வியாழன், 2 ஜூலை, 2020

*Inspire Awards 2020 - மாணவர்களுக்கு அழைப்பு ! (www.inspireawards-dst.gov.in )* *மத்திய அரசின், நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருது பெற விண்ணப்பிக்குமாறு, பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.*

Inspire Awards 2020 - மாணவர்களுக்கு அழைப்பு ! (www.inspireawards-dst.gov.in )
மத்திய அரசின், நவீன அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருது பெற விண்ணப்பிக்குமாறு, பள்ளி மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில், நவீன கண்டுபிடிப்புக்கான விருதுகள் வழங்கப்படும். இதற்கு, பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும்.இந்த ஆண்டு, கொரோனா பிரச்னை உள்ளதால், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே, நேரடியாக அறிவியல் கண்காட்சி நடத்தமுடியாத நிலை உள்ளது.இந்நிலையில், அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருதுக்கு,மாணவர்களின் எண்ணங்களை, 'ஆன்லைனில்' பெற்று விருது வழங்க, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்கலாம். புதிய கண்டுபிடிப்புகள் குறித்த, தங்கள் எண்ணங்களை, www.inspireawards-dst.gov.in என்ற, இணையதளத்தில், செப்., 30க்குள் பதிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உட்பட, 22 மொழிகளில், ஏதாவது ஒன்றில், கண்டுபிடிப்பு குறித்த கட்டுரையை அனுப்பலாம். ஒரு லட்சம் சிறந்த கண்டுபிடிப்பு கட்டுரைகளுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.



மத்திய அரசின் சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 'இன்ஸ்பையர்' என்ற பெயரில், நவீன கண்டுபிடிப்புக்கான விருதுகள் வழங்கப்படும். இதற்கு, பள்ளி மாணவர்களின் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்படும்.இந்த ஆண்டு, கொரோனா பிரச்னை உள்ளதால், இன்னும் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே, நேரடியாக அறிவியல் கண்காட்சி நடத்தமுடியாத நிலை உள்ளது.இந்நிலையில், அறிவியல் கண்டுபிடிப்புக்கான விருதுக்கு,மாணவர்களின் எண்ணங்களை, 'ஆன்லைனில்' பெற்று விருது வழங்க, மத்திய அறிவியல் தொழில்நுட்பத் துறை முடிவு செய்துள்ளது.

இது குறித்து, பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் சுயநிதி பள்ளிகளில், ஆறு முதல், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இந்த போட்டியில் பங்கேற்கலாம். புதிய கண்டுபிடிப்புகள் குறித்த, தங்கள் எண்ணங்களை, www.inspireawards-dst.gov.in என்ற, இணையதளத்தில், செப்., 30க்குள் பதிவு செய்ய வேண்டும்.

ஆங்கிலம், தமிழ், ஹிந்தி உட்பட, 22 மொழிகளில், ஏதாவது ஒன்றில், கண்டுபிடிப்பு குறித்த கட்டுரையை அனுப்பலாம். ஒரு லட்சம் சிறந்த கண்டுபிடிப்பு கட்டுரைகளுக்கு, தலா, 10 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

IFHRMS மூலம் ஜூலை மாத ஊதியப் பட்டியல் - கருவூலகங்களில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு 👆👆👆

IFHRMS மூலம் ஜூலை மாத ஊதியப் பட்டியல் - கருவூலகங்களில் சமர்ப்பிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

அரசுப் பள்ளியில் படித்தால் மட்டுமே அரசாங்க வேலை: ஜார்க்கண்ட் கல்வி அமைச்சர் அதிரடி

ஜார்க்கண்ட் மாநிலக் கல்வி அமைப்பைச் சீரமைக்கும் பணிகளில் அம்மாநில பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக இறங்கி இருக்கிறது. அதன் ஒரு கட்டமாக அரசுப் பள்ளிகளில் படித்தவர்களுக்கு மட்டுமே அரசாங்க வேலை என்ற சட்டத்தைக் கொண்டு வர வேண்டும் என்று ஜார்க்கண்ட மாநில பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறை அமைச்சர் ஜகர்நாத் மதோ நேற்று பேசினார்.

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று:கணினிக்கு பயன்படுத்தும் மௌஸை கண்டுபிடித்த டக்லஸ் எங்கேல்பர்ட் நினைவு தினம் இன்று.*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

கணினிக்கு பயன்படுத்தும் மௌஸை கண்டுபிடித்த டக்லஸ் எங்கேல்பர்ட் நினைவு தினம் இன்று.

மனிதனுக்கும் கணினிக்கும் தொடர்பு ஏற்படுத்தும் மௌஸ் 1968இல் கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபார்ட் பல்கலைககழகத்தில்  டக்லஸ் எங்கெல்பர்ட் என்பவரால் உருவாக்கப்பட்டது.

மனிதனுக்கும் கணினிக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையை சுலபமாக்குவதற்காகத்தான் இது கண்டுபிடிக்கப்பட்டது.முதல் மௌஸ் மரத்தால் ஆனது. ஒரு பெரிய செவ்வகத்தைப் போல இருக்கும்! டிசம்பர் மாதம் ஒன்பதாம் தேதி ஒரு டெமோ மூலம் தன் மௌஸை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் டக்லஸ். 'டெமோக்களின் அன்னை', அதாவது 'Mother of All Demos' என்று அனைவராலும் பாராட்டப்பட்டது. ஏ.ஆர்.சி என்று அழைக்கப்படும் Augmentation Research Centerல் வேலை பார்த்தவர்களின் கூட்டு முயற்சியாக இருந்தாலும், அதிக பெயரும் புகழும் பெற்றது என்னவோ டக்லஸ்தான். இன்று ரிச்சி ஸ்ட்ரீட்டில் கிடைக்கும் மௌஸ்களைப் போல் வண்ண வண்ண பட்டன்கள் எல்லாம் அதில் கிடையாது. ஒரேயொரு பட்டன்தான். நிறைய சக்கரங்கள் பொருத்திய மரப்பெட்டி! ஆனால், அன்று அது ஏற்படுத்திய பரபரப்பு அளவில்லாதது.

      அது சரி, அது என்ன பெயர் "மௌஸ்"? டக்லஸ் ஒரு பேட்டியில் சொல்கிறார். "முதல் மாநாட்டின் சமயம், எங்கள் கையில் அந்த புது கேட்ஜெட் இருந்தது. நாங்கள் அந்த சமயத்தில் அதற்கு என்ன பெயர் வைப்பது என்பதைப் பற்றி எல்லாம் யோசிக்கவே இல்லை. ஒரு சிறிய மரக்கட்டை போல் இருக்கும். அதன் நுனியிலிருந்து ஒரு கயிறு தொங்கிக் கொண்டிருந்தது. மாநாட்டில் இருந்த யாரோ ஒருவர் அதைப் பார்த்து பயந்துவிட்டு 'எலி.. எலி' என்று கத்தினார் கயிற்றை வால் என்று நினைத்துக் கொண்டு! அப்பொழுது வந்த பெயர்தான் மௌஸ்! அன்றிலிருந்து நாங்களும் மௌஸ் என்று அழைக்க ஆரம்பித்துவிட்டோம்." சில வருடங்களுக்குப் பிறகு, பில் இங்கிலிஷ் 'Computer Aided Display control' என்ற அவர்தம் புத்தகத்தில் மௌஸ் என்று பெயர் சூட்டுகின்றார்.

     அந்த மரப்பெட்டி மெல்ல மெல்ல அழகாக மாறியது. முதல் மாற்றம் வந்தது மௌஸின் சக்கரத்தில்தான்.அனைத்து சக்கரங்களையும் அகற்றி விட்டு, எல்லா திசைகளிலும் நகரக் கூடிய ஒரு பந்தை பொருத்தினார்கள். அதன் பிறகு ஆப்டிகல் மௌஸ் வர ஆரம்பித்தது. முதலில், டையோடுகளை பயன்படுத்தினார்கள். தொழில்நுட்பம் வளர வளர சென்சர்களை உபயோகப்படுத்த ஆரம்பித்தார்கள். தற்பொழுது இன்ஃப்ரா ரெட் கதிர்வீச்சுகளும், லேசர் கதிர்களும் உபயோகத்தில் இருக்கின்றன.இன்று மௌஸ் எவ்வளவு தேர்ச்சி அடைந்துவிட்டது என்பதைத்தான் நாம் கண்கூடாகப் பார்க்கின்றோமே. ஒரே ஒரு பட்டனில் ஆரம்பித்தது, இன்று நான்கைந்து பட்டன்கள் வரை வளர்ந்து நிற்கின்றது! இதற்கெல்லாம் நடுவில் 'ஆப்பிள்' கம்பெனி, 'நானும் புதிதாக செய்கிறேன்' என்ற பெயரில் 'மைட்டி மௌஸ்' என்றொன்றை விற்கிறது. மற்ற மௌஸ்களைப் போல, வயர்லெஸ் வடிவத்தில் இதுவும் கிடைக்கின்றது.

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று: 'சந்திராயன்' மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம் இன்று.*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

 'சந்திராயன்' மயில்சாமி அண்ணாதுரை பிறந்த தினம் இன்று.

 பொள்ளாச்சி அருகில் உள்ள கோதவாடி கிராமத்தில் ஜூலை 2, 1958-ல் பிறந்தார். தந்தை, மயில்சாமி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர். மாலையில் தையல் வேலையும் செய்வார். அறிஞர் அண்ணாவின் மீதான ஈடுபாட்டால், தன் பிள்ளைக்கு ‘அண்ணாதுரை’ எனப் பெயர் சூட்டினார்.
மயில்சாமி அண்ணாதுரையின் பள்ளிப் பருவம், அரசுப் பள்ளியிலே அமைந்தது. ஒழுங்கான வகுப்பு அறைகள்கூட கிடையாது. ‘மாட்டுக் கொட்டகையில் ஒரு வருஷம், கோயில் திண்ணையில் மறு வருஷம், கோணிப் பையே குடையாக, செருப்பே இல்லா நடைப் பயணம்’ எனக் கவிதை மூலம் குறிப்பிட்டு இருக்கிறார். ஆறாம் வகுப்பு படிக்க, 5 கிலோ மீட்டர் நடந்து செல்வார்.
தினமும் ‘பகவத் கீதை’ படிப்பதை வழக்கமாகக்கொண்டு இருக்கிறார். திருக்குறளின் மீது எல்லையற்ற பற்றுதல் உண்டு. பள்ளிக் காலத்திலேயே நூற்றுக்கும் மேற்பட்ட குறள்களை வெகுவேகமாகச் சொல்வார். ‘அரசாங்கத்தின் பிற்படுத்தப்பட்டோர் ஊக்கத் தொகையைப் பெறக் கூடாது’ என்ற அப்பாவின் விருப்பத்துக்கு ஏற்ப நடந்து கொண்டாலும், 11-ஆம் வகுப்பில் முதல் மதிப்பெண் பெற்றதற்காக, அரசாங்கம் தங்கப் பதக்கம் வழங்கி, படிப்புச் செலவையும் முழுமையாக ஏற்றுக்கொண்டது.

‘நல்லமுத்துக் கவுண்டர் மகாலிங்கம்’ கல்லூரியில் எம்.ஏ. மின்னணுவியல் பயின்றார். தமிழ் வழியில் இருந்து, ஆங்கில வழிக் கல்விக்கு மாறியதால் முதலில் சிரமப்பட்டார். பிறகு, தமிழ் ஆசிரியர் சிற்பி அய்யாவின் ஊக்குவிப்பால், முதன்மையான மாணவனாக ஜொலித்தார். தான் எழுதிய ‘கையருகே நிலா’ என்கிற கட்டுரைத் தொகுப்புக்கு, முன்னுரையை சிற்பியிடம் இருந்தே பெற்றார்.
இளநிலைக் கல்வி படிக்கும்போது, மற்ற மாணவர்கள் ஒரு புராஜெக்ட் செய்யவே திணறியபோது, நான்கு புராஜெக்ட்கள் மற்றும் முதுநிலைக் கல்வியில் மூன்று புராஜெக்ட்கள் செய்தவர் மயில்சாமி அண்ணாதுரை. ‘இதற்குக் காரணம், அன்னைத் தமிழ் வழி கற்ற கல்வியே’ எனப் பெருமிதத்தோடு குறிப்பிடுவார்.
‘ஆரோலேக்’ என்கிற ஃப்ரெஞ்ச் கம்பெனியில் வேலை கிடைத்தபோதும், அதைவிடக் குறைந்த ஊதியம் கிடைக்கும் இஸ்ரோவில் பணியாற்றினார். பிறகு, நாசாவில் வேலை வாய்ப்பு வந்தது. அன்னை நாட்டுக்குப் பணியாற்றுவதே நிறைவு’ என்று அதை மறுத்துவிட்டார்.

இஸ்ரோவில் பணியாற்ற நேர்முகத் தேர்வுக்குச் சென்றபோது, நுண்செயலியைப் (Microprocessor) பற்றிய இவரின் அறிவு, அங்கே இருந்தவர்களைப் பிரமிக்கவைத்தது. வேலைக்குச் சேர்ந்த ஆறாவது மாதத்திலேயே, செயற்கைக்கோள்களின் இயக்கத்துக்கான மென்பொருள் முன்மாதிரியை உருவாக்கலாம் எனச் சொன்னார். அதை, வெற்றிகரமாகவும் செய்து முடித்தார். இதன் மூலம், சென்ஸார் செயல் இழந்தாலும் செயற்கைக்கோள் செயலாற்ற முடியும் என்பதை உலகுக்கு உணர்த்தினார்.
விஞ்ஞானிகள் கூட்டத்தில்… பிறரின் கருத்துக்களில் தவறு இருந்தால், உடனே சுட்டிக்காட்டிவிடுவார். ‘இது சரியான அணுகுமுறை அல்ல. தனியே அந்த அறிஞரிடம் சென்று விளக்க வேண்டும்’ என்ற முனைவர் நாகபூஷணம் அவர்களின் அறிவுரை, தன் வாழ்வைத் திருப்பியது என்பார். இவரின் புதிய அணுகுமுறை, சந்திராயனின் இயக்குனராக இவரை உயர்த்தியது.

சந்திராயன் மூலம் நிலவில் தண்ணீர் உருவான இடத்தைக் கண்டறிந்து, உலகைத் திரும்பிப் பார்க்கவைத்தார். அந்த செயற்கைக்கோள் எடுத்த படங்களின் துல்லியம், உலக நாடுகளைப் பிரமிக்கவைத்தது. ‘இது கூட்டு முயற்சியின் வெற்றி’ என்று அடக்கத்துடன் குறிப்பிட்டார். மேலும், ‘சாதாரணக் கிராமங்களில் இருந்து கிளம்பிய நாம், இந்த வெற்றியை… நாம் புறப்பட்ட மண்ணில் உள்ள இளம் பிள்ளைகளுக்குச் சொல்லி உத்வேகப்படுத்த வேண்டும்” என்று தன் குழுவினருக்குச் சொன்னார்.
விடுமுறை நாட்களில் பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று மாணவர்களோடு உரையாற்றி உத்வேகப்படுத்துகிறார் மயில்சாமி அண்ணாதுரை. அன்னைத் தமிழில் பயிலும் மாணவர்களுக்கு வளமான எதிர்காலம் உண்டு என்பார். இதையே…

‘அரசுப் பள்ளி பாழல்ல
அன்னைத் தமிழும் பாழல்ல
அறியா மனமே பாழென்பேன்’

எனத் தன் கவிதை ஒன்றில் குறிப்பிடுகிறார்.

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று:சிம்லா ஒப்பந்தம் (Simla Agreement) ஏற்பட்ட தினம் இன்று.*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

சிம்லா ஒப்பந்தம் (Simla Agreement) ஏற்பட்ட தினம் இன்று.

வங்காளதேச விடுதலைப்  போரினைத் தொடர்ந்து  இந்தியா- பாகிஸ்தான் இரு நாடுகளுக்கிடையே ராஜதந்திர  நல்லுறவைகளை  மேம்படுத்துவதற்காக, இந்தியாவின் இமாசலப் பிரதேச மாநிலத்  தலைநகரான  சிம்லாவில்  இந்திய  அரசுக்கும்  பாகிஸ்தான் அரசுக்கும் இடையே  ஒரு ஒப்பந்தம் ஜூலை 2, 1972 இல்  கையெழுத்தானது. இந்திய பிரதமர் இந்திரா காந்தியும், பாகிஸ்தான் பிரதமர் ஜுல்பிகர் அலி பூட்டொவும் இவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று:வால்மார்ட் கடை முதன்முதலில் திறக்கப்பட்ட தினம் இன்று.*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

வால்மார்ட் கடை முதன்முதலில் திறக்கப்பட்ட தினம் இன்று.

 ஜூலை 2, 1962. உலக சில்லறை வர்த்தக வரலாற்றில் முக்கிய மான நாள். சாம் வால்டன் அமெரிக்காவின் அர்கன்ஸாஸ் மாகா ணத்தின் ரோஜர்ஸ் நகரில், தன் முதல் வால்மார்ட் கடையைத் திறந்தார். 4,000 சதுர அடியில் சிறிய இடம், மக்கள் தொகை அதிகமில்லாத ஊர் என்பதால் வாடகை கம்மி. இந்த அனுகூலங்களால், குறைவான முதலீடுதான்.

ஆனால், இத்தனை பணம்கூட வால்டனிடம் இருக்கவில்லை. வங்கியில் இருந்த மொத்தச் சேமிப்பையும் எடுத்தார், வீடு, சொத்துகள் அத்தனையையும் அடகு வைத்துக் கடன் வாங்கினார். அப்புறமும் துண்டு விழுந்தது. அவர் தம்பி ஜேம்ஸ் வால்டன், மேனேஜராக வேலைக்குச் சேர்ந்த டான் விட்டேகர் இருவரும் பணம் போட்டு உதவினார்கள்.

இன்று, வால்மார்ட்டுக்கு 27 நாடுகளில் 11,000 கடைகள், 22 லட்சம் ஊழியர்கள். ஆண்டு விற்பனை 486 பில்லியன் டாலர்கள் (சுமார் 30 லட்சம் கோடி ரூபாய்).

*🌐ஜூலை 2, வரலாற்றில் இன்று:அரசு ஊழியர்களை அடக்குமுறை செய்ய ஜெயலலிதா எஸ்மா சட்டத்தை பிரயோகித்த கறுப்பு தினம் இன்று(2003).*

ஜூலை 2, வரலாற்றில் இன்று.

அரசு ஊழியர்களை அடக்குமுறை செய்ய ஜெயலலிதா எஸ்மா சட்டத்தை பிரயோகித்த தினம் இன்று(2003).

ஜூலை 02-ம் நாள் தமிழக அரசு அலுவலர்கள் ஆசிரியர்களின் உரிமைகள் சலுகைகள் 2002 - 2003-ல் படிப்படியாக பறிக்கப்பட்டு அடக்கு முறை கட்டவிழ்க்கப்பட்டது .

இதனால் அனைத்து அரசு அலுவலர்களும் ஆசிரியர்களும் அனைத்து சங்கங்களும் ஓரணியில் திரண்டு ஒன்றுபட்ட ஒட்டுமொத்த கூட்டமைப்பும் போராட்டம் (02.07.2003இல்) நடத்தியது.

 தமிழக அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் அனைவரும் பெற்று வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டு வந்தன.

பழைய ஓய்வூதிய திட்டம் ரத்து புதிய CPS 1.4. 2003இல் அமல்படுத்தப்பட்டது.
ஆட்குறைப்பு நடவடிக்கை மேற்கொண்டு காலி பணியிடங்கள் நிரப்பாதது,
 சரண் விடுப்பு ஒப்படைப்பு ரத்து பென்சன், கமுட்டேசன் 40% என்பது 33.33% சதமாக குறைக்கப்பட்டது நாளது வரை  மாற்றப்படவில்லை. உள்ளிட்ட கோரிக்கைகள் சலுகைகள் நிறைவேற்றிடக் கோரி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம் நடத்திய நாள் : 02.07.2003.

இதன் காரணமாக போராட்டக்காரர்களை 30.06.2003 அன்றும் 01.07.2003 அன்றும் நள்ளிரவில் காவல்துறை அலுவலர்கள் ஏவல் துறையாக செயல்பட்டு அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களை வீடு வீடாக சென்று
தீவிரவாதிகளையும் கொலை / கொள்ளைக்காரர்களையும் கைது செய்வது போல் நள்ளிரவில் போராட்டக்காரர்களை கைது செய்த நாள் 02.07.2003.

 ஒரு பாவமும் அறியாத அரசு அலுவலர்கள் / ஆசிரியர்கள் மீது பேருந்து மறித்தல், எரிக்க முயற்சி, பேருந்து நிலையங்களில் பணிக்கு வரும் பெண் அலுவலர், ஆசிரியைகளின் கையை பிடித்து இழுத்தல் , பணிக்கு செல்பவர்களை தடுத்தல் , அரசு உடமைகள் சேதப்படுத்துதல், களவாடுதல் "தகாத வார்த்தைகளால் வசைபாடுதல் " பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல் என எண்ணற்ற / அற்பமான / பொய்யான தகவல்களால் முதல் தகவல் அறிக்கை தயாரித்து சிறைச்சலைக்கு அனுப்பிய நாள் 2.07.2003

தமிழகத்தின் அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் சங்க மாநில தலைவர்கள் /மாவட்ட தலைவர்கள் நிர்வாகிகள் அனைவரும் கைது செய்யப்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து மத்திய சிறைகளும் நிரம்பிய நாள் 02.07.2003.

 இந்த போராட்டத்தின் காரணமாக வேலை வாய்ப்பற்ற தகுதியுள்ள இளைஞர்களுக்கு ரூ.4000/- அடிப்படையில் நியமனத்திற்காக அரசு அழைப்பு விடுத்த நாள்.

 நேர்காணல் மூலம் 15,400 க்கு மேற்பட்ட இளைஞர்கள் அரசுப் பணியில் சேர்த்துக் கொள்ளப்பட்ட நாள் 02.07.2003.

 காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களின் வீடு வீடாக சென்று தீவிரவாதிகளைப் போல தேடித் தேடி/ஒட ஓட விரட்டிய நாள் 02.07.2003.

அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களின் ஒட்டு மொத்த குடும்பமும் | நண்பர்களும், உற்றார் உறவினர்களும் கண்ணீர் விட்டு கதறி அழுத நாள் O2.07.2003.

ஒரே கையைழுத்தில் 400000 க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை அரசுப் பணியில் இருந்து டிஸ்மிஸ் செய்து உத்தரவிடப்பட்ட நாள் O2.07.2003.

அரசியல் தலைவர்கள் / சர்வதேச நாடுகள் / உலகளாவிய அரசு /அரசியல்/தொழிற்ச் சங்கங்கள் / அமைப்புகள் வாயடைத்து என்ன செய்வதென்பதையும் அறியாமல் திகைத்து நின்ற நாள் O2.07.2003.

ஒட்டு மொத்த தொழிற் சங்க கூட்டமைப்பும் , சர்வதேச நாடுகளும் தமிழக அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களுக்காகவும் தமிழக அரசை கண்டித்து ஐக்கிய நாடுகள் சபையில் குரல் எழுப்பிய நாள் O2.07.2003.

அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் போராட்டம் நியாமானது என அவசர வழக்கில் தமிழக அரசுக்கு தெரிவித்து போராட்டர்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திட அறிவுத்திய நாள் O2.07.2003.

 போராட்டம் செய்ய அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களுக்கு தார்மீக உரிமை இல்லை என தெரிவித்து தமிழக அரசு போராட்டக்காரர்கள் மீது வழக்கு தொடுத்த நாள் O2.07.2003

முதலில் அரசு அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு ஆதரவாகவும் சாதகமாகவும் செயல்பட்ட 'நீதி, பின்னர் அரசுக்கு சாதகமாக மாறிய / மாற்றிய நிகழ்வு நடந்த நாள் O2.07.2003.

தமிழக மத்திய சிறைகளில் கைது செய்து அடைக்கப்பட்ட அரசு அலுவலர்கள்/ ஆசிரியர்களை சிறிய அறைகளில் ஆடு மாடுகளை பட்டியில் (கூண்டில்)அடைப்பதைபோல் ஒரே அறையில் ஐந்துக்கும் மேற்பட்டோர் அடைத்தது, அறைகளில் உள்ள கழிப்பிடித்தில் தண்ணீர் வசதி வழங்காதது, மின்சாரம் துண்டித்தது ,குடி தண்ணீர் வழங்காதது , முதல் வகுப்பு தகுதி பெற்று வந்த அலுவலர்களுக்கு முதல் வகுப்பு தராமல் மறுத்தது , சுகாதாரமற்ற தரமில்லாத உணவு தயாரித்து வழங்கி கொடுமை படுத்தியது,
உடல் நலமில்லாதவர்களுக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை அளிக்க மறுத்தது. ஏற்கனவே சிறைச்சாலைகளில் தண்டனை பெற்றுள்ள குண்டாஸ் ,திருடர்கள், வழிப்பறியாளர்கள், கொலைகாரர்களைக் கொண்டு போராட்டக்காரர்களை மிரட்டியது என சிறைச்சலையிலும் அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களை போராட வைத்து கொடுமை படுத்தி அழகு பார்த்த தினம் O2.07.2003.

 30.6.03 நள்ளிரவு, 01 .07.03, நள்ளிரவு முதல் 03.7.2003 முடிய அனைவரையும் ESMA சட்டத்தில் கைது செய்து விட்டு பின்னர் பல்வேறு மாற்றங்களுடன் TESMA சட்டத்தில் கைது என 04.07.2003 ல் அவசர சட்டம் இயற்ற காரணமான நாள் O2.07.2003 .

கைது செய்யப்பட்ட மற்றும் டிஸ்மிஸ் செய்யப்பட்ட அரசு அலுவலர்கள் / ஆசிரியர்களில் 88 நபர்கள் உயிர் தியாகம் செய்து இன்னுயிர் நீத்ததற்கு காரணமான கருப்பு தினமும் இந்நாள் 02.07.2003.

போராட்டம் வெற்றி பெறும், இழந்த சலுகைகள் மீண்டும் கிடைக்கும் என்பதை அறியாமலேயே உயிர் நீத்த தியாக சீலர்களை போற்றி பொற்பாதங்கள் தொட்டு வணங்க வேண்டிய நாளும், நினைவு கூற வேண்டிய நாளும் வீர வணக்கம் செலுத்த வேண்டிய நாளும் தான் இந்த 02.07.2003.

போராட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் பல்லாயிரக் கணக்கில் கைது செய்து விட்டு பின்னர் 1000 நபர்கள் மட்டுமே கைது எனவும் பின்னர் 999 நபர்கள் என அவர்களுக்கு பிடித்த 9-ம் எண் அறிவித்துவிட்டு பின்னர் போராட்டக்காரர்களில் ஒருவரை தகுதி நீக்கம் செய்து அவர் அரசுப் பணியில் இல்லை ஓய்வு பெற்றவர் என தெரிவித்த அவலமும் போராட்ட களத்திற்கு மருத்துவ விடுப்பு மற்றும் பிற விடுப்பு களும் எடுத்து வந்த அங்கீகாரமில்லாத / அரசியல் சார்புடைய சங்கத் தலைவர்களின் முகத்திரை கிழிந்த நாளும் O2.07.2003.

பல்வேறு தொழிற்சங்கங்கள் / கூட்டமைப்புகள், சர்வதேச அமைப்புகள் கம்யூனிசக் கொள்கைகள் ஏற்றுக் கொண்டுள்ள /ஏற்றுக் கொள்ளாத நாடுகள் அனைத்தும் ஒன்றுபட்ட நிலையிலான நேசக்கரம் / மற்றும் இயன்ற உதவிகள் செய்து தமது வலிமையையும், ஒற்றுமையையும் சர்வதேச / ஐக்கிய நாடுகள் சபைக்கும் உணர்த்திட காரணமான தினம் O2.07.2003.

ஹிட்லரைப் போல் ஒரு சர்வாதிகாரி நாட்டை ஆண்டால் எப்படியெல்லாம் செய்யலாம் என பாடம் சொன்ன நாள் O2.07.2003

 02.07.2003-ல் நடந்த / நடத்திய கொடுமைகளுக்கு எல்லாம் என்ன தீர்வு என அரசு அலுவலர்கள், ஆசிரிய பெருமக்கள் தொழிற்சங்க அமைப்புகள் இவர்களை ஒத்த குடும்பத்தினர் , உற்றார் உறவினர்கள் நண்பர்கள், பொதுமக்களும் சேர்ந்து 2004 மே திங்களில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் 39+1 என்ற அனைத்து தொகுதியிலும் புரட்டிப் போட்ட தோல்வியும் / வெற்றியும் என அரசியல் தலைகளை சிந்திக்க வைத்த நாளும் இதே தினம் தான்.

 பின்னர் வந்த சட்டமன்ற தேர்தலிலும் ஆட்சி மாற்றம் காட்சி மாற்றம் செய்தது. புதியதாக வந்த அரசு மீண்டும் அனைத்து சலுகைகளையும் வாரி வழங்கியது, மேலும் போராட்ட காலம், சிறைக்காலம், தண்டனை காலம் , பணி நீக்ககாலம் என அனைத்து தண்டனைகளையும் தளர்த்தி வந்து இறுதியில் ரத்தும் செய்து அனைத்து காலத்திற்கும் சம்பளம் மற்றும் படிகள் வழங்கி (பணிக் காலம் என அறிவித்து ) அந்த காலத்தை அகராதியின் அடிச்சுவடே காணாமல் போக வைத்த நினைவுகளுக்கு எல்லாம் காரணமான நாள் O2.07.2003.

இப்படி முன்னோர் போராடி பெற்ற பலன்களை நீங்கள் இழக்கப்போகிறீர்களா?

சிந்திப்பீர். செயல்படுவீர்.