சனி, 27 ஜூன், 2020

தூய தமிழில் பேசுவோருக்கு பரிசு - ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் - அகரமுதலி திட்ட இயக்குனர்


*🥇ஜூன் 27,* *வரலாற்றில் இன்று:இந்தியாவின் புகழ்பெற்ற தடகள விளையாட்டு வீராங்கனையான தங்க மங்கை பி. டி. உஷா பிறந்த தினம் இன்று(1964).*

ஜூன் 27,
வரலாற்றில் இன்று.

இந்தியாவின் புகழ்பெற்ற தடகள விளையாட்டு வீராங்கனையான தங்க மங்கை பி. டி. உஷா பிறந்த தினம் இன்று(1964).

அந்தச் சிறுமி பிறந்தது, கேரளாவின் கோழிக்கோடு எனும் மாவட்டத்தில் உள்ள பையோலி. அது, ஒரு விவசாய கிராமம். 1960களில் அங்கே பள்ளிக்கூடம் கிடையாது. விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குழந்தைகள், பெரும்பாலும் வயல்வெளியில் குழந்தைத் தொழிலாளர்களாக வேலை செய்வார்கள். 25 கிலோமீட்டர் தொலைவிலிருந்த ஓர் ஊரில், ஒரு பள்ளிக்கூடம் இருந்தது. ஐந்து வயதானதும் அந்தச் சிறுமியை பள்ளியில் சேர்த்தார்கள். விடியற்காலையில் அம்மாவுடன் கொஞ்ச நேரம் வயல் வேலைகள் பார்க்கும் அவள், 25 கிலோமீட்டர் தூரத்தையும் ஓடியே பள்ளிக்குப் போய்விடுவாள். அவளது பெயர், உஷா.

மாவட்டம் முழுவதும் பள்ளிகளுக்கு இடையே சிறார்களைத் தேர்வுசெய்து, பந்தயங்களுக்குப் பயிற்சி அளிக்கும் மைதானம் ஒன்று, உஷா பள்ளிக்கூடம் செல்லும் வழியில் இருந்தது. ஒருநாள், அங்கே ஒரு கூட்டத்தைக் கண்டாள். அங்கே பயிற்சியில் இருந்த மாணவர்கள், கால் சராயும் ஷூவும் அணிந்திருந்தார்கள். கூட்டமாக ஓடி பயிற்சி செய்தார்கள்.

மறுநாள், தனது ஊரில் இருந்து பள்ளிக்கு ஓடும்போது, அவர்களைப் போலவே பாவனை செய்துகொண்டு ஓடினாள். 'நானும் ஒருநாள், அவர்களைப் போல பயிற்சிபெறும் மாணவி ஆவேன்’ என்று தனக்குள் சொல்லிக்கொண்டபோது, உஷாவின் வயது ஆறு.

நாட்கள் ஓடின. ஒருநாள், அந்த மைதானத்தில் ஓட்டப்பந்தயம் நடப்பதைக் கண்டாள். பள்ளிக்குப் போக வேண்டும் என்றது கடமை. ஓட்டப்பந்தயம் பார்க்க வேண்டும் என்றது ஆர்வம். இந்த மனப் போராட்டத்தில் ஓட்டப்பந்தயமே ஜெயித்தது. அவள் எட்டி நின்று வேடிக்கை பார்த்தாள். பிறகு, அருகில் இருந்து வேடிக்கை பார்க்க வாய்ப்புக் கிடைத்தது. திடீரென, 'யார் வேண்டுமானாலும் கலந்துகொள்ளலாம்’ என்றார்கள். ஏழு வயது சிறுமியான உஷா, அந்தப் போட்டியில் கலந்துகொண்டு, மற்ற மாணவிகளைவிட வேகமாக ஓடி, முதல் இடம் பிடித்து, அனைவரது கவனத்தையும் ஈர்த்தாள்.

உஷா நினைத்தது நிறைவேறியது. 'ஒரு வாய்ப்பு கிடைக்கும்போது, அதைத் தயங்காமல் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்’ என்பதைப் புரிந்துகொண்டாள். பிறகு, அவளது அப்பா, உஷாவை அந்த பயிற்சிப் பள்ளியில் சேர்த்தார்.

காலில் ரப்பர் ஷூவுடன் தனது கனவு வாழ்க்கையை நோக்கி ஓடத் தொடங்கினாள். வசதி இல்லாத குடும்பத்தில் பிறந்தாலும், விளையாட்டுத் திறன் மிகுந்த குழந்தைகளை ஊக்கப்படுத்த, கேரள அரசு 250 ரூபாய் உதவித்தொகை கொடுத்துவந்தது. அதைப் பெற்றபோது, உஷாவின் வயது எட்டு.

மாவட்டம், மாநிலம் என, சப் ஜுனியர் பந்தயங்களில் அவளுக்கே முதல் இடம். மாநிலத்தில் தலைசிறந்த விளையாட்டுப் பயிற்சிப் பள்ளி, கண்ணூர் எனும் நகரில் இருந்தது. அங்கே, பயிற்சியோடு கல்வியும் பெறத் தேர்வு பெற்றாள் உஷா.

அகில இந்திய அளவிலான பள்ளிகளுக்கு இடையில் ஒவ்வொரு வருடமும் நேஷனல் ஸ்கூல் கேம்ஸ் நடக்கும். 1979இல், தனது 13ஆவது வயதில் அதில் கலந்துகொண்டாள். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனை படைத்து, தங்கம் வென்ற அவளை, உலகப் பிரசித்திபெற்ற பயிற்சியாளர் ஓ.எம்.நம்பியார், தனது கனவுகளின் ஆதர்ச மாணவியாகப் பெற்றார்.

ஒரே வருடம்தான். மிகக் கடுமையான பயிற்சியில், மிகச் சிறப்பாக உயர்ந்த அவளது அதிவேக ஓட்டத்தை வியக்காதவரே இல்லை. 1980இல் மாஸ்கோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் தேசிய சாதனை. 1982இல் டெல்லி ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் தொடங்கி, அடுத்தடுத்து சர்வதேசப் போட்டிகளில் 102 பதக்கங்களை வென்று, இந்தியாவின் தங்கத் தாரகையாக மிளிர்ந்தார் பி.டி. உஷா. 'பையோலி எக்ஸ்பிரஸ்’ என்று அழைக்கப்பட்டார்.

''நான், பையோலியில் இருந்து என் பள்ளிக்கு ரயிலைவிட வேகமாக ஓடி, என் வாழ்க்கையைத் தொடங்கினேன்'' என்று சொல்லும் தங்கத் தாரகை பி.டி. உஷா, நம் அனைவருக்கும் உதாரணமாக விளங்கும் சுட்டி நாயகியே.

*🌐ஜூன் 27,வரலாற்றில் இன்று:ஜெர்மன் கருவியலாளர்,நோபல் பரிசு பெற்றவர் ஹன்ஸ் ஸ்பெமான் பிறந்த தினம் இன்று(1869).*

ஜூன் 27,
வரலாற்றில் இன்று.

ஜெர்மன் கருவியலாளர், நோபல் பரிசு பெற்றவர் ஹன்ஸ் ஸ்பெமான்
(Hans Spemann) பிறந்த தினம் இன்று(1869).

ஹன்ஸ் ஸ்பெமான் 1888 ஆம் ஆண்டில் பள்ளியை விட்டுச் சென்றபின், தனது தந்தையின் வணிகத்தில் ஒரு வருடம் செலவிட்டார்,

 1889-1890 ஆம் ஆண்டுகளில் காஸல் ஹுஸார்ஸில் இராணுவ சேவை, ஹம்பர்கில் புத்தக விற்பனையாளராக சிறிது காலம் கழித்தார்.

1891 ஆம் ஆண்டில் அவர் ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார், அங்கு மருத்துவ ஆராய்ச்சியை மேற்கொண்டார்,

1893 இல் தனது ஆரம்ப பரிசோதனையை மேற்கொண்டார். அங்கே உயிரியல் நிபுணரும் உளவியலாளருமான கஸ்டவ் வுல்ப் சந்தித்தார், புதிதாக உருவாக்கப்பட்ட கருவியல் வளர்ச்சிகளில் பரிசோதனைகளை ஆரம்பித்த அவர், கண் அகற்றப்பட்டு, மீண்டும் மீண்டும் வருகிறது என்றார்.

 1893-1894-ல் அவர் மருத்துவ பயிற்சிக்காக முனிச் பல்கலைக்கழகத்திற்குச் சென்றார், ஆனால் 1908 ஆம் ஆண்டு வரை விரிவுரையாளராக இருந்த வூர்ஸ்பர்க் பல்கலைக் கழகத்தின் ஜுலோகிக்கல் இன்ஸ்டிட்யூட்டிற்கு மாற்றுவதற்கு பதிலாக மருத்துவ உதவியாளராக மாறினார்.

அவரது Ph.D. புவேரியின் மேற்பார்வையில், ஸ்பேமன் தனது போதனை டிப்ளமோ படிப்பிற்காக,  தவளை நடுத்தர காதுகளின் வளர்ச்சி பற்றி ஆராய்ந்தார்.

ஆய்வுகள்:-

ஒட்டுண்ணி புழுக்களின் வளர்ச்சி நிலைகளில் அவரது ஆய்வு முடிந்தபின், ஸ்பேமன் ஆராய்ச்சியின் பிரதான பகுதி என உயிரினங்களின் (புதியவை) கருவியல் வளர்ச்சியில் கவனம் செலுத்தத் தேர்ந்தெடுத்தார்.

பின்னர் புதிய கருச்சிதைவு நடைமுறைகளை அவற்றின் கரு வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை ஆய்வு செய்ய ஆரம்பித்தார்.

இந்த தலைப்பில் அவரது முதல் பரிசோதனை, அவரது "முடி இரட்டை" (1901), அவரை பரந்த அங்கீகாரம் பெற்றார்.

ஒரு கருவைச் சுற்றியுள்ள குழந்தையின் தலைமுடியைப் பிடுங்குவதன் மூலம், ஸ்பேம் ஒரு ஒற்றை அணுவிலிருந்து இரண்டு சிறிய ஆனால் முழு லார்வாக்களை உற்பத்தி செய்வதில் வெற்றி பெற்றார்.

1921 ஆம் ஆண்டில், தனது முனைவர் பட்ட மாணவர் ஹில்டி மாகோல்ட் உடன் நடத்தப்பட்ட பல பரிசோதனையங்களில் அவர் கண்டறிந்தார், ஒரு குறிப்பிட்ட பகுதியிலுள்ள திசுக்களின் ஒரு சிறிய பகுதி திசுக்களின் எதிர்காலப் பகுதியிலிருந்தே இரண்டாம் நிலை புதைபொருள் ப்ரிடார்டியாவின் தலைமுறையை "ஒழுங்கமைக்க" முடியும் என்றார்.

விருதுகள்:-

உடலியக்கவியல் அல்லது மருத்துவத்தில் நோபல் பரிசு (1935)

செப்டம்பர்-9, 1941இல் தனது 72ஆவது வயதில் ஜெர்மனியில் காலமானார்.

*🌐ஜூன் 27,* *வரலாற்றில் இன்று:எழுத்தாளர் அகிலன் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 27,
வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் அகிலன்  பிறந்த  தினம் இன்று.

நாவல் ஆசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் வாய்ந்தவரும், தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவருமான அகிலன் 1922 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் பி.வி.அகிலாண்டம் ஆகும்.

 பள்ளிப் பருவத்தில் 'சக்தி வாலிபர் சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார். அதன்பின் இதழ்களில் சிறுகதைகள் எழுதிவந்தார். முதல் நாவல் 'மங்கிய நிலவு" 1944-ல் வெளிவந்தது. மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்துள்ளார்.

 'வேங்கையின் மைந்தன்" நாவல் 1963-ல் சாகித்ய அகாடமி விருதையும் 'சித்திரப்பாவை" 1975-ல் ஞானபீட விருதையும் பெற்றன. பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன. சோவியத் லாண்ட் விருதும் பெற்றுள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கிய அகிலன் 1988 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி காலமானார்.

*🌐ஜூன் 27,வரலாற்றில் இன்று:தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த பெண் போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மா அவர்களின் நினைவு தினம் இன்று.*

 ஜூன் 27,
வரலாற்றில் இன்று.

தேவதாசி முறை ஒழியப் புரட்சி செய்த பெண்  போராளி மூவலூர் இராமாமிர்தம் அம்மா அவர்களின்  நினைவு தினம் இன்று.

பெண்களுக்கெதிரான சமயச் சடங்குகளில் மிகக் கொடூரமானது ஒரு குறிப்பிட்ட சமூகப் பெண்களை பொட்டுக்கட்டி தேவதாசியாக்கும் கருவியாக்கியதுதான்.

குறிப்பிட்ட சமூகப் பெண்களை கோவிலில் நடனமாடவும், அவர்களை திருமணம் செய்து கொள்ளவிடாமல் பொட்டுக் கட்டும் வழக்கம் கடந்த நூற்றாண்டின் முதல் பகுதி வரை நீடித்தது. இந்த சமூகத்தில் பிறந்த ஆண்கள் நாயனம், மேளம் வாசிப்பதிலும், நட்டுவனார்களாகவும் வாழ்க்கையை நடத்தினர்.

இக்கொடுமையைக் கண்ட மயிலாடுதுறை அருகே உள்ள மூவலூரில் கிருஷ்ணசாமி என்பவர் எதிர்த்தார். இதனால் கடும் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல் போன்றவற்றால் ஊரைவிட்டே சென்னைக்கு ஓடிவந்துவிட்டார். அவருக்கும் சின்னம்மாள் என்பவருக்கும் 1883ஆம் ஆண்டு இராமாமிர்தம் பிறந்தார்.

தன் குழந்தையை ஆச்சிக் கண்ணு என்ற தேவதாசியிடம் 10 ரூபாய்க்கும், ஒரு பழைய புடவைக்கும் விற்றுவிட்டார் சின்னம்மாள். காரணம். குடும்பத்தின் வறுமை. ஆச்சிக் கண்ணுவிடம் 7 வயது முதல் வளர்ந்தார் இராமாமிர்தம். பின்னாளில் தன் இனிஷியலாக ஆ என்று இவர் போட்டுக் கொண்டது இந்த ஆச்சிக் கண்ணுவின் பெயரைத்தான்.

தன் 17 வயதில் பொட்டுக்கட்டும் சடங்கை வெறுத்துக் கடும் எதிர்ப்பு தெரிவித்த இராமாமிர்தம், பின் உள்ளூர் தேவதாசிகள் எதிர்ப்பால் அது நடைபெறவில்லை.

65 வயது பணக்கார மிராசுதாரைத் திருமணம் செய்ய வற்புறுத்தி மீண்டும் தனக்கு வந்த சோதனையை எதிர்த்து, நடனம் சொல்லித் தந்த காங்கிரஸ் பற்றாளர் சுயம்புப் பிள்ளையை ஒரு கோவிலில் நெய் விளக்கின் முன் சத்தியம் பெற்றுத் திருமணம் செய்து கொண்டார். பின் இருவரும் தேவதாசி முறை ஒழிய காங்கிரசில் ஈடுபட்டு தீவிரப் பிரசாரம் செய்தனர்.

இராஜாஜியின் கடும் எதிர்ப்பையும் மீறி இராமாமிர்தம் நடத்திய மாநாட்டில் காந்தியார் கலந்து கொண்டார்.

1925ஆம் ஆண்டு நடத்திய மயிலாடுதுறை மாநாட்டில் திரு.வி.க., பெரியார் போன்றோர் கலந்து கொண்டனர்.

பெண்ணுலகு போற்ற வந்த கற்பகம் என்று இராமாமிர்தத்தை திரு.வி.க. பாராட்டினார்.

ராமாமிர்தம், தேவதாசி முறை ஒழிக்கப்பட திட்டம் வகுக்க வேண்டும் என்று காந்தியாருக்கு பல நீண்ட கடிதங்கள் எழுதினார். எதற்கும் காந்தியிடம் இருந்து பதில் வரவில்லை.

1925ஆம் ஆண்டு காஞ்சிபுரம் காங்கிரஸ் மாநாட்டில் இருந்து வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைப் பெரியார் தொடங்கிய போது, அவருடன் சுயமரியாதை இயக்கத்தில் பங்கு பெற்ற முதல் பெண்மணி இராமாமிர்தம் அம்மையார்.

இந்தி எதிர்ப்புப் போராட்டம் உள்பட பல போராட்டங்கள் என அனைத்துமே அம்மையார் இல்லாமல் நடந்ததில்லை.

சுயசரிதை போன்று இவர் 1936இல் எழுதிய நாவல்தான் தாசிகளின் மோசவலை (அ) மதி பெற்ற மைனர் . இதில் தேவதாசி முறைக் கொடுமை பற்றியும், அது ஒழிக்கப்பட வேண்டிய அவசியம் பற்றியும் விளக்கப்பட்டிருந்தது. தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம் ஆகிய மொழிகளில் புலமை கொண்டவர். பல கட்டுரைகள், கதைகளை எழுதி திராவிடர் இயக்கப் பிரச்சாரத்தை யாருக்கும் பயப்படாமல் செய்தார்.

1932ஆம் ஆண்டு தஞ்சையில் நடந்த பிரசார நாடகத்தில் சிலர் புகுந்து கலவரம் செய்ததுடன் அவரின் நீண்ட தலைமுடியை அறுத்து எறிந்தனர். அதன் பின் கிராப்புத் தலையுடனே இறுதி வரை பிரசாரம் மேற்கொண்டார்.

டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி சட்டசபையில் தேவதாசி ஒழிப்பு மசோதாவை அறிமுகம் செய்த போது, காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி  கடும் எதிர்ப்புத் தெரிவிக்க முத்துலெட்சுமி ரெட்டி தேவையென்றால் அவரினத்துப் பெண்கள் ஆடட்டும். எங்கள் இனப் பெண்கள் இனி ஆடமாட்டார்கள் என்றபோது, சட்டசபையே அதிர்ந்தது. முத்துலட்சுமி ரெட்டியின் இந்த அறைகூவலுக்குப் பின்னால் இருந்தவர்கள் தந்தை பெரியாரும், இராமாமிர்தம் அம்மையாரும்தான்.

மூதாட்டி இராமாமிர்தம் அம்மையாரின் நீண்ட போராட்டத்தின் காரணமாக, 1947ஆம் ஆண்டு ஓமந்தூர் இராமசாமிரெட்டியார் முதல்வராக பதவியேற்றவுடன், Tamilnadu Act xxxi (The Madras Devadasis (Prevention of Dedication) Act 1947என்ற சட்டம் மூலம் தேவதாசி முறை முற்றாய் ஒழிக்கப்பட்டது.

மூதாட்டி இராமாமிர்தம் அம்மையார் ஜூன் 27, 1962ஆம் ஆண்டு காலமானார். அம்மையாரைச் சிறப்புச் செய்யும் விதமாக மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் திருமண உதவித் திட்டம் ஒன்றை 1989ஆம் ஆண்டு அன்றைய முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.