திங்கள், 6 நவம்பர், 2017

SSA-SPD PROCEEDINGS-கற்றல் விளைவுகள் பயிற்சி - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில் இம்மாதத்தில்(நவம்பர் 2017) நடைபெறுதல் சார்பு

TNOU B.ED ADMISSION 2018


தமிழ்நாடு பல்கலையில், நவம்பர்-30 வரை,
பி.எட்., படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

பல்கலை பதிவாளர் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், பி.எட்., படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு, செப்டம்பரில் வெளியிடப்பட்டது.

'இதன்படி, நவம்பர்-30 வரை, பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். கூடுதல் விபரங்களை, www.tnou.ac.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்' என, கூறப்பட்டுள்ளது.

CPS ல் உள்ளவா்கள் இந்த வெப்சைட்டில் சென்று Missing Credits உள்ளதா என சரிபார்த்துக் கொள்ளவும்.


http://cps.tn.gov.in/public/

User id- CPS NO
Password- Date Of Birth

வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழில் வானிலை இணையதளம்!!!


தமிழகத்தில் கடந்த சில நாட்களாக 
கனமழை பெய்து வரும் நிலையில் சமூக 
வலைத்தளங்களில் ஒவ்வொருவரும் வானிலை அறிவிப்பாளர்களாக மாறி தங்கள் இஷ்டத்திற்கு வானிலை அறிக்கைகளை பதிவு செய்து வருகின்றனர். இதுபோன்ற பெரும்பாலான வானிலை அறிக்கைகள் வதந்திகளாகவே இருப்பதால் பொதுமக்களுக்கு எது உண்மையான வானிலை அறிக்கை என்றே தெரியாமல் உள்ளது.

இந்த நிலையில் இதுபோன்ற போலி வானிலை அறிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் தமிழில் புதியதாக இணையதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் பாலச்சந்திரன் கூறியுள்ளார். பொதுமக்கள் இந்த புதிய இணையதளத்தின் மூலம் கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் எவ்வளவு மழை பெய்துள்ளது, எந்தெந்த மாவட்டத்தில், எவ்வளவு மழை பெய்துள்ளது, கனமழைக்கு என்று ஏதேனும் எச்சரிக்கை இருக்கிறதா என்பதை தமிழிலேயே பார்த்து தெரிந்து கொள்ளலாம். http://www.imdchennai.gov.in என்ற இணையதள பக்கத்தில் சென்று Regional Weather என்பதன் கீழ் உள்ள Forecast Regional என்பதை க்ளிக் செய்தால் அதில் தமிழ், இந்தி என இருமொழிகள் இருக்கும். நமக்கு தேவையான மொழியை க்ளிக் செய்தால் அந்த மொழியிலேயே வானிலை அறிக்கையை பெற்று வதந்திகளை தவிர்த்து கொள்ளலாம்.
http://www.imdchennai.gov.in

தமிழக பள்ளி கலைத் திருவிழா / கலையருவித் திட்டம்


மாணவர்களுக்கு இசை, நடனம், நாடகம், இலக்கியம், நுண்கலை & மொழித் திறனில் 150 க்கும் மேற்பட்ட கலை இனங்களில் ஆர்வத்தை வளர்க்கவும் வெளிப்படுத்தவும் கலைத் திருவிழா போட்டிகள் நடத்தப்பட வேண்டும்.

பள்ளியளவில் முதலிலும் ஒன்றிய அளவில் அடுத்ததாகவும்
நடைபெறும்.
போட்டிகளில் முதல் இடம் பெறுபவர் அடுத்த நிலைப் போட்டியில் பங்கு பெறலாம்.

மதிப்பெண்-தரம்-மதிப்பு
70% - A - 5
60% - B - 3
50% - C - 1

போட்டி பிரிவுகள் : 
பிரிவு 1 > I - V
உட்பிரிவு 1> I - II
உட்பிரிவு 2> III -V
பிரிவு 2 > VI - VIII.

I -V வரை அனைத்துப் போட்டிகளும் பொதுவானவை. ஆண் பெண் பேதமில்லை. 
VI-VIII சில போட்டிகள் ஆண், பெண் தனித்தனியாய் அமையும்.
முதல் மூன்று இடங்களை பெறுபவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் 
வழங்கிட வேண்டும். 

*உட்பிரிவு I-II போட்டிகள் :*
* ஒப்புவித்தல் (தமிழ்) - மழலையர் பாடல்
*கதை கூறுல்
* பழமொழிகள் கூறுதல்
* ஆத்திச்சூடி ஒப்பித்தல்
*வண்ணம் தீட்டுதல்
* Rhymes Recitation
*திருக்குறள் ஒப்பித்தல்
*மாறுவேட போட்டி
*அழகு கையெழுத்து
*Good Handwriting

*உட்பிரிவு III-V போட்டிகள் :*
*பேச்சுப்போட்டி
*கட்டுரைப் போட்டி
*நாட்டுப்புற நடனம்(குழு)
*பரதநாட்டியம் (குழு)
*வரைந்து வண்ணம் தீட்டுதல்
*மெல்லிசை - தனிப்பாடல்
*செவ்வியல் இசை - தனிப்பாடல்
*ஒருநபர் நாடகம்
*குழு நடனம் (7-9 நபர்)
தேசபக்திப் பாடல்கள்
*களிமண் பொம்மைகள்
*திருக்குறள் ஒப்பித்தல்
*மாறுவேட போட்டி
*அழகு கையெழுத்து
*Good Handwriting.
*இசை - நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், Guitar, Clarinet, Saxaphone.... இன்னும் பிற

*பிரிவு VI -VIII போட்டிகள் :*
*கதை எழுதுதல்
*Story Writing
*கவிதை புனைதல்
*கும்மி நடனம் (ஆண்)
*தனிநடனம்
*குழு நடனம் (7-9நபர்)
*தேசபக்தி பாடல் (7-9நபர்) - குழுப்பாட்டு
*நாடகம் (10நபர் வரை)
*பேச்சுப்போட்டி (தமிழ்)
*பேச்சுப்போட்டி (English)
*கும்மியாட்டம் (பெண்)
*திருக்குறள் ஒப்பித்தல்
*நகைச்சுவை வழங்கல்
*Poem Recitation
*மெல்லிசை - தனிப்பாட்டு
*செவ்வியல் இசை -தனிப்பாட்டு
*கிராமிய நடனம் (7-9நபர்)
*பரதநாட்டியம் (தனி)
*பரதநாட்டியம் (குழு)
*இயற்கை காட்சி வரைதல்
*ஒருநபர் நாடகம்
*வில்லுப்பாட்டு (1+4)
*கதை சொல்லுதல்
*களிமண் சுதை வேலைப்பாடு
*செதுக்குசிற்பம் (காய்கறி/ சோப்பு/ மெழுகு/ சுண்ணக்கட்டி போன்ற பிற பொருட்களில்)
* இசை - இசை - நாதஸ்வரம், புல்லாங்குழல், வீணை, வயலின், Guitar, Clarinet, Saxaphone.... தவில் கச்சேரி, பேண்டு வாத்தியம், ஆர்கெஸ்டிரா இன்னும் பிற
போட்டிகள் மாணவர் பங்கேற்கும் அளவிலானதாக அமைந்தால் போதுமானது. திரைப்பட பாடல்கள் தவிர்க்கவும். பாரதியார், பாரதிதாசன் பாடல்கள் போன்றவை நல்லது.
நாடகங்களில் தெருக்கூத்து, சமூக நாடகங்கள், ஓரங்க நாடகம், மிமிக்ரி மற்றும் பிற வகைகளில் இருக்கலாம்.

முதலிடம் பெறும் குழுவோ தனிநபரோ அடுத்த நிலைப் போட்டிக்கு தகுதி பெறுவர்.

கலைவிழா ஒரு பொதுநிகழ்ச்சி. பெற்றோர் & சமூக பங்கேற்போடு ஆசிரியர் மாணவர் குழுவாக செயல்பட்டு இதனை சிறப்பாக நடத்த வேண்டும். கூட்டுப் பொறுப்பும் கூட்டுச் செயல்பாடும் கலைத்திருவிழாவை செழுமைப்படுத்தும்.

கலைகளை
அறிமுகப்படுத்துவோம்!திறமைகளை
வெளிப்படுத்துவோம்!
மாணவர்களை
மேம்படுத்துவோம்!

ஆசிரியர்களுக்கான ‘சென்டா’ ஒலிம்பியாட் போட்டி : நவ.12-ற்குள் விண்ணப்பிக்கலாம்!


ஆசிரியர்களின் திறமைகளைக் கண்டறியும் 'சென்டா' ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க

12.11.2017 வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 பள்ளி மாணவர்களுக்கான கணித, அறிவியல் ஒலிம்பியாட் போட்டிகள்போல, ஆசிரியர்களின் திறமைகளை அடையாளம் கண்டு, அதை ஊக்குவிக்கும் விதமாக சென்டா நிறுவனம் (Centre for Teacher Accreditation) சார்பில் 'சென்டா' ஒலிம்பியாட் போட்டி கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது.

 இந்தப் போட்டியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் முதல், மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் வரை அனைவரும் பங்கேற்கலாம்.

 இதில், 14 வகை பாடங்களை ஆசிரியர்கள் தேர்வு செய்துகொள்ளலாம்.

 பாடத்தில் ஆசிரியர்களின் திறன், மாணவர்களுக்கு பாடம் நடத்தும் முறை, நுண்ணறிவு, தகவல் பரிமாற்றத் திறன் போன்றவற்றை ஆராயும் வகையில் இத்தேர்வு இருக்கும்.

 அப்ஜெக்டிவ் முறையிலான இத்தேர்வு 2 மணி நேரம் நடக்கும்.

 2017-ம் ஆண்டுக்கான 'சென்டா' ஒலிம்பியாட் போட்டி, தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை உட்பட நாடு முழுவதும் 28 நகரங்களில் டிசம்பர் 9-ம் தேதி நடக்க உள்ளது.

 தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய 4 மொழிகளில் தேர்வு நடைபெறும். இந்த ஆண்டு முதல்முறையாக தமிழில் நடத்தப்படுகிறது.

 இத்தேர்வில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள், இணையதளத்தில் (www.tpo-india.org) நவம்பர் 12 வரை விண்ணப்பிக்கலாம்.

 தமிழ், தெலுங்கில் தேர்வு எழுதி வெற்றிபெறும் ஆசிரியர்கள் 2 பேருக்கு கையடக்க கணினி பரிசாக வழங்கப்படும்.

 தமிழில் தேர்வு எழுதி வெற்றி பெறுபவர்களுக்கு டெல் நிறுவனம் சார்பில் கணினியும் பரிசாக வழங்கப்படும்.

 'எடில் கிவ்' நிறுவனம் சார்பில், போட்டியில் வெற்றி பெறும் ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசும் வழங்கப்பட உள்ளது.