ஞாயிறு, 28 ஜூன், 2020

TN custodial deaths: Judicial magistrate should be dismissed, says ex-HC judge

TN custodial deaths: Judicial magistrate should be dismissed, says ex-HC judge

Retired judge Justice K Chandru made this statement with regard to the case of the father-son duo (Jayaraj and Emmanuel Benicks) who died in police custody in Thoothukudi

அரசாணை எண் :250, மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை நாள்: 17.06.2020 இன் வழிகாட்டல்கள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்! பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் கோரோனோ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும் ! பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் கடிதம்!

அரசாணை எண் :250,
மக்கள் நல்வாழ்வு (ம) குடும்ப நலத்துறை நாள்: 17.06.2020 இன் வழிகாட்டல்கள் கடைப்பிடிக்கப்படல் வேண்டும்!
பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில் கோரோனோ தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளல் வேண்டும் !
பள்ளிக் கல்வித்துறை துணைச் செயலாளர் கடிதம்!




*🎬ஜூன் 28, வரலாற்றில் இன்று:புகழ்பெற்ற “தேவர்பிலிம்ஸ்” நிறுவனர்* *பிரபல திரைப்பட தயாரிப்பாளர்* *சாண்டோ சின்னப்பா தேவர் பிறந்த தினம் இன்று(1915)*

ஜூன் 28, வரலாற்றில் இன்று.

புகழ்பெற்ற “தேவர்பிலிம்ஸ்” நிறுவனர்
பிரபல திரைப்பட தயாரிப்பாளர்
சாண்டோ சின்னப்பா தேவர்
பிறந்த தினம் இன்று(1915).

விலங்குகளை வைத்து திரைப்படமெடுத்து தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் பலவெற்றிப்படங்களை கொடுத்தவர். மக்கள் திலகம்  எம்.ஜி.ஆரை வைத்து சுமார் 17 திரைப்படங்கள் எடுத்துள்ளார்.

ஹிந்திப் பட உலகின் சூப்பர் ஸ்டாராக இருந்த ராஜேஷ் கன்னாவை அமர்த்தி "ஹாத்தி மேரா சாத்தி"(1971) என்ற ஹிந்திப் படத்தை முதன் முதலாகத் தயாரித்தார் தேவர்.

   ராஜேஷ் கன்னா குறித்த நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வர மாட்டார். தாமதமாக வந்துவிட்டு சீக்கிரமே போய்விடுவாராம்.

   ஒழுங்கும் கட்டுப்பாடும் உள்ள தேவருக்கு, இதெல்லாம் பிடிக்காமல், அவ்வப்பொழுது ராஜேஷ் கன்னாவை "அசைவ" வார்தைகளால் அர்ச்சனை செய்வாராம் தேவர். படப்பிடிப்பு தளத்திலேயே பலருக்கும் முன்னால் தன்னை அசிங்கமாகத் திட்டுகிறார் என்பது ராஜேஷ் கன்னாவுக்கு தெரிந்து விட்டது.

   ஒரு நாள்..(இதைத் தேவர் ஆரூர்தாசிடம் சொன்னது.. அவரின் அசைவச் சொற்கள் நீங்கலாக)
  ""ராஜேஷ் கன்னா, அவனோட மேக்கப் ரூமுக்கு கூப்பிட்டான். சரி என்னமோ ஒண்ணு நடக்கப் போறது, அவன் கையை நீட்டுனான்னா, நாம காலை நீட்டிட வேண்டியது தான். இன்னைக்கு ஒண்ணு நானாச்சு இல்ல அவனாச்சின்னு முடிவு பண்ணிக்
கிட்டுப் போனேன்.
   மேக்கப் ரூமுக்குள்ள நுழைஞ்சதும், கதவை மூடி தாழ்ப்பாள் போட்டான். நான் என் வேஷ்டியை இருக்கிக் கட்டிக் கிட்டேன். குனிஞ்சு அவன் போட்டிருந்த செருப்பைக் கழட்டுனான்.
   நான் எதிர்பார்த்ததற்கு நேர் மாறாக, கழட்டுன செருப்பை என் கையில் கொடுத்தான். ஏன் கொடுத்தான்னு நான் யோசிக்கறதுக்குள்ளே, அவனே
இங்கலீசுல பேசுனான். நான் புரிஞ்சிகிட்டேன்.
   "மிஸ்டர் தேவர் ! தப்பு என்னுது தான்..அதுக்காக இங்கே தனியா எத்தனை அடி வேணுமின்னாலும்
இந்தச் செருப்பால அடிங்க. ஆனா
அங்கே அத்தனை பேருக்கு முன்னால் கெட்ட வார்தையால
கண்டபடி திட்டாதீங்க. இங்கே உங்களுக்கு நான் சாதாரண நடிகனா இருக்கலாம்.ஆனா பம்பாய் பட உலகமே இன்னைக்கி என் கையில  தான் இருக்கு. அவுங்க என்னைக் கேவலமா நினைப்பாங்க. தயவுசெய்து  என்ன அவமானப் படுத்தாதீங்க..ப்ளீஸ் "
   இதைச் சொன்ன ராஜேஷ் கன்னா, குனிஞ்சு என் காலைத்தொட , நான் உணர்ச்சி வசப்பட்டு,
அவனைக் கட்டி அணைச்சு, கண் கலங்கி சொன்னேன், "மன்னிச்சிக்க  முருகா ! இனிமே உன்ன, எப்பவும் நான் திட்ட மாட்டேன்" னு.
   "நானும் இனிமே ஷூட்டிங்குக்கு
லேட்டா வரமாட்டேன்.கரெக்ட் டயத்துக்கு செட்ல இருப்பேன்" ன்னு சொன்னான்.""
   நடந்த மறுநாள் காலை 8 மணிக்கு வாகினி ஸ்டுடியோவில்,
6 வது தளத்தில் ஷீட்டிங் தொடங்கி விட்டது என்பதற்கான கிளாப் கட்டை அடிக்கும் ஒலி கேட்டது. அந்தப் பக்கம் வந்த நாகிரெட்டியார், "உள்ளே நடிச்சுகிட்டிருப்பது யார் ? " என்று கேட்க, "ராஜேஷ் கன்னா" என்று யாரோ பதில் சொல்ல, புருவத்தை உயர்த்திக் கொண்டு நாகிரெட்டி
சொன்னாராம், "சின்னப்பா தேவரா...கொக்கா...!"

*🌐ஜூன் 28, வரலாற்றில் இன்று:ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு உதவியதற்காக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 28, வரலாற்றில் இன்று.

ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்கு உதவியதற்காக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் பிறந்த தினம் இன்று.

பேராசிரியர் முகமது யூனுஸ் (பிறப்பு – ஜூன் 28 1940 சிட்டகொங், வங்காளதேசம்) வங்காளதேசத்தினைச் சேர்ந்த வங்கி முதல்வரும், பொருளியலாளருமாவார். சிறுகடன் எனும் திட்டத்தை தோற்றுவித்தவரும், நடைமுறைப்படுத்தியவருமாவார்.

ஏழைத் தொழில்முனைவோருக்கு வழங்கப்படும் சிறு தொகைக்கடனே சிறுகடன் (microcredit) ஆகும். கிராமின் வங்கியின் தோற்றுவிப்பாளரும் ‘Banker to the Poor’ எனும் நூலின் ஆசிரியருமாவார். ஏழை மக்களின் பொருளியல் மற்றும் சமூக முன்னேற்றத்திற்கு பாடுபட்டமைக்காக 2006 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு இவருக்கும், இவரால் தோற்றுவிக்கப்பட்ட கிராமின் வங்கிக்கும் சேர்த்து வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, உலக உணவு விருது உட்பட பல பன்னாட்டு, தேசிய விருதுகளையும் யூனுஸ் பெற்றுள்ளார்.

*🌐ஜூன் 28, வரலாற்றில் இன்று:முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 28, வரலாற்றில் இன்று.

முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் பிறந்த தினம் இன்று.

பி. வி. நரசிம்ம ராவ் ஜூன் 28, 1921ஆம் ஆண்டு பிறந்தார். இவர் இந்தியாவின் ஒன்பதாவது பிரதமராக பணியாற்றியவர். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த இவர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினர். தென் இந்தியாவைச் சேர்ந்த முதல் இந்தியப் பிரதமர் இவராவார்.

✍ இந்திய சுதந்திரப் போராட்ட வீரரான ராவ், 1962 முதல் 1971 வரை மத்திய அமைச்சரவையில் பங்கு வகித்ததுடன், 1971 முதல் 1973 வரை ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் முதல்வராகவும் பதவி வகித்தார். பின்னர் இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோரின் ஆட்சிக்காலத்தில் தொடர்ந்து மத்திய அமைச்சராக இருந்தார்.

✍1991இல் ராஜீவ் காந்தி கொலை செய்யப்பட்ட பிறகு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார் அவ்வாண்டு நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று, ராவ் பிரதமரானார். ஐந்து ஆண்டுகள் பிரதமராக பதவி வகித்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததால் இவர் பதவி இழக்க நேர்ந்தது. இவர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 23 ஆம் தேதி அன்று மாரடைப்பால் காலமானார்.

*🌐ஜூன் 28, வரலாற்றில் இன்று:முதலாம் உலகப் போருக்கு காரணமான சம்பவம் நடைபெற்ற தினம் இன்று.*

ஜூன் 28, வரலாற்றில் இன்று.

முதலாம் உலகப் போருக்கு காரணமான சம்பவம் நடைபெற்ற தினம் இன்று.

1914 ஜூன் 28 ஆம் தேதி ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸிஸ் பெர்டினாயிட், அவரது மனைவி சோபி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியாவின் மீது போர் தொடுத்தது.இந்தப் போர் தான் முதல் உலகப் போராக மாறியது. இப்போரில் ஈடுபட்ட நாடுகள் 20 ஆயிரம் கோடி டாலர்களை  செலவிட்டன. 30 நாடுகளைச் சேர்ந்த ஆறரை கோடி வீரர்கள் இப்போரில் ஈடுபட்டனர். இதில் ஏறத்தாழ ஒரு கோடி என்கிற அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டது. நேச நாட்டு சக்திகள் தரப்பில் 60 லட்சம் வீரர்களும் மைய சக்திகள் தரப்பில் 40 லட்சம் வீரர்களும் இறந்தனர். முதல் உலகப் போரில் ஜெர்மனிக்கும் ரஷ்யாவிற்கும்தான் அதிக இழப்பு. ஜெர்மனி 19 லட்சம் உயிர்களையும், ரஷ்யா 17 லட்சம் உயிர்களையும் இழந்தது.  இந்தப் போரில் 11 லட்சம் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 60 ஆயிரம் வீரர்கள் நாடு திரும்பவே இல்லை.
a

*🥇ஜூன் 28, வரலாற்றில் இன்று:2016 Summer Paralympic இல் தங்கப்பதக்கம் பெற்ற மாற்றுத்திறனாளி உயரம் தாண்டுதல் வீரர் ( Paralympic high jumper)“தமிழகத்தின் தங்கமகன்“* *“பத்மஶ்ரீ”* *மாரியப்பன் தங்கவேலு பிறந்த தினம் இன்று( 1995).*

ஜூன் 28, வரலாற்றில் இன்று.

2016 Summer Paralympic இல் தங்கப்பதக்கம் பெற்ற
 மாற்றுத்திறனாளி உயரம் தாண்டுதல் வீரர்
( Paralympic high jumper) 
“  தமிழகத்தின்  தங்கமகன் “
“பத்மஶ்ரீ”
மாரியப்பன் தங்கவேலு
பிறந்த தினம் இன்று( 1995).