புதன், 21 ஆகஸ்ட், 2019

தமிழ் கற்க ~ App...

தேசிய நல்லாசிரியர் திரு.இரா.செல்வக்கண்ணன் அவர்களின் பள்ளிக்கல்விப்பணிகள் மேன்மேலும் சிறக்கட்டும் - தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வாழ்த்தும்,பாராட்டும் உரித்தாக்கிக்கொள்கிறது. -முருகசெல்வராசன்.

தேசிய நல்லாசிரியர் திரு.இரா.செல்வக்கண்ணன் அவர்களின் பள்ளிக்கல்விப்பணிகள் மேன்மேலும் சிறக்கட்டும்!திரு.இரா.செல்வக்கண்ணன் அவர்களுக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்ட அமைப்பு வாழ்த்தும்,பாராட்டும் உரித்தாக்கிக்கொள்கிறது.
முருகசெல்வராசன்.
**********************************

🌹🌹கரூர் மாவட்டம் ,க.பரமத்தி ஒன்றியம் ,க.பரமத்தி ,ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.இரா.செல்வக்கண்ணன் அவர்கள்
 2018-19 ஆம் ஆண்டிற்கான தேசிய நல்லாசிரியர் விருது பெற மத்திய அரசால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இவரது கடின உழைப்பாலும் உடன் பணியாற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்பாலும் இவர் பணியாற்றும் க.பரமத்தி ஊ.ஒ.தொ.பள்ளி பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது
👉1).மாவட்டத்தில் சிறந்த பள்ளிக்கான விருது.
👉2).மாவட்டத்தில் சிறந்த கிராமக் கல்விக்குழுவிற்கான விருது.
👉3).மாவட்டத்தில் சிறந்த புதுமை பள்ளிக்கான விருது.
👉4).மாவட்ட அளவில் தூய்மை பள்ளிக்கான விருது.
இன்னும் பல்வேறு விருதுகளை இப்பள்ளியானது பெற்று க.பரமத்தி ஒன்றியத்திற்கும் கரூர் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளது.
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது பெற்றுள்ளார்.கடின உழைப்பாளி தனது இரண்டு பெண் குழந்தைகளையும் அரசுப் பள்ளியிலேயே படிக்க வைத்து அரசு பள்ளிக்கு பெருமை சேர்த்தவர்.இவரை பெருமை செய்யும் வகையில் இவரது மூத்த மகள் டாக்டர் படிப்பை முடித்துள்ளார்.எந்த நேரமும் பள்ளியிலேயே இருப்பார்.சிறப்பான செயல்பாட்டில் ஈர்க்கப்பட்ட சுற்று வட்டார கிராமத்தில் இருந்து க.பரமத்தியில் குடிபெயர்ந்து தனது குழந்தைகளை க.பரமத்தி அரசு பள்ளியில் சேர்த்து படிக்க வைக்கின்றனர். இப்பள்ளியில் யோகா,கராத்தே,கீபோர்டு மற்றும் நடனம்  போன்றவை கற்று தரப்படுகிறது.வருடந்தோரும் ஆண்டுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்று வருகிறது.அரசுப் பள்ளியில் குழந்தைகளை சேர்க்க வேண்டி குறும்படம் ஒன்றையும் தயாரித்துள்ளார்.தேசிய நல்லாசிரியர் விருது பெற்று தமிழகத்திற்கும் கரூர் மாவட்டத்திற்கும் க.பரமத்தி ஒன்றியத்திற்கும் பெருமை சேர்த்துள்ள நல்ல மனிதர் பண்பாளர் கடின உழைப்பாளியான இவரை நாமும் பாராட்டலாமே இவரது அலைபேசி எண்:9894666765
இவ்வளவு சிறப்பு வாய்ந்த நல்ல மனிதர்
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் க.பரமத்தி ஒன்றிய செயலாளராகவும் உள்ளது ஆசிரியர் மன்றத்திற்கும் மாவட்ட ச்செயலாளரான எனக்கும் பெருமையாக உள்ளது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏                                என்றும் அன்புடன்
சு.வேலுமணி M.A.,B.Ed.,
தலைமையாசிரியர்                                                         & மாவட்டச் செயலாளர்.
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
கரூர் மாவட்டம்.
அலைபேசி:9003599926

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் பொதுச்செயலாளர் அறிக்கை நாள் 15.08.2019




ஒருங்கிணைந்த பள்ளி கல்வி - பள்ளியின் அனைத்து செயல்பாடுகள் புகைப்படங்கள் பதிவேற்றம் செய்தல் சார்ந்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறை





காலாவதி, போலி மருந்துகளை தடுக்க மருந்து அட்டைகளில் பிரத்யேக 'க்யூ - ஆர்’ கோடு...