வெள்ளி, 1 மார்ச், 2019

கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்தில் கடன் பெறும் போது குழுகாப்பீடு கட்டாயமில்லை.... விருப்பத்தின் பேரில் செய்துகொள்ள உத்தரவு


SMC one day Training - Director Proceeding 2019

புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் (NHIS) கீழ் அனுமதிக்கப்பட்ட நோய்களுக்கு, NHIS திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படாத மருத்துவமனைகளில் அவசர கால சிகிச்சை மேற் கொண்டால், ஆகும் மருத்துவ செலவினை விதிகளுக்கு உட்பட்டு பணமாகப் பெற்றுக் கொள்ளலாம் எனபதற்கான அரசாணை வெளியீடு....

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு - ஜூன் 2018 - முதலாமாண்டு / இரண்டாமாண்டு பயிற்சி மாணவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவு வெளியிடுதல் - விடைத்தாட்களில் மறுகூட்டல் (Retotalling)/ ஸ்கேனிங் (Scanning) மூலம் ஒளிநகல் பெறுவதற்கான விண்ணப்பிக்கும் தேதி தெரிவித்தல் தொடர்பாக...

தொடக்கக் கல்வி - அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பு மையம் அமைத்தல் - சார்பாக...

யுஜிசி-நெட் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்...

தமிழ்நாடு அரசின் விடுமுறை நாள்களில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பணியிடைப்பயிற்சி வகுப்புகள் மற்றும் பள்ளித்தலைமையாசிரியர் கூட்டங்கள் போன்றனவற்றை நடத்திடுவதை கைவிடுமாறு வேண்டுகோள்...

தமிழ்நாடு அரசின் விடுமுறை நாள்களில் தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு பணியிடைப்பயிற்சி வகுப்புகள் மற்றும் பள்ளித்தலைமையாசிரியர் கூட்டங்கள் போன்றனவற்றை நடத்திடுவதை கைவிடுமாறு தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரிடம் மற்றும் திட்ட இயக்குநரிடம்
(அகஇ) தொடக்கநிலை ஆசிரியர் அமைப்புகள் தொடர்ந்து  வலியுறுத்தி தமிழ்நாட்டு தொடக்கநிலை ஆசிரியர்களின் மேற்கண்ட கோரிக்கை ஏற்றுக்கொள்ளச்செய்யப்பட்டுள்ளது.

உண்மைநிலை இவ்வாறு இருக்கையில் நாமக்கல் மாவட்டத்தில்  வரும் (02.03.19)சனிக்கிழமை அன்று அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளின்  தலைமையாசிரியர்களின்  கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது கவலைத்தருகிறது. 
மேற்கண்ட  நியாயமற்ற  அறிவிப்பை தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு கடுமையாக ஆட்சேபிக்கிறது.

தமிழ்நாடு கல்வித்துறை தற்போது அரசு விடுமுறைநாளில் ,சனிக்கிழமையில் தலைமையாசிரியர் கூட்டம் நடத்திடுவது என்பது ஒருவகை சீண்டல் முயற்சியா?!  
முன் ஒத்திகையா?! என்று 
நாமக்கல் மாவட்ட ஆசிரியர்கள் ஐயமும்,அச்சமும் கொள்கின்றனர்.
இத்தகு ஐயமும்,அச்சமும் ஒருங்கிணைந்த மனநிலையானது ஆரோக்கியமற்ற சூழலையே கல்விக்களத்தில் ஏற்படுத்தும் வாய்ப்பும்,ஆபத்தும் உள்ளது .

தமிழ்நாடு அரசு விடுமுறைநாளில் அரசுப்பணிகளை செய்திட பணிப்பது, கூட்டங்கள் நடத்திடுவது அறமற்றதாகும்.

தமிழ்நாடு மாநிலத்தில் எங்கும் கூட்டப்படாதக் கூட்டம் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் தான் கூட்டப்பட்டுள்ளது
(!?)என்பது பல்வேறு வினாக்களை மாவட்ட ஆசிரியர்களிடம்  எழுப்புகிறது.

மேற்கண்டுள்ளவற்றை கனிவுடன் பரிசீலித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் மற்றும் தமிழ்நாடு  பள்ளிக்கல்வித்துற முதன்மைச்செயலாளர்  ஆகியோர் நாமக்கல் மாவட்டத்தில் வரும்(02.03.19) சனி அன்று கூட்டப்பட்டுள்ள பள்ளித்தலைமையாசிரியர் கூட்டத்தை ஒத்திவைத்திடும் வகையில் வழிகாட்டுதல் செய்திடுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

-முருகசெல்வராசன்.,  மாவட்டச்செயலாளர்.

*வருமானவரி உபரித்தொகை திரும்பப்பெற புது நிபந்தனை*

வருமான வரி உபரி தொகை திரும்ப பெற புது நிபந்தனை

வருமான வரி பிடித்தம் போக, மீதமுள்ள தொகையை திரும்ப பெறுவதற்கு, வங்கி கணக்குடன், 'பான்' எண் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது.


வருமான வரி செலுத்துவோரிடமிருந்து, சில நேரங்களில், அவர்களுக்கான வரித் தொகையை விட, கூடுதலான தொகை, முன்
கூட்டியே பிடித்தம் செய்யப்படுவது வழக்கம்.


இவ்வாறு கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை, வாடிக்யைாளர் அளித்த வங்கி கணக்கு விபரங்கள் அடிப்படையில், வங்கி யில் நேரடியாக செலுத்தப்பட்டும், காசோலை யாகவும் இதுவரை வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பு:


இன்று முதல், வருமான வரி பிடித்தம் போக, மீதமுள்ள தொகை, 'இ - சேவை' முறையில், நேரடியாக, சம்பந்தப் பட்டோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.


எனவே, வருமான வரி செலுத்து வோர், தங்கள் வங்கிகணக்குடன், 'பான்' எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்; இல்லையெனில், பிடித்தம் போக, மீதமுள்ள தொகை திரும்ப செலுத்தப்படாது.

வரி செலுத்துபவர், தங்கள் கணக்கு உள்ள வங்கி
கிளைக்கு சென்று, வங்கி கணக்குடன், 'பான்' எண் இணைக்கப்பட்டுஉள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டது.


வருமான வரி கணக்கு தாக்கல் செய்வ தற்கு, 'பான்' எண்ணுடன், ஆதார் எண்ணை, இம் மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என, வருமானவரி துறை சமீபத்தில் அறிவித்திருந்தது.

பள்ளி நாட்காட்டி மார்ச் - 2019...

மூத்த குடி மக்கள் சுலமாக பேங்கிங் செய்யும் வசதியை அளிக்குமாறு வங்கிகளை ஆர்பிஐ கேட்டுக் கொண்டுள்ளது...

அழிக்க முடியாத 'தேர்தல் மை'...

TAMILNADU TEACHER ELIGIBILITY TEST (TNTET) -2019 ~ NOTIFICATION…

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மேலாண்மை முகமை - தமிழ்நாடு தேசிய பசுமைப்படை - காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேசிய பசுமைப்படை செயல்படும் பள்ளிகளுக்கு 2018 -19 ஆம் கல்வியாண்டிற்கான நிதி ரூ.5000/- வழங்கியது -சார்பு...