திங்கள், 15 ஆகஸ்ட், 2022

ஆகஸ்ட்-15-வரலாற்றில் இன்று,-தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் இயக்க நிறுவனர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்களின் பிறந்தநாள்.

*ஆகஸ்ட்-15*

*வரலாற்றில் இன்று,*

*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் இயக்க நிறுவனர் பாவலர் க.மீனாட்சி சுந்தரம் அவர்களின் பிறந்தநாள்.*


நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறை சேர்ந்த பாவலர் க.மீனாட்சிசுந்தரம் 1931 ஆகஸ்ட் 15-ல் பிறந்தவர். பள்ளி ஆசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.. 1973-ல் தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றத்தை  நிறுவிய இவர், டாக்டர் கலைஞர் அவர்களால் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் எனப் பெயரிடப்பட்டதோடு  இவ்வமைப்பை துவக்கி வைத்த பெருமைக்குரியவர் டாக்டர் கலைஞர்.இயக்க நிறுவனரான க.மீ அவர்கள் இதன் பொதுச் செயலாளராக தொடர்ந்து தேர்வு செய்யப்பட்டார். இயக்கத்தின் சார்பில் வெளியாகும் ஆசிரியர் துணைவன் பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர்.

 1978 மற்றும் 1984-ல் தமிழக முன்னாள் சட்டமேலவையில் திமுக சார்பில் உறுப்பினராக இருந்து செயல்பட்டவர். இந்திய ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவராக பலஆண்டுகள் பணியாற்றியவர். ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில  ஒருங்கிணைப்பாளராக இருந்து செயல்பட்டு வந்தார்.

வானம்பாடி நான், வாழ்த்தி மகிழ்கிறேன் உள்ளிட்ட நூல்களையும் எழுதியுள்னார். தமிழக முன்னாள்  முதல்வர்மு.கருணாநிதியுடன் நெருங்கி பழகியவர்,டாக்டர் கலைஞர் அவர்களின் அன்புத்தம்பியாக விளங்கியவர். க.மீ என  அழைக்கப்பட்ட இவர், இலக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசி வந்தார். இவருக்கு பல்வேறு அமைப்புகள் சார்பில் வழங்கப்பட்ட மன்றக் கலைஞர், பெரியாரியலாளர், ஒளவை விருது போன்ற விருதுகள் வழங்கப் பெற்றவர்.


1985-ல் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளில் நடைபெற்ற உலக ஆசிரியர் கருத்தரங்க மாநாடுகளில் பங்கேற்று பேசியுள்ளார். ஆசிரியர்கள் - கல்வி நலன் சார்ந்த பல போராட்டங்களை நடத்தி சிறை சென்றவர்.ஆசிரியர்களின் பற்பல கோரிக்கைகள் வென்றெடுக்க காரணமாக இருந்தவர்.முன்னாள் முதல்வர் டாக்டர்.கலைஞர் அவர்களிடம் மடட்டுமல்லாது அவரது காலத்தில் முதவராக இருந்த அனைத்து தலைவர்களிடமும்  பற்பல கோரிக்கைகள் சீராடி,வாதாடி,போராடிப் பெற்றவர்.ஆட்சியாளர்களிடம் சீராடி,வாதாடி,போராடி இதனையே தாரக மந்திரமாய் கொண்டு பற்பல செயற்கரிய செயல்களைச் செய்தவர்.

இறுதிக்காலம் வரை ஆசிரியர்கள் நலனுக்காக உழைத்த பாவலர் க.மீ அவர்கள் 14.05.2020 அன்று  காலமானார்.இறப்புக்குப் பின்னரும் தனது உடலை மருத்துவக் கல்லூரிக்கு  தானமாக அளித்து பல மருத்துவ மாணவர்களுக்கு பயன்படட்டும் என்ற அவரின் பெருவிருப்பத்தினை நிறைவேற்றும் வகையில் திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அவரது உடல் தானமாக வழங்கப்பட்டது.