ஞாயிறு, 28 ஜூன், 2020

*🌐ஜூன் 28, வரலாற்றில் இன்று:முதலாம் உலகப் போருக்கு காரணமான சம்பவம் நடைபெற்ற தினம் இன்று.*

ஜூன் 28, வரலாற்றில் இன்று.

முதலாம் உலகப் போருக்கு காரணமான சம்பவம் நடைபெற்ற தினம் இன்று.

1914 ஜூன் 28 ஆம் தேதி ஆஸ்திரிய இளவரசர் பிரான்ஸிஸ் பெர்டினாயிட், அவரது மனைவி சோபி இருவரும் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதன் காரணமாக ஆஸ்திரியா செர்பியாவின் மீது போர் தொடுத்தது.இந்தப் போர் தான் முதல் உலகப் போராக மாறியது. இப்போரில் ஈடுபட்ட நாடுகள் 20 ஆயிரம் கோடி டாலர்களை  செலவிட்டன. 30 நாடுகளைச் சேர்ந்த ஆறரை கோடி வீரர்கள் இப்போரில் ஈடுபட்டனர். இதில் ஏறத்தாழ ஒரு கோடி என்கிற அளவிற்கு உயிரிழப்பு ஏற்பட்டது. நேச நாட்டு சக்திகள் தரப்பில் 60 லட்சம் வீரர்களும் மைய சக்திகள் தரப்பில் 40 லட்சம் வீரர்களும் இறந்தனர். முதல் உலகப் போரில் ஜெர்மனிக்கும் ரஷ்யாவிற்கும்தான் அதிக இழப்பு. ஜெர்மனி 19 லட்சம் உயிர்களையும், ரஷ்யா 17 லட்சம் உயிர்களையும் இழந்தது.  இந்தப் போரில் 11 லட்சம் இந்திய வீரர்கள் கலந்து கொண்டனர். இதில் 60 ஆயிரம் வீரர்கள் நாடு திரும்பவே இல்லை.
a

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக