வியாழன், 26 மார்ச், 2020

*🌐ஆசிரியர்களின் ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும்* - *மத்திய அரசு அறிவுறுத்தல்!*

*ஆசிரியர்களுக்கான ஊதியத்தை தாமதமின்றி வழங்க வேண்டும் என அனைத்து மாநில பள்ளிக் கல்வித்துறைக்கும் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது. கரோனா வைரஸ் பரவல் அச்சுறுத்தலால் நாடு முழுவதும் அடுத்த 3 வாரத்துக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.*


*இதையடுத்து தன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அலுவலகங்கள் , தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள் 3 வாரம் மூடப்பட்டிருக்கும் . துறை அதிகாரி கள் மற்றும் பணியாளர்கள் வீடுகளில் இருந்தவாறு பணியாற்றுவார்கள்.*

*மேலும் , துறைசார்ந்த அனைத்து ஆலோசனைக் கூட்டங்களும் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுவதாக என்று மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.*

*இதேபோல் , ஆசிரியர்கள் மற்றும் இதர பணியாளர்களுக்கான மார்ச் மாத ஊதியம் , ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படுவதை யும் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள் உறுதி செய்ய வேண்டும்.*

*மேலும் , தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழுமம்  என்சிஇ ஆர்டி நடப்பு கல்வியாண்டுக்கான மாற்று நாள்காட்டியை விரை வாக வெளியிடவும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவுறுத்தி யுள்ளதாக பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப் பில் கூறப்பட்டுள்ளது.*
*🌷கொரோனா: ஆளுங்கட்சியினர் ஒரு மாத ஊதியம் வழங்குவார்களேயானால் ஆசிரியர் மன்றத்தினரும் ஒரு நாள் ஊதியம் வழங்குவர்-பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்கள் அறிக்கை.*
உலகத்தில் உள்ள அனைத்து மானுட தத்துவத்தை யும் நான் மதிக்கின்றேன்

ஆனால் என் மண்ணில் நான் படிக்க ஆலமரமாக நின்ற தத்துவத்தையும் அது உருவாக்கிய கட்டமைப்பையும் பேசாமல் கடந்து போக முடியாது

தமிழ்நாடு மருத்துவம் மற்றும் பொது சுகாதரத் துறையில் தன்னிறைவான நிலையை அடைய இங்கு வித்திட்டது திராவிடமும்-  அதன் அரசியலும் தான் ;

இக்கட்டான சூழ்நிலையில் மற்ற நாட்டை பற்றியோ , மாநிலத்தை பற்றியோ புகழ எனக்கு நேரமில்லை

ஒரு நாடு செய்வதை ஒரு மாநிலமாக தமிழ்நாடு சாதித்து காட்டியுள்ளது ; அது மண்ணிற்கான அரசியல் பேசியது !

முதலில்  தமிழ்நாடு மீண்டு வர வேண்டும்
வர துணை புரிவோம்
தமிழ்நாட்டு மருத்துவர்களின்
உழைப்பை பேசுவோம் !

கனிமொழிஎம்வி என்பவரது முகநூல்பதிவு
*🌐1 முதல் 8 வகுப்புகளில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கு தேர்ச்சி அளித்தல் சார்பான தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள்.*

Go Ms No:41 கொரோனா வைரஸ் காரணமாக பலருக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு (Ration card holders) தலா ஆயிரம் ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவிப்பு ...





*✳மக்கள்தொகை கணக்கெடுப்பு, என்பிஆர் பணிகள் ஒத்திவைப்பு - மத்திய அரசு அறிவிப்பு*

*☀கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.*

*☀2021 ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது. இது, 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும், முதற்கட்ட பணியின்போது தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்பிஆர்) கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கூறப்பட்டு இருந்தது. மேலும், முதற்கட்ட பணியில் வீடுகளை கணக்கெடுக்க வேண்டும் என்றும் கூறி இருந்தது.*

*☀அதேபோல், தேசிய மக்கள்தொகை பதிவேடு என்படும் என்பிஆர் கணக்கெடுக்கும் பணிகளும் ஏப்ரல் ஒன்றாம் தேதி தொடங்குவதாக இருந்தது. இதற்கிடையே, தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வந்தன.*

*☀இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான முதற்கட்ட பணிகள் தற்காலிகமாக ஒத்திவக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியின் போது அதிகாரிகள் அதிக அளவில் பயன்படுத்த வேண்டியிருக்கும் என்பதாலும், மக்கள் அதிக அளவில் கூட வேண்டியிருக்கும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அடுத்த 21 நாட்களுக்கு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வருவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ள நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.*