சனி, 11 ஏப்ரல், 2020

கொரானா வைரஸ் பாதிப்பு_ நிவாரண நடவடிக்கை_ மளிகை பொருட்கள்_ கூட்டுறவு நியாயவிலைக் கடை மூலம் விற்பனை செய்தல்_ சார்பு..





11.04.2020இல் தமிழகத்தில் கொரனோ நிலவரம்.
மாவட்டங்களின் நிலை வண்ணப்படுத்தப்பட்டுள்ளது.
நாமக்கல் உள்ளிட்டு17மாவட்டங்கள் அதிக பாதிப்பு உடையமாவட்டங்கள் என்பதை சிகப்பு வண்ணத்தால் குறிப்பிடப்பட்டுள்ளது.
தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் எப்படி இருக்க வேண்டும்?
தமிழக அரசு அறிவுரை
::::::::::::::::::::::::::::::::::::
கரோனா அறிகுறி அல்லது கரோனா பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்த பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

 இவர்களும், குடும்பத்தினரும் கடைபிடிக்க வேண்டிய
சில முக்கிய வழிமுறைகள் குறித்து தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.


இவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகளாவன..


கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடு அல்லது வேறு மாநிலத்திலிருந்து திரும்பிய ஒரு நபர் அல்லது கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவருடன் இருந்தவர்கள், பிறருக்கு நோய்க்கிருமி பரவுவதைத் தடுக்க சமுதாயத்திலிருந்து தன்னை விலக்கி வீட்டில் தனிஅறையில் தனிமைப்படுத்திக் கொண்டு சில வழிமுறைகளை கடைப்பிடிப்பதையே வீட்டில் தனிமைப்படுத்தி இருத்தல் என அழைக்கிறோம்.

அதன்படி தனிமைப்படுத்தப்பட்டவர்கள் கீழ்க்கண்ட வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

*தனிமைப்படுத்தப்பட்டவர் பயன்படுத்திய பொருட்களை மற்றவர்கள் பயன்படுத்தக்கூடாது.

*தனிமைப்படுத்தப்பட்டவரின் உடைகள், படுக்கை விரிப்பு போன்றவற்றை உதறாமல் முகக்கவசம் மற்றும் கையுறை அணிந்து தனியாக சோப்பு நீரில் ஊறவைத்து துவைத்து வெயிலில் காய வைக்க வேண்டும்.

*முகக்கவசம் மற்றும் கையுறை ஆகியவற்றை கழற்றிய பின் கைகளை நன்கு சோப்புப் போட்டு கழுவ வேண்டும்.

*அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்த நபர்களையும் அடுத்த 28 நாட்களுக்கு தனிமைப்படுத்த வேண்டும்.

*வீட்டை தினமும் மூன்று முறை கிருமிநாசினி கொண்டு தூய்மைப்படுத்த வேண்டும்.

*இவையனைத்தும் உங்கள் ஒவ்வொருவரின் நலம்பேணுவதற்கான அரசின் அறிவுறுத்தல் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்

 மேற்கண்டவாறு  கூறப்பட்டுள்ளது

*தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்துள்ளது.

*தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை இணைய தளத்தின் வழியே வீட்டிலிருந்தே பாடங்களைக் கற்க வழிவகை செய்துள்ளது. இந்த வாய்ப்பினை நன்கு பயன்படுத்திக் கொள்ளுமாறு பெற்றோர்கள் மற்றும் மாணாவர்களை கேட்டுக்கொள்ளகிறோம்.*

Click here.....
https://e-learn.tnschools.gov.in/

EMI சலுகை தருவதாக புதிய மோசடி~பாஸ்வேர்டு, வங்கி கணக்கு விவரங்களை தரவேண்டாம்~வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் எச்சரிக்கை...

கொரோனா வைரஸ் பற்றிய சந்தேகம் ~ 'குரல் வழி சேவை' தொடக்கம்....