சனி, 4 ஜூலை, 2020

*05.07.2020, 12.07.2020, 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய 4 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்துதல் சார்பான நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்தி வெளியீடு.நாள்:04.07.2020*

*05.07.2020, 12.07.2020, 19.07.2020 மற்றும் 26.07.2020 ஆகிய 4 ஞாயிற்றுக் கிழமைகளில் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி முழு ஊரடங்கு அமல்படுத்துதல் சார்பான நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் செய்தி வெளியீடு.நாள்:04.07.2020*

*🌐ஜூலை 4, வரலாற்றில் இன்று:மேரி கியூரி நினைவு தினம் இன்று.*

ஜூலை 4, வரலாற்றில் இன்று.

மேரி கியூரி நினைவு தினம் இன்று

உலகின் நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி.
(இரண்டு வெல்வேறு துறையில் நோபல் பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது )
இவர் தனது கணவருடன் சேர்ந்து கண்டு பிடித்த ஒரு தனிமம் யூரேனியத்தை விட 300 மடங்கு கதிர் வீச்சு கொண்டது.
அதற்கு தனது  நாட்டின் நினைவாக பொலேனியம் என்ற பெயர் வைத்தார்.
இவர் கதிர் வீச்சு பொருட்களுடன் ஆய்வு செய்யும் போது கதிர் வீச்சு தன்னை ஊடுறுவது அறிந்தே இருந்தார். ஆனால் பின்னாளில் உலகுக்கே பயன்படப் போகும் கண்டு பிடிப்பு என்பதால் தன்னை பற்றி கண்டு கொள்ள வில்லை. அந்த கதிர் வீச்சு தாக்கத்தால் தான் இறந்தும் போனார்.
ஆனால் அவர் கண்டு பிடித்த ரேடியம் பல லட்ச கணக்கான மக்களில் புற்றுநோயை குணப்படுத்தி பல உயிரை காப்பாற்றியது.
போரில் காயம் பட்டவர்கள் புண்ணை ஆற்றியது.

அறிவியலை காசாக்கி கார்ப்பரேட்டுக்கு நல்ல ரேட்டுக்கு விற்கும் விஞ்ஞானி அல்ல மேரி கியூரி.

தனது அற்புத கண்டுபிடிப்புக்கு கடைசிவரை அவர் உரிமத்தை பெறவே இல்லை  (ஆனால் இவர் கண்டுபிடிப்பை வைத்து பலர் கோடீஸ்வரர் ஆனது வேறு விஷயம் )

அறிவியலை உயிர் போல நேசித்து அறிவியலையே வாழ்க்கை ஆக்கி கொண்டு அறிவியலை மனித குல நன்மைக்கு பயன்படுத்திய மிக சொற்ப விஞ்ஞானிகளில் ஒருவர் தான் மதிப்பிற்குரிய மேரி கியூரி அம்மையார்
இன்று அவர் நினைவு தினம்.
அவர் நினைவைப் போற்றுவோம்.

*🌐ஜூலை 4, வரலாற்றில் இன்று:சர்வேயர் மற்றும் புவியியல் வல்லுநர் சர்.ஜார்ஜ் எவரெஸ்ட் பிறந்த தினம் இன்று!*

ஜூலை 4, வரலாற்றில் இன்று.

சர்வேயர் மற்றும் புவியியல் வல்லுநர் சர்.ஜார்ஜ் எவரெஸ்ட் பிறந்த தினம் இன்று!

ஒரு நான்கு அடி நிலம் அளப்பதற்கே எவ்வளவு அக்கப்போர்களை பார்க்கிறோம் நாம்.

 இந்திய துணைக்கண்டத்தை சர்வே செய்வது எப்படிப்பட்ட பணியாக இருந்திருக்கும்?
ரென்னேல் எனும் அதிகாரி துல்லியமில்லாத ஒரு வரைபடத்தை உருவாக்கி தந்திருந்தார்; அதை வைத்தே பலகாலம் நகர்த்தினார்கள் ஆங்கிலேயர்கள். ஒழுங்காக நிலஅளவை செய்ய வேண்டும் என்று மைசூர் போருக்கு பின்னர் உணர்ந்தார்கள் அவர்கள். லாம்ப்டன் எனும் ஆங்கிலேய அதிகாரி சென்னை பரங்கிமலையில் அந்த நில அளவையியல் பணியை தொடங்கினார். அவரின் வாழ்க்கையே சுவாரசியமானது. ஆனால், நாம் பேசப்போவது அவருக்கு உதவ நியமிக்கப்பட்ட எவரெஸ்ட் பற்றி. லாம்ப்டன் பரங்கிமலையில் தொடங்கி விந்திய மலை வரை அளந்து முடித்திருந்தார்.

இங்கிலாந்தில் இருந்து லாம்ப்டனுக்கு உதவ வந்த எவரெஸ்ட் அவருக்கு பிறகு இந்தியாவை அளக்கும் பணியை தொடர நினைத்தால் நிலைமை படுமோசம். அந்த அளக்கும் கருவியான தியோடலைட் சேதமாகி இருந்தது. ஸ்க்ரூ கழன்று, இரும்பு சங்கிலி தேய்ந்து போய் பல் இளித்தது. இங்கிலாந்து வரைக்கும் போய் கருவியை மீண்டும் கொண்டுவந்தார் இவர். கூடவே கருவி பழுதுபட்டால் சரி செய்ய ஒரு ஆளையும் கூட்டிக்கொண்டு வந்தார்.

டைபாய்டு காய்ச்சல், மலேரியா என்று உடம்பை புரட்டிப்போட்டன வியாதிகள். மனம் தளராமல் இயங்கினார் எவரெஸ்ட். “இந்த தேசத்தை அளந்துவிட வேண்டும் என்கிற கனவு மட்டுமில்லை என்றால் இங்கே ஒரு கணம் கூட இருக்க மாட்டேன்!” என்று படுக்கையில் இருந்தபடியே முனகினார் அவர். இந்தியாவில் மக்கள் தொடர்ந்து தொல்லைகள் கொடுத்தார்கள். தியோடலைட் கருவிக்கு பொட்டு வைத்து டீ சாப்பிடப்போன நேரத்தில் கடவுளாக்கி இருந்தார்கள். கொள்ளைக்காரர்கள் புதையல் தேட உதவும் என்று நம்பி கருவியைக் கொண்டு போய் பார்த்துவிட்டு கடுப்பாகி அலுவலர்களின் கை கால்களை உடைத்துப்போட்டார்கள். ஜலீம் சிங் எனும் நிலச்சுவான்தார் பெண்கள் வீட்டுக்குள் குளிப்பதை பார்க்க இந்தக்கருவி உதவும் என்று நம்பி வாங்கிப்போய் பார்த்து அலுத்துப்போனான். உருவங்கள் தலைகீழாக தெரிந்ததில் இதில் மாய மந்திர சக்திகள் இருப்பதாக வேறு கிளப்பிவிட்டார்கள்.

இத்தனை இடர்பாடுகளுக்கு நடுவே எல்லையில்லாத ஆர்வம் செலுத்த அவர் இயங்கினார். குமரியில் துவங்கி முசூரி வரை அளவையை வெற்றிகரமாக நடத்தினார் அவர். கச்சிதமான வேலைக்கு முக்கியத்துவம் கொடுத்தார். ஒரு தவறு இருந்தாலும் திருப்பி வேலையை செய்ய வைத்தார். சிரோஞ் எனும் ஊரில் இருந்து அளக்கப்பட்ட அளவும், டெஹ்ராடூனில் அளந்த அளவும் ஒரு மீட்டர் அளவுக்கு மாறுபட்டது. மீண்டும் அளந்தார் இவர்; இரண்டு பகுதிகளுக்கும் அதிக தூரமில்லை நானூறு மைல்கள் தான். மொத்தமாக இந்தியாவில் இருந்த காலத்தில் இரண்டரை லட்சம் சதுர மைல்களை அளந்து சாதித்திருந்தார் எவரெஸ்ட்
தென் ஆப்பிரிக்காவில் படுத்துக்கொண்டு உடல் நலமின்மையால் அவதிப்பட்ட பொழுது அவர் எழுதியிருக்கும்குறிப்பு என்ன தெரியுமா?
“லாம்ப்டன் 18º 3′ 15, 24º 7′ 11, 20º 30’48′
என்று அளந்திருக்கும் வளைவில் இரண்டு பகுதிகளுக்கு இடையே தவறாக உள்ளது. மீண்டும் சோதித்து சரி செய்ய வேண்டும் !” அவருக்கு அடுத்து வந்த ஆண்ட்ரூ வாக் இவரின் எதிர்ப்பையும் மீறி உலகின் உயரமான சிகரத்துக்கு எவரெஸ்ட் என்று பெயர் வைத்தார். அதை எவரெஸ்ட் பார்த்ததே இல்லை. தான் அளந்து கண்டறிந்த பல்வேறு நிலப்பகுதிகளுக்கு அப்பகுதி மக்களின் மொழியிலேயே பெயர் வைக்கிற பண்பு அவரிடம் இருந்தது.

*🌐ஜூலை 4, வரலாற்றில் இன்று:இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவரான பிங்கலி வெங்கைய்யா (ஆகஸ்டு 2, 1876 - சூலை 4, 1963) நினைவு தினம் இன்று.*

ஜூலை 4, வரலாற்றில் இன்று.

 இந்தியாவின் தேசியக் கொடியை வடிவமைத்தவரான பிங்கலி வெங்கைய்யா (ஆகஸ்டு 2, 1876 - சூலை 4, 1963) நினைவு தினம் இன்று.

வெங்கையா ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள மசிலிபட்டி என்னும் ஒர் ஊரில் பிறந்தார். மசிலிபட்டியில் தனது மேனிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, உயர் கேம்பிரிட்ஜ் (சீனியர் கேம்பிரிட்ஜ்) பட்டத்தை முடிக்க கொழும்பிற்குச் சென்றார்.

பின் இந்தியா திரும்பியதுடன், அவர் வெவ்வேறு இடங்களில் பணிபுரிந்தார். அதன்பின், லாகூரில் உள்ள ஆங்கிலேய-வேத உயர்நிலைப் பள்ளியில் உருது மற்றும் ஜப்பானியம் படிக்கச் சேர்ந்தார்.

நிலவியலில் பட்டம் பெற்று, ஆந்திரப் பிரதேசத்தில் வைரச் சுரங்கம் தோண்டுதலில் சாதனை படைத்தார். அதனால் இவர் 'வைரம் வெங்கய்யா' என்று அழைக்கப்பட்டார்.

தென்ஆப்பிரிக்காவில் நடைபெற்ற போரில் இவர் இந்திய-பிரித்தானிய படையில் சேர்ந்து பணியாற்றினார். அப்பொழுது மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டார்.

காக்கி நாடாவில் இந்திய தேசிய காங்கிரசின் சந்திப்பின்பொழுது, தனிபட்ட ஓர் கொடியை உருவாக்க அறிவுறுத்தினார் மகாத்மா காந்தி வெங்கைய்யாவை கொடியின் அடவை உருவாக்க வேண்டினார். விஜயவாடாவின் தேசிய மாநாட்டின்போது தேசியக் கொடியை அறிமுகப் படுத்தினார்.

முதலில் கொடியின் நடுவில் ஓர் ராட்டை இருந்தது, பின் அவ்விடத்தில் அசோகச் சக்கரம் சேர்க்கப்பட்டது. இந்திய தேசியக்கொடியை பருத்தி துணியில் மட்டுமே கையால் தைக்கவேண்டும் என்று அப்போது பரிந்துரைக்கப்பட்டது. வேறு துணிகளை உபயோகிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.

*🌐ஜூலை 4, வரலாற்றில் இன்று:சுவாமி விவேகானந்தர் நினைவு தினம் இன்று(1902).*

ஜூலை 4,  வரலாற்றில் இன்று.

சுவாமி விவேகானந்தர்  நினைவு தினம் இன்று(1902).


19ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் தலைசிறந்த சமயத் தலைவர்களுள் ஒருவராகத் திகழ்ந்தவர் சுவாமி விவேகானந்தர். இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. இராமகிருஷ்ண பரமஹம்சரின் சீடரான இவரின் கருத்துக்கள் இளைஞர்களை எழுச்சியடைய செய்வதாக அமைந்துள்ளன. இவர் இந்தியாவிலும், மேலை நாடுகளிலும் பல்வேறு சொற்பொழிவுகளை ஆற்றியுள்ளார்.

1893ஆம் ஆண்டு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற
உலகச் சமயங்களின் பாராளுமன்றத்தில் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகள் உலகப் புகழ் பெற்றவையாகும். இவர் பிறந்த தினமான ஜனவரி 12ஆம் தேதி ஆண்டுதோறும் தேசிய இளைஞர் தினமாக நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரே! ஆசிரியர்களின் வேதனைக்குரல் கேட்கலையா?! உந்தன் மனம் இரங்கலையா?! ஊக்க ஊதிய உரிமையை மறுப்பதும், பெற்றுவரும் ஊதியத்தை குறைப்பதும் பெரும் அநீதி இல்லையா?!

பரமத்தி வட்டாரக்கல்வி அலுவலரே!

ஆசிரியர்களின் வேதனைக்குரல் கேட்கலையா?!
உந்தன் மனம் இரங்கலையா?!

ஊக்க ஊதிய உரிமையை மறுப்பதும்,
பெற்றுவரும்  ஊதியத்தை குறைப்பதும் பெரும் அநீதி இல்லையா?!

சொந்த(சுய) கெளரவத்திற்கும்,
சொந்த நலனுக்கும்,
பழிவாங்கலுக்கும், தான்பிடித்த முயலுக்கு  மூன்று கால்கள்
என்று சாதிப்பதற்கும்
கல்வித்துறை விதிகளை  சாகடிக்கலாமா?!
ஊக்க ஊதிய விதிகளை காற்றினில்
பறக்க விடலாமா?!
நடைமுறை மரபுகளை புறந்தள்ளலாமா!?