசுரனை சம்ஹாரம் செய்ய புறப்பட்டார்.

விநாயகரையும் தோப்புக்கரணம் போடுமாறு கஜமுகாசுரன் ஆணையிட்டான். மிகுந்த கோபம் அடைந்த விநாயகர் தன் தந்தத்தால் அவனைக் குத்திக் கொன்றார்.கஜமுகாசுரனை அழித்ததற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தேவர்கள் விநாயகப் பெருமானுக்கு தோப்புக்கரணம் போட்டு மரியாதை செய்தனர். அன்று முதலே விநாயகருக்கு தோப்புக்கரணம் இடும் முறை உண்டானது.




தோப்புக்கரணம் போடுவதால் என்னென்ன பலன்கள் நமக்குக் கிடைக்கின்றன என்று பார்ப்போம்?

நமது முன்னோர்கள் விநாயகர் வழிபாட்டின் ஒரு பகுதியாக தோப்புக்கரணத்தையும் வைத்திருந்தனர். தோப்புக்கரணம் போடும்போது நமது காது மடல்களைப் பிடித்துக் கொள்கிறோம். காது மடல்களில் உடலின் எல்லா உறுப்புகளையும் இணைக்கிற புள்ளிகள் இருக்கின்றன.

காது மடல்களைப் பிடித்து தோப்புக்கரணம் போடும்போது உடலின் எல்லா உறுப்புகளும் செயல்படுவதற்கான ஒரு தூண்டுதல் கிடைக்கிறது.

உட்கார்ந்து எழும்போது, காலில் உள்ள 'சோலியஸ்' எனும் தசை இயங்க ஆரம்பிக்கிறது.சோலியஸ் தசையால் உடல் முழுவதும் ரத்த ஓட்டம் சீராகும். இதயத்தின் தசைகளை போன்றே இது வேலை செய்கிறது .

தோப்புக்கரணத்தை முறையாகப் போடுவது எப்படி?

தோப்புக்கரணம் போடும் முறை
முதலில் நம்முடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை பிரித்துவைத்து நிற்க வேண்டும்.

இடது கையால் வலது காது மடலையும்,வலது கையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும்.

கட்டைவிரல் வெளியேயும் ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்க வேண்டும்.

வலது கை கண்டிப்பாக இடது கையின் மேல் இருக்க வேண்டும்.




தலையை நேராக வைத்து,மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும்.

நம்மால் எந்த அளவு சிரமம் இல்லாமல், உட்கார முடியுமோ அந்த அளவு உட்கார வேண்டும்.

பின்பு மூச்சுக் காற்றை வெளியிட்டவாறே, அப்படியே எழுந்து நிற்கவேண்டும்.

இதன் மூலம் நமது தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகும்.

தினமும் 5 நிமிடங்கள் தொடர்ந்து செய்தாலே,நாம் வேறெந்த உடற்பயிற்சியும் செய்யத் தேவையில்லை.

லாஸ் ஏஞ்சல்ஸை சேர்ந்த உடற்கூற்று வைத்தியர் எரிக் ராபின்ஸ் தோப்புக்கரணப் பயிற்சியால் மூளையிலுள்ள நரம்புக் கலங்கள் சக்தி பெறும் என்கிறார்.




பரீட்சையில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்த மாணவன் தோப்புக்கரணப் பயிற்சியின் பின் நல்ல மதிப்பெண்களைப் பெற்றதாகக் கூறுகிறார். பரீட்சைக்கு செல்லும் முன்பு விநாயகனை தரிசிக்க சொல்வதன் காரணமும் இதுவே.

யேல் பல்கலைக்கழக நரம்பியல் நிபுணர் யூஜினியஸ் அங், இடது கையால் தோப்புக்கரணம் போடுவதால், அக்குபஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதுடன் மூளைக்கலங்களும் சக்தி பெறுவதாகக் கூறுகிறார்.

வெளிநாடுகளில் 'சூப்பர் பிரெய்ன் யோகா' என்ற பெயரில் தோப்புக்கரணம் அழைக்கப்படுகிறது. ஆனால், நம் முன்னோர்களோ வழிபாட்டின் ஒரு பகுதியாக இதை வைத்துள்ளனர். இதன் மூலம் நாம் விநாயகப் பெருமானிடம் ஆசியும் அருளும் பெறலாம். தோப்புக்கரணம் போடுவதால் கிடைக்கும் நன்மைகளையும் பெறலாம்.

பரபரப்பான இன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் பல பிரச்னைகள் இருக்கின்றன .நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆலயங்களுக்குச் சென்று இறைவனை தரிசிப்போம்.அப்போது தான் நம் உடல் மனம் நலம் பெறும். தினமும் விநாயகனை தரிசித்து தோப்புக்கரணம் போடுவோம். நாளும் நன்மைகள் பல பெறுவோம்

தீபாவளி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் குறித்து தீயணைப்பு மீட்பு பணிகள் துறை இயக்குனர் செயல்முறைகள்





தீபாவளி பண்டிகையின் பொழுது மாணவர்களுக்கு தீ விபத்து ஏற்படாமல் பாதுகாக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பான இயக்குனர் செயல்முறைகள்




குரூப்1 தேர்வுக்கான முடிவு டிசம்பர் மாதம் இறுதிக்குள் வெளியிடப்படும் ~டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…

வரியை ஒழுங்காக கட்டியிருந்தாலும் ரிட்டர்ன் முக்கியம்~யாருக்கு வருமானவரி நோட்டீஸ் வரும்?

முதுநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு வழங்கதகுதி வாய்ந்த தேர்ந்தோர் பட்டியல் வெளியீடு சார்ந்து - பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்



அரசு மற்றும் அரசுநிதியுதவி பெறும் பள்ளிகளில் ஆங்கிலவழி வகுப்புகள் நடத்தப்படுகின்றனவா? சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி?


ஊழலை தடுப்போம் அலுவலர்கள் உறுதிமொழி ஏற்பு


நவம்பரில் பருவ மழை க்கு வாய்ப்பு - வானிலை மையம் அறிவிப்பு


மாணவர்களுக்கு வழங்கும் இலவச சைக்கிள்களில் இந்தியில் வாசகங்கள்- தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்


அஞ்சல் துறை சார்பில் கடிதம் எழுதும் போட்டி மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்பு


வாட்ஸ்அப் பில் வர்த்தகம்செய்து லாபம் ஈட்டலாம் - சி.ஐ.ஐ.பயிற்சி


வாராக கடன் இருந்து லாபம் ஈட்டும் வங்கிகள்


தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு திருச்செங்கோட்டில் நடைபெற்றது


பள்ளி மாணவர்களுக்கு சுற்றுலா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த சுற்றுலா அழைத்து சென்றனர் - கலெக்டர் தொடங்கி வைப்பு


சத்துணவு அங்கன்வாடி ஊழியர் கள் போராட்டம்



DRDO Recruitment JRF Posts Engineering Graduate Apply Now



DRDO Recruitment 2018-2019, DRDO invites Application for the post of 08 Junior Research Fellows, Electronics & Communication Engineering, Computer Science Engineering Posts. DRDO Recruitment JRF Posts Engineering Graduate Apply Now. You can check here DRDO Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, DRDO Selection Process, How to Apply, DRDO Result Release Date & other rules are given below…

DRDO Recruitment JRF Posts Engineering Graduate Apply Now



Highlights for DRDO Recruitment 2018 Notification:

Organization Name: Defence Research Development Organisation
Job Category: Central Govt Jobs
No. of Posts: 08 Vacancies
Name of the Posts: Junior Research Fellows, ECE & CSE Posts
Educational Qualification: B.E/B.Tech, M.E/M.Tech
Job Location: Bengaluru (Karnataka)
Selection Procedure: Interview
Application Apply Mode: Offline
Official Website: www.rac.gov.in
Walk in Interview Date: 06.12.2018

DRDO Recruitment 2018 Vacancy Detailed:

Name of the Post & No of Vacancies:

Junior Research Fellows: 03

Electronics & Communication Engineering: 02

Computer Science Engineering: 03

Eligibility Criteria for DRDO Junior Research Fellows:

As per the recent DRDO notification 2018, the eligibility details like Educational Qualification & Age Limit for the Junior Research Fellows job has given below.

Educational Qualification:

Junior Research Fellows
B.E / B.Tech. in First Division with GATE* (OR) M.E / M.Tech in First Division both at Graduate and Post Graduate levels

Age Limit:

For Gen/ UR Candidates: 28 Years, The Upper age limit is relaxed by 5 years for SC/ST; 3 years for OBC, 10 Years for Persons with Disabilities (15 years for SC/ST PWD’s & 13 years for OBC PWD’s) and for Ex-S as per Govt. of India rules. Candidates Relaxation in Upper Age limit will be provided as per Govt. Rules. Go through DRDO official Notification 2018 for more reference

Salary Details:

Junior Research Fellows: RS. 25,000/- per month

DRDO Junior Research Fellows Selection Procedure:

Interview

How to apply DRDO Junior Research Fellows Vacancy:

The Interested & Eligible Candidates advised to Download and read DRDO Job notification to get aware of recruitment schedule and venue from official website www.rac.gov.in. Candidate must reach advertised venue (Address & Walk in Date Mentioned in Official Notification) with all original document and Xerox copies, filled in application form (if required)

Walk in Venue:
ADE, DRDO, New Thippasandra, Bengaluru – 560007

Important Dates
Date to Walk in Interview: 06.12.2018

DRDO Important Links:

DRDO Official Notification PDF: Click Here


தமிழக அறிவியலறிஞர் விருது -- பட்டியல் வெளியீடு

2016, 2017 ஆம் ஆண்டுகளுக்கான தமிழக அறிவியலறிஞர் விருது பெறுபவர்களின் பட்டியலை தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் வெளியிட்டுள்ளது.


வேளாண்மை அறிவியல், உயிரியல், வேதியியல், சுற்றுச்சூழலியல், பொறியியல் தொழில்நுட்பம் என 10 துறைகளின் கீழ் சிறந்து விளங்கும் அறிவியலறிஞர்களை ஊக்குவிக்கும் வகையில் இந்த மன்றத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் தமிழக அறிவியலறிஞர் விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.


இந்த விருது ரூ. 50,000 ரொக்கப் பரிசையும், ஒரு பாராட்டுப் பத்திரத்தையும் உள்ளடக்கியதாகும். அந்த வகையில், 2016, 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளுக்கு இந்த விருதைப் பெற தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை இந்த மன்றம் திங்கள்கிழமை வெளியிட்டது.


2016 ஆம் ஆண்டுக்கான விருதை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.நக்கீரன் (வேளாண்மையியல்), சென்னைப் பல்கலைக்கழகப் பேராசிரியர் என்.மதிவாணன் (உயிரியல்), பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஆர்.ரமேஷ் (வேதியியல்), பெரியார் பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.அன்பழகன் (சுற்றுச்சூழல் அறிவியல்), அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.கண்மணி (பொறியியல் தொழில்நுட்பம்), திண்டுக்கல் காந்திகிராம் கிராமிய கல்வி நிறுவனப் பேராசிரியர் ஆர்.உதயகுமார் (கணிதவியல்), கோவை மருத்துவக் கல்லூரி பேராசிரியர் எஸ்.வெற்றிவேல் செழியன் (மருத்துவயியல்), அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர் ஆர்.ஜெயவேல் (இயற்பியல்), தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜி.ஜெயசேகரன் (கால்நடையியல்) ஆகியோர் பெறுகின்றனர்.


2017-ஆம் ஆண்டுக்கான விருதை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகப் பேராசிரியர் எம்.ரவீந்திரன் (வேளாண்மையியல்), சென்னை ஐஐடி பேராசிரியர் எம்.மைக்கேல் கிரோமிகா (உயிரியல்), அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.கருப்பசாமி (வேதியியல்), அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர் எஸ்.வாசுதேவன் (சுற்றுச்சூழல் அறிவியல்), ஆவடி ராணுவ வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன இயக்குநர் (ஓய்வு) பி.சிவகுமார் (பொறியியல் தொழில்நுட்பம்), அழகப்பா பல்கலைக்கழகப் பேராசிரியர் என்.அன்பழகன் (கணிதவியல்), சென்னை மருத்துவக் கல்லூரி இயக்குநர் மற்றும் தலைவர் ஆர்.லட்சுமி நரசிம்மன் (மருத்துவயியல்), பாரதிதாசன் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.ஜெகந்நாதன் (இயற்பியல்), கோவை அவினாசிலிங்கம் மகளிர் மனையியல் உயர்கல்வி நிறுவனப் பேராசிரியர் எஸ்.கௌசல்யா (சமூகவியல்) ஆகியோர் பெறுகின்றனர்

இக்னோவில் 2019 ஆம் ஆண்டிற்கான பி.எட், எம்.பி.ஏ. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு

இக்னோவில் 2019 ஆம் ஆண்டிற்கான பி.எட், எம்.பி.ஏ. சேர்க்கைக்கு நுழைவுத் தேர்வு

இந்திராகாந்தி தேசிய திறந்த நிலைப்பல்கலைக்கழகம் சார்பில் வரும் 2019 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பி.எட்., எம்.பி.ஏ. ஆகியவற்றுக்கான மாணவர் சேர்க்கை நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இக்னோ மதுரை மண்டல இயக்குநர் எஸ்.மோகனன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: இந்திராகாந்தி தேசிய நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் ஜனவரி 2019 ஆண்டு பி.எட்., எம்.பி.ஏ. சேர்க்கைக்கான நுழைவுத் தேர்வு நடைபெறவுள்ளது. நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன்படி இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவேண்டும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய கடைசி தேதி வரும் நவம்பர் 15 ஆகும். நுழைவுத் தேர்வானது வரும் டிசம்பர் 16 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

தேர்வுகள் குறித்து மேலும் விவரங்கள் அறிய இக்னோவின் இணையதளமான w‌w‌w.‌i‌g‌n‌o‌u.​a​c.‌i‌n என்பதில் பார்த்துக்கொள்ளலாம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளது.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது. ~அமைச்சர்

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவியேற்ற பின், இத்துறையில், அடுக்கடுக்கான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பள்ளி கல்வித் துறைக்கு என, பிரத்யேகமாக, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.



இதற்கான பணிகளை மேற்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுஉள்ளது.தொழில்நுட்ப பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு காட்சிகளை பதிவு செய்யவும், தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கேமரா, தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் பணிகளும் துவங்கியுள்ளன.
படப்படிப்பு மற்றும் தொழில்நுட்ப தளங்களை, சென்னை, அண்ணா நுாலகத்தில் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.மேலும், காட்சி பதிவுக்காக, 'ட்ரோன்' என்ற, ஆளில்லா விமானம் வாங்கவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஜனவரியில், பொங்கல் திருநாளில், சேனல் ஒளிபரப்பை துவங்க, பள்ளி கல்வி துறை திட்டமிட்டுள்ளது.

விடுமுறை - தீபாவளி பண்டிகையை முன்னிட்டு - தீபாவளிக்கு முந்திய தினமான 05.11.18 திங்கட்கிழமை அன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் உள்ளூர் விடுமுறை...