திங்கள், 20 ஜூலை, 2020

*💉கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றி பெற்றதாக அறிவிப்பு*

*💉கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றி பெற்றதாக அறிவிப்பு!*

*கொரோனா சிகிச்சைக்கு ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்த தடுப்பு மருந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 1,077 பேருக்கு தடுப்பு மருந்து செலுத்தப்பட்டதில் அவர்களுக்கு கொரோனா எதிர்ப்பாற்றல் கிடைத்துள்ளது. 10 கோடி தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திடம் பிரிட்டன் ஆர்டர் கொடுத்துள்ளது.*

*தினகரன்.*

*புதிய தலைமுறை செய்தி:

*கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் -2 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை.*

*கல்வித் தொலைக்காட்சி நிகழ்ச்சி நிரல் -2 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை.*

*முறையாக திட்டமிடாததால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி-திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு*

*முறையாக திட்டமிடாததால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி-திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு*

ஜூலை 20, வரலாற்றில் இன்று.தற்காப்புக்கலை வல்லுநர் & ஹாலிவுட் நடிகர் புரூஸ் லீ நினைவு தினம் இன்று.

ஜூலை 20,
வரலாற்றில் இன்று.


 தற்காப்புக்கலை வல்லுநர் & ஹாலிவுட் நடிகர் புரூஸ் லீ நினைவு தினம் இன்று.


1964 இல் புரூஸ்லீ தற்காப்புக்
கலைகளுக்காக ஸ்கூலை திறந்த போது Chinese community அதை எதிர்த்தது. சைனிஸ் அல்லாத யாரும் தற்காப்புக் கலையை கற்பிக்க வேண்டாம் என்று அறிவித்தது. இதைத் தவிர்த்தால் லீ Wong Jack Man னுடன் நேரடியாக மோத வேண்டும் என்று அறிவித்தது. லீ இதை ஏற்றுக் கொண்டார்.

ஜாக் மான் சைனாவின் மிகப் பிரபலமான martial arts வீரராக இருந்தவர். லீ வெற்றி பெற்றால் தொடர்ந்து கற்பிக்கலாம் தோற்றால் ஸ்கூலை மூடிவிடவேண் டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டது.
இருவரும் மோதிக்
கொண்டார்கள் “நான் தோற்று விட்டேன்” என்று யார் ஒத்துக்கொண்டாலும் மோதல் நிறுத்தப்படும். இவர்களிடையே நடை பெற்ற‍ கடுமையான இந்த மோதல், பத்தே நொடியில் ஜாக் மான் புரூஸ் லீயால் தோற்கடிக்கப் பட்டார். ஒரே நாளில், அமெரிக்கா மற்றும் சீனாவில் லீயின் புகழ் கிடுகிடுவெனப் பரவியது.

இந்த மோதலுக்கு முன்பு புரூஸ் லீயிடம் சில பத்திரிகையாளர்க‌ள் ‘‘என்ன தைரியத்தில் அவருடன் மோத ஒப்புக்கொண்டீர்கள்?’’-கேட்டதற்கு, ‘‘நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கி றேன். வாய்ப்புகள் தாமே வராது, நாம் தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றிக் க‌வலையின்றி நானும் என் கலையும் புகழ் பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்’’ என்றார் புரூஸ்லி.

 25 வயதுவரை ஒரு சாதாரண   தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ் லி , உலகப் புகழ் பெற்றது அதன் பிறேக!


அமெரிக்காவின் சான் பிரான்சிஸ் கோவில் லீ ஹோய்-சுவென் என்ற நடிகருக்கு 1940ஆம் ஆண்டு புரூஸ்லீ பிறந்தார். இயற் பெயர் லீ ஜுன்பேன். பின்ன‍ர் இவரது குடும்பம் சீனா திரும்பியதும், பல நாடகங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார்.

பின்னர், குங்ஃபூ பள்ளியில் சேர்ந்து தற்காப்புக் கலையையும், ‘ச்சாச்சா’ எனப்படும் டான்ஸையும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். 18ஆவது வயதிலேயே பாக்ஸிங் சாம்பியன்ஷிப் வெற்றி. இதையடுத்து, புரூஸ்லி அடிக்கடி தெருச் சண்டைகளில் இறங்கி, போலீஸ் பிரச்சனை ஏற்படவே, பெற்றோர் அவரை
சான்பிரான்சிஸ்கோ அனுப்பினர்.

அங்கே ஓர் உணவகத்தில் பகுதி நேர வேலை பார்த்தபடியே, உயர்நிலைப் படிப்பை முடித்த புரூஸ்லி, வாஷிங்டன் பல்கலை கழகத்தில் தத்துவம் படித்தார். கூடவே,  தற்காப்புக் கலையை மற்றவர்களுக்கும் கற்றுத்தரத் தொடங்கினார். ஓரிரு நொடியிலேயே வெற்றிபெறும்
‘ஜட் க்யூன்டோ’ என்ற புதிய சண்டை முறைக்கு சீனாவில் பெரும் வ‌ரவேற்பு கிடைத்தது. இடையில், ‘சினிமாவில் நடிக்கத் தயாராக இருக்கிறேன்’ என அறிவித்தார் புரூஸ்லி. கலையை மறந்து, சினிமாவில் நடிக்க அலைகிறார் என விமர்சனங்கள் எழுந்தன. ‘‘வாய்ப்புகள் தாமே வராது, நாம்தான் உருவாக்க வேண்டும். சினிமா மூலமே இந்தக் கலை இன்னும் பெரும் புகழைடயும்’’ என்று உறுதியுடன் சொன் னார் லீ.

1971இல் ‘தி பிக் பாஸ்’ வெளியாகி, உலகெங்கும் சக்கைப்போடு போட்டது. அதன்பின்னர்
வெளியான ஃபிஸ்ட் ஆஃப் ஃப்யூரி’, ‘ரிடர்ன் ஆஃப் த ட்ராகன்’, ‘என்டர் தி ட்ராகன்’ என அவர் நடித்த படங்கள் வசூலில் சாதனை படைத்தன. அவரது கனவுப் படமான ‘கேம் ஆஃப் டெத்’ படப்பிடிப்பின்போது, மர்மமான முறையில் இறந்து போனார் புரூஸ்லீ. ‘‘அவர் எடுத்துக்கொண்ட
வலி மருந்துகள் அலர்ஜியாகி, அவரது உயிரைப் பறித்து விட்டன’’ என்று டாக்டர்கள்
சொன்னாலும், 33ஆவது வயதில் அவருக்கு ஏற்பட்ட மரணத்தின் மர்மம் இன்றுவரை விடுபடவே இல்லை.

வாய்ப்புகள் வரும் என்று காத்திருப்பவர்கள் என்றுமே வெற்றியைத் தொடேவ முடியாது; வாய்ப்புகளை
உருவாக்குபவர்களே சாதனையாளர்கள் என்பது புரூஸ்லீயின் வாழ்க்கை சொல்லும் மந்திரம்!

வேகம் என்பதன் அர்த்தம் தேடிப்பார்த்தால் அதில் புரூஸ் லீ என்ற பெயர் நிச்சயமாக இருக்கும், இவரது வேகத்தை கேமராவுக்குள் கொண்டு வரமுடியாமல் 24 என இருந்த பிரேமின் அளவை 34ஆக மாற்றிய ஹாலிவூட் வரலாற்றுச் சுவடுகளும் இருக்கின்றன,
புரூஸ்லீ ஒரு அதிசயப் பிறவி என்பதை அனைவரும் ஏற்றுக் கொண்டுள்ளார்கள், அதற்கு அவரது மிகத்துல்லியமான சண்டையிடும் முறைதான் காரணம் என்பதும் யாவரும் அறிந்ததே,
ஒரு நெஞ்சாக்கில்
தீப்பற்றவைக்கும்  காகிதம் ஒட்டப்படுகின்றது பின் அவரது அதிவேக நெஞ்சாக் சுற்றுகையின்மூலம் ஒருவரின் வாயில் இருக்கும் தீக்குச்சியைப் பற்ற வைக்கிறார், பின்னர் தன்னை நோக்கி எறியப்படும் தீப்பற்றாத தீக்குச்சிகளை தனது கவனம் சிதறாத நெஞ்சாக் சுற்றுகை யின் மூலம் பற்ற வைக்கின்றார்,

இது யாரால் முடியும், நிச்சயமாக அவர் ஒரு அதிசயப் பிறவிதான்!!! கொஞ்சங்காலம் தான் வாழ்ந்தாலும் நம் மனங்களில் நீங்கா இடம்பிடித்து விட்டார் மாஸ்டர் புரூஸ் லீ.

*🌐ஜூலை 20, வரலாற்றில் இன்று:கால் பட்ட பகுதிகளில் எல்லாம் வெற்றிகளை குவித்த மாவீரன் அலெக்சாண்டர் பிறந்த தினம் இன்று.*

ஜூலை 20, வரலாற்றில் இன்று.

 கால் பட்ட பகுதிகளில் எல்லாம் வெற்றிகளை குவித்த மாவீரன் அலெக்சாண்டர் பிறந்த தினம் இன்று.

மாவீரன் அலெக்சாண்டர் தன்னம்பிக்கைக்கான அடையாளம். மிகச்சிறிய பிரதேசத்தில் இருந்து கிளம்பி அவர் காலத்தில் அறியப்பட்ட நிலப்பரப்பில் பெரும்பகுதியை தன் வீரத்தால் வென்றவர் அவர். இளம் வயதில் யாரும் அடக்க
யோசித்த முரட்டு குதிரையை அது நிழலை பார்த்து அஞ்சுகிறது என்று கண்டறிந்து எதிர் திசையில் திருப்பி அடக்கி தன்னுடைய சொத்தாக அவர் ஆக்கிக்கொண்டார்.

தந்தையின் விருப்பத்தின் பேரில் அரிஸ்டாட்டில் அவர்களிடம் கல்வி கற்றார் அவர். ஹோமரின் இலியட் ஒடிசி நூல்களை படித்து முடித்ததும் அவரின் உலகை நோக்கி பயணம் போகவேண்டும் என்கிற ஆர்வம் பொங்கியது. கூடவே வாசனைப்பொருளை அதிகம் ஒருமுறை வகுப்பில் பயன்படுத்திய பொழுது ,"இந்தியாவில் இருந்து வரும் அரிய பொருளது ! பார்த்து சிக்கனமாக பயன்படுத்து !" என்று ஆசிரியர் கடிந்தது இந்தியாவை நோக்கி அவரின் கனவுகளை செலுத்தியது. அப்பா பிலிப் ஓரு போரில் கொல்லப்பட இருபது வயதில் மன்னரானார் அலெக்சாண்டர்.

சின்னச்சின்ன கனவுகள் காணத்தெரியாத அவர் உலகமே தன்னுடைய எல்லை என்று எண்ணிக்கொண்டார். பல்வேறு நாடுகள் மீது படையெடுத்தார். பாரசீகம் துவங்கி இந்தியா வரை அவரின் வெற்றிகள் நீண்டன. இந்தியாவிற்குள் நுழைய வந்த பொழுது ஆரம்பத்தில் சில மன்னர்கள் போர் செய்யாமல் அடிபணியவே இந்தியர்கள் இப்படித்தான் என்று எண்ணிக்கொண்டு இருந்தார் அவர்.போரஸ் என்கிற மன்னன் அதீத வீரம் காட்டிய பொழுது யானைப்படையை படாத பாடுபட்டு சமாளித்த அலெக்சாண்டர் அவரை கைது செய்ததும் , "என்ன வேண்டும் உனக்கு ?" என்று கேட்டதும் போரஸ் கம்பீரமாக ,
"மன்னனைப்போல நடத்து என்னை !" என்றார்.

இந்தியாவின் வெப்ப பருவநிலை,போரஸ் உடன் புரிந்த அதிரவைக்கும் போர்,வீட்டு ஞாபகம் ஆகியன கிரேக்க வீரர்களை மேலும் முன்னேற விடாமல் செய்தன. மீண்டும் தாயகம் திரும்பினார் அலெக்சாண்டர். போகிற வழியில் பாபிலோனியாவில் தங்கினார். அங்கே பெரிய மது விருந்துக்கு பிறகு உடல்நலம் குன்றி அவர் இறந்து போனார். அப்பொழுது அவருக்கு வயது முப்பத்தி மூன்று.

கால் பட்ட பகுதிகளில் எல்லாம் வெற்றிகளை குவித்த அலெக்சாண்டர் இறக்கிற பொழுது இப்படி சொன்னார் ,"என் கல்லறையில் என் கரங்களை வெளியே தெரியும்படி வைத்திடுங்கள். உலகையே வென்ற அலெக்சாண்டர் போகிற பொழுது வெறுங்கையோடு தான் போனான் என்று உலகம் அறியட்டும் !" தன்னை வெல்லுதல் மிகப்பெரிய வெற்றி என்று சொல்லாமல் சொன்ன,
தன் எதிரிகளை கண்ணியமாக நடத்திய மாவீரனை பிறந்த நாளில் நினைவு கூர்வோம்.

*🌐ஜூலை 20,வரலாற்றில் இன்று:லாலிபாப் தினம் இன்று.

ஜூலை 20,
வரலாற்றில் இன்று.

லாலிபாப் தினம் இன்று.

லாலிபாப் கண்டுபிடிப்புக்கு முன்னோடி, ஆதிகால மனிதன்தான். தேன்கூடுகளிலிருந்து தேனை எடுப்பதற்காகப் பயன்படுத்திய குச்சிகளில் ஒட்டியிருக்கும் உலர்ந்த தேனை நக்கிச் சாப்பிட்டான். அதுவே பின்னாளில், ‘லாலிபாப்’ என்னும் இனிப்புத் தின்பண்டமாகப் பிறந்தது.  பல்வேறு நாடுகளில் லாலிபாப் தினம் ஒவ்வோரு ஆண்டும் ஜூலை 20இல் கொண்டாடப்படுகிறது.

*🌐ஜூலை 20, வரலாற்றில் இன்று:சர்வதேச சதுரங்க தினம் இன்று. ( International chess day).*

ஜூலை 20, வரலாற்றில் இன்று.

சர்வதேச சதுரங்க தினம் இன்று. ( International chess day)

♗ உலக சதுரங்க கூட்டமைப்பு 1924ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் தேதி பாரிஸ் நகரில் நிறுவப்பட்டது. இது உலக நாடுகளின் சதுரங்க அமைப்புகளை ஒன்றிணைக்கும் ஒரு உலக நிறுவனம்.

♘ இதன் குறிக்கோள் நாம் அனைவரும் ஒரே மக்கள் என்பதாகும். தற்போது இந்நிறுவனத்தில் 150க்கும் மேற்பட்ட நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இக்கூட்டமைப்பு ஜூலை 20ஆம் தேதியை சர்வதேச சதுரங்க தினமாக 1966ஆம் ஆண்டில் அறிவித்தது.