வியாழன், 18 அக்டோபர், 2018

CCTV கேமராவை செல்போனுடன் இணைப்பது ஆபத்து ~ ஒரு Alert Report…


சிசிடிவி கேமராக்களை இணையம் மூலம் செல்போனுடன் இணைப்பதால் அவை ஹேக் செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றங்களை குறைக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு வருகிறது. தங்கள் வீடு, கடை உள்ளிட்ட இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்துமாறு பொதுமக்களை காவல்துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர்.

சிசிடிவி கேமராவை பொருத்திவிட்டால் அதில் பதிவாகும் காட்சிகளை அந்த இடத்தின் உரிமையாளர் எங்கிருந்து வேண்டுமானாலும் செல்போன் மூலம் பார்க்கலாம். இணையம் மூலம் செல்போனையும் சிசிடிவி கேமராவையும் இணைப்பதால் இது சாத்தியமாகிறது. எந்த ஒரு வசதியிலும் ஆபத்தும் சேர்ந்துதான் இருக்கும் என்பதை தொழில்நுட்ப வல்லுநர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

சிசிடிவி கேமராவும், செல்போனும் இணையம் மூலம் இணையும் போது ஹேக்கர்களால் அதை எளிதில் ஹேக் செய்ய முடியும் என்று வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். ஹேக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட கேமராவை கட்டுப்படுத்தவோ, அதில் பதிவான காட்சிகளை திருடவோ, அழிக்கவோ அல்லது மாற்றி அமைக்கவோ ஹேக்கர்களால் முடியும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

தப்பிக்க என்ன வழி?

தப்பிக்க சிசிடிவி கேமராவின் மென்பொருளை அடிக்கடி அப்டேட் செய்ய வேண்டும். பொதுவாக இந்த SOFTWARE-களை 3 மாதத்துக்கு ஒருமுறை அந்தந்த நிறுவனங்கள் புதுப்பிக்கும். அவற்றை சிசிடிவி கேமரா பொருத்தியிருப்பவர்கள் அப்டேட் செய்து கொண்டால் ஹேக்கர்களிடம் இருந்து தப்ப முடியும் என வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 

நான்கு துறைகளில் காலியிடங்களை நிரப்ப நேர்முகத் தேர்வு~ டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு…


நான்கு துறைகளில் காலிப் பணியிடங்களை
நிரப்புவதற்கான நேர்முகத் தேர்வு தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.

இது குறித்து, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட அறிவிப்பு:-

சுற்றுலாப் பயணி அலுவலர் பணியில் காலியாக உள்ள 5 இடங்களுக்கு நடந்த தேர்வில் தற்காலிகமாக 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான நேர்முகத் தேர்வு நவம்பர் 2-இல் நடைபெறும். 

இதேபோன்று, இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையாளர் பணியில் 3 இடங்கள் காலியாக உள்ளன. அதில், தற்காலிமாக ஏழு பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு நவம்பர் 11-இல் நேர்முகத் தேர்வு நடத்தப்படும்.

ஒருங்கிணைந்த பொறியியல் பணிகளில் உள்ள 330 காலிப் பணியிடங்களுக்கு நடந்த தேர்வில் 665 பேர் தற்காலிமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு நேர்முகத் தேர்வு வரும் 25 முதல் நவம்பர் 1 வரை நடைபெறும்.

இதே போன்று, வேளாண்மை விரிவாக்கப் பணிகள் தொகுதியில் அடங்கிய வேளாண்மை அலுவலர் பணியில் 323 இடங்கள் காலியாக இருந்தன. அவற்றுக்கு நடந்த தேர்வில் தேர்ச்சி பெற்று 613 பேர் தற்காலிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கான நேர்முகத் தேர்வு வரும் 29 முதல் நவம்பர் 9 வரை நடக்கும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணிபுரிந்தவர்களுக்கு விருது~தமிழக அரசு அறிவிப்பு…

பள்ளி நேரத்தில் 'அலுவலக பணி,' எனக் கூறி ஆசிரியர்கள் C.E.O அலுவலகத்தில் அரட்டை - 10 கண்காணிப்பு கேமரா பொறுத்த மதுரை CEO அதிரடி உத்தரவு

மதுரை தல்லாகுளம் முதன்மை கல்வி அலுவலக (சி.இ.ஓ., ) வளாகத்தில் பாதுகாப்பு கருதி 10 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன.இவ்வளாகத்தில் மதுரை மாவட்ட கல்வி அலுவலகம் (டி.இ.ஒ.,) எஸ்.எஸ்.ஏ., ஆர்.எம்.எஸ்.ஏ., மற்றும் தணிக்கை அலுவலகங்கள் உள்ளன.


வெளி நபர் பலர் வளாகத்திற்குள் டூவீலர், கார்களை நிறுத்தி 'பார்க்கிங்' ஆக மாற்றுவதாக சர்ச்சை எழுந்தது. இங்கு பொதுத் தேர்வு வினாத்தாள் வைக்கும் அறை, அரசு இலவச லேப்டாப்கள் வைக்கும் அறை உள்ளன.



பள்ளி நேரத்தில் 'அலுவலக பணி,' எனக் கூறி ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகள் இங்கு வந்து அரட்டை அடிப்பதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து வளாகத்தை கண்காணிப்புக்குள் கொண்டு வர 10 இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டன. ஒரு மாதம் வரை இதன் பதிவுகள் அழியாமல் இருக்கும்.


கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது: பாதுகாப்பு, நிர்வாக காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையின்றி ஆசிரியர்கள், அலுவலர்கள் இங்கு வரக் கூடாது. கேமராக்கள் கண்ட்ரோல் சி.இ.ஓ., கோபிதாஸ் அறையில் உள்ளன. அவர் வெளியில் சென்றாலும் பிரத்யேக 'ஆப்' மூலம் அலைபேசியிலேயே கேமராக்களை கண்காணிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றார்

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகம்-தொலைநிலைக்கல்வி தொடர்பு வகுப்புகள் சுற்றறிக்கை - அக்டோபர்~ 2018…

NMMS TEST QUESTIONS - SAMPLES

இன்டர்நெட் ரகசியம் -உண்மைகள்

தற்காப்பு கலை' பயிற்சிக்கு, 238 பள்ளிகள் தேர்வு



அரசு பள்ளிகளில்,
'தற்காப்பு கலை' பயிற்சிக்கு, 238 பள்ளிகள் தேர்வாகி உள்ளன. 9ம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த கல்வித்துறை முடிவு செய்துள்ளது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,399 தொடக்கப்பள்ளிகள், 471 நடுநிலைப்பள்ளிகள், 320 உயர் நிலைப்பள்ளிகள், 407 மேல்நிலை என, 2,597 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில், 35 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவியர் படித்து வருகின்றனர்.
கராத்தே பயிற்சிஅரசு பள்ளி மாணவியரை பொறுத்த வரை, மன இறுக்கம், குடும்ப சூழலால் தாழ்வு மனப்பான்மை உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை தவிர்க்க, கடந்த ஆண்டு, அனைவருக்கும் கல்வி இயக்ககம் சார்பில், உடல் மற்றும் மனம் சார்ந்த சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன.இதன் மூலம், யோகா மற்றும் கராத்தே வகுப்புகள் சொல்லிக் கொடுக்கப்பட்டன. இதன் மூலம், நெறி தவறும் மாணவியருக்கு, நல் வழிபடுத்தும் விதமாக இது அமைந்திருக்கிறது.தற்போது, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடை நிலை கல்வி இயக்கம் கலைக்கப்பட்டு, ஒருங்கிணைந்த பள்ளி கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இத்திட்டத்தில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவியருக்கு தற்காப்பு கலை என, அழைக்கப்படும், கராத்தே, ஜூடோ, டேக்வான்டோ பயிற்சிகள் துவக்கப்பட உள்ளன.100 மாணவியர்இத்திட்டம், கல்வித்துறையில் நடைமுறையில் இருந்தாலும், முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு, கல்வித்துறை விரிவுபடுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 238 பள்ளிகள் தேர்வு செய்யப்பட உள்ளன.இதில், 100 மாணவியருக்கு அதிகமாக இருக்கும் பள்ளிகளில், சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவக்கப்பட உள்ளன. வழக்கமான பாடவேளை நாட்களை தவிர, விடுமுறை தினங்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளன.குறிப்பாக, கடந்த ஆண்டு சிறப்பு வகுப்புகளில், பயிற்சி பெற்ற மாணவியரை தவிர, புதிய மாணவியரை சிறப்பு வகுப்புகளுக்கு தேர்வு செய்வதற்கு, முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்.

ஒரே பள்ளி வளாகத்திற்குள் பயிற்சி வகுப்பு நடத்த வேண்டும்.பயிற்சி பெறும் மாணவியரிடம் அதிக கவனம் செலுத்த வேண்டும் என, கல்வித்துறைக்கு அரசு அறிவுரை வழங்கி உள்ளது.கராத்தே தற்காப்பு கலை பயிற்சி சிறப்பு வகுப்புகள், ஏற்கனவே, 8ம் வகுப்பு மாணவியருக்கு கற்றுக் கொடுக்கப்படுகிறது. நடப்பாண்டு முதல், 9ம் வகுப்பு மாணவியருக்கும் கற்றுத்தர உள்ளனர். முதல் கட்டமாக, சிறப்பு வகுப்பு சொல்லிக் கொடுப்பதற்கு, தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. விரைவில், பயிற்சி வகுப்புகள் துவக்கப்படும்.

ஏற்படும் பலன்கள்! மாணவியருக்கு தன்னம்பிக்கை வளரும், பாலியல் சீண்டலின் போது, எதிரிகளை பந்தாடுவர், ஆளுமை திறனை வளர்த்துக்கொள்ள, மன தைரியம் பிறக்கும மனக் குழப்பம் தீரும்.

DSE Proceedings: புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசு உயர்/மேல்நிலைப் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்கள் எண்ணிக்கை விபரம் 17.10.2018 நிலவரப்படி கோருதல்-சார்பு


அனைத்து வகை பள்ளிகளிலும் பெற்றோர் ஆசிரியர் கழக கூட்டங்கள்(PTA) தொய்வின்றி நடைபெற பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!