புதன், 24 ஜூன், 2020

☀ஆண்டவன் சொல்றான்; அருணாச்சலம் செய்யறான்! திரைப்பட வசனம் கல்வித்துறையில் எதற்கு? ஆசிரியர்களை வதைக்கவா?! ஊக்க ஊதியத்தை சிதைக்கவா?! :::::::::::::::::::::::::::::::::::: எப்போதில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு கருவூலகம் நிர்வாகம் தலைமைப் பீடமானது?! :::::::::::::::::::::::::::::::::::: வினாக்களும், விளக்கங்களும், வேண்டுகோளும்!திறந்தமடலில்...*

ஆண்டவன் சொல்றான்;
அருணாச்சலம் செய்யறான்!
திரைப்பட வசனம் கல்வித்துறையில் எதற்கு?
ஆசிரியர்களை வதைக்கவா?!
ஊக்க ஊதியத்தை  சிதைக்கவா?!
::::::::::::::::::::::::::::::::::::
எப்போதில் இருந்து வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு  கருவூலகம் நிர்வாகம் தலைமைப்
பீடமானது?!
::::::::::::::::::::::::::::::::::::
வினாக்களும்,
விளக்கங்களும்,
வேண்டுகோளும்!திறந்தமடலில்...
::::::::::::::::::::::::::::::::::::
 *அரசாணை எண்:37(பநிசீது)நாள்:10.03.2020 ஐ காரணம் காட்டி உயர்கல்விக் கான ஊக்க ஊதிய உயர்வினை அனுமதிக்க முடியாது* என்று சார்நிலைக் கருவூலக நிர்வாகங்கள் தணிக்கைத் தடைகள் எழுப்பினால் ,
மறுப்புக்
குறிப்புரைகள் எழுதினால்
வட்டாரக்கல்வி அலுவலர்கள் விரைந்து செய்ய வேண்டியது என்ன!?

 அரசாணை எண்:42(கல்வி)நாள்:10.01.1969 மற்றும் அரசாணை எண்;1024(கல்வி)நாள்:09.12.1993 ஆகியவற்றின் அடிப்படையில்  உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுக்களை அனுமதித்து  செயல்முறை பிறப்பிப்பவர்கள் வட்டாரக்கல்வி அலுவலர்கள்.
*தான்பிறப்பித்த
செயல்முறையை செல்லாது என்றும், தவறானதுஎன்றும்*  வேறொருவர் சொன்னால் *திருவிளையாடல் திரைப்படத்தின்                    தருமி  கேரக்டருக்கு வந்த  நியாயமான கோபம்* இந்த வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு வந்திருக்க வேண்டும்.
ஆனால் கடுகளவும்  வரலை என்பதே நம் கவலை.

இந்த நேரத்தில் ஏனோ எனக்கு, நம்முன்னோர் பாத்திரம் அறிந்து பிச்சையிடு என்றுச்சொன்ன மூதுரை நினைவில் வந்து செல்கிறது.

சரி ,
பொருளுக்குள் செல்வோம்.

கோபம் தான் வராது போனால் போகிறது.
குறைந்த பட்சமாக கருவூலக நிர்வாகத்தின் தவறான தடையை, மறுப்பையாவது விலக்கிக் கொள்ளச் சொல்லி *கல்வித்துறையின் அரசாணைகளை     குறிப்பிட்டு விளக்கக்கடிதம் எழுதலாம் ;எதிர் வழக்காடலாம்*.

சரி,இதையாவது செய்யாத வட்டாரக்கல்வி அலுவலர்கள் அருகாமை உயர்அலுவலர் என்ற முறையில் குறைந்த பட்சமாக மாவட்டக்கல்வி அலுவலர்களுக்காவது  *தெளிவுரை கோரியோ, வழிகாட்டுதல் வேண்டியோ கடிதம் எழுதி இருக்கலாம்*.இவ்வலுவலர்கள் இவர்களின் உயர்அலுவலர்களின் வழிகாட்டுதலை பெற்றுதந்திருப்பர்.

சரி,இதையாவது செய்யாது போன வட்டாரக்கல்வி அலுவலர்கள் இன்னொன்றையாவது செய்து இருக்கலாம்.

அது என்னவென்று கேட்கிறீர்களா!?
வேறொன்றும் இல்லை!
இந்த அரசாணை எண்:37/10.03.2020 ஐ தமது கல்வித்துறையின் உயர் அலுவலர்கள் தமது அலுவலக  மின்னஞ்சலுக்கு
(இ-மெயில்) அரசாணையை பார்வேர்ட் செய்து  எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது குறித்து மேல்நடவடிக்கைவழிகாட்டுதல்கள் செய்திருக்கிறார் களா!?என்றாவது *மெயிலாவது  செக்* செய்திருக்கலாம்.

சரி,இதையும் செய்யாத வட்டாரக்கல்வி அலுவலர்கள், இதையாவது செய்யாது சும்மாவாவது, கம்மென்று இருந்திருக்கலாம்.

அது !என்னவென்று கேட்கிறீர்களா?!வேறொன்றும் இல்லை!

ஆண்டவன் சொல்றான்;
அருணாசலம் செய்யறான் !எனும் திரைப்பட வசனத்தினை ஒத்த வகையில்  *கருவூலகம் சொல்லுது; கல்வித்துறை செய்யுது!?*
என்கிற  வேடிக்கையான பதில்களை கிளிப்பிள்ளை களைப் போல திரும்ப ...திரும்ப... உரைப்பதை யாவது செய்யாது இருந்து இருக்கலாம்.

இவ்வாறு சொல்வதையும்,செய்வதையும் கைவிட்டால் தான் *தமிழக கல்வித் துறையின் மாண்பும், மாட்சிமையும்*
காக்கப்படும்;
பாதுகாக்கப்படும்!
-முருகசெல்வராசன்.

*☀திறந்தமடல்* ************** *அடாவடியான - அரசாகமான வட்டாரக்கல்வி அலுவலர்களை என்ன சொல்ல? என்ன செய்ய?தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரே!இவர்களைக் கொஞ்சம் கவனியுங்களேன்!*

திறந்தமடல்
**************
அடாவடியான - அரசாகமான  வட்டாரக்கல்வி அலுவலர்களை  என்ன சொல்ல? என்ன செய்ய?தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குனரே!இவர்களைக் கொஞ்சம் கவனியுங்களேன்!
::::::::::::::::::::::::::::::::::::
அரசாணை எண்:37(பநிசீது)நாள்:10.03.2020 இல்  கூறப்பட்டுள்ள  அட்வான்ச் இன்கிரிமெண்ட்டுக்கும்,
அரசாணை எண் :42(கல்வி)
10.01.1969இல்  சொல்லப்பட்டுள்ள உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கும் உள்ள *அடிப்படை உண்மையும், அடிப்படை வேறுபாடும் மாறுபாடும்- குறைந்த பட்ச வித்தியாசமும் கூட அறிந்திடாத, மேல் அலுவலர்களை அணுகி புரிந்துக்கொள்ளவும் கூட முயற்சிக்காத* வட்டாரக்கல்வி அலுவலர்களை என்ன சொல்ல ?என்ன செய்ய?

கருவூலக நிர்வாகத்தின் மறுப்பை *ஒரு நொண்டிச் சாக்காக்கிக் கொண்டு* ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கானஊக்க ஊதிய உயர்வினை மிகுந்த ஆர்வத்தோடும்,
குரூரமான மனத்தின் ஆசையோடும் , வன்மம் நிறைந்த உள்நோக்கத்தோடும்,
அவசரம் அவசரமாக,
மின்னல் வேகத்தில்
இரத்து செய்து கொரோனாக்காலத்தில் ஊதியக்குறைப்பினை செய்தும், ஊதிய வெட்டினை ஏற்படுத்தியும்
தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களை வேதனைக்குள்ளாக்கி
யுள்ள ,
மன உளைச்சலுக்கு
ஆளாக்கியுள்ள, ஒன்றியத்தின் ஒட்டுமொத்த  ஆசிரியர்களை பதட்டம் அடையச்செய்து கல்விக்களத்தில் கொந்தளிப்பினையும்,பெருத்த பதட்டத்தினையும் உருவாக்கி உள்ள, ஆசிரியர்களின் வேதனையில் மனம்மகிழ்வுக்கொள்ளும் அற்பத்தனமான புத்திக்கொண்ட  வட்டாரக்கல்வி அலுவலர்களை என்ன சொல்ல?என்னசெய்ய!

காலம் காலமாக பெற்றுவரும் ஊக்க ஊதிய  உயர்வினை போகிறப்போக்கில் இல்லை என்று சொல்லி விட்டு கடந்துச்செல்ல
,ஊக்க  ஊதிய உயர்வு ஒன்றும் *வட்டாரக்கல்வி அலுவலர்களின் விருப்பமும் - ஆசையும் சார்ந்த பொம்மைப் பொருள் அல்ல- விற்பனைப் பொருளும் அல்ல* என்று சுட்டிக்காட்டுகிறேன்.

தமிழ்நாடு
தொடக்கக்கல்வி இயக்குனரே!
மாநிலந்தழுவிய அளவில் ஆசிரியர்கள் அணிதிரண்டு தான் தங்களது ஊக்க ஊதிய ஊதிய உயர்வினை தக்கவைத்துக்கொள்ள வேண்டுமென்று வட்டாரக்கல்வி அலுவலர்கள் நினைக்கின்றார்களா?என்பதை விசாரியுங்கள்!

தமிழ்நாடு
அரசுக்கும்,
தமிழ்நாட்டுக்
கல்வித்துறைக்கும்
அவப்பெயர் தேடித் தரத் தான்-
களங்கம்
விளைவித்திடத்தான் வட்டாரக்கல்வி அலுவலர்கள்  பணியாற்றுகின்றார்களா?என்பதை ஆராயுங்கள்! 

கல்வித்துறையின் நற்பெயருக்கும்,பொது அமைதிக்கும் ஊறுவிளைவிக்கும் உள்நோக்குடன் பணியாற்றும் *கல்வித்துறையின்   கறுப்பு ஆடுகளா*?வட்டாரக்கல்வி அலுவலர்கள் என்பதை சோதியுங்கள்!

-முருகசெல்வராசன்.

*G"o Ms.No:279 date: 24.6.2020 ☀தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு*

*☀தமிழக அரசு ஊழியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு*


அரசாணை எண் 37, பணியாளர் (ம) நிருவாக சீர்திருத்தத் துறை, நாள் : 10/03/2020.. -ஆசிரியர்களுக்கு பொருந்தாத இவ்வரசாணையின் அடிப்படையில் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு நிறுத்தம்..



*🌐ஜூன் 24, வரலாற்றில் இன்று:கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 24, வரலாற்றில் இன்று.

கவிஞர் கண்ணதாசன் பிறந்த தினம் இன்று.

`
சிறு வயதில் இன்னொரு குடும்பத்துக்கு 7,000 ரூபாய்க்குத் தத்துக் கொடுக்கப்பட்டவர் கண்ணதாசன். அந்த வீட்டில் அவர் பெயர், நாராயணன்.


`கலங்காதிரு மனமே, உன் கனவெல்லாம் நனவாகும் ஒரு தினமே’ என்று`கன்னியின் காதலியில்’ எழுதியது முதல் பாட்டு.


 மூன்றாம் பிறையில் வந்த, `கண்ணே கலைமானே’ கவிஞரின் கடைசிப் பாட்டு.

எப்போதும் மஞ்சள் பட்டுச் சட்டை, வேட்டி அணிந்திருப்பார். திடீரென்று கழுத்து, கைகளில் நகைகள் மின்னும் திடீரென்று காணாமல் போய்விடும்.
`பள்ளிக்கூடத்துக்குப் போயிருக்கு’ என்று அவை அடகுவைக்கப்பட்டு இருப்பதைச் சொல்வார்.

`மயிலாப்பூர் உட்லண்ட்ஸ் ஹோட்டல், அபிராமபுரம் கவிதா ஹோட்டல் இரண்டும் தான் கவிஞருக்குப் பிடித்த இடங்கள். பெரும்பாலான பாடல்கள் பிறந்தது இங்குதான். வெளியூர் என்றால் பெங்களூர் உட்லண்ட்ஸ்.

வேட்டியின் ஓரத்தைப் பிடித்துக்கொண்டு அறைக்குள் நடந்தபடி பாடல்களின் வரிகளைச் சொல்வார். நடந்துகொண்டே இருந்தால்தான் சிந்தனை துளிர்க்கும். கவிதைவரிகள் சொல்லும்போது செருப்பு அணிய மாட்டார்!

`கொஞ்சம் மது அருந்திவிட்டால், என் சிந்தனைகள் சுறுசுறுப்படைவது வழக்கம். அதைப்போல் இன்ப விளையாட்டில் எனக்கு ஆசை உண்டென்றாலும்,
சிந்திக்கிற நேரத்தில் ரதியே வந்தாலும் திரும்பி பார்க்க மாட்டேன்’ என்பது கவிஞரின் வாக்குமூலம்.

’முத்தான முத்தல்லவோ’ பாட்டைத்தான் மிகக் குறைவான நேரத்துக்குள் (10 நிமிடங்கள்) எழுதி முடித்தார்.

அதிக நாட்களுக்கு அவரால் முடிக்க முடியாமல் இழுத்தது. `நெஞ்சம் மறப்பதில்லை... அது நினைவை இழப்பதில்லை!’’

கண்ணதாசன் அடிக்கடி கேட்கும் பாடல், `திருப்பாற்கடலில் பள்ளிக்கொண்டாயே ஸ்ரீமன் நாராயணா,’ தனக்குப்பிடித்த பாடல்களாக, `என்னடா பொல்லாத வாழ்க்கை,’’ `சம்சாரம் என்பது வீணை’’ ஆகிய இரண்டையும் சொல்லியிருக்கிறார்.

கண்ணதாசனுக்குப் பிடித்த இலக்கியம் கம்பராமாயணம்,`நான் பாடல் இயற்றும் சக்தியைப் பெற்றதே அதில் இருந்ததுதான்’ ’என்பார்.


காமராசர் வாழ்க்கை வரலாற்றைத் திரைப்படமாக எடுக்க விரும்பினார். சில காட்சிகளையும் எடுத்தார். ஆனால் முற்றுப்பெறவில்லை!

ஆரம்ப காலத்தில் வேலை எதுவும் கிடைக்காததால், சந்திரமோகன் என்று பெயர் மாற்றிக்கொண்டு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார். பிற்காலத்தில் `பராசக்தி',
`ரத்தத்திலகம்’,`கறுப்புப்பணம்’,’ `சூரியகாந்தி’.’ உள்ளிட்ட படங்களில் நடித்தும் இருக்கிறார்.

முதல் மனைவி பெயர் பொன்னம்மா,அடுத்த ஆண்டே பார்வதி என்பவரை இரண்டாம் திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்குத் தலா ஏழு குழந்தைகள். 50ஆவது வய்தில் வள்ளியம்மையைத் திருமணம் செய்தார். இவர்களுக்குப் பிறந்தவர்தான் விசாலி. மொத்தம் 15 பிள்ளைகள்!

படுக்கை அறையில் வைத்திருந்த ஒரே படம் கிருஷ்ணர். வெளிநாடு போவதாக இருந்தால், சாண்டோ சின்னப்பா தேவர் வீட்டுக்குப் போய், அவர் பூஜை அறையில் இருக்கும் முருகனை வணங்கிவிட்டுத்தான் செல்வார்!

`கண்ணதாசன் இறந்துவிட்டார்’’ என்று இவரே பலருக்கும் போன் போட்டு வதந்தியைக் கிளப்பி, வீடு தேடிப் பலரும் அழுது கூடிவிட, பிறகு இவரே முன்னால் தோன்றிச் சிரித்த சம்பவம் நடந்திருக்கிறது.

`உங்கள் புத்தகங்கள் அனைத்தையும் படிக்கும் ஒருவனுக்கு உங்களது புத்திமதி என்ன? என்று கேட்டபோது, அவர் சொன்ன பதில்... புத்தங்களைப் பின்பற்றுங்கள். அதன் ஆசிரியரைப் பின்பற்றாதீர்கள்!’

தன்னுடைய பலவீனங்களை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு சுயவரலாறு எழுதியவர்,`வனவாசம்,மனவாசம் இரண்டும் ஒருவன் எப்படி வாழக்கூடாது என்பதற்கான உதாரணங்கள்’ என்றார்.

காமராசர், அண்ணா, எம்.ஜி.ஆர்,கருணாநிதி ஆகிய நான்கு பேரையும் அதிகமாகப் பாராட்டியவரும், திட்டியவரும் இவரே!

 ஈ.வெ.கி.சம்பத்.
ஜெயகாந்தன்,சோ,
பழ.நெடுமாறன் ஆகிய நான்கு பேரும் அரசியல் ரீதியாக நெருக்கமான நண்பர்கள். `கவிஞரின் தோரணையை விட அரசனின் தோரணைதான் கவிஞரிடம் இருக்கும்’ என்பார் ஜெயகாந்தன்.

திருமகள், திரையொலி, மேதாவி, சண்டமாருதம் ஆகியவை இவர் வேலை பார்த்த பத்திரிகைகள்.

 தென்றல், தென்றல்திரை, முல்லை,கடிதம்,கண்ணதாசன் ஆகியவை இவரே நடத்தியவை.

திருக்கோஷ்டியூர் தொகுதியில் முதல் தடவை நின்றார். தோற்றார். அதன் பிறகு தேர்தலில் நிற்கவே இல்லை.`இது எனக்குச் சரிவராது’’ என்றார்.

`குடிப்பதும், தவறுக்கென்றே தங்களை ஒப்புக்கொடுத்துவிட்ட பெண்களுடன் ஈடுபடுவதும், ஒரு தனி மனிதன் தன் உடல்நிலைக்கும் வசதிக்கும் ஏற்ப செய்யும் தவறுகளே தவிர, அதனால் சமுதாயத்தின் எந்த அங்கமும் பாதிக்கப்படுவதில்லை’ என்று தனது தவறுகளுக்கு வெளிப்படையான விளக்கம் அளித்து உள்ளார்.

`பிர்லாவைப்போலச் சம்பாதித்து ஊதாரியைப்போலச் செலவழித்து, பல நேரங்களில் பிச்சைக்காரனைப் போல ஏங்கி நிற்கும் வாழ்க்கைதான் என்னுடையது’ என்பது அவர் அளித்த வாக்குமூலம்.

தான் வழக்கமாகப் படுத்துறங்கும் கருங்காலி மரத்தில் செய்யப்பட்ட கட்டிலுடன் தன்னை எரிக்க வேண்டும் என்பது கண்ணதாசனின் கடைசி விருப்பம்!

`அச்சம் என்பது மடமையடா,’ `சரவணப் பொய்கையில் நீராடி,’ `மலர்ந்தும் மலராத...,’ `போனால் போகட்டும் போடா..,’ `கொடி அசைந்ததும்,’ `உன்னைச் சொல்லிக் குற்றமில்லை,’ `கடவுள் மனிதனாகப் பிறக்க வேண்டும்,’`எங்கிருந்தாலும் வாழ்க,’ `அதோ அந்தப் பறவைபோல வாழவேண்டும்,’ `சட்டி சுட்டதடா கை விட்டதடா..., ஆகிய 10 பாடல்களும் தமிழ் வாழும் காலம் முழுவதும் இருக்கும் காவியங்கள்
`
கண்ணதாசன் என்றால் கண்ணனுக்கு தாசன் என்று அர்த்தம் அல்ல. `அழகான கண்களைப்பற்றி வர்ணிப்பதிலும், வர்ணிக்கப்பட்டதைப் படப்பதிலும் ஆசை அதிகம். அதனால் இந்தப் பெயரை வைத்துக்கொண்டேன்’ என்பது அவரே அளித்த விளக்கம். பெற்றோர் வைத்த பெயர் முத்தையா.
காட்டுக்கு ராஜா, சிங்கம். கவிதைக்கு ராஜா, கண்ணதாசன்!’ பெருந்தலைவர் காமராஜரின் வாக்கு இது.

`நான் நிரந்தரமானவன், அழிவதில்லை. எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை’ என்று கண்ணதாசனே அறிவித்தார்.

*🌐ஜூன் 24, வரலாற்றில் இன்று:விக்டர் பிரான்சிஸ் ஹெஸ் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 24, வரலாற்றில் இன்று.

விக்டர் பிரான்சிஸ் ஹெஸ் பிறந்த தினம் இன்று.

காஸ்மிக் கதிரை கண்டுபிடித்த ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த இயற்பியலாளரான விக்டர் பிரான்சிஸ் ஹெஸ், 1883-ஆம் ஆண்டு ஜூன் 24 அன்று ஸ்ட்ரியா எனும் ஊரில் பிறந்தார். பிரபஞ்சத்திலிருந்து பூமிக்கு வரும் கதிர்வீச்சுகளைப் பற்றிய ஆய்வில் ஈடுபட்டார். 1911 மற்றும் 1912 ஆண்டுகளில் ஒரு பலூனில் கதிர்வீச்சுக்களின் அளவை துல்லியமாக அளவிடும் கருவியைப் பொருத்தி பகல் மற்றும் இரவு என இரு நேரங்களிலும் சோதனை செய்தார். பூமியின் உயரத்திலிருந்து 5.3 கிலோ மீட்டர் வரையிலும் காஸ்மிக் கதிரின் செறிவு இருந்தது. இக்கண்டுபிடிப்பிற்காக அவருக்கு 1936ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.

*🌐ஜூன் 24,* *வரலாற்றில் இன்று:முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி நினைவு தினம் இன்று.*

ஜூன் 24,
வரலாற்றில் இன்று

முன்னாள் குடியரசுத் தலைவர் வி.வி.கிரி நினைவு தினம் இன்று.


இந்தியாவின் நான்காவது குடியரசுத் தலைவர்; ஆளுநர்; தொழிலாளர் நலத் துறை அமைச்சர் என்று பல்வேறு முக்கியப் பொறுப்புகளை வகித்த பெருமைக்குரியவர் - வி.வி.கிரி என்று அழைக்கப்படும் வரககிரி வேங்கட கிரி. இந்தியாவின் முதல் மக்களவைத் தேர்தலில் அன்றைய சென்னை மாகாணத்தில் இருந்த இன்றைய ஆந்திரத்தின் பாதபட்டினம் தொகுதியிலிருந்து  வெற்றிபெற்றார். நேருவின் அமைச்சரவையில் தொழிலாளர் நலத் துறைக்குப் பொறுப்பு வகித்தார்.  பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே சென்னை மாகாணத்தின் தொழிலாளர் நலத் துறை அமைச்சராக ராஜாஜி, டி.பிரகாசம் ஆகியோரின் அமைச்சரவையில்  பதவி வகித்தவர் அவர். 1957 தொடங்கி 1967 வரைக்கும் உத்தர பிரதேசம், கேரளா, மைசூரு மாநிலங்களின் ஆளுநராகப் பொறுப்பு வகித்தார். 1967இல் குடியரசுத் துணைத் தலைவரானார். 1969இல் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து சுயேச்சையாகப் போட்டியிட்டு குடியரசுத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.



கிரியின் தந்தை ஜோகையா பண்டுலு சென்னை மாகாண சட்டக் கவுன்சில் உறுப்பினராக இருந்தார். வங்கத்தில் ‘வட இந்திய ரயில்வே தொழிலாளர்கள் சங்கம்’ அமைக்கப்பட்டத்தில் ஜோகையாவுக்கு முக்கியப் பங்குண்டு. தந்தையின் வழியிலேயே அரசியலிலும் தொழிலாளர் சங்க நடவடிக்கையிலும் அடியெடுத்துவைத்தவர் வி.வி.கிரி. லண்டனுக்குச் சட்டம் படிக்கச் சென்ற கிரி, அப்போது தீவிரமடைந்திருந்த அயர்லாந்து தொழிலாளர்களின் போராட்டங்களால் ஈர்க்கப்பட்டார். அதே காலக்கட்டத்தில்தான் காந்தியை அவர் லண்டனில் சந்தித்தார்.

1921-ல் காந்தியின் அழைப்பை ஏற்று, வழக்கறிஞர் தொழிலை விட்டுவிட்டு முழுநேர அரசியலில் ஈடுபட்டார். இந்திய தொழிற்சங்கத் தந்தை என்.எம்.ஜோஷியுடன் இணைந்து பணியாற்றினார். 1926, 1942 ஆண்டுகளில் ஏ.ஐ.டி.யு.சி தொழிற்சங்கத்தின் தலைவராக பதவிவகித்தார். குடியரசுத் தலைவரான பிறகும்கூட, சிறப்பு அழைப்பின்பேரில் ஜெனீவாவில் நடந்த சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசினார். ஏறக்குறைய 40 ஆண்டு காலம் சர்வதேசத் தொழிலாளர் அமைப்புடன் தொடர்பில் இருந்தவர் வி.வி.கிரி.

*🌐ஜூன் 24,* *வரலாற்றில் இன்று:பன்மொழிப்புலவர் கா.அப்பாத்துரை பிறந்த தினம் இன்று.*

ஜூன் 24,
வரலாற்றில் இன்று.

பன்மொழிப்புலவர்    கா.அப்பாத்துரை பிறந்த தினம் இன்று.

கா. அப்பாத்துரை (ஜூன் 24, 1907 - மே 26, 1989) தமிழ்நாட்டு மொழியியல்  வல்லுநர்களுள் ஒருவர். பன்மொழிப்புலவர் எனப் பெயர் பெற்றவர். அப்பாத்துரையாருக்கு தமிழ், மலையாளம், வடமொழி, இந்தி, ஆங்கிலம்  ஆகிய ஐந்து மொழிகளிலும் சரளமாகப் பேசவும், படிக்கவும், எழுதவும் கூடியத் திறமை இருந்தது. தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் ஒரே ஆண்டில் முதுகலைத் தேர்ச்சி பெற்றார். இந்தி மொழியில் விசாரத் பட்டம் பெற்றார். இவை தவிர இன்னும் பல வேற்று மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார். இதனாலேயே அறிஞர் பெருமக்கள் அவருக்குப் "பன்மொழிப்புலவர்" என்ற பட்டத்தைச் சூட்டினார்கள்.

அப்பாத்துரையார் குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி என்னும் ஊரில் பிறந்தார். அவர் எழுதிய நூற்றுக்கணக்கான ஆராய்ச்சி நூல்களுள் குமரிக் கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு மற்றும் தென்னாட்டுப் போர்க்களங்கள்  ஆகியவை தலையாயனவாகக் கருதப்படுகின்றன. தமிழும் தமிழரினமுமே உலக மொழிகளுக்கும் மனித இனத்திற்கும் முன்னோடிகள் என்னும் தனது கோட்பாட்டை அறிவியற்பூர்வமாகத் தனது ஆய்வுகள் மூலம் முன்வைத்தார்.

*🌐ஜூன் 24, வரலாற்றில் இன்று:உலக இளம் மருத்துவர்கள் தினம் இன்று.*

ஜூன் 24, வரலாற்றில் இன்று.

உலக இளம் மருத்துவர்கள் தினம் இன்று.

மாறிவரும் சமுதாயத்தில் இளம் மருத்துவர்கள் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகள் அதிகம் உள்ளது. இவர்கள் கிராமப்புறங்களில் சேவை செய்ய வேண்டி இருக்கிறது. ஆகவே இளம் மருத்துவர்கள் அடிப்படை சட்ட அறிவினைப் பெற்றிருக்க வேண்டியது அவசியம். இதுபோன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்கிற நோக்கில் 2011ஆம் ஆண்டில் இத்தினம் அறிவிக்கப்பட்டது

ஆசிரியர்கள் முதல் அனைத்து மக்களும் தெரிந்து கொள்ள. வேண்டிய முதலுதவி சிகிக்கைகள்

விலையில்லா பாடநூல்கள் 2020 2021 ஆம் கல்வியாண்டிற்கான ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை விலையில்லா பாடப் புத்தகங்கள் -பள்ளிகளுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்படுதல்- சார்ந்து

விலையில்லா பாடநூல்கள் 2020 2021 ஆம் கல்வியாண்டிற்கான ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை விலையில்லா பாடப் புத்தகங்கள் -பள்ளிகளுக்கு நேரடியாக வினியோகம் செய்யப்படுதல்- சார்ந்து

மாணவர்களின் நலன்கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம்

மாணவர்களின் நலன்கருதி வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்கும் வகையில் புதிய இணையதளம் அறிமுகம்

* ஒன்றாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை தமிழ், ஆங்கில வழியில் பாடங்கள் பதிவேற்றம்

* https://e-learn.tnschools.gov.in என்ற இணையதளத்தில் வீடியோ மூலம் பாடங்களைக் கற்றுக் கொள்ளலாம்!