வெள்ளி, 28 ஜூன், 2019

Flash News : DSE - Non Teaching Transfer Counselling Date Changed - Director Proceedings



விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன கருவிகள் வாங்க 100 சதவீத மானியம்...

சேலம்-நாமக்கல் எல்லைப்பகுதியில் 16ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் கண்டெடுப்பு...

உண்மை தன்மை சான்றிதழ் விண்ணப்பப் படிவம்


புதிய தேசிய கல்விக் கொள்கை- கருத்து கூற காலக்கெடு ஜுலை மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் ராஜ்யசபாவில் நேற்று கூறியதாவது: புதிய கல்விக்கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை பொதுமக்கள் கருத்து தெரிவிப்பதற்காக வைக்கப்பட்டுள்ளது. அதன் மீது கருத்து தெரிவிப்பதற்கான காலக்கெடு இம்மாதம் 3௦ம் தேதியுடன் முடிவடைய இருந்தது.

அந்த கெடு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது; ஜூலை 31 வரை பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம். அதுபோல பள்ளிகளில் செயல்படுத்தப்படும் மதிய உணவு திட்டத்தில் மாற்றம் செய்து காலை உணவுவழங்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தும் எண்ணம் அரசுக்கு இல்லை.இவ்வாறு அமைச்சர் பொக்ரியால் கூறினார்

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றமா? - உயர்நீதிமன்றம் !

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு விதிமுறைகளில் மாற்றம்

நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடைமுறைகளில் மாற்றம் செய்ய இருப்பதாக மதுரை உயர்நீதிமன்ற கிளையில்   அரசு தலைமை வழக்கறிஞர் தகவல்.    29.06.2019  க்குள்  புதிய விதிமுறைகளை வெளியிட நீதிபதி அறிவுறுத்தல்.





தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம், நாமக்கல் மாவட்டம்(கிளை)~மாவட்ட விரைவு செயற்குழுக் கூட்டம் அழைப்பிதழ்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை).
----------------------------------------
மாவட்ட விரைவு செயற்குழுக்
கூட்டம் அழைப்பிதழ்
---------------------------------------
அன்புடையீர்!வணக்கம்.

இடம்:   
நகராட்சி தொடக்கப்பள்ளி,
கோட்டை,நாமக்கல்.

நாள்:   
29.06.19(சனி).

நேரம்: 
பிற்பகல் 02.00மணி.

தலைமை:
திரு.க.ஆசைத்தம்பி,
மாவட்டத்தலைவர்.

முன்னிலை:
திரு.பெ.பழனிசாமி,
மாநிலத்தலைமை
நிலையச்செயலாளர்.

பொருள்:
1) 2018-19 மற்றும்
2019-20 ஆம்கல்வியாண்டு உறுப்பினர்சேர்க்கை.

2) 2018மற்றும் 2019இயக்க நாள்குறிப்பேடு மற்றும் நாள்காட்டி.

3) மாவட்டப் பொறுப்புகளின் காலியிடங்கள் நிரப்புதல்.

4) சிறைச்செம்மல்  பாராட்டுவிழா. 

5) ஜாக்டோ-ஜியோ செயல்பாடுகள்.

6) ஆசிரியர் பொது மாறுதல் நடவடிக்கைகள்.

7)ஆசிரியர்கோரிக்கைகள்.

8)புதியகல்விக்கொள்கை எதிர்ப்பு நடவடிக்கைகள்.

9)மாவட்டச்செயலாளர் கொணர்வன. 

தாங்கள் தவறாது பங்கேற்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.                          நன்றி.
            ~முருகசெல்வராசன்

கிராம சபைக்கூட்டம் - ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை - 01.05.2019 தொழிலாளர் தினத்தில் நடை பெறவேண்டிய கிராம சபைக் கூட்டம் பாராளுமன்ற தேர்தல் நடத்தை விதி அமலில் இருந்த காரணத்தினால் ஒத்திவைக்கப்பட்டது - மாற்று தேதியாக 28.06.2019 அன்று கிராம சபைக் கூட்டம் நடத்துதல் - கூட்டப் பொருள்கள் விபரம் அனுப்புதல் - தொடர்பாக...