ஞாயிறு, 1 நவம்பர், 2020

*கற்போம் எழுதுவோம் இயக்கம் SCHOOL LEVEL FORMAT -PDF FOR ALL PRIMARY & MIDDLE SCHOOLS.*

*கற்போம் எழுதுவோம் இயக்கம்  SCHOOL LEVEL FORMAT -PDF FOR ALL PRIMARY & MIDDLE SCHOOLS*

 *✏️Form 1- படிக்காதவர்கள் பெயர் பட்டியல்*

 *✏️Form 2 கல்வி தன்னார்வலர்களின் விவரங்கள்*

 *✏️Form 3 கிராமம் வார்டு பற்றிய தகவல் தொகுப்பு*
 
*✏️Form 4  மாதவாரியான வருகை, முன்னேற்ற நிலை மற்றும் அடைவு நிலை படிவம்*

*படிவங்களைப் பார்க்க இங்கே கிளிக் செய்க.
click here.

நவம்பர் 1, வரலாற்றில் இன்று. கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்ட தினம் இன்று (1956).

நவம்பர் 1, 
வரலாற்றில் இன்று. 

 கேரளாவிலிருந்து பிரிந்து கன்னியாகுமரி மாவட்டம் தமிழ் நாட்டுடன் இணைக்கப்பட்ட தினம் இன்று (1956). 

1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது.

 கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை.

 மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் "குமரித் தந்தை " என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி தலைமையில் கன்யாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைக்கக் கோரி பல போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து 1956 நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் ஒரு பகுதியாக மாறியது.

இம்மாவட்டத்தின் முதல் மாவட்ட ஆட்சியராக திருமலை என்பவர் நவம்பர் 1, 1956 அன்று பொறுப்பு ஏற்றுக் கொண்டார்.

நவம்பர் 1,வரலாற்றில் இன்று.தமிழ்நாடு தினம் இன்று.

நவம்பர் 1,
வரலாற்றில் இன்று.

தமிழ்நாடு தினம் இன்று.

நவம்பர் 1ஆம் தேதியை தமிழ்நாடு தினம் என்று கொண்டாட தமிழக அரசு அரசாணையை 2019இல்
வெளியிட்டுள்ளது.

நவம்பர் 1ஆம் தேதி 1956ஆம் ஆண்டு, 63 வருடங்களுக்கு முன்னர் ஒன்றாக இணைந்திருந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா, கேரளா போன்ற மாநிலங்கள் பிரிந்து தனி மாநிலமாக அறிவிக்கப்பட்டன. இதனையடுத்து நவம்பர் 1ஆம் தேதி தனித்துவ தமிழ்நாடு உருவாக்கப்பட்டதை, பெருமைப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் விழா எடுத்து சிறப்பாக கொண்டாடப்படும் என்று தமிழக அரசு சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, சென்ற ஆண்டு முதல் இனி வரும் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1ஆம் தேதியினை தமிழ்நாடு நாள் என சிறப்பாக கொண்டாட தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு நாள் கொண்டாட தமிழக அரசு ரூ.10 லட்சம் நிதியை ஒதுக்கியுள்ளது.