செவ்வாய், 3 மார்ச், 2020

DSE Proceedings_ICT-கணினி வழி கல்வியில் ஆர்வமுடன் செயல்படும் ஆசிரியர்களுக்கு தேசிய விருது அளித்தல் விவரம் கோருதல் சார்ந்து இயக்குநர் செயல்முறை நாள்:04.02.2020

*கூட்டுறவு சிக்கன நாணய சங்க இயக்குநர்களுக்கு அமர்வு படி உயர்த்தி வழங்குவதற்கான பதிவாளரின் சுற்றறிக்கை*

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் நாமக்கல் மாவட்டம் (கிளை) ~ முப்பெரும் விழா (08-03-2020) அழைப்பிதழ்...

அன்பானவர்களே!வணக்கம்!

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநிலப் பொதுச்செயலாளர், பாவலர்.திரு.க.மீ., அவர்களின் அறைகூவலை ஏற்றுக்கொண்டு ஜாக்டோ-ஜியோவின் 22.01.2019 ஆம் நாள் முதலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் எழுச்சியுடன்  பங்கேற்றுள்ள மறவர்-மறத்தியர் அனைவருக்கும்  இருகரம் குவித்து தலைதாழ்த்தி  வணக்கம் -வாழ்த்து-பாராட்டு உரித்தாக்கிக் கொள்கிறோம்.

எதிர்வரும் 08.03.2020 (ஞாயிறு)அன்று முற்பகல் 10.00மணி அளவில் நாமக்கல்லில்  கடந்த 2019 சனவரி 22ஆம் நாள் முதலான வேலைநிறுத்தப் போராட்டத்தில் தீரமுடன் பங்கேற்றுள்ள மறவர்- மறத்தியர்களுக்கும் பாராட்டு செய்து சிறப்பித்திடும் வகையில்  முப்பெரும்விழா நடைபெறுகிறது.

தமிழ்நாடு காவல்துறையால் வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் பங்கேற்றதற்காக  பொய்வழக்கு புனையப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தற்காலிக  பணிநீக்கம் செய்யப்பட்டும், இடமாறுதல் வழங்கப்பட்டும்,17(ஆ)ஒழுங்கு நடவடிக்கைகள் தொடுக்கப்பட்டும் பல்வேறுவகையான தாக்குதல்களை- கொடுமைகளை எதிர்கொண்டுள்ள ஆசிரியர் மன்றத்தின் சேலம் சிறைச்செம்மல்களுக்கு- தியாகச்செம்மல்களுக்கு  சிறைசெம்மல் விழா
நடைபெறுகிறது.

மாநிலத்தலைமை அறிவிக்கும் வரை வேலைநிறுத்தத்தில் பங்கேற்றதற்காக ஆசிரியப்பணி மறுக்கப்பட்டு பணிக்காக காத்திருப்போர் கறுப்புப்பட்டியிலில் வைக்கப்பட்டும், இடமாறுதல் வழங்கப்பட்டும்,17(ஆ)ஒழுங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டும் பல்வேறு வகையான சவால்களை சந்தித்துள்ள  மன்ற மறவர்-மறத்தியருக்கு வேலை நிறுத்தப் போராளி விழா நடைபெறுகிறது.

வேலைநிறுத்தக் காலத்தில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக கைதாகி விடுவிக்கப்பட்டுள்ள செயல்நிறை மறவர்-மறத்தியர்  மற்றும்  வேலைநிறுத்தக் காலத்தில்   போராட்டப் பாரம்பர்யத்தை - போராட்டப் பெருமையை
தாழ விடாது  உயத்திப்பிடித்துள்ள செயல்நிறை மறவர்-மறத்தியர் ஆகியோருக்கு
மன்றச்செம்மல்  விழா 
நடைபெறுகிறது.

கடந்த 2019சனவரி 22ஆம் நாள் முதலான வேலைநிறுத்தத்தில் மாநிலத்தலைமையின் முடிவுகளை முழுமையாக நிறைவேற்றிய மறவர்-மறத்தியருக்கு பொன்னாடை அணிவித்து விருது வழங்கி பாராட்டுச் சான்று வழங்கி சிறப்புச்செய்து முப்பெரும் விழாப்பேருரையை  இனமானக் காவலர்-பாவலர் திரு.க.மீ., அவர்கள்  ஆற்றுகிறார்கள்.

இவ்விழாவில் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில- மாவட்ட- ஒன்றியப்பொறுப்பாளர்கள், மன்ற முன்னோடிகள், ஆசிரியப்பெருமக்கள் அனைவரும் முழுமையாக -நிறைவாக பங்கேற்று பங்களிப்புச் செய்து முப்பெரும் விழாவினை சிறப்புறச்செய்தும்- வெற்றிபெறச் செய்தும்  எல்லோருக்குமான ஒட்டுமொத்தப் போராட்டத்தில் பங்கேற்று பல்வேறு பாதிப்புகளை- இழப்புகளை அடைந்துள்ள ஆசிரியர் மன்றத்தின்  செம்மல்களுக்கு நன்றி பாராட்டி  உதவிட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

~முருகசெல்வராசன் & மெ.சங்கர்.