ஞாயிறு, 28 அக்டோபர், 2018

கியூஆர்.கோடு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி: விரைவில் அறிமுகம்

மொபைல் செயலி மூலம் கியூஆர்.கோடு ஸ்பேன் செய்து, ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த முறையில் பணம் எடுக்கும்போது, நமக்கு தேவையான வகையில், 2000, 500, 200, 100 என ரூபாய் நோட்டுக்களை எடுக்க முடியும்.

நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளை ஊக்கப்பபடுத்தி வரும் மத்திய அரசு, தற்போது வங்கியின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்து. அதன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

தற்போது கியூஆர் கோடு உபயோகப்படுத்தி மொபைல் ரீசார்ஜ் போன்ற ஒரு பரிவர்த்தனைகள் நடைபெற்று வரும் நிலையில், ரயில் டிக்கெட் பதிவு செய்யவும் கிஆர் கோடு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கியூ ஆர் கோடு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அரிசி அளவில் சிறிய கம்ப்யூட்டர் தயாரிப்பு

அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சிகன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் உலகிலேயே மிகச்சிறிய கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளனர். கடந்த 2014ல் முதல்முறையாக 2x2x4 மிமீ அளவிலான கம்ப்யூட்டரை கண்டுபிடித்திருந்தனர். அதற்கு ‘மைக்ரோ மோட்’ என்று பெயரிட்டிருந்தனர்.

இந்த மிகச்சிறிய கம்யூட்டர் முழுவதுமாக செயல்படக்கூடியதும், மின்சாரம் துண்டிக்கப்பட்ட பிறகும் தகவல்களைப் பெறக்கூடிய ஆற்றலும் கொண்டது. இந்நிலையில் ஐபிஎம் நிறுவனம் கடந்த மார்ச் மாதம் ஒரே ஒரு உப்புக் கல்லை விட, மிகச்சிறிய சிப்பை உருவாக்கியது. இது 1 மிமீ நீளம் x 1 மிமீ அகலம் கொண்டது.




இந்த கம்ப்யூட்டர் 1990களில் உருவாக்கப்பட்ட சிபியு போன்ற செயல்திறன் கொண்டது. இந்த சூழலில் மிச்சிகன் பல்கலைக்கழகம் தற்போது 0.3 மிமீ x 0.3 மிமீ அளவிலான, ஒரேவொரு அரிசியை விட மிகச்சிறிய கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளது.

டெஸ்க்டாப் அல்லது லேப்டாப்களில் மின் இணைப்பை துண்டித்து விட்டால், நாம் பயன்படுத்திக் கொண்டிருந்த செயல்பாடுகள் அனைத்தும் உள்ளடக்க மெமரியில் சேமித்து வைக்கப்படும். பின்னர் ஆன் செய்யும் போது, அனைத்து செயல்பாடுகளும் மீண்டும் செயல்படத் தொடங்கும்.

ஆனால் இத்தகைய மிகச்சிறிய அளவிலான கம்ப்யூட்டர்கள் செயல்பாட்டிற்கு வருவது சாத்தியம் இல்லை. எனினும் இந்த சிறிய கம்ப்யூட்டர்கள் வெப்பநிலையை அறிய உதவும் சென்சார்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை எலக்ட்ரானிக் பல்ஸை, குறிப்பிட்ட கால இடைவெளியில் வெப்பநிலையாக மாற்றுகின்றன.

நாளை முதல் சத்துணவு ஊழியர்கள் வேலைநிறுத்தம்

நாளை முதல் சத்துணவு மையங்கள் காலவரையின்றி மூடப்படும் எனத் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.

காலமுறை ஊதியம், ஓய்வூதியம் வழங்க வேண்டும், பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியமாக ரூ. 9 ஆயிரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட ஐந்து அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர்கள் நாளை மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளதாக சத்துணவு ஊழியர் சங்கத் தலைவர் சுந்தரம்மாள் தெரிவித்தார்.




"திங்கள்கிழமை(அக்டோபர் 29) முதல் சத்துணவு சமைக்க மாட்டோம். நாளை முதல் சத்துணவு கூடங்கள் காலவரையின்றி மூடப்படும். எங்களது கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும்" எனத் தெரிவித்தார் சுந்தரம்மாள். இதனால், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 50 லட்சம் மாணவர்களுக்கு சத்துணவு கிடைக்காமல் போகும் நிலை ஏற்படும் என தெரிவித்துள்ளது சத்துணவு ஊழியர் சங்கம்.

இணையவழி பட்டாமாறுதல் படிவம் அனுப்பியதற்கு ஒப்புகை சீட்டு வழங்கும் புதிய வசதி அறிமுகம்...

மாற்றுத்திறனாளிகள் வந்து செல்ல வசதியாக அரசு அலுவலகங்களில் சாய்வு தளம், லிப்ட், கழிப்பறை அமைக்க உத்தரவு...

போசன் அபியான் திட்டம் 13 துறைகளுடன் இணைந்து செயல்படுத்த முடிவு...

உணவு பாதுகாப்புத்துறை உரிமம் பெறுவது கட்டாயம்~ தீபாவளி இனிப்பு, காரம் விற்பவர்களுக்கு கட்டுப்பாடு…

ஜாக்டோ ஜியோ- இன்றைய உயர்மட்ட குழு கூட்ட முடிவுகள்- பத்திரிக்கை செய்தி வெளியீடு



ENGLISH READING PRACTICE FOR PRIMARY STUDENTS...

Samagra Shiksha - New School Visit Format ( Primary And Upper Primary )...

OP அடிக்கும் ஆசிரியர்கள் மீது கடுமையான நடவடிக்கை - CEO


அரசு பள்ளிகளில் மழலையர் வகுப்புகள் எப்போது? ~ அமைச்சர் விளக்கம்


பள்ளி செல்லாத சிறுமிக்கு 10 ம் வகுப்பு தேர்வு எழுத அனுமதி


பள்ளிக்கே செல்லாமல், வீட்டிலேயே படித்த 12 வயது சிறுமி 10-ம் வகுப்புத் தேர்வு எழுத மேற்கு வங்க பள்ளிக் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.
2019-ம் ஆண்டு நடைபெறும் மத்தியாமிக் தேர்வில் 12-வயது சிறுமி பங்கேற்று பொதுத்தேர்வு எழுதலாம்என்று தெரிவித்துள்ளது.
ஹவுரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முகமது அனினுல். இவரின் 12வயது மகள் சைபா கத்தூன். இந்த சிறுமிசிறுவயது முதல் பள்ளிக்குச் செல்லாமல் வீட்டில் இருந்தே படித்து வந்துள்ளார். இந்நிலையில், 10-ம்வகுப்புதேர்வு எழுத வேண்டும் என்றுவிரும்பியதால், அவர் தகுதித் தேர்வு எழுதியுள்ளார்.

 அதில் தேர்வானதையடுத்து, அடுத்த ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்வில் பங்கேற்க உள்ளார்.
இது குறித்து மேற்கு வங்க பள்ளிக்கல்வித்துறை வாரியத்தின் தலைவர் கல்யாண்மோய் கங்குலிகூறுகையில், சைபா கத்தூன் என்ற 12 வயது சிறுமி இதுவரை பள்ளிக்கே செல்லாமல் வீட்டில் இருந்தபடியேபடித்துள்ளார். அவர் 10-ம் வகுப்புத் தேர்வு எழுத வேண்டும் என்று அவரின் தந்தை முகமது அனினுல்விண்ணப்பம் அளித்திருந்தார். பள்ளியில் படிக்காமல் தனித்தேர்வு எழுதுபவர்களுக்கான தகுதித் தேர்வுஆகஸ்ட் மாதம் நடந்தது.

அதில் சைபா கத்தூன் 52 சதவீத மதிப்பெண்கள் எடுத்து தேர்ச்சி பெற்றுள்ளார். இதையடுத்து, 12 வயதுகத்தூன் 10-ம் வகுப்புத் தேர்வு எழுத உள்ளார். மேற்கு வங்கத்தில் கடந்த 20 ஆண்டுகள் வரலாற்றில் 12 வயதுசிறுமி ஒருவர் 10-ம் வகுப்புத் தேர்வு எழுதியதில்லை. 10-ம் வகுப்புத் தேர்வு எழுத 14வயது நிறைவடைந்திருக்கவேண்டும். 

ஆனால், கத்தூன் சிறப்பாகப் படித்து தேர்ச்சி பெற்றுள்ளதால், அவருக்கு இந்தவாய்ப்புவழங்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
சைபா கத்தூன் கடந்த ஆகஸ்ட் மாதம் தகுதித் தேர்வு எழுதினார், இதற்கான தேர்வு முடிவுகள் கடந்த 11-ம்தேதி வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி -- கல்வி அமைச்சர்

தமிழகத்தில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டர் பயிற்சி வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபிச்செட்டிபாளையத்தில் உள்ள ஓடைதூர்வாரப்பட உள்ளதன் தொடக்க நிகழ்ச்சியில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார்.

அப்போது பேசிய அவர், "இந்தியாவில் 2.85 லட்சம் ஆடிட்டர்கள் தான் உள்ளனர். தமிழகத்தில் சிறந்த ஆடிட்டர்களை உருவாக்க பண்ணிரண்டாம் வகுப்பு முடித்தவுடன் மாணவர்களுக்கு ஆடிட்டர் படிப்பிற்கு தமிழகத்தில் முதற்கட்டமாக 25 ஆயிரம் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.பின்னர், அவர்களுக்கு சிறந்த ஆடிட்டர்களைக் கொண்டு முதன்மைத் தேர்வு எழுத பயிற்சியளிக்கப்படும்.

தமிழகத்தில் 52 ஆயிரம் குழந்தைகளுக்கு எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் அரசு பள்ளிகளில் துவக்கப்பட உள்ளன.
இதற்கு தாய்மொழிதான் முன்னுரிமை அளிக்கப்படும். பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை ஆங்கில் வழியில் படிக்க வைக்க வேண்டும் என விரும்பினால் ஆங்கில வழி கல்வியும் கற்றுத் தரப்படும். அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் வழியில் செயல்படும் இந்த அரசு இருமொழி கொள்கையைப் பின்பற்றும்.

பள்ளிகளில் மாணவிகள் பாலியில் தொந்தரவுக்கு ஆளானால், சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

ருசியாக சமைத்த ஓட்டல் சமையலருக்கு அடித்த ஜாக்பாட்


மாணவர்கள் செல்போன் பயன்பாடு - பில்கேட்ஸ் சொல்லும் சீக்ரெட்


ESIC _ வேலைவாய்ப்பு


வேலைவாய்ப்பு: இஎஸ்ஐசியில் பணி!

டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தில் (இஎஸ்ஐசி) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: இன்சூரன்ஸ் மெடிக்கல் ஆபீசர்

காலியிடங்கள்: 771

கல்வித்தகுதி: மருத்துவத் துறையில் எம்பிபிஎஸ் பட்டம் மற்றும் பயிற்சி முடித்து, இந்திய மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.53,100 - 1,67,800
வயது: 30

தேர்வு முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு
தேர்வுக் கட்டணம்: பொதுப் பிரிவினருக்கு ரூ.500, மற்ற பிரிவினருக்கு ரூ.250
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
கட்டணம் செலுத்துவதற்கான கடைசித் தேதி: 13/11/2018
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10/11/2018
மேலும் விவரங்களுக்கு https://www.esic.nic.in என்ற லிங்க்கை க்ளிக் செய்து தெரிந்து கொள்வோம்.



வங்கிகளை சுயமாக செயல்பட விடுங்க - ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்


மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள்


BHEL Trichy - வேலை வாய்ப்புகள்


மேலும் தகவலுக்கு உள்ளே.....

முன் அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றமைக்கு சிறப்பு நிகழ்வாக பின்னேற்பு வழங்குதல் சார்ந்து...

ஆசிரியர்களுக்கு பணி பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரி ஜாக்டோ ஜியோ ஆர்பாட்டம்