திங்கள், 30 ஏப்ரல், 2018

அண்ணா பல்கலையின் இன்ஜினியரிங் 'ஆன்லைன்' கவுன்சிலிங்கிற்கான விதிகள் மே 2ல் அறிவிக்கப்பட உள்ளன...


அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள, இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்பு களில் சேர, தமிழக அரசு சார்பில், ஒற்றைச்சாளர கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு முதல், ஆன்லைனில் கவுன்சிலிங் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் வீட்டில் இருந்தபடி அல்லது அந்தந்த மாவட்ட உதவி மையங்கள் வாயிலாக, கணினி வழி ஆன்லைன் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம். கவுன்சிலிங்கிற்கான ஆன்லைன் பதிவு, மே, 3ல் துவங்குகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது. ஆனால், அறிவிக்கையில் இடம் பெற வேண்டிய கவுன்சிலிங் விதிகள் உள்ளிட்ட, மற்ற விபரங்கள் இடம் பெறவில்லை.

கவுன்சிலிங் விதிகள் குறித்த விபரங்கள், வரும், 2ம் தேதி வெளியிடப்படும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக, அறிவிக்கை வெளியிடும் போது, அதில் அனைத்து விபரங்களும், விதிகளும் இடம்பெறும். அதை பின்பற்றி, கவுன்சிலிங் பதிவுக்கு தேவையான ஆவணங்களை, மாணவர்கள் முன்கூட்டியே தயார் செய்வர்.ஆனால், இந்த ஆண்டு, முதல் முறையாக, ஆன்லைன் கவுன்சிலிங்குக்கு மாறுவதால், விதிகளை இறுதி செய்வதில், உயர்கல்வித் துறைக்கு தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, ஏற்கனவே அமைச்சரும், செயலரும் அறிவித்த கவுன்சிலிங் தேதி மற்றும் ஆன்லைன் பதிவு தேதி மட்டுமே, அறிவிக்கையாக வெளியிடப்பட்டு உள்ளது. 'மற்ற விபரங்கள், மே, 2ல் நிச்சயம் வெளியாகும்' என, அண்ணா பல்கலை இன்ஜி., கவுன்சிலிங் குழுவினர் தெரிவித்தனர்

புதிய கருவி கண்டுபிடிப்பு~ போதையில் இருந்தால் வாகனம் ஸ்டார்ட்- ஆகாது...

பார்வைத் திறன் அற்றவர்கள் பயன்படுத்தும் குச்சிகளுக்கு மாற்றாக சென்சார் வசதியுள்ள வழிகாட்டும் கருவி...

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு MPhil, PhD படிக்க தடையின்மை சான்று~ ஆவணங்களை சரிபார்த்து அனுப்ப உத்தரவு…

2017-18 நிதியாண்டுக்கு பிஎப் வட்டி 8.55 சதவீதம் வழங்க ஒப்புதல் அளித்தது நிதியமைச்சகம்...

திராவிடப் பேரொளி பேரறிஞர்.அண்ணா~ நம் அண்ணாவை முழுமையாக அறிந்து கொள்ள…

எம்பி, எம்எல்ஏ ஓய்வூதியத்திற்கு விலக்கு அளிப்பது போல் ஓய்வூதியம் பெறுவோருக்கும் வரி விலக்கு அளிக்க வேண்டும்~ ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் தீர்மானம்…

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~மாவட்ட மகளிரணி கூட்டம் அழைப்பிதழ்... [இடம்: நகராட்சி நடுநிலைப்பள்ளி, பாரதிதாசன் சாலை,இராசிபுரம். நாள்:01.05.18(செவ்வாய்) பிற்பகல் 03.00மணி]


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்,
நாமக்கல் மாவட்டம்(கிளை).
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
மாவட்ட மகளிரணி கூட்டம்அழைப்பிதழ்...
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
இடம்: 
நகராட்சி நடுநிலைப்பள்ளி,
பாரதிதாசன் சாலை,இராசிபுரம்.

நாள்:
01.05.18(செவ்வாய்)பிற்பகல் 03.00மணி

பொருள்:

1)ஜாக்டோ-ஜியோவின் 
மே 8-சென்னை முற்றுகைப்
போராட்டத்தில் பெண்ணாசிரியர் பெருமளவில்  பங்கேற்றல்.சென்னைக்கு பயண ஏற்பாடு செய்தல்.

2)பெண்ணாசிரியர்
கல்விச்சுற்றுலா ஏற்பாடுசெய்தல் 
பெண்பொறுப்பாளர்கள் மற்றும் பெண்ணாசிரியர்கள்தவறாது பங்கேற்று சிறப்பிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
ஒன்றியச்செயலாளர்கள் இக்கூட்டம் வெற்றிகரமாக நடைபெறுவதற்கு உதவிடுமாறும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
                  நன்றி.
                            அன்புடன்...
                              கு.பாரதி,
     மாவட்டஅமைப்பாளர்.

ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

வெயிலுக்கு பயந்து AC-ல் இருப்பது நல்லதா?

இணையதளம் மூலம் சார்பதிவாளர் அலுவலகத்தில் வழங்கிய வில்லங்க சான்றிதழில் தவறுஇருந்தால் சரிசெய்யலாம்...

கண்ணுக்கு தெரியாத இலக்கையும் வானில் தாக்கி அழிக்கும் தேஜாஸ் சோதனை வெற்றி...

ஓராண்டு பணி முடித்த ஓய்வூதியர்களுக்கு ஆண்டு ஊதிய உயர்வு வழங்கி தமிழக அரசு ஆணை. அரசாணை எண்: 140 / நிதித்துறை நாள் 25 .04.2018

SMS மூலம் 2 நிமிடத்தில் தேர்வு முடிவுகள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்...

National ICT Awards for School Teachers-2018...

Computer Knowledge...

8-ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறை : பள்ளிக்கல்வித்துறை புதிய முயற்சி...


8ம் வகுப்பு வரை ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முயற்சி மேற்கொண்டுள்ளது.

தமிழக பள்ளிக்கல்வித்துறையில்
வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பு, 6ம் வகுப்பு, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வருகிறது. இவற்றில் பிளஸ் 1 தவிர மற்ற வகுப்புகளுக்கு முதல் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு, மாவட்டவாரியாக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு அன்றைய தினமே பாடப்புத்தகங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வு முறையை நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இப்புதிய முயற்சியை செயல்படுத்துவதற்கான வழிமுறைகளை புதிய பாடத்திட்டங்களை வடிவமைத்தக்குழுவே தயாரித்து வழங்கியுள்ளது. அதன்படி ஆன்லைன் தேர்வுமுறைக்கு ஏற்ப புதிய பாடப்புத்தகங்களில் கேள்விகளும் இணைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து வரும் கல்வி ஆண்டில் முதல்கட்டமாக 5ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுமுறை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. அதற்கேற்ப தமிழக அரசுப்பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் முழுமையாக தொடங்கிய பின்னர் தொடக்கப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும் ஆன்லைன் தேர்வுமுறை நடைமுறைப்படுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சனி, 28 ஏப்ரல், 2018

உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு முழுத்தகுதி பெற்ற அரசு நகராட்சி/ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் பட்டியலை மாவட்ட அளவில் (Seniority List) தயார் செய்து அனுப்பக் கோருதல் சார்பு...

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பணியிடஉயர்வு மாறுதல் சார்ந்த படிவங்கள்...

மாணவர்கள் பாதுகாப்பு சார்பான முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் அறிவுரைகள்...

தகவல் தொழில்நுட்ப பயிலரங்கு (28-04-18~ நாமக்கல்) அழைப்பிதழ்...


ஆசிரியர் மன்றத்தினருக்கு வணக்கம்.

தகவல் தொழில் நுட்ப பயிலரங்குக்கு நாமக்கல் வருகை தரும்  அனைவரையும் மாவட்ட இணையக்குழுவின் சார்பில்  அன்புடன் வரவேற்கிறேன்.

தங்களுக்கு சில தகவல்கள் தெரிவிக்கிறேன்.

1)நாமக்கல் நகரப்பேருந்து நிலையத்தில் இருந்து  வளையப்பட்டி,
காட்டுப்புத்தூர்,செவிந்திப்பட்டி மற்றும்
தொட்டியம் செல்லும் நகரப்பேருந்துகளில் ஏறி திருச்சிசாலை -ஆண்டவர்பெட்ரோல்பங்கு என கேட்டு இறங்கிக்கொள்ளலாம்.பெட்ரோல்பங்குக்கு வடக்கு பக்கத்தில் பொன்விழா நகர் நுழைவு வாயில் அமைந்துள்ளது.
நுழைவு வாயிலிலேயே பள்ளியின் பெயர்ப்பலகை இருக்கிறது.
நுழைவு வாயில் வழியில் பயணித்து இரண்டாவது வடக்குபக்கச் சந்தில் திரும்பினால் பள்ளி வரவேற்கும்.எனவே எளிதாக பயிலரங்கிற்கு வரலாம்.

2)நாமக்கல் பூங்கா சாலையில் இருந்து(நாம் அடிக்கடி போராடும் இடத்தில் இருந்து) திருச்சிசாலை  ஷேர் ஆட்டோவில் பயணித்து பொன்விழாநகர்
நுழைவுவாயில் இறங்கிக்கொள்ளலாம்.

3)ஒன்றியத்தில் இருந்து குழுவாக பேருந்தில் பயணித்து  வருபவர் பேருந்து நிலையம் அடைவதற்கு முன்பாக ஈஷாகால்டாக்ஸிக்கு    அலைபேசி எண்7548884999 போன்செய்து பேருந்து நிறுத்தம் டூ மாருதிநகர் நடுநிலைப்பள்ளி என கூறி புக்செய்துக்கொள்ளலாம்.கார் டிரைவர் அழைப்பார். அவர் நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு வெளியே நிற்கச்சொல்லும் இடத்தில் நின்றால் பிக்கப் செய்து மாருதிநகர் பள்ளியிலேயே டிராப் செய்து அதாவது இறக்கி விட்டுவிடுவார்.கட்டணம்ரூ50/மட்டுமேயாகும்.

4)நாமக்கல் பேருந்து நிலையம் - மாருதிநகர் பள்ளி வரையிலான பயண உதவிகளுக்கு தேவையெனில்  எங்களைத்தொடர்பு கொள்ளுங்கள்.

திரு.மெ.சங்கர்
( 9443217553 ) ,

திரு.அ.ஜெயக்குமார்
( 9843180162 ) ,

திரு.த.தண்டபாணி  
( 94434 81828 ),

திருமதி.கு.பாரதி 
( 9843180162 ),

திருமதி.
பொன்.திலகம்
( 9486574127 ),

திருமதி.
ந.தங்கம்மாள் 
( 9486263631 )

ஆகியோரை தேவையெனில்  தொடர்புக்கொள்ளுங்கள்.

தங்களை பயிலரங்கிற்கு  எதிர்நோக்குகிறேன்.

-மெ.சங்கர்,
அமைப்பாளர்-மாவட்ட இணையக்குழு.

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

புதிய வசதிகளுடன் அப்டேட் செய்யப்பட்ட GMail...


கூகுளின் ஜிமெயில் சேவையில் பல்வேறு புதிய வசதிகள் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட நிலையில், இவை வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகின்றன.

கூகுளின் ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்படுவது சமீபத்தில் தெரியவந்த நிலையில், இவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது புதிய பட்டன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது.

புதிய அப்டேட் மூலம் இனி முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு குவிக் ரிமைன்டர்ஸ் மூலம் உடனடியாக பதில் அனுப்ப முடியும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்றே ஜிமெயில் வெப் சேவையிலும் ஸ்மார்ட் ரிப்ளைஸ் (Smart Replies) வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு குறுந்தகவல்களை வேகமாக பதில் அனுப்ப முடியும்.

இதேபோன்று அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப் (UnSubscribe) செய்ய வேண்டும் என்பதை ஜிமெயில் பரிந்துரை செய்யும். இத்துடன் ஆபத்து நிறைந்த மின்னஞ்சல்கள் வரும் போது எச்சரிக்கை செய்யும். மேலும் ஜிமெயிலில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் (Confidential Mode) மின்னஞ்சல்களை ஃபார்வேர்டு, காப்பி, டவுன்லோடு அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும்.

அதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை அனுப்பும் போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட மின்னஞ்சலில் நேரம் குறித்தவுடன் தானாக மறைந்து போகும் வசதியும் ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படுகிறது. ஜிமெயில் வெப் சேவையில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

எனினும் சில வாடிக்கையாளர்களுக்கு சில புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் வழங்கப்படும். புதிய வசதிகளை பெற வாடிக்கையாளர்கள் ஜிமெயில் செட்டிங்ஸ் (Settings) -- டிரை தி நியூ ஜிமெயில் (Try the new Gmail) அம்சங்களை தேர்வு செய்து பயன்படுத்த முடியும்.

புதிய அம்சங்கள் வேண்டாம் என்போர் மீண்டும் செட்டிங்ஸ் -- கோ பேக் டு கிளாசிக் ஜிமெயில் (Go Back to Classic Gmail) ஆப்ஷன் சென்று பழைய ஜிமெயிலையே பயன்படுத்தலாம்.

நாடு முழுவதும் 24 போலி பல்கலைக்கழகங்கள்~ மாணவர்களுக்கு யுஜிசி எச்சரிக்கை…

வியாழன், 26 ஏப்ரல், 2018

தொடக்கக் கல்வி- 01-08-2017 நிலவரப்படி அரசு மற்றும் நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் பணியிடங்கள் மாணவர்கள் எண்ணிக்கைக்குகேற்ப நிர்ணயம் செய்தல் - ஆய்வு கூட்டம் நடைபெறுதல் சார்ந்து...

தேர்வுகள் - விடைத்தாள் மதிப்பீடு - இடைநிலைப் பொதுத் தேர்வு மார்ச்/ஏப்ரல் 2018 -விடைத்தாள் மதிப்பீட்டு பணி - மதிப்பீட்டு பணிக்கு அனைத்து பட்டதாரி ஆசிரியர்கள் பணியிலிருந்து விடுவிக்கக் கோருதல்-சார்பு..

அஞ்சல் துறை ஊழியர்கள் கதர் ஆடைகளை வார வேலைநாட்களில் ஒரு நாள் அணிந்து பணியாற்றுமாறு சுற்றறிக்கை...

அஞ்சல் துறை ஊழியர்கள் கதர் ஆடைகளை வார வேலைநாட்களில் ஒரு நாள் அணிந்து பணியாற்றுமாறு
மத்திய சிறு குறு நடுத்தர தொழில்கள் துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்திருந்தது . அதனடிப்படையில் அஞ்சல் துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் வாரத்தில் ஒரு நாள் கதர் ஆடைகளை அணிந்து கிராமப்புற கைவிளைஞர்களின் நிரந்தர வாழ்வாதாரத்திற்கு உதவுமாறு அஞ்சல் துறை கேட்டுக்கொண்டுள்ளது. இது குறித்து அனைத்து மாநில அஞ்சல் நிர்வாகங்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பொதுத்தேர்வு முடிவுகள் தேதி அறிவிப்பு...


12ஆம் வகுப்பு தேர்வு முடிவு - மே 16
11ஆம் வகுப்பு தேர்வு முடிவு – மே 30
10ஆம் வகுப்பு தேர்வு முடிவு – மே 23

இரண்டாம் வகுப்பு வரை வீட்டுப்பாடம் கூடாது...

ஒருநபர்க்குழு அமைத்தல்~ One Man Committee to rectify the pay anomalies arising due to implementation of Tamil Nadu Revised Pay Rules- 2017

விவசாயிகளுக்கான நவீன செயலியை பயன்படுத்த அழைப்பு...

புதன், 25 ஏப்ரல், 2018

தகவல் தொழில்நுட்ப பயிலரங்கு (28-04-18~ நாமக்கல்) அழைப்பிதழ்...


அன்பானவர்களே !வணக்கம்.

ஒன்றியச்செயலாளர்கள் பயிலரங்கு நடைபெறும் தகவலைப்  மாநில,மாவட்டப்பொறுப்பாளர்கள் மற்றும்  ஒன்றியத்தில்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள  பொறுப்பாளர்களிடமும்  எடுத்துக்கூறி சனிக்கிழமை வரக்கூறுங்கள்.
ஒன்றியத்தின்  ஆசிரியர் - ஆசிரியைகளை அழைத்துவரக்கூறுங்கள்.
குறிப்பேடு,பேனா,
கணினி,அலைபேசி  உடன்  பயிலரங்குக்கு வரக்கூறுங்கள்.

                    ~இணையக்குழு

கற்றலில் குறைபாடு குறித்து பட்டயப்படிப்புகள் தொடக்கம்..

ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சி ஒத்திவைப்பு...

நாளுக்கு நாள் அதிகரிக்கும் வெப்பம் 8 மாவட்டத்தில் சதம் அடித்த வெயில்...

பள்ளிக் கல்வி -2011-12 ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் தற்காலிகமாக தோற்றுவிக்கப்பட்ட 3550 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், 710 ஆய்வக உதவியாளர் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4,970 பணியிடங்களுக்கு 01.01.2018 முதல் 31.12.2020 வரை தொடர் நீட்டிப்பு வழங்குதல்-ஆணை வெளியிடப்படுகிறது...

ஜாக்டோ ஜியோ ~ ஈரோடு மண்டலம் (நாமக்கல், கரூர், சேலம், ஈரோடு மாவட்டங்கள் இணைந்தது)~மே-8 முற்றுகை போராட்டம் குறித்து ஆயத்த ஆலோசனைக் கூட்டம்~ 25.4.18- புதன்கிழமை மாலை 3 மணிக்கு …


ஈரோடு மண்டலத்தைச் சேர்ந்த அனைத்து மாவட்ட, வட்டார,      வட்டக் கிளை ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் முன்னணி தோழர்களே...

 25.4.18 ம்தேதி புதன்கிழமை மாலை 3 மணிக்கு ஈரோடு சர்வேயர் ஹால் முன்புறம் (ஈரோடு தாலுக்கா அலுவலகம் பின்புறம்) மே-8 முற்றுகை போராட்டம் குறித்து ஆயத்த ஆலோசனைக்  கூட்டம் மற்றும் பிரச்சாரக் கூட்டத்தில் முன்னணி மாநில நிர்வாகிகள் கருத்துரை வழங்கவுள்ளனர்.
எனவே அனைத்து ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ள கேட்டுக் கொள்கிறோம்.

                             இப்படிக்கு,
மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்.

பயணக்குறிப்பு:

ஈரோடு கருங்கல்பாளையத்தில் இருந்து கார்,பைக் , ஆட்டோவில் செல்பவர்களும் ,ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து செல்பவர்கள். ஈரோடு பன்னீர்செல்வம்பார்க் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி just walk
செய்தால் இக்கூட்ட இடம்  அடையலாம்.

ஆசிரியர் மாணவர் விகிதம் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்..

PF _ GPF __ Rate of interest of the financial year 2018-19...

வேண்டுகோள்~ நாமக்கல் மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் அன்பான மறவர்களே!மறத்தியரே!! மே 8இல் சென்னையில் ஒன்று கூடுக!!!


மத்திய அரசுக்கு இணையான ஊதியம் தமிழ்நாட்டின் ஆசிரியர்-அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படல் வேண்டும்  என்று வலியுறுத்தி நம்முன்னோடிகள் போராட்டம் தொடங்கியப்பொழுது தமிழகத்தின்  முதலமைச்சர்.மாண்புமிகு. டாக்டர்  எம்.ஜி.ஆர் அவர்கள்.

 ஒன்றுபட்ட போராட்டம் தொடர்ந்து நடைபெற்றப்
பொழுது தமிழகத்தின்  முதலமைச்சர் மாண்புமிகு .ஜானகி இராமச்சந்திரன் அவர்கள்.

 போராட்டம்உச்சபட்ச கொதிநிலையை எட்டியப்பொழுது தமிழகத்தில் மேதகு குடியரசுத்தலைவர்ஆட்சி.தமிழகத்தின் ஆளுநர் டாக்டர்.பி.சி.அலெக்சாண்டர்அவர்கள்.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசு இல்லாதநிலையிலும் தமிழக ஆளுநரும்,தலைமைச்செயலாளரும் ஏவிய  எல்லாவிதமான அச்சுறுத்தல்களையும் துச்சமென மதித்து ஒன்றுபட்டு போராடி தமிழகத்தின் ஆளுநர் அரசை பணியச்செய்து  போராட்டத்தை அச்சுறுத்திய  தமிழகத்தின்தலைமைச்செயலாளருடன் உடன்பாடு கண்டனர் நம்முன்னோர்.

ஒன்றுபட்டு 1988இல் போராடியதால்  மத்தியஊதியம்,ஒருமாத போனஸ்ஆகியகோரிக்கைகளைதேர்ந்தெடுக்கப்பட்ட அரசு பரிசீலிக்கும் என உடன்பாடு 22.07.1988அன்று  கையெழுத்தானது.

தமிழக
மக்களால்தேர்ந்தெடுக்கபட்ட அரசு நம் கோரிக்கைகளுக்கு ஆதரவுநல்கிய மாண்புமிகு. டாக்டர்.கலைஞர் தலைமையில் அமைந்தது.

தமிழக முதல்வர்.டாக்டர்.
கலைஞர்அவர்கள் தனது  தேர்தல் வாக்குறுதியின்படி மத்திய ஊதியம் வழங்கினார்கள்.

இன்றையநாள் வரையிலும் மத்திய ஊதியத்தினை தமிழகத்தின்  ஆசிரியர்களும்,அரசு ஊழியர்களும் பெறுகின்றனர் என்றால் அதற்கு அடிப்படையான காரணம் நம்முன்னோர்களின் தியாகம்நிறைந்த போராட்டங்களும்,நம்முன்னோர்களின் போராட்டங்களை ஆதரித்து ஆதரவு போராட்டங்கள்
நடத்தியும், ஆட்சிப்பொறுப்பேற்றவுடன் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு மத்தியஊதியம் வழங்கிய டாக்டர்.கலைஞர் அவர்களின் நற்ச் செய்கையுமே  ஆகும். 

இத்தகு போராட்டப்பாரம்பரியமும்,வரலாற்றுப்பெருமையும் கொண்ட நாம் நம் முன்னோர்களை நினைவில்கொண்டு, பொதுச்செயலாளர்.பாவலர்.அய்யா அவர்களின் வழிகாட்டுதலில்  எதிர்வரும் 08.05.18இல்  ஒன்றுகூடுவோம்;
சென்னையை
முற்றுகையிடுவோம்;
வென்றுகாட்டுவோம்.
                   நன்றி.
           ~முருகசெல்வராசன்.

செவ்வாய், 24 ஏப்ரல், 2018

அரசிடம் ஓய்வூதிய விபரம் இல்லை - ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி...

BE Admission க்கு மே 3 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம்...


பொறியியல் படிப்பு சேர்க்கைக்கு மே 3 முதல் ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மே 30 ம் தேதி வரை ஆன் லைன் மூலம் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு பொறியியல் கலந்தாய்வில் 567 கல்லூரிகள் பங்கேற்றுள்ளன...

DSE PROCEEDINGS-DEC 2017 -NMMS EXAM -RESULT REG...

திங்கள், 23 ஏப்ரல், 2018

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி நாமக்கல் பூங்கா சாலை மற்றும் திருச்செங்கோடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மனிதசங்கிலி போராட்டம் (23.04.18-திங்கள்)...

காவிரி மேலாண்மை வாரியம் உடனடியாக அமைக்க வலியுறுத்தி
நாமக்கல் பூங்கா சாலை மற்றும் திருச்செங்கோடு பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மனிதசங்கிலி போராட்டம் (23.04.18-திங்கள்) மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது. 

இதில் நாமக்கல் பூங்கா சாலையில் நடைபெற்ற போராட்டத்தில் மன்றத்தின் நாமக்கல் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன் தலைமையில் மன்றப் பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

திருச்செங்கோடு பேருந்து நிலையத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பரமத்தி வேலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.கே.எஸ். மூர்த்தி அவர்களுடன் மன்றத்தின் மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் திரு.ரவிக்குமார் மற்றும் பள்ளிபாளையம் ஒன்றியத் தலைவர் திரு.கண்ணன் ஆகியோர் பங்கேற்றனர்...