ஞாயிறு, 7 ஜூன், 2020

சூரிய மண்டலத்திற்குள் நுழையும் 900 அடி பனிப்பாறை...

வரும் கல்வியாண்டில் மேற்கொள்ள இருக்கும் புதிய கல்விக்கொள்கை தொடர்பாக பெற்றோரிடம் கருத்து கேட்க முடிவு...

*🌐ஜூன் 7, வரலாற்றில் இன்று:1975ஆம் ஆண்டு உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது உலகக் கோப்பை போட்டிகள் லண்டன் ஓவல் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான தினம் இன்று.*

ஜூன் 7, வரலாற்றில் இன்று.

1975ஆம் ஆண்டு உலகக் கிரிக்கெட் வரலாற்றில் முதலாவது உலகக் கோப்பை போட்டிகள் லண்டன் ஓவல் விளையாட்டு மைதானத்தில் ஆரம்பமான தினம் இன்று.

 முதலாவது போட்டியில் இந்திய இங்கிலாந்து அணிகள் மோதின. 60 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 60 ஓவர்களில் 4 விக்கட் இழப்பிற்கு 334 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 60 ஓவர்களில் 6 விக்கட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மட்டுமே பெற்றது. இப்போட்டியில் இங்கிலாந்து அணி 202 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

*🌐ஜூன் 7, வரலாற்றில் இன்று:பிலிப் எட்வர்டு ஆன்டன் வான் லெனார்டு பிறந்த தினம் இன்று.*

ஜூன் 7, வரலாற்றில் இன்று.

பிலிப் எட்வர்டு ஆன்டன் வான் லெனார்டு பிறந்த தினம் இன்று.

ஜெர்மனியைச் சேர்ந்த பிலிப் எட்வர்டு, கேத்தோடு கதிரின் ஒன்றுக்கும் மேற்பட்ட பண்புகளைக் கண்டறிந்து ஆய்வில் ஈடுபட்டார். இக்கதிர்களின் எலக்ட்ரான் ஒளிக்கற்றையைக் கொண்டு திரையில் படங்களை உருவாக்க முடிந்தது. இவரது ஆய்விற்காக 1905ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் விருது வழங்கப்பட்டது.

*🌐ஜூன் 7,வரலாற்றில் இன்று:தென்னாப்பிரிக்காவில் முதல் வகுப்பு ரயில் பெட்டியில் பயணம் செய்த மகாத்மா காந்தி நிறவெறி காரணமாக முதல்வகுப்பு பெட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட நாள்.அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி உருவாக்க காரணமான தினம் இன்று.*

ஜூன் 7,
வரலாற்றில் இன்று.


ஜூன்  7, 1893  அன்று இருளில் கடகடவென்று அந்த ரயில் ஓடிக்கொண்டு இருந்தது. அந்த ரயிலின் முதல் வகுப்பு பெட்டியில் நன்கு சட்டம் படித்த  மாநிறமான ஒருவர் பயனித்து வந்தார். அங்கு வந்த வெள்ளையன் ஒருவன் முதல் வகுப்பில் வெள்ளையர் மட்டுமே பயணிக்க வேண்டும் ஆதலால் முன்றாம் வகுப்பு பெட்டிக்கு செல்லுமாறு அந்த மாநிறத்தவரை கேட்டுக்கொண்டார். உரிய பயணச்சீட்டைப் பெற்றுள்ளதால் தனக்கு முதல் வகுப்பில் பயணம் செய்யும் உரிமை தனக்கு உண்டு என்று கூறி வெளியேற மறுத்த அவரை, அடுத்த நிறுத்தத்தில்  அவரது பெட்டிகளைத் தூக்கி எறிந்து வெளியே தள்ளினான் அந்த வெள்ளையன்.

அவமானப் படுத்தப்பட்ட அந்த மனிதர் சோகமாக ஆற்றாமை கலந்த ஒரு வித வெறுப்புடன் அந்த நள்ளிரவுக் குளிரில் யோசித்து கொண்டு இருந்தார். அவருக்கு இரு வழிகள் இருந்திருக்கும். ஒன்று இனி அந்த ஊர்ச் சட்டத்திற்கு (ஒடுக்குமுறைக்கு) ஏற்ப மூன்றாம் வகுப்பில் பயணிப்பது, மற்றொன்று வசதியான படித்த தன்னை அதில் இருந்து விடுத்து கொள்ள முயற்சிப்பது. ஆனால் அந்த மனிதரோ தன்னைப் போன்றும் அதற்கும் கீழ் இருக்கும் ஒட்டுமொத்த சமூகத்தையும்  இந்த மனித நேயமற்ற நிறவாதத்தில்  இருந்து மீட்க போராடினார். இது நடந்தது நிறவெறிக்கு பேர் போன தென் ஆப்ரிக்காவில். அந்த மனிதரின் பெயர் மோகன்தாஸ் கரம்சந்த் காந்தி.

ஆம். அரசுக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை  காந்தி உருவாக்க காரணமான தினம் இன்று.

*🌐ஜூன் 7,வரலாற்றில் இன்று:ஜேம்ஸ் யங் சிம்சன் பிறந்த தினம்.*

ஜூன் 7, வரலாற்றில் இன்று.

ஜேம்ஸ் யங் சிம்சன் பிறந்த தினம் இன்று.

ஸ்காட்லாந்து நாட்டு  மகப்பேறு மருத்துவரான ஸேர் ஜேம்ஸ் யங் சிம்சன்
( Sir James Young Simpson) 1847ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் 04ஆம் திகதி  Chloroformஐ
அறுவைச் சிகிச்சைகளின் போது வலி உணரா நிலையை ஏற்படுத்தத் பயன்படுத்தலாம் என்பதைக் கண்டறிந்தார்.

1811ஆம் ஆண்டு ஜூன் மாதம் 07ஆம் நாள்
Edinburghல் பிறந்த அவர் எடின்பரோ பல்கலைக் கழகத்தில்  M.D.பட்டம் பெற்று அங்கு மகப்பேறு மருத்துவப் பேராசிரியர் ஆனார்! பாஸ்டனில் அறுவை மருத்துவத்துக்கு ஈத்தரைப் பயன்படுத்தும்
செய்தி ஸ்காட்லாந்துக்கு எட்டியவுடன்,
சிம்சன் முதன்முதலில் ஈத்தரைப் பயன்படுத்திப் பிரசவ வலியைக் குறைத்தார்! பிறகு குளோரோஃபார்மை,
மகப்பேறு மருத்துவர்களும், மதகுருமார்களும் எதிர்த்த போதிலும், பயன்படுத்தினார்!

Chloroform தெளிந்த, நிறமற்ற,கனமான,
தீப்பற்றாத, நீர்ம நிலையில் உள்ள ஈத்தர் போன்று மணமுடைய கரிம ரசாயனச் சேர்மம்! இது அறுவைச் சிகிச்சையின் போது,
வலி உணரா நிலையை ஏற்படுத்த வெற்றிகரமாக உபயோகிக்கப்பட்ட முதல் பொருளாகும்! இதில் ஓரளவு நச்சுத்தன்மை
இருப்பதால், வலியை உணரா நிலையை ஏற்படுத்தும் பிற பொருள்கள் நடைமுறைக்கு
வந்தபின் இதன் பயன்பாடு பெருமளவு குறைந்தது!

ஸேர் ஜேம்ஸ் யங் சிம்சன் குளோரோஃபார்மை பயன்படுத்துவது பற்றிக் கண்டறிந்ததோடு, இரும்புக் கம்பித் தையல்கள், ரத்த ஒழுக்கைத் தடுக்க அழுத்தத்தைப் பயன்படுத்தும் முறை, சிம்சன்
இடுக்கி (நீண்ட மகப்பேற்று இடுக்கி) ஆகியவற்றையும் அறிமுகம் செய்திருக்கிறார்!

1870ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 4ஆம் நாள் சிம்சன் காலமானார்!

G.O (Ms).No: 62 Date: 1.6.2020 Fundamental Rules- Rule 56 - Enhancement of the age of retirement on Superannuation Period from 58years to 59 years_ amendment- issued