சனி, 27 ஜூன், 2020

*🌐ஜூன் 27,* *வரலாற்றில் இன்று:எழுத்தாளர் அகிலன் பிறந்த தினம் இன்று.*

ஜூன் 27,
வரலாற்றில் இன்று.

எழுத்தாளர் அகிலன்  பிறந்த  தினம் இன்று.

நாவல் ஆசிரியர், நாடக ஆசிரியர், மொழிபெயர்ப்பாளர் என்று பன்முகத் திறன் வாய்ந்தவரும், தமிழில் முதல் ஞானபீட விருது பெற்றவருமான அகிலன் 1922 ஆம் ஆண்டு ஜூன் 27 ஆம் தேதி பிறந்தார். இயற்பெயர் பி.வி.அகிலாண்டம் ஆகும்.

 பள்ளிப் பருவத்தில் 'சக்தி வாலிபர் சங்கம்" என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நிய துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார். அதன்பின் இதழ்களில் சிறுகதைகள் எழுதிவந்தார். முதல் நாவல் 'மங்கிய நிலவு" 1944-ல் வெளிவந்தது. மொத்தம் 20 நாவல்கள், 200 சிறுகதைகள், கட்டுரைகள், நாடகம், சிறுவர் கதைகள், மொழிபெயர்ப்புகளைப் படைத்துள்ளார்.

 'வேங்கையின் மைந்தன்" நாவல் 1963-ல் சாகித்ய அகாடமி விருதையும் 'சித்திரப்பாவை" 1975-ல் ஞானபீட விருதையும் பெற்றன. பல படைப்புகள் தமிழக அரசு விருதுகளைப் பெற்றுள்ளன. சோவியத் லாண்ட் விருதும் பெற்றுள்ளார். தமிழ் இலக்கியத்துக்கு முக்கியப் பங்களிப்பை வழங்கிய அகிலன் 1988 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி காலமானார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக