திங்கள், 15 அக்டோபர், 2018

GO 214 - Date: 15.10.2018 Smart Cards to All Govt and Aided School Students

G.O Ms.No. 337 Dt: October 12, 2018 -Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest for the financial year 2018-2019 – With effect from 1.10.2018 to 31.12.2018 is 8% - Orders – Issued.



அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் கட்டாயம் 10 பாடவேளை எடுக்க வேண்டும் ~ இணை இயக்குநர் விளக்கம்…

ஆர்.டி.ஓ அலுவலகங்களில் அனைத்து பணிகளும் ஆன்லைன் முறைக்கு மாற்றம்~கலெக்டர் தகவல்...

தமிழரின் புதிய கண்டுபிடிப்பு -- அமெரிக்கா வியப்பு


அணு உலைகளுக்கு குட்பாய்.! உலகத்திற்குகே மின்சாரம் வழங்கும் நம்ம ஊர் தமிழனின் கண்டுபிடிப்பு.!
உலகத்திற்குகே மின்சாரம் வழங்கும் நம்ம ஊர் தமிழனின் கண்டுபிடிப்பு.! அணு உலைகளுக்கு குட்பாய்.!

இன்று உலக அரங்கில் ஒவ்வொரு மனிதனுக்கும் மின்சாரம் தான் அத்தியாவசியமாக பார்க்கப்படுகின்றது. மின்சாரம் இல்லாமல் எந்த அணுவும் இயங்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. அந்த அளவுக்கு மின்சாரம் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் தேவைப்படும் பொருளாக மாறியுள்ளதால், அதை நம்ம ஊரை சேர்ந்த தமிழன் கண்டுபிடித்துள்ளார்.
இந்த தமிழனின் மின்சாரத்தை இன்று உலககே பயன்படும் நிலைக்கு வந்துள்ளது. இதற்காக பல்வேறு தரப்பினரும் நம்ம ஊர் தமிழனை பாராட்டி வருகின்றனர். இவரின் கண்டுபிடிப்பை கண்டு அமெரிக்கா மட்டும் அல்லாமல் உலகில் உள்ள விஞ்ஞானிகளும் இன்று வாய்மேல் கையை வைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.ஒரு பரபரப்பான நிலை: .


நம்ம ஊர் தமிழன் கண்டுபிடித்த மின்சாரம் குறித்து அமெரிக்காவில் பிரத்யேகமாக விஞ்ஞானிகள், பொது மக்கள் பத்திரிக்கையாளர்கள் உள்ளிட்டடோர் அதை காண ஆவலுடன் கூட்டம் கூடியிருந்தனர்.ஒரு மனிதர் மேடையில் தோன்றினார்:

பொது மக்கள் கூடியிருந்த அந்த அவைக்கு முன் மேடையில் ஒரு மனிதன் தோன்றினார். இந்த உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் மின்சாரம் தயாரிப்பது எப்படி என்று பார்க்காலம் என்றார். இந்த பிளாக் பாகிஸ் இருந்து தான் என்றார். அனைவரும் சத்தமாக மேடையில் கைதட்டி ஆரவாரம் செய்தனர்.
பிறகு அந்த பெட்டியின் மீது இருந்த கருப்பு துணியை எடுத்தார். அப்போது கண்ணாடி பேழையில் மண்ணல் நிரப்பட்டிருந்தது. அரங்கமே அதிர்ந்து போனது. இதில் இருந்து எப்படி மின்சாரம் தயாரிப்பது என்று அனைவரும் ஒருவரை ஒவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
மீண்டும் கைதட்டல்கள்:

பிறகு மேடையில் அந்த நபர் கண்ணாடி பேழையில் இருந்த மணலில் இருந்து, ஒரு சிறிய தட்டை போல் எடுத்து காட்டி. இதன் மூலம் தான் நமக்கு தேவையான ஒவ்வொரு மின்சாரத்தையும் தயாரிக்க போகின்றோம் என்று கூறினார். அரங்கே பரப்பாக கையை தட்டியது. பிறகு எவ்வாறு மின்சாரம் தயாரிக்க முடியும் என்று கூறித்து விவரித்தார் அந்த மனிதர். இதனால் அரங்கமே அதிர்ந்தது.
100 வீடுகளுக்கு மின்சாரம்:
அந்த நபர் கூறியதாவது: இந்த சிறிய தகடு போல் உள்ள இதை உங்கள் வீட்டு தெருவில் வைத்தால், 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்கு மின்சாரம் வழங்கமுடியும். இதற்கு சூரிய மின்சத்தி அல்லது இயற்கை எரிவாயு கட்டாயம் இருக்க வேண்டும். இதன் மூலம் 200 கிலோ வாட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்றார் அந்த மனிதன் நம்ம ஊர் தமிழன் அவர் தான் கே.ஆர் ஸ்ரீதர்.
 
கேஆர் ஸ்ரீதர் திருச்சியை சேர்ந்தவர்:
இந்த உலகம் போற்றும் அறிய கண்டுபிடிப்புக்கு சொந்தகாரர் திருச்சியை சேர்ந்த கேஆர் ஸ்ரீதர். ப்ளூம்பாக்ஸ் என்னும் இந்த பெட்டியை கண்டுபிடித்து உலகிற்கே மின்சாரம் வழங்கின்றார்.
அரிசோனா பல்கலையில் இயக்குனர்:
நாசா அமைப்பு கேஆர் ஸ்ரீதாரதை அறிவை கண்டு வியந்து, அரிசோனா பல்கலைக்கழகத்தின் விண்வெளி தொழில் நுட்ப ஆய்வகத்தின் இயக்குனராக ஆக்கியது. பல்வேறு ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகின்றார்.
செவ்வாய் கிரகத்தில் ஆய்வு:
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ முடியுமா என்று நாசா சார்பில் ஆய்விலும் ஈடுபட்டு வந்தார். மனிதன் வாழ ஆக்ஸிஜன் தயாரிக்க முடியுமா என்றும் ஆய்வை மேற்கொண்டார். அதிலும் வெற்றி கண்டார். அப்போது, இந்த ஆய்வை அமெரிக்கா திடீரென நிறுத்தியது.
8 ண்டுகள் உழைப்பு:
மனம் தளராமல் ஆய்வுகளை பின்நோக்கி செய்த கே.ஆர் ஸ்ரீதர், ஒரு பாக்ஸினுள் இயற்கை எரிவாயு, சூரிய ஒளியை செலுத்தி ஆய்வு செய்த போது மின்சாரம் தயாரானது. இதன் மூலம் ப்ளூம்பாக்ஸை கண்டுபிடித்தார். இவர் கண்டுபிடித்த ப்ளூம் பாக்ஸால் அணு உலைகள் மூடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.
கூகுள் முதல் கோகோலா நிறுவனம் வரை மின்சாரம் பெறுகிறது:
இவர் கண்டுபிடித்த ப்ளூம் பாக்ஸை கொண்டு அமெரிக்காவில் 20 தொழில் நிறுவனங்கள் மின்சாரம் பெறுகின்றன. 

இதை முதன் முதலில் ஆடர் செய்து பயன்படுத்த வருவது கூகுள் நிறுவனம் தான். அது 400 கிலோ வாட்ஸ் மின்சாரத்தை கூகுள் உற்பத்தி செய்கின்றது. அது ஒரு பிரிவுக்கே சரியாக போகின்றது. வோர்மார்ட் நிறுவனமும் 400 கிலோ வாட்ஸ் மின்சாரம் தயாரிக்கின்றது. பெடக்ஸ், ஈபே, கோகோல நிறுவனம், சான்பிரான்சிஸ்கோ ஏர்போர்ட்டும் ப்ளூம்பாக்ஸை கொண்டு மின்சாரம் பெறுகிறது.
இந்தியாவில் 6 விடுகளுக்கு மின்சாரம்:
ஒரு ப்ளூம்பாக்ஸாசால் இந்தியாவில் 4 முதல் 6 வீடுகளுக்கு மின்சாரம் கிடைத்து விடுத்தும். இந்தியா மின் உற்பத்தியிலும் தன்னிறைவு பெற்று நாடக விளங்கும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
திருச்சியில் படித்தவர்:
கேஆர் ஸ்ரீதர் திருச்சி நேஷனல் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் படித்தார். பிறகு இலியான பல்கலைக்கழகத்தில் நியூக்கிளியரிங் படித்தார். அங்கேயே டாக்டர் பட்டம் பெற்றார். அசோ பல்கலைக்கழகத்தின் போராசிரியர் மற்றும் நாசாவின் பேஸ்எனர்ஜி லேபாரட்டியில் இயக்குனராகவும் இருக்கின்றார்.

பதிவுத்துறை - குடிமக்கள் சாசனம் 2018-2019

நாடு முழுவதும் அடுத்தாண்டு ஜுலை முதல் ஒரே மாதிரி ஸ்மார்ட் டிரைவிங் லைசென்ஸ்...

RAIL PARTNER' APPS அறிமுகம் ~~ தெற்கு ரயில்வே

ரயில்களின் நேரம், அதிகாரிகள், ஸ்டேஷன ்எண்கள் உள்ளிட்டவற்றை அறிய, தனியார் நிறுவனங்கள் மொபைல் போன் செயலிகளை அறிமுகம் செய்கின்றன. ஆனால், ரயில்வே சார்பில், அவ்வப்போது புதுப்பிக்கப்படும் தகவல்கள், இச்செயலியில் இடம்பெறாததால், பயணியர் குழப்பமடைகின்றனர்.



அதனால், பயணியர் வசதிக்காக, அனைத்து தகவல்களையும் உள்ளடக்கிய, 'ரயில் பார்ட்னர்' எனும் மொபைல் போன் செயலியை, தெற்கு ரயில்வே, முதல் முறையாக அறிமுகம் செய்துள்ளது. இதில், டிக்கெட் முன்பதிவு விபரம், சிறப்பு ரயில்கள், உதவி அழைப்பு எண்கள், சலுகைகள் உள்ளிட்ட அனைத்தும், இடம் பெற்றுள்ளதால், பயணியரிடம் வரவேற்பு அதிகரித்துள்ளது.

அரசு ஓய்வூதியர்களிடம் இனி தனி வங்கி கணக்கு கேட்கக்கூடாது~ கருவூலங்களுக்கு முதன்மை செயலாளர் அறிவுறுத்தல்...

சிறந்த பள்ளி விருது 2018 -தேர்ந்தெடுப்பதற்கான விதிமுறைகள் மற்றும் மதிப்பீட்டு படிவம் வெளியீடு...

CBSE அங்கீகார அதிகாரம் : பள்ளி கல்வி துறைக்கு மாறுகிறது

சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் நடைமுறையில், மாநில அரசுக்கு, கூடுதல் அதிகாரம் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு, சி.பி.எஸ்.இ., கடிதம் அனுப்பியுள்ளது.செயல்வழி கற்றல் மற்றும் மாணவர்களின் நுண்ணறிவு திறனை சோதிக்கும் பாடங்கள் உள்ளதால், பெரும்பாலான தனியார் பள்ளிகள், சி.பி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன.




ஆவணங்கள்நாடு முழுவதும், 20 ஆயிரம் பள்ளிகளும், தமிழகத்தில், 700க்கும் மேற்பட்ட பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில் செயல்படுகின்றன. சி.பி.எஸ்.இ., இணைப்பு பெற விரும்பும் பள்ளிகள், மாநில அரசின் சட்டம் மற்றும் கொள்கைகளுக்கு ஏற்ப, முதலில், மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் தடையில்லா சான்று பெற வேண்டும். பின், அங்கீகார சான்றுகள், அரசு துறையின் பல்வேறு சான்றிதழ்கள் மற்றும் கல்வி நிறுவன விபரங்களை, சி.பி.எஸ்.இ.,க்கு, பள்ளிகள் தாக்கல் செய்ய வேண்டும்.அவற்றை சரிபார்த்து, சி.பி.எஸ்.இ., ஒப்புதல் அளிக்க, இரண்டு, மூன்று ஆண்டுகள் வரையாகும். 


இதனால், பல பள்ளிகள், மாநில அரசுக்கு தெரியாமல், சி.பி.எஸ்.இ.,க்கு சென்று, தவறான ஆவணங்களை சமர்பித்தும், செல்வாக்கை பயன்படுத்தியும், பாட திட்ட இணைப்பு பெற்றுள்ளன.இது குறித்து, சி.பி.எஸ்.இ., ஆய்வு நடத்தி, இந்த ஆண்டு மட்டும், நாடு முழுவதும், 99 பள்ளிகளின் இணைப்பு அந்தஸ்தை ரத்து செய்து உள்ளது. எனவே, முறைகேடுகள் மற்றும் கால தாமதத்தை தவிர்க்க, மாநில அரசுகளுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.

இதன்படி, வரும் காலங்களில், மாநில அரசின் தடையில்லா சான்று கேட்கும் பள்ளிகள், மாநில அரசின் அங்கீகாரம் மற்றும் சான்றிதழ்களை, மாநில பள்ளி கல்வி துறையிடம் தாக்கல் செய்ய வேண்டும். ஒப்புதல்பாடத்திட்ட இணைப்புக்கான விண்ணப்பத்தையும், பள்ளி கல்வி அதிகாரிகளிடமே வழங்க வேண்டும். அவற்றை, பள்ளி கல்வித்துறை அதிகாரிகள், அசல் ஆவணங்களுடன் சரிபார்த்து, ஒப்புதல் வழங்குவர்.ஒப்புதல் ஆணை கிடைத்த பின், சி.பி.எஸ்.இ., சார்பில், இணைப்பு கடிதம் மட்டும் வழங்கப்படும். இந்த முறையை அமல்படுத்துவது குறித்து, மாநில அரசுகளுக்கு, சி.பி.எஸ்.இ., - கடிதம் அனுப்பியுள்ளது. அனைத்து மாநிலங்களின் கருத்துக்களும் கிடைத்த பின், இந்த திட்டம் நடைமுறைக்கு வரும் என, தெரிகிறது.