ஞாயிறு, 31 மே, 2020

நாமக்கல் மாவட்டத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதியப்பட்டியல் 1.6.2020 முதல் IFHRMS முறையில் சமர்பிக்க அறிவுரை- நாமக்கல் Collector



பள்ளி வேலை நாட்கள் குறைக்கப்படுவதால்பாடத்திட்டம் ஆய்வு செய்ய குழு~அமைச்சர் பேட்டி...

*15.06.2020 முதல் தொடங்க உள்ள பொதுத்தேர்வுக்காக பள்ளி விடுதிகளை (School Hostels) 11.06.2020 முதல் திறக்க உத்தரவு!!




*🌸கோவிட் 19 பற்றிய புரிதல்கள்: UNICEF ஆல் தமிழில் வெளியிடப்பட்டது.இது குழந்தைகளின் முதற்கட்ட முயற்சி.*







*🌸கோவிட் 19 பற்றிய புரிதல்கள்: UNICEF ஆல் தமிழில்  வெளியிடப்பட்டது.இது குழந்தைகளின் முதற்கட்ட முயற்சி.*

*🌐மே 31,வரலாற்றில் இன்று:லண்டன் பிக் பென் கடிகாரம் முதல் தடவையாக ஒலித்த தினம்.(1859)*

மே 31, வரலாற்றில் இன்று .

1859 ஆம் ஆண்டு இதே நாளில்தான் லண்டன் பிக் பென் கடிகாரம் முதல் தடவையாக ஒலித்தது . தேம்ஸ்  நதிக்கரையில்  வெஸ்ட் மின்ஸ்டர் மாளிகையில் 315 அடி உயரமான ராணி எலிசபெத் கோபுரத்தின் உச்சியில் இக்கடிகாரம் அமைந்துள்ளது.  இதன் மணியோசை மத்திய லண்டன் நகரில் 2 கி.மீ. தூரம் வரை கேட்கும் இக்கடிகாரத்தின் நூற்று ஐம்பதாவது ஆண்டு நிறைவு விழா  மே 31, 2009 அன்று கொண்டாடப்பட்டது.

*🌐மே 31,வரலாற்றில் இன்று:மூலக்கூறு உயிரியலின் சிற்பி எனப் புகழப்படும் ஜாக்குவஸ் லூசியன் மோனாட் நினைவு தினம்.*

மே 31,
வரலாற்றில் இன்று.

ஜாக்குவஸ் லூசியன் மோனாட் நினைவு தினம் இன்று.

 ஜாக்குவஸ் லூசியன் மோனாட் (Jacques Lucien Monod: பிப்ரவரி 9, 1910 – மே 31, 1976)
ஒரு பிரெஞ்சு உயிரியலாளார். 'மூலக்கூறு உயிரியலின் சிற்பி' எனப் புகழப்படுபவர், மருத்துவத்துக்கான நோபல் பரிசினை 1965 இல் 'பிராங்கோயிஸ் ஜாக்கோப்', 'ஆண்ட்ரூ லோப்' ஆகியோருடன் பகிர்ந்து கொண்டவர். செல்களின் வளர்சிதை மாற்றத்தை ஜீன்கள் எனப்படும் மரபீனிகள் நொதிகளை உருவாக்குதன் மூலம் நெறிமுறைப்படுத்துவதைக் கண்டுபிடித்ததற்காக இப்பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

*🌐மே 31,வரலாற்றில் இன்று:பெட்ரி டிஷ் என்ற கண்ணாடிக் கலனை வடிவமைத்த ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி அவர்களின் பிறந்த தினம்.*

மே 31,  ,வரலாற்றில் இன்று.

ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி அவர்களின் பிறந்த தினம் இன்று.

ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி (Julius Richard Petri, மே 31, 1852 – திசம்பர் 20, 1921) ஓர் செருமானிய நுண்ணுயிரியலாளர் ஆவார். இவர் புகழ்பெற்ற பாக்டீரியா அறிவியலாளரான ராபர்ட் கோக்கின் உதவியாளராகப் பணியாற்றியபோது உயிரணுக்களை வளர்க்கப் பயன்படுத்தப்படும், பெட்ரி டிஷ் என அறியப்படும் கண்ணாடி கலனை முதன்முதலில் வடிவமைத்தா
ர்.

*🌐மே 31,வரலாற்றில் இன்று:58 பயணிகள் உள்ளிட்ட 65 பேருடன் பயணம் செய்த சென்னை -டெல்லி இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் வெடித்துச் சிதறி 48 பேர் பலியான தினம்(1973)*

மே 31, வரலாற்றில் இன்று.

58 பயணிகள், 7 ஊழியர்களுடன் 1973ஆம் ஆண்டு இதே நாளில்தான் சென்னையிலிருந்து
டெல்லி
புறப்பட்டது இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம்.

7.35க்கு புறப்பட்டவிமானம்,
9.52க்கு தரையிறங்கவேண்டும்.
அதற்கு 30 நிமிடங்கள் முன்பாக,டெல்லி வசந்த விஹார் பகுதியில் வெடித்து
சிதறியது.48 பேர் இறந்தனர்.17 பேர் காயத்துடன் உயிர் தப்பினர்.

இந்திரா மந்திரிசபையில் மந்திரியாக இருந்த மோகன்குமாரமங்கலம்,
கம்யூனிஸ்ட் தலைவர் பாலதண்டாயுதம், பஞ்சாப் முன்னாள் முதல்வர்
குருநாம்சிங் இறந்தவர்களில் முக்கியப்பிரமுகர்கள்.

மத்தியமந்திரி பாலகோவிந்தவர்மா, காங்கிரஸ் எம்.பி.விஜயலட்சுமி
உயிர்தப்பியவர்களில் முக்கியமானவர்கள்.

*🌐மே 31,வரலாற்றில் இன்று:சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம்.*

மே 31, வரலாற்றில் இன்று.

சர்வதேச புகையிலை எதிர்ப்பு தினம் இன்று.