திங்கள், 21 மே, 2018

அரசு ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளியில் சேர்த்தால் மகிழ்ச்சி~அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி…

பிடித்தம் செய்த TDS தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம்...

பிடித்தம் செய்த TDS தொகையை இந்த மாத இறுதிக்குள் செலுத்தாத நிறுவனங்களுக்கு தினமும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும் என வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.  

வரி வருவாயை அதிகரிப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அனைத்திலும் கவனம் செலுத்தி வருகிறது. அதோடு, வருமான வரித்துறைக்கு ஆண்டுதோறும் வரி வசூல் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது.

வருமான வரி சட்ட விதிகளின்படி நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களிடம் இருந்து  பிடித்தம் செய்யும் டிடிஎஸ் தொகையை ஒவ்வொரு காலாண்டுக்கும் வருமான  வரித்துறையிடம் சமர்ப்பிக்க வேண்டும். 

டிடிஎஸ் பிடித்தம் செய்வோர் நிலுவை வைப்பதை தவிர்க்கவும் உடனடியாக செலுத்த செய்யவும் அபராதம் விதிப்பதாக வருமான வரித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 
இதுதொடர்பாக விளம்பரங்களையும் வெளியிட்டுள்ளது. 

இதில் வரி பிடித்தம் செய்வோர் கவனத்துக்கு: 
கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலாண்டுக்கு பிடித்தம் செய்த டிடிஎஸ் தொகையை செலுத்த இந்த மாதம் 31ம் தேதி கடைசி. 

பிடித்தம் செய்த வரியை செலுத்த தவறினால் அல்லது தாமதித்தால், தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் ₹200 வீதம் அபராதம் விதிக்கப்படும்.  எனவே, டிடிஎஸ் பிடித்தம் செய்யும் நிறுவனங்கள் தொழிலாளர்களிடம் சம்பந்தப்பட்ட தொகையை பிடித்தம் செய்து வைத்திருந்தால் உடனடியாக வருமான வரித்துறையில் செலுத்த வேண்டும். 

பிடித்தம் செய்யாதவர்கள் உடனடியாக பிடித்தம் செய்து இந்த மாதத்துக்கு செலுத்த வேண்டும். இவர்கள் https://www.tdscpc.gov.in. இணையதளத்தில் தங்களது டான் எண் மற்றும் பிடித்தம் செய்தவர்களின் பான் எண் பதிவு செய்ய வேண்டும். பான் எண் அல்லது டான் எண் குறிப்பிடாமல் டிடிஎஸ் பட்டியல் சமர்ப்பித்தாலும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. 

முக்கிய குறிப்பு: 

இந்த பணத்தை அந்தந்த டிடிஓ- க்கள் சம்பளம் வழியாக மட்டுமே பிடித்தம் செய்தல் வேண்டும்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு இன்று மதிப்பெண் பட்டியல்...


பிளஸ் 2 தேர்வு எழுதியவர்களுக்கு இன்று தற்காலிக மதிப்பெண் வழங்கப்படுகிறது.

 பிளஸ் 2 தேர்வு மார்ச் மாதம் நடந்தது. மே 16ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியானது. 
இதையடுத்து, மே 21ம் தேதி தற்காலிக மதிப்பெண் சான்று வழங்கப்படும் என்று தேர்வுத்துறை அறிவித்தது. இதன்படி, மாணவ மாணவியர் தாங்கள் படித்த மற்றும் தேர்வு எழுதிய பள்ளிகள், தேர்வு மையங்களில் இன்று மதியம் சென்று தற்காலிக மதிப்பெண் சான்றுகளை பெற்றுக் கொள்ளலாம்.

அதேபோல www.dge.tn.nic.in என்ற இணைய தளத்தில் தங்கள் பிறந்த தேதி, பதிவெண்  ஆகியவற்றை பதிவு செய்து தாங்களே தங்களின் தற்காலிக மதிப்பெண்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 

அரசு சேவைகளை பொதுமக்கள் பெறுவதற்கு லஞ்சம்~ தமிழ்நாடு முதலிடம்,2-வது தெலங்கானா~ ஆய்வில் அதிர்ச்சி தகவல்கள்…

அரசு நலத் திட்டங்களுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க 87% பேர் ஒப்புதல்...

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த ஆசிரியர்களுக்கு அமைச்சர் வேண்டுகோள்...

ஜூன் 11 முதல் சென்னையில் காலவரையற்ற உண்ணாவிரதம்~ ஜாக்டோ- ஜியோ உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் முடிவு…