ஞாயிறு, 28 அக்டோபர், 2018

கியூஆர்.கோடு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி: விரைவில் அறிமுகம்

மொபைல் செயலி மூலம் கியூஆர்.கோடு ஸ்பேன் செய்து, ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி இந்தியாவில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த முறையில் பணம் எடுக்கும்போது, நமக்கு தேவையான வகையில், 2000, 500, 200, 100 என ரூபாய் நோட்டுக்களை எடுக்க முடியும்.

நாடு முழுவதும் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பின்னர் டிஜிட்டல் முறையிலான பண பரிவர்த்தனைகளை ஊக்கப்பபடுத்தி வரும் மத்திய அரசு, தற்போது வங்கியின் மொபைல் அப்ளிகேஷன் மூலம் ஏடிஎம் இயந்திரத்தில் உள்ள கியூஆர் கோடை ஸ்கேன் செய்து. அதன் மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதியை அறிமுகப்படுத்த உள்ளது.

தற்போது கியூஆர் கோடு உபயோகப்படுத்தி மொபைல் ரீசார்ஜ் போன்ற ஒரு பரிவர்த்தனைகள் நடைபெற்று வரும் நிலையில், ரயில் டிக்கெட் பதிவு செய்யவும் கிஆர் கோடு சிஸ்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், கியூ ஆர் கோடு மூலம் ஏடிஎம்மில் பணம் எடுக்கும் வசதி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.