வியாழன், 2 செப்டம்பர், 2021

எருமப்பட்டி ஒன்றியம் - 2021 ஆகச்டு மாத ஊதியம்- ஒன்றிய ஆசிரியர்களுக்கு கிடைக்கப் பெறாமை- முதன்மைக் கல்வி அலுவலர் விரைவு நடவடிக்கை எடுக்க ஆசிரியர் மன்றம் வலியுறுத்தல்..


 

ஜாக்டோ- ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம்- கடந்த 22.01.2019 முதலான வேலைநிறுத்தப் போராட்டக்காலத்தில் தற்காலிக பணிநீக்கம் மற்றும் கட்டாய இடமாறுதல்கள் மேற்கொள்ளப்பட்டது- 22.01.2019 முதல் 13.02.2019 முடியலான காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தவும், பணப்பலன்கள் வழங்கவும் - கோருதல் சார்ந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் கோரிக்கை...





 

குழு காப்பீட்டு திட்டம் - உள்ளாட்சி அமைப்புகள், உதவி பெறும் பள்ளிகள், உதவி பெறும் கல்லூரிகள், உதவி பெறும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்கள், பஞ்சாயத்து உதவியாளர் /பகுதி நேர எழுத்தர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள், மேல்நிலைத் தொட்டி ஆபரேட்டர், பவர் பம்ப் ஆபரேட்டர் போன்ற பகுதி நேர ஊழியர்கள் பணியின் போது மரணமடைந்தால் வழங்கப்படும் தொகை ரூ.3,00,000/- லிருந்து ரூ.5,00,000/ - ஆக உயர்த்தி அரசாணை வெளியீடு!!!


Click here to download  https://drive.google.com/file/d/108FiQWDGoiAiVKYLNy0MmcyBl7DGYFKv/view?usp=drivesdk

அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன் பணம் ரூ 40 லட்சம் வழங்கப்படும். பிற நிறுவனங்களில் வாங்கிய வீட்டுக்கடனை இத்திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம். சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பு.

 அரசு ஊழியர்களுக்கு வீடு கட்டும் முன் பணம் ரூ 40 லட்சம் வழங்கப்படும். பிற நிறுவனங்களில் வாங்கிய வீட்டுக்கடனை இத்திட்டத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.


சட்டசபை மானிய கோரிக்கை அறிவிப்பு.


CLICK HERE TO DOWNLOAD

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் பொறுப்பாளர்கள் - நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உடன் சந்திப்பு

 நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திப்பு: 

-------------------------------- 




அன்புடையீர்! வணக்கம்! 


 நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் 

திரு.அ.பாலுமுத்து அவர்களை இன்று (01/09/2021 _ புதன் ) பிற்பகல் 05.45 மணியளவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் நாமக்கல் மாவட்டப் பொறுப்பாளர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தனர்.

இச்சந்திப்பில் மாவட்டச் செயலாளர் மெ.சங்கர், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் த.தண்டபாணி, நாமக்கல் ஒன்றியச் செயலாளர் அ.செயக்குமார், பொருளாளர் நா.ஜீவாஜாய், சேந்தமங்கலம் ஒன்றியச் செயலாளர் கா.சுந்தரம், எருமப்பட்டி ஒன்றியத் தலைவர் க.ஆனந்தன், புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் கொ.கதிரேசன் மற்றும் கோ.முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

-மெ.சங்கர்

செப்டம்பர் 2021 முதல் FBF சந்தா ரூ.110 ஆக உயர்வு- அரசாணை

செப்டம்பர் 2021 முதல்
FBF சந்தா ரூ.110 ஆக உயர்வு

மாதத் தவணையாக 
ரூ.60 செலுத்திக் கொண்டு இருந்தோம் 
இனிமேல் செப்டம்பர் மாதம் முதல் ரூ.110 பிடித்தம் செய்ய வேண்டும்.

இழப்பீட்டுத் தொகை 
3 லட்சத்தில் இருந்து 
5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

அதற்கான அரசாணை
👇🏻👇🏻👇🏻