வெள்ளி, 4 செப்டம்பர், 2020

மாற்றுத்திறனாளியை குடும்ப உறுப்பினராகக் கொண்ட அரசு ஊழியருக்கு மூன்றாண்டு இடமாறுதலில் விலக்கு!தமிழக அரசு ஆணை!

மாற்றுத்திறனாளியை குடும்ப உறுப்பினராகக் கொண்ட  
அரசு ஊழியருக்கு   மூன்றாண்டு இடமாறுதலில்  விலக்கு!

தமிழக அரசு ஆணை!

நாமக்கல் மாவட்டம் _ பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நலத்திட்ட பொருட்கள் ஒன்றிய மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு நேரடியாக வினியோகம் செய்ய வேண்டுதல்_ நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஆசிரியர் மன்றம் கோரிக்கை

நாமக்கல் மாவட்டம் _ பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் நலத்திட்ட பொருட்கள் ஒன்றிய மையங்களில் இருந்து பள்ளிகளுக்கு நேரடியாக வினியோகம் செய்ய வேண்டுதல்_ நாமக்கல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு ஆசிரியர் மன்றம் கோரிக்கை.

*🌟பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-ஆசிரியர் தினம் 2020-பள்ளிகளில் 07.09.2020 அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடுதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

*🌟பள்ளிக்கல்வி-நாமக்கல் மாவட்டம்-ஆசிரியர் தினம் 2020-பள்ளிகளில் 07.09.2020 அன்று ஆசிரியர் தின விழா கொண்டாடுதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.*

செத்த மொழிக்கு அரியாசனம்!-பேரறிஞர்.அண்ணா.

செத்த மொழிக்கு 
அரியாசனம்!
-பேரறிஞர்.அண்ணா.
**************************

மாங்க்ஸ் என்ற மொழி பேசுவோரில் இன்று எவருமே உயிருடனில்லை. இருந்தும் அவர்கள் மொழியை இப்பொழுது கேட்க முடியும்!

இடிந்த கோட்டை, பாழான அகழி, சிதிலமான மணி மண்டபம், சிதைந்த சிற்பங்கள், சீர் கெட்டுப் போன சித்திரங்கள் என்று காண்கிறோமே, அது போலவே பழையமொழி மாங்க்ஸை கேட்கச் செய்திருக்கின்றனர்.

மாங்க்ஸ் மொழி மறைந்து விடாதிருக்க, ‘ரிகார்டு’ மூலம் அம்மொழியைக் கேட்கச் செய்யப்பட்டுள்ளது.

செத்த இனமானாலும் அவர் வழங்கிய மொழி சாகாதிருக்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இறந்த மொழிகளுக்கு இதுதான் இடம்! ஆனால் இந்தியப் பூமியிலே மட்டும் செத்த மொழிக்கு சீரும், சிறப்பும் தேடுவதில் முனைந்துள்ளவர்கள், அம்மொழிக்கு இடம் ‘ரிகார்டு’ என்பதை மறந்துவிட்டு, அரிசாயனம் அமைக்க ஆசை கொண்டு திரிகின்றனர்!

“ரிகார்டு” செய்து, காட்சி சாலைகளிலே, கேட்கச் செய்வதை விடுத்து விட்டு, அதற்குப் பன்னீர் தெளித்து, பரிமள கந்தம் பூசி, பட்டுபீதாம்பரம் உடுத்தி, பாலும் பழமும் ஊட்டி, பல்லக்கிலேற்றி பராக்கு கூறி, பாராள வைக்கலாம் என்று ஆகாத ஆசையினால் அவதிப்படுகிறார்கள்!

எங்கள் சமஸ்கிருதம், செத்த மொழியென்று பேசுகின்றனரே, இவர்கள் நா அழுகிப் போகாதா! நாசகாலர்கள், தேவ மொழியையே நிந்திக்கிறார்கள்! இவர்கள் வாழ்வார்களா! என்று ஆயாசங் கலந்து பேசிடும் பொழுது, சிரிப்பதா, அழுவதா என்று புரியவில்லை.

வடமொழி, பேசும் மொழியல்ல! தேவரும், மூவரும் கேட்டமொழி, பூசை நேரத்தில் பேசிய மொழியல்ல! இங்குள்ள பூதேவர்களும் நாவில் நடமிடவில்லை அம்மொழியை. செத்த மொழியைத் தாங்குகிறார்கள் தர்ப்பையைக் கொண்டு. புரி நூலால், அம்மொழியைக் கட்டித் தூக்கி நிறுத்துகின்றனர்!

- அறிஞர் அண்ணா,
திராவிட நாடு, 29.07.1951
'“நாம்“ பலர், அவர்கள் சிலர்” என்ற கட்டுரையிலிருந்து.

நன்றி:திரு.பெ.பழநி.

*🖥️தொடக்கக்கல்வி -2020-2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை -EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பான தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

🖥️தொடக்கக்கல்வி -2020-2021 ஆம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை -EMIS இணையதளத்தில் சேர்க்கையான மாணவர் விபரங்களை பதிவேற்றம் செய்தல் சார்பான தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணிநியமனம் வழங்கிட வில்லை!தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணிவழங்கிடாத கல்வித்துறை தகுதித்தேர்வு தேர்ச்சி செல்லாது என்று அறிவிப்பது சரியான செயலாகாது!ஆசிரியர் தகுதித்தேர்வு முறையை கைவிடல் வேண்டும்!முனைவர்.மன்றம்.நா.சண்முகநாதன் கோரிக்கை!

ஆசிரியர் தகுதித்தேர்வில் 
தேர்ச்சி பெற்றோருக்கு பணிநியமனம் வழங்கிட வில்லை!

தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றோருக்கு பணிவழங்கிடாத கல்வித்துறை தகுதித்தேர்வு தேர்ச்சி செல்லாது என்று அறிவிப்பது சரியான செயலாகாது!

ஆசிரியர் தகுதித்தேர்வு முறையை கைவிடல் வேண்டும்!

முனைவர்.மன்றம்.
நா.சண்முகநாதன் கோரிக்கை!

தமிழகத்தில் தொடர்வண்டி மற்றும் பொதுப்பேருந்து போக்குவரத்து தொடங்குகிறது! தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழகத்தில் தொடர்வண்டி மற்றும் பொதுப்பேருந்து போக்குவரத்து தொடங்குகிறது!
 தமிழக அரசு அரசாணை வெளியீடு!

தமிழ்நாட்டின் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் சமசுகிருதம் பயில்வதற்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை பெறுக! ஒன்பதாம் வகுப்பு முதல் பணிரெண்டாம் வகுப்பு முடியலான தொழிற்கல்வி மாணாக்கர்களின் பெயர்பட்டியல் தருக!தமிழ்நாடு தொழிற்கல்வி இணைஇயக்குநர் செயல்முறை!

தமிழ்நாட்டின் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் சமசுகிருதம் பயில்வதற்கு 
மத்திய அரசின் 
கல்வி உதவித்தொகை பெறுக!
 
ஒன்பதாம் வகுப்பு முதல் பணிரெண்டாம் வகுப்பு முடியலான தொழிற்கல்வி மாணாக்கர்களின் பெயர்பட்டியல் தருக!

தமிழ்நாடு தொழிற்கல்வி இணைஇயக்குநர் செயல்முறை!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை திரும்பப்பெறுக!கல்வியாளர்கள்- அறிவியலாளர்கள் மத்திய அரசுக்கு கடிதம்!

சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கையை திரும்பப்பெறுக!
கல்வியாளர்கள்- அறிவியலாளர்கள் மத்திய அரசுக்கு கடிதம்!
***************************
மத்திய அரசு வெளியிட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும். ஏற்கெனவே இருக்கும் 2006-ம் ஆண்டு அறிவிக்கையை வலுப்படுத்துங்கள் எனக் கோரி 500க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் மத்திய சுற்றச்சூழல் அமைச்சகம் இந்த அறிவிக்கையை வெளியிட்டது. இதுவரை அமைச்சகத்துக்கு 17 லட்சத்துக்கு மேலான ஆலோசனைகள் வந்துள்ளன. அதில் பல கண்டனங்களும், எதிர்ப்புகளும் அடங்கும்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கை-2020 பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கிறது. இந்த அறிவிக்கை மீது தங்கள் கருத்துகளை ஆகஸ்ட் 11-ம் தேதி வரை மக்கள் தெரிவிக்கலாம் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவித்திருந்தது.

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் இந்த வரைவு அறிவிக்கையைக் கடுமையாக எதிர்த்து வருகிறார்கள். மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இந்த வரைவு அறிவிக்கை பல்வேறு திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி வழங்கும் முறைகளைக் கொண்டுள்ளது.

ஆனால், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வெளியிட்ட இந்த சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையை வெளியிடப்பட்டதிலிருந்தே பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ளன. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்.பி. ராகுல் காந்தி ஆகியோர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து இந்த அறிவிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தினர்.

மேலும், திமுக உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சித் தலைவர்களும் இந்த அறிவிக்கையை திரும்பப் பெறக்கோரி மத்திய அரசை வலியுறுத்தியுள்ளனர்.

இந்தச் சூழலில் 500க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள், அறிவியலாளர்கள், ஆய்வாளர்கள் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதிய அந்த அறிவிக்கையைத் திரும்பப் பெறக் கோரியுள்ளனர்.

இதுதவிர 130 கல்வி நிறுவனங்களும் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதி, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கையில் தங்களுக்கு இருக்கும் கவலைகளையும், ஆலோசனைகளையும் தெரிவித்து அதைத் திரும்பப் பெறக் கோரியுள்ளனர்.

இந்த அறிவிக்கைக்கு அனுமதியளித்தால், சுற்றுச்சூழலில் பெரும் எதிர்மறையான பாதிப்பை ஏற்படுத்தும், அனுமதியளிக்கும் முறையை நீர்த்துப்போகச் செய்யும் எனக் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக இந்திய அறிவியல் நிறுவனம் (ஐஐஎஸ்சி),இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி (ஐஐஎஸ்இஆர்), ஐஐடி, தேசிய உயிரி அறிவியல் மையம் (என்சிபிஎஸ்), இந்திய வனவியல் நிறுவனம் (டபிள்யுஐஐ) ஆகியவையும் சுற்றுச்சூழல் அமைச்சகத்துக்குக் கடிதம் எழுதி, அந்த அறிவிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்தியுள்ளன.

கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் எழுதிய கடிதம் குறித்து வெளியிட்ட அறிவிப்பில் கூறுகையில், “ மத்திய சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிக்கை வெளியிட்டதிலிருந்தே தீவிரமான விமர்சனங்கள், அதிருப்திகள் உருவாகி வருகின்றன.

மாணவர்கள், மக்கள், செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எனப் பலரும் போராடி வருகிறார்கள். இந்த அறிவிக்கை சுற்றுச்சூழலின் அடித்தளப் பாதுகாப்பைத் தகர்த்துவிட்டு வர்த்தகத்தை எளிமையாகச் செய்யத் தூண்டுகிறது.

பல்வேறு கல்வி நிறுவனங்களில் முனைவர் படிப்பு பயிலும் மாணவர்கள், 105 பல்கலைக்கழகப் பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள், மூத்த அறிவியலாளர்கள், முனைவர் பட்டம் பெறக் காத்திருக்கும் 400 மாணவர்கள், ஆய்வு மாணவர்கள், சுயமாக சுற்றுச்சூழல் ஆய்வில் ஈடுபடுவோர் என அனைவரும் சேர்ந்து இந்தக் கடிதத்தை எழுதியிருக்கிறோம்.

நிறுவனம் தொடங்கியபின், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது என்பது, சுற்றுச்சூழல் அனுமதி பெறும் முறையை நீர்த்துப்போகச் செய்யும். சரியான சுற்றுச்சூழல் மதிப்பீட்டிலிருந்து விலக்கு அளித்து, அதிக மாசுபடுத்தும் பல தொழில்கள் மற்றும் திட்டங்களை மறுவடிவமைப்பது குறித்துக் கவலை தெரிவிக்கிறோம்.

இந்த அறிவிக்கை தொடர்பாக மக்களின் முழுமையான, மேம்பாட்ட ஆலோசனை கேட்டபின், முடிவு எடுக்க வேண்டும். சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு வரைவு அறிவிக்கையைத் திரும்பப் பெற வேண்டும், ஏற்கெனவே இருக்கும் 2006-ம் ஆண்டு அறிவிக்கையை வலுப்படுத்துங்கள்

அதிகமான ஒலிவரும் போதும், முக்கிய விலங்கினங்களான புலி, ஆமைகள், யானைகள், தனிப்பட்ட விலங்குகள் ஆகியவற்றுக்குத் தொந்தரவு ஏற்படும்போது, அதற்கேற்றவாறு எதிர்மறை விளைவுகள் உண்டாகும்.

உண்மை என்னவென்றால், மோசமாகத் திட்டமிடப்பட்ட பெரிய அளவிலான மேம்பாட்டுத் திட்டங்கள் மூலம் பல்உயிரிச் சூழலுக்கும், உயிரிச் சூழலுக்கும், மக்களுக்கும் எதிர்மறையான விளைவுகளைத்தான் ஏற்படுத்தும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி:இந்துதமிழ்திசை

புதியகல்விக்கொள்கையில் தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் தமிழகஅரசுக்கு வழங்கிடுவதற்கு உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் திருமதி.அபூர்வா தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படுகிறது!தமிழக அரசு அரசாணை வெளியீடு!

புதியகல்விக்கொள்கையில்
 தமிழக அரசால் ஏற்றுக் கொள்ளக்கூடிய கருத்துகளையும், பரிந்துரைகளையும் தமிழகஅரசுக்கு வழங்கிடுவதற்கு உயர்கல்வித்துறை முதன்மைச்செயலாளர் திருமதி.அபூர்வா தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்படுகிறது!
தமிழக அரசு அரசாணை வெளியீடு!

இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்த பேராசிரியர், தத்துவமேதை டாக்டர்.எச்.இராதாகிருட்ணன் அவர்களின் பிறந்தநாள்!ஆசிரியர் நாளினை ஒட்டி அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு உளம் கனிந்த "ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!"தமிழக முதல்வர் அறிக்கை வெளியீடு!

இந்தியாவின் குடியரசு தலைவராக உயர்ந்த பேராசிரியர், தத்துவமேதை டாக்டர்.எச்.இராதாகிருட்ணன் அவர்களின் பிறந்தநாள்!

ஆசிரியர் நாளினை ஒட்டி  அறிவுசார் சமூகத்தை உருவாக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு 
உளம் கனிந்த "ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்!"

தமிழக முதல்வர் அறிக்கை வெளியீடு!

புதியகல்விக்கொள்கையை கொள்கைவழியில் ஆராய்ந்து கருத்துகள்-பரிந்துரைகள் வழங்குவதற்கு தமிழக அரசு குழு அமைப்பு!

புதியகல்விக்கொள்கையை 
கொள்கைவழியில் 
ஆராய்ந்து 
கருத்துகள்-பரிந்துரைகள் 
வழங்குவதற்கு 
தமிழக அரசு குழு அமைப்பு!

***************************************
புதிய கல்விக்கொள்கை குறித்த பரிந்துரைகளையும், கருத்துகளையும் தமிழக அரசுக்கு வழங்க உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா தலைமையில் உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டு இருக்கிறது.

அந்தக்குழுவில் சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்கள் எஸ்.பி.தியாகராஜன், பி.துரைசாமி, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தர் கே.பிச்சுமணி, அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் என்.ராஜேந்திரன், மதுரை காமராஜர் பல்கலைக்கழக துணைவேந்தர் எம்.கிருஷ்ணன், திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.தாமரைச்செல்வி ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக்குழு கொள்கை வழியாக சென்று தமிழக அரசாங்கத்துக்கு சாத்தியமான பரிந்துரைகளை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஆசிரியர் வேலை தராமல் அரசு ஏமாற்றி விட்டது!ஆசிரியர்பணிக்குரிய கல்வித்தகுதிகளோடு,தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளோருக்கு மீண்டும் தகுதித்தேர்வு என்பது கண்டனத்திற்குரியதாகும்!ஆசிரியர்தகுதித்தேர்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெறவேண்டும்!முனைவர்.மன்றம். திரு.நா.சண்முகநாதன் கோரிக்கை!

ஆசிரியர் தகுதித்தேர்வில் 
தேர்ச்சி பெற்றவர்களுக்கு  
ஆசிரியர் வேலை தராமல் அரசு ஏமாற்றி விட்டது!
ஆசிரியர்பணிக்குரிய  கல்வித்தகுதிகளோடு
,தகுதித்தேர்விலும் தேர்ச்சி பெற்றுள்ளோருக்கு மீண்டும் தகுதித்தேர்வு என்பது கண்டனத்திற்குரியதாகும்!
ஆசிரியர்தகுதித்தேர்வு அறிவிப்பை தமிழக அரசு திரும்பப்பெறவேண்டும்!
முனைவர்.மன்றம். திரு.நா.சண்முகநாதன் கோரிக்கை!

பணிமூப்பும்,பணிஅனுபவமும் கொண்டவரை வலுக்கட்டாயாமாக வெளியேற்றும் கொடுமையை கைவிடுக!மத்திய அரசின் கட்டாய ஓய்வு திட்டம் ஊழியர் விரோதம் நிறைந்ததாகும்!

பணிமூப்பும்,
பணிஅனுபவமும் கொண்டவரை வலுக்கட்டாயாமாக வெளியேற்றும் கொடுமையை கைவிடுக!
மத்திய அரசின்
 கட்டாய ஓய்வு திட்டம் ஊழியர் விரோதம் நிறைந்ததாகும்!

100 சதவீத கல்வி கட்டணம் கேட்கும் தனியார் பள்ளிகள் மீது புகார் அளிக்கலாம் ~ சிஇஓ அறிவிப்பு...

Alagappa University ~ B.Ed-DISTANCE EDUCATION PROGRAMME 2020 -21~ Online admission notification...