ஞாயிறு, 25 செப்டம்பர், 2022

2022-2023 ஆம்‌ கல்வியாண்டிற்கு 4 முதல் 8 ஆம்‌ வகுப்பு மாணவர்களுக்கு முதல்‌ பருவ தொகுத்தறி மதிப்பீட்டுத்‌ தேர்வு கால அட்டவணை...

முற்கால தமிழ் நாகரிகம் – பிரபு திலக்...


திருநெல்வேலியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் ஸ்ரீ வைகுண்டம் அருகே இருக்கும் இரண்டு அழகிய சிற்றூர்கள் ஆதிச்ச நல்லூர், சிவகளை. இந்த ஊர்களில் இரண்டு நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வில் சமீபத்தில் கிடைத்துள்ள அரிய சான்றுகள், மிகவும் முற்கால தமிழ் நாகரிகம் இந்த பகுதிதான் என்பதை உறுதி செய்கின்றன. இரண்டு ஊர்களிலும் தற்போது நடைபெற்றுவரும் அகழாய்வில் தங்கத் துண்டுகள் கிடைத்துள்ளன. இது 3000 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் தங்கத்தைப் பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை மீண்டும் உறுதி செய்துள்ளது.

விஞ்ஞான அணுகுமுறையுடனும் மிகுந்த கவனத்துடனும் ஆதிச்சநல்லூரிலும் சிவகளையிலும் செய்யப்பட்டுள்ள அகழாய்வில் இதுவரை 200க்கும் மேலான முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எலும்புக்கூடுகள், உடையாத நல்ல முறையில் உள்ள மட்பாண்டங்கள், பலவகையான கிண்ணங்கள், உருண்டை வடிவான பானைகள், குடுவைகள், உருளை வடிவப் பாத்திரங்கள், பெரிய ஜாடிகள், மிகுதியான அளவில் மாவரைக்கும் கல், கழுத்தணிகள், கடகம், காப்புகள், வளையல்கள், மோதிரம், மகுடங்கள் போன்ற பலதும் கிடைத்துள்ளன.

முதலில் ஜெர்மானியர்கள்தான் இப்பகுதியில் வந்து ஆய்வுகள் செய்திருக்கிறார்கள். இனங்களின் வேர்களைக் கண்டறிவதுதான் அவர்களின் அக்கறை. அதனடிப்படையில் டாக்டர் ஜாகோர் என்ற பெர்லின் அருங்காட்சியக ஆய்வாளர் 1876ஆம் ஆண்டு தொடங்கி, தாமிரபரணியின் தென்பகுதியில் சுமார் 114 ஏக்கர் பரப்பளவு பரந்து காணப்படும் ஏரலில் ஆய்வுகள் செய்தார். இவர்தான் முதன்முதலில் இப்பகுதியை உலகின் கவனத்துக்குக் கொண்டு வந்தவர். இவருக்கு ஆதிச்சநல்லூரில் சில தாழிகள் கிடைத்தன. மேலும் மட்பாண்டங்கள், இரும்புபொருட்கள், எலும்புக் கூடுகளின் பகுதிகள், மண்டையோடுகள் ஆகியவற்றையும் ஜாகோர் சேகரித்தார். ஆனால், அவற்றை அப்போது அவர் வெளியிடவில்லை. இப்போது அவரது சேகரிப்புகள் பெர்லின் அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

ஜாகோரைத் தொடர்ந்து பாரிஸ் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எம்.லோனிசு லாபிக்கு 1903-04 ஆண்டுகளில் பல மட்கல வகைகள், இரும்பு, வெண்கலப் பொருட்கள், தொங்கு விளக்குகள், இரும்பு வாட்கள் போன்றவற்றை ஆதிச்சநல்லூரில் கண்டெடுத்தார்.

அதன்பின்னர், இந்தியத் தொல்லியல் பரப்பாய்வுத் துறையைச் சேர்ந்த அலெக்சாண்டர் ரீ என்பவர் மேற்கொண்ட அகழாய்வில் ஆதிச்சநல்லூரில் கிடைத்த பொருட்கள் அனைத்தும் இங்கு தொன்மையான நாகரிகம் ஒன்றிருந்ததை உறுதிப்படுத்தின. இவர் சேகரித்த வெண்கலப் பொருட்கள், சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த தாய் தெய்வ அமைப்புடைய வெண்கலத் திருவுருவம் போன்றவை என்பது குறிப்பிடத்தக்கது.

“ஆதிச்சநல்லூர் ஊரிருக்கையாக இருந்திருக்க வேண்டும். ஆதிச்ச நல்லூருக்கு அருகில் உள்ள கொற்கையின் பண்பாட்டுக் காலத்துக்கும் முற்பட்டதாக இது இருக்க வேண்டும். கரிமம் 14 முறைப்படி கண்டுபிடிக்கப்பட்ட கொற்கையின் காலம் கி.மு. 785. கொற்கையிலிருந்து வடக்காக ஒன்பது கி.மீ. தொலைவில் ஆதிச்சநல்லூர் இருக்கிறது. எனவே, முற்காலத்தில் சிறந்த வாணிக நகரமாக இருந்து, கடல் பின்னோக்கிச் சென்ற பின் தனது சிறப்பை இவ்வூர் இழந்திருக்க வேண்டும்” என்கிற முடிவுக்கு அலெக்ஸாண்டர் ரீயின் ஆய்வுகள் வந்தன.

சங்க இலக்கியங்களின் காலகட்டத்தைச் சேர்ந்த தொல்லியல் ஆதாரங்களைத் தேடுவதுதான் அலெக்ஸாண்டர் ரீயினுடைய நோக்கம். இவர் ஆதிச்சநல்லூரில் ஜாகோரைவிட அதிக தாழிகளை கண்டுபிடித்தார். கிட்டத்தட்ட 1872க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் இவரது சேகரிப்பில் உள்ளன. முதன்முதலில் ஆதிச்சநல்லூரில் தங்கம் மற்றும் வெண்கல கலைப்பொருட்கள் மூடியுடன் கிடைத்து இவரது ஆய்வில்தான். மற்றும் வெண்கல எருமை, வெள்ளாடு, செம்மறியாடு, கொம்பினையுடைய மறிமான், சேவல், புலி, யானை முதலியவையும் கிடைத்தன. மனித எலும்புக்கூடுகள் முழுமையாகவும் பாகங்களாகவும் கிடைத்தன. விலங்கு உருவங்கள், இரும்புப் பொருட்கள், எண்ணற்ற பானை ஓடுகள் என்று அகழாய்வில் கிடைத்த அனைத்தையும் அலெக்சாண்டர் ரீ அட்டவணைப்படுத்தி பதிப்பித்தார். அவரது அறிக்கை, கீழ்த் தாமிரபரணிச் சமவெளியின் வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பொதுவான தகவல்களைத் தருகின்றன

ஆதிச்ச நல்லூர் அகழாய்வு மூலம் சங்ககாலத்துக்கு நம்மால் தேதி குறித்துவிட முடியும். ஏனெனில், ஆதிச்சநல்லூர் புதை குழிகளில் சங்க இலக்கியங்களில் கூறப்படும் அடக்க முறைகள்தான் பின்பற்றப்பட்டுள்ளன” என்று ஆய்வாளர்கள் கருதுவது முக்கியமானது.

தமிழ்நாட்டில் திருநெல்வேலி பகுதிகளில் மட்டும்தான் இதுபோல் புதைகுழிகள் அதிகம் காணப்படுகின்றன. ஈமச் சடங்குக்கு கல் நடுகிற பழக்கம் உள்ள புதைகுழிகள் தமிழ்நாட்டின் மற்ற இடங்களில் கிடைத்துள்ளன. இதனடிப்படையில் ஆதிச்சநல்லூர், கல்நடுகிற பழக்கம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்தது என கருதலாம். கேரளாவில் மாங்காட்டு அகழாய்வில் கிடைத்துள்ளவற்றைவிட முற்காலத்தைச் சேர்ந்த பொருட்கள் ஆதிச்சநல்லூரில் கிடைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

பெரும்பாலான தாழிகளில் முழுமையான எலும்புக் கூடுகள் கிடைத்துள்ளன. சில தாழிகளில் எலும்புக்கூட்டின் பகுதிகள் மட்டும்தான் காணப்படுகிறது. இந்த எலும்புகூடுகளின் ஆய்வு முடிவுகள் இங்கு வாழ்ந்த மக்கள் நீண்ட தாடையை உடையவர்கள் என்று தெரிவிக்கிறது. எலியட் ஸ்மித் என்பவர் இங்கு வாழ்ந்த மக்கள் ஆல்பைன் இனத்தின் ஒரு பிரிவினரான ஆர்மினிய மக்கள் எனக் கூறியுள்ளார். திராவிட இனத்தின் ஒரு கலவைக் கூறாக இந்த ஆர்மினிய இனக்கூறு கருதப்படுகிறது.

இந்த இரண்டு ஊர்களிலும் சமீப அகழாய்வில் தங்கம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. ஆதிச்சநல்லூரில் மீண்டும் இறந்தவர்களை புதைத்த இடத்திலும், சிவகளையில் முதல்முறையாக மக்கள் வாழ்விடப் பகுதியிலும் தங்கப் பொருள் கிடைத்துள்ளது.

சிவகளையில் முதுமக்கள் தாழிகள் மற்றும் மக்கள் வாழ்விட பகுதி என பிரித்து இரண்டு பகுதிகளில் அகழ்வாய்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இங்கு இடுகாடுகளில் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகளில் இருந்து எலும்புக்கூடுகள், பற்கள், மக்கள் பயன்படுத்திய பானைகள், இரும்பு பொருட்கள் ஆகியவை அதிகமாக கிடைத்துள்ளன. மக்கள் வாழ்விடப் பகுதிகளில் இருந்து மண்ணாளான புகைப்பான், தக்களிகள் (நூல் நூற்க கூடியது) மக்கள் பயன்படுத்திய பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வாள்கள், கூர்முனை கருவிகள், கத்திகள் உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட இரும்பாலான ஆயுதங்கள் கிடைத்துள்ளன.

தாமிரபரணி நதிக்கரை ஓரமாக இதுவரை நடந்த அகழாய்வுகளில் இறந்தவர்களைப் புதைத்த இடுகாட்டு மேடு பகுதிகளில் மட்டுமே அகழாய்வு நடத்தப்பட்டுள்ளது. ஆனால், முதல்முறையாக சிவகளையில் மட்டுமே தாமிரபரணி நதிக்கரை ஓரங்களில் மக்கள் வாழ்விட பகுதிகளில் அகழாய்வு நடைபெற்று வருகிறது. இதில் கிடைத்த பொருட்களை வைத்து வரும் நாட்களில் தமிழர்களுடைய பாரம்பரியமான நாகரிகம் வெளிவரும்; அதுமட்டுமில்லாமல் தாமிரபரணி நதிக்கரை ஓரம் எப்படியான நாகரிகம் இருந்தது, மக்கள் எவ்வாறான பழக்க வழக்கங்களை பின்பற்றி வாழ்ந்தனர் என்பதும் வெளியே வரும் என்பதால் இந்த ஆய்வு முக்கியமானது.

சிவகளை அகழாய்வில் கிடைக்கும் பொருட்களை வைத்து பார்க்கும் போது இரும்பு காலகட்டத்திற்கு முந்தைய காலகட்டத்தில் இந்த பகுதியில் மக்கள் வாழ்ந்ததற்கான சுவடுகள் கிடைத்துள்ளன. குறிப்பாக செம்பு உலோகங்களால் ஆன மனித உருவ சிலைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. தாமிரபரணி என்றால் தாமிரம் அல்லது செம்பு உலோகம் என்று பொருள். எனவே, செம்பு தாதுகள் அதிகம் நிறைந்த இடமாக இருந்திருக்கும். இந்த பகுதிகளில் கிடைக்கும் பொருட்களை வைத்து பார்க்கும் போது இரும்பு காலத்திற்கு முன் செம்பு உலோக பயன்பாட்டில் இருந்த காலத்தில் மக்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் அதிகமாக உள்ளது. தற்போது கிடைத்த பொருட்களின் அடிப்படையில் சிவகளை 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தையதாக இருக்கலாம் என கருதப்படுகிறது” என்கிறார்கள்.

உண்மைதான், இந்த இரண்டு அகழாய்வுகளும் நம் முன்னோர்களின் கலாசாரத்தையும் சமூக பொருளாதார கட்டமைப்பையும் அறிந்துகொள்ள வாய்ப்புகளாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. தமிழ்நாடு, வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் பிறப்பிடம் என்பதும் தொன்மையான நாகரிகத்தினை உடைய ஒரு பிரதேசம் என்பதும் பல்வேறு வகைப்பட்ட ஆய்வுகள் மூலம் ஏற்கெனவே நிரூபணமாகியுள்ளது. என்றாலும் இப்போது ஆதிச்ச நல்லூரிலும் சிவகளையிலும் கிடைத்துள்ள தடயங்கள் கிட்டத்தட்ட கி.மு. 1000த்துக்கும் முன்னால் வரைக்கும் செல்லக்கூடும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதாவது 3000 வருடங்களுக்கு முந்தையவை. இது தமிழர்களின் மிகவும் முற்கால நாகரிகம் என்பதுடன் மனிதன் வாழ்ந்த உலகின் தொன்மையான இடங்களில் தமிழ்நாடும் ஒன்று என்பதை உலகத்துக்குச் சொல்ல மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பாக அமையும்.

'சனி கிரகத்தின் துணைக்கோளில் வேற்று கிரகவாசிகள்?'.. விஞ்ஞானிகளுக்கு கிடைத்த முக்கிய ஆதாரம்!


வாஷிங்டன்: பூமியை போல் மற்ற கோள்களிலும் உயிர்கள் வாழ்கின்றனவா என்ற ஆராய்ச்சி ஒருபுறம் நடந்து வரும் நிலையில், சனிக்கோளின் துணைக்கோளான என்செலடசில் வேற்றுக்கிரக வாசிகள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

பூமி எப்படி தோன்றியது... பூமியை போன்ற வேறு கிரகங்களில் உயிர்கள் வாழ சாத்தியம் இருக்கிறதா.. என்ற ஆய்வு பல ஆண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

பூமிக்கு அப்பால் உள்ள பால்வெளி மண்டலம் குறித்து அறிந்து கொள்ள உலகெங்கும் உள்ள ஆய்வாளர்கள் தீவிர ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வேற்றுக்கிரகவாசிகள்

இந்த அண்டத்தில் நமது பூமியைத் தவிர வேறு கிரகங்களிலும் மனிதர்கள் வாழ வாய்ப்புள்ளதா? என்பது குறித்தும் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. அதுவும் வேற்றுக்கிரகவாசிகளை பார்த்தததாகவும் அவர்களுடன் அவ்வப்போது பேசியதாகவும் சிலர் கூறுவதாக செய்திகள் அவ்வப்போது வெளியாகி கவனத்தை ஈர்க்கும். அப்படி ஒருவேளை வேற்றுக்கிரகவாசிகள் இருந்தால் அவர்கள் எப்படி இருப்பார்கள்... அவர்களின் பழக்கவழக்கங்கள் என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் பலருக்கும் இருக்கிறது.

சனி கிரகத்தின் துணைக்கோளில் ஏலியன்கள்

ஏன் பல ஹாலிவுட் படங்கள் கூட ஏலியன்கள் என்று சொல்லப்படும் வேற்றுக்கிரகவாசிகளை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளன. வேற்று கிரகவாசிகள் குறித்த ஆய்வில் அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில் , சூரிய குடும்பத்தில் ஆறாவது கோளாக இருக்கும் சனி கிரகத்தின் துணக்கோளான என்செலடஸ் என்ற கோளில் ஏலியன்கள் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கலாம் என்ற சந்தேகங்கள் எழுந்துள்ளன.

உயிரினங்கள் வசிக்கலாம்

ஏனனில், என்செலடசின் மேற்பரப்பு முழுவதும் ஐஸ் கட்டிகளால் மூடப்பட்டுள்ளது. ஐஸ் கட்டிகளின் மேற்பரப்புக்கு கீழே திரவ நிலையில் பெருங்கடல்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இந்த பெருங்கடல்களில் உயிரினங்கள் வசிக்கலாம் என்ற ஐயமும் விஞ்ஞானிகளுக்கு வலுத்துள்ளது. என்செலடஸில் உள்ள ஒசோனில் பாஸ்பரஸ் அதிக அளவில் இருக்கலாம் என்றும் உயிர்கள் வாழ்வதற்கான முக்கிய கூறுகள் இவையே என்பதும் விஞ்ஞானிகள் எடுத்து வைக்கும் வாதமாக இருக்கிறது.

அறிவியல் ஆய்வு இதழில்

இது தொடர்பான ஆய்வின் முடிவுகள் நேஷனல் அகடமி ஆஃப் சைன்ஸ் (PNAS) என்ற அறிவியல் ஆய்வு இதழில் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக அந்த இதழைசேர்ந்த கிரிஸ்டோபர் கிலேன் என்பவர் கூறுகையில், ''சூரிய குடும்பத்தில் மனித குலம் வேறு எங்கும் உள்ளதா? என்பதை தேடும் முக்கிய கோளாக என்செலடஸ் உள்ளது. நாசாவின் காசினி விண்கலம் சனி கிரகத்தையும் அதன் அமைப்புகளையும் ஆய்வு செய்த பிறகு அங்கு சேகரிக்கப்பட்ட தரவுகள் மூலம் கிடைக்கும் கண்டுபிடிப்புகள் வியப்பூட்டும் வகையில் அமைந்து வருகிறது'' என்றார்.

மேலும் அவர் கூறுகையில், ''உயிர்கள் வாழ்வதற்கான அனைத்து அடிப்படை தேவைகளும் இது கொண்டுள்ளதாகவே நாங்கள் அறிகிறோம். இருந்தாலும் உயிர்வாழ்வதற்கு அத்தியாவசியமானவைகளில் ஒன்றாக கருதப்படும் பாஸ்பரஸ் நிறைந்து இருப்பதாக நேரடியாக கண்டுபிடிக்கப்படவில்லை. இருந்தாலும் சனி கிரகத்தின் நிலவின் ஐஸ் பரப்புக்குக்கு கீழே உள்ள கடலில் பாஸ்பரஸ் இருப்பதற்கான ஆதாரங்களை எங்கள் குழு கண்டுபிடித்துள்ளது'' என்றார்.

பள்ளிக்கல்வி - ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் அமைச்சு பணியாளர்களுக்கு மாறுதல் வழங்க நெறிமுறைகள் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள் 24.09.2022





 

G.O.No:212/21.09.2022 பொதுப்பணிகள் - துணை ஆட்சியர்கள் நிலையில் மாறுதல் மற்றும் பணி நியமனம் செய்தல் அரசாணை வெளியீடு!



 

G.o:No.211/23.09.2022தமிழ்நாடு துணை ஆட்சியர்கள் மாறுதல் செய்து அரசாணை வெளியீடு!


 Click here to download pdf