வியாழன், 19 டிசம்பர், 2019

ஊரக உள்ளாட்சி் தேர்தல் சார்ந்து மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளிக்கப்பட்ட நாமக்கல் மாவட்ட தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கைகள்


*🌷ஆசிரியர்கள்/ மாணவர்கள் எண்ணிக்கை 31/08/2019 அன்றைய நிலவரப்படி பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் DEE PROCEEDINGS*

*_அரசு ஊராட்சி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள்/ மாணவர்கள் எண்ணிக்கை 31-08-2019 அன்றைய நிலவரப்படி பணியிட நிர்ணயம் மற்றும் ஆய்வு செய்தல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்



CCE CO- SCHOLASTIC ENTRY DIRECT LINK (You must already login in your School

CCE CO- SCHOLASTIC ENTRY DIRECT LINK (You must already login in your School)

√OPEN IN GOOGLE CHROME

√SELECT CLASS

√SELECT SECTION

√ ENTER GRADE

√FINALLY SAVE

Clickhere...  https://emis.tnschools.gov.in/Home/emis_school_student_co_scholastic

டிசம்பர் 19,
வரலாற்றில் இன்று.

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதியாக பதவி வகித்த பிரதீபா பாட்டீல் பிறந்த தினம் இன்று.
டிசம்பர் 19,
வரலாற்றில் இன்று.

கோவா சுதந்திர தினம் இன்று.

இன்றைய கோவா மாநிலம் போர்ச்சுகீசியர்களின் பிடியில் சுமார் 450 ஆண்டுகளாக இருந்தது. இடையில் 1812-1815 காலகட்டத்தில் பிரிட்டிஸாரால் கைப்பற்றப்பட்டது. 1961இல் இதே நாளில்தான் இந்தியாவோடு இணைந்தது.

1947இல்இந்தியா பிரிட்டிஸாரிடமிருந்து சுதந்திரம் பெற்றது. அதற்குப் பிறகும் போர்ச்சுகல் நாடு இந்தியாவில், தான் பிடித்து வைத்திருந்த பகுதிகளிலிருந்து வெளியேற மறுத்தது.

அதனால், இந்தியா 1961 டிசம்பர் 12இல் ‘ஆபரேஷன் விஜய்’ எனும் ராணுவ நடவடிக்கையை எடுத்தது. கோவா,டாமன் மற்றும் டையூவை போர்ச்சுகீசியர்களின் பிடியில் இருந்து மீட்டது. 1987 மே 30இல் கோவா இந்தியாவின் 25ஆவது மாநிலம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. டாமன் மற்றும் டையூ இரண்டும் யூனியன் பிரதேசங்களாகத் தொடர்கின்றன.

360 கோடி ஆண்டுகள் மிகப் பழமை வாய்ந்த கடினப் பாறைகள் கோவாவில் கண்டறியப்பட்டுள்ளன. கோவா தன் பரப்பில் 56.6 சதவீதப் பகுதியில் காடுகளையும் மரங்களையும் கொண்டுள்ளது. இந்தியாவில் மிகக்குறைந்த அளவில் பழங்குடியின மக்களைக் கொண்ட மாநிலமாகவும் கோவா உள்ளது

சுற்றுலாதான் கோவாவின் முக்கியமான தொழில். இந்தியாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் 12 சதவீதம் பேர் விரும்பி கோவாவுக்குச் செல்கின்றனர். 2004இல் 20 லட்சத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் கோவாவுக்கு வந்தனராம். இவர்களில் 4 லட்சம் பேர் வெளிநாட்டினர்.
டிசம்பர் 19,
வரலாற்றில் இன்று.

ஜெர்மனியை சேர்ந்த கண்டுபிடிப்பாளர் ருடால்ஃப் ஹெல் (Rudolf Hell) பிறந்த தினம் இன்று ( டிசம்பர் 19  1901-மார்ச்சு 11  2002)

ஜெர்மனியின் பவேரியா பகுதியில் உள்ள எக்முல் கிராமத்தில் (1901) பிறந்தார். தந்தை ராயல் பவேரியன் ரயில் நிலைய ஸ்டேஷன் மாஸ்டர். அவருடன் அலுவலகம் சென்றபோது அங்கிருந்த டெலிகிராபி கருவி இவரை ஈர்த்தது. அங்கு போகும்போதெல்லாம் அதையே பார்த்துக்கொண்டிருப்பார்.

செக் குடியரசில் உள்ள செப் என்ற இடத்துக்கு அப்பா மாற்றலானதால் அங்கேயே இவரது ஆரம்பக் கல்வி தொடங்கியது. மொழிப் பாடங்கள், விருப்பம் இல்லாத மற்ற பாடங்களில் சராசரி மதிப்பெண்தான் வாங்குவார். ஆனால், விருப்பமான அறிவியல், கணிதத்தில் அதிக மதிப்பெண்களைக் குவித்தார்.

மூனிச் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பொறியியலில் டிப்ளமோ பெற்றார். 1923-ல் எலக்ட்ரிகல் இன்ஜினீயரிங்கில் முதுகலைப் பட்டம் பெற்றார். மின் சாதனங்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வந்தார்.

வீடியோ கேமரா ட்யூபை முதன்முதலாக கண்டறிந்தார். ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்துக்கு செய்திகளை அனுப்ப பயன்படுத்தும் தொலைநகல் சாதனத்தின் முன்னோடியான ஹெல்ஷ்ரீபர் (Hellschreiber) என்ற கருவியை 1920-ல் கண்டுபிடித்தார். இது உலகம் முழுவதும் அமெச்சூர் ரேடியோ ஆபரேட்டர்களால் இன்றளவும் பயன்படுத்தப்படுகிறது. ஃபேக்ஸ், டெலக்ஸ், கலர் ஸ்கேனர் ஆகியவற்றுக்கு இதுவே முன்னோடி.

விமானப் போக்குவரத்துக்கான ரேடியோ திசை காட்டும் கருவி குறித்து ஆராய்ச்சிக் கட்டுரை எழுதி 1927-ல் முனைவர் பட்டம் பெற்றார். விமானத்துக்கான தானியங்கி வழிகாட்டி உள்ளிட்ட கருவிகளைக் கண்டறிய இவரது ஆராய்ச்சி அடிப்படையாக அமைந்தது.

இவரது ‘ஹெல் ரெக்கார்டர்’ கருவி, தகவல் தொடர்பு துறையில் பெரும் வரவேற்பை பெற்றதால், 1929இல் சொந்த நிறுவனம் தொடங்கினார். தவறுகளைத் திருத்துதல், ஒருங்கிணைத்தல் போன்ற பிரச்சினைகளைக் கையாளும் அமைப்புடன் இக்கருவி வடிவமைக்கப்பட்டது.

செய்தியை அனுப்புபவர் மற்றும் பெறுபவரை இது முழுமையாக ஒருங்கிணைக்காவிட்டாலும்கூட, தெளிவாகப் படிக்க ஏதுவாக, காகித நாடாவில் ஒவ்வொரு வார்த்தையும் 2 முறை அச்சிடும்படி வடிவமைக்கப்பட்டது. இதுபோன்ற பிரத்யேக அம்சங்களால், செய்தி நிறுவனங்கள், தபால் அலுவலகங்கள் மட்டுமின்றி, காவல் துறையிலும் இக்கருவி பிரபலமடைந்தது. இதன் வேகமும் நம்பகத்தன்மையும் இதை உலகம் முழுவதும் பிரபலமடையச் செய்தன.

1931-ல் இரண்டாம் உலகப் போரின்போது குறியீட்டு இயந்திரங்களைத் தயாரித்தார். அடுத்த ஆண்டு எலக்ட்ரோ மெக்கானிக்கல் ஹெலிகல் ஸ்கேன் பிரின்ட் சிஸ்டம் என்ற கருவியைக் கண்டுபிடித்தார்.

பெர்லினில் இருந்த இவரது தொழிற்சாலை 1940-ல் இரண்டாம் உலகப் போரில் தாக்குதலுக்கு உள்ளானது. தளர்ந்துவிடாத அவர், தனது தொழிலை 1947-ல் மீண்டும் தொடங்கினார். கிளிஸ்கோகிராஃப், கோலோகிராஃப், டைப்செட்டிங் இயந்திரம் உட்பட பலவற்றை உருவாக்கினார். 1989 வரை பல்வேறு கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகளில் முழுமூச்சுடன் ஈடுபட்டார்.

வியன்னா போட்டோகிராஃபிக் சொசைட்டியின் தங்கப் பதக்கம் உள்ளிட்ட பல விருதுகள் பெற்றார். பல நாடுகள் இவருக்கு கவுரவ குடியுரிமை வழங்கின. தொலைத்தொடர்பு துறையின் பிதாமகராகப் போற்றப்படும் ருடால்ஃப் ஹெல் நூறாண்டு வாழ்க்கையைப் பூர்த்தி செய்து 2002இல் மறைந்தார்.
டிசம்பர் 19,
வரலாற்றில் இன்று.

முத்தமிழ்க் காவலர்
கி. ஆ. பெ. விசுவநாதம் நினைவு தினம் இன்று.

கி. ஆ. பெ. விசுவநாதம் பிள்ளை (நவம்பர் 11, 1899 - டிசம்பர் 19, 1994)  தமிழகத்தின் திருச்சியைச் சேர்ந்த தமிழ் உணர்வாளர் ஆவார்.

நீதிக்கட்சி உறுப்பினராக பிராமணரல்லாதோர் முன்னேற்றத்திற்காக
வும் தமிழ்மொழியின் உயர்விற்காகவும் பாடுபட்டவர்.

 துவக்கத்தில் பெரியாருடன் இணைந்து இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டபோதும்,
அவரது திராவிட நாடு கோரிக்கையுடன் உடன்படாதவர்.
அது தமிழரின் தனித்தன்மையை நீர்த்துவிடும் என எண்ணினார்.

இவர் எழுதியுள்ள 23 நூல்களும் தமிழ்வளர்ச்சித்துறையால் 2007-2008 இல் நாட்டுடைமையாக்கப்பட்டு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது.