ஞாயிறு, 28 ஏப்ரல், 2019

90 நிமிடங்களா? 45 நிமிடங்களா? தொடக்க நிலை வகுப்பு நேரம் ஹெச்.எம். முடிவெடுக்கலாம்...

முட்டிபோட வைத்தல், கிள்ளுதல், அறைதல் நடைபெறக்கூடாது , மாணவர்களை உடல் ரீதியாகவோ, மனரீதியாகவோ துன்புறுத்த கூடாது ~ தொடக்க கல்வி இயக்குநர் உத்தரவு…

நாமக்கல் - புதுச்சத்திரம் ஒன்றியம் , களங்காணி சமுதாய நலக்கூடத்தில் 29.04.19 (திங்கள்) பிற்பகல் 03.00் மணியளவில் வாசிப்பு முகாம் ~ இம்முகாமில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்த மாநில,மாவட்ட,ஒன்றியப் பொறுப்பாளர்கள் பங்கேற்குமாறும், முகாமின் நோக்கத்தை நிறைவேற்றித் தந்து உதவிடுமாறும் அன்புடன் வேண்டுகிறேன்...

அன்பானவர்களே!வணக்கம்.

நாமக்கல் -  புதுச்சத்திரம் ஒன்றியம்,
களங்காணி 
சமுதாய நலக்கூடத்தில் 29.04.19(திங்கள்)
பிற்பகல் 03.00் மணியளவில்  வாசிப்பு முகாம்  தொடங்குகிறது.

கடந்தாண்டின் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில்) ஐசிடி(ICT)முகாம்கள்  நடைபெற்றதை அறிவீர்.

இவ்வாண்டின் ஏப்ரல் மாதத்தில்  மாணாக்கர்களின் பல்திறன்களை வெளிக்கொணரும் வகையிலான முகாம்கள்
தொடங்குகிறது. 

வகுப்பறை சனநாயகத்தன்மை கொண்டதாக,
மகிழ்வும்,இனிமையும் நிறைந்தாக,
சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தி தருவதாக அமைந்திடுவது சார்ந்தும் கலந்துரையாடல்கள் நடைபெறுகிறது.
 
இன்றைய அக,புறச்சூழல்களின் தேவையை யொட்டி முகாம் வடிவமைக்கப்பட வேண்டி உள்ளது.தொடர்ந்து 
நடைபெறவும் வேண்டியும் உள்ளது.

இம்முகாமின் உள்ளார்ந்த நோக்கம் நிறைவேறிடும்
வகையில் 
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டம் சார்ந்தமாநில,மாவட்ட,
ஒன்றியப் பொறுப்பாளர்கள் இம்முகாமில் பங்கேற்குமாறும்,
முகாமின் நோக்கத்தை நிறைவேற்றித் தந்து உதவிடுமாறும் அன்புடன் வேண்டுகிறேன.
                           நன்றி.
           ~முருகசெல்வராசன்.

இ.பிஎப் வட்டி 8.65% ~ மத்திய அரசு ஒப்புதல்…

நீட் ஹால் டிக்கெட்டில் திருத்தம் ~ பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு…