வியாழன், 21 டிசம்பர், 2017

நாமக்கல் மாவட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட நீதிமன்றத்தில் கோரிக்கை மனு அளிப்பு...


நாமக்கல் மாவட்ட ஜாக்டோ ஜியோ பொறுப்பாளர்கள் இன்று (21/12/17) பிற்பகல் 03.00 மணியளவில் நாமக்கல் மாவட்ட நீதிபதியின் நேர்முக உதவியாளர் அவர்களை சந்தித்து 
ஜாக்டோ ஜியோ அமைப்பின் கோரிக்கை மனுவை  அளித்தனர்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு இம்மனுவை அனுப்பி வைக்குமாறு  கேட்டுக் கொண்டனர். 

இச்சந்திப்பு நிகழ்வில் மன்றத்தின் மாவட்டச் செயலாளர் திரு.முருகசெல்வராசன், மாநில விதிமுறைக்குழு உறுப்பினர் திரு.இராஜேந்திரன், மாநில தீர்ப்புக்குழு உறுப்பினர் திரு.பன்னீர்செல்வம், புதுச்சத்திரம் ஒன்றியத் தலைவர் திரு.பன்னீர்செல்வம், செயலாளர் திரு.கதிரேசன் , கபிலர்மலை செயலாளர் திரு.சங்கர் மற்றும் நாமகிரிப்பேட்டை செயலாளர் திரு.மோகன்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Phonetic Songs: 11~15…

பதவி உயர்வில் தவறுதலாக option கொடுத்து குறைவான ஊதியம் கிடைத்தால் G.o: 311ன்படி மீண்டும் மறுநிர்ணயம் (reoption) செய்து கொள்ளலாம்...

திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்களுக்கு அரசு பணி வழங்கலாம் அரசாணை வெளியீடு...


தமிழக உயர்கல்வித்துறை முதன்மை செயலாளர் சுனில்பாலீவால் வெளியிட்டுள்ள அரசாணையில் கூறப்பட்டுஇருப்பதாவது:

10–ம் வகுப்பு, பிளஸ்–2 ஆகிய வகுப்புகளில் தேர்ச்சி பெற்றபிறகு பல்கலைக்கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் சேர்ந்து இளங்கலை மற்றும் முதுகலைபட்டப்படிப்பு படித்து பட்டம் பெறலாம். பின்னர், தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் நேரடி முறையில் சேர்ந்து, முழுநேரமாகவோ அல்லது பகுதி நேரமாகவோ எம்.பில்., பி.எச்டி. ஆகிய படிப்புகள் படித்து பட்டங்கள் பெறுபவர்களுக்கு, அரசு மற்றும் அரசு சார்ந்த நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் பணிநியமனம் மற்றும் பதவி உயர்வு வழங்கலாம் என அங்கீகரித்து ஆணையிடப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

TNPSC-DEPARTMENTAL EXAM,DECEMBER -2017~ Hall Ticket Download…

Power Point-2010~அனைத்து விளக்கங்களுடன்...

வெளியானது அதிகாரப் பூர்வமான EMIS APP...

DEE PROCEEDINGS - அரசுப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வைப்பு நிதி கணக்குகள் | அரசு தகவல் தொகுப்பு மையத்தில் இருந்து மாநில கணக்காயருக்கு மாற்றம் செய்யப்பட்டது நிலுவை விவரங்கள் சார்ந்து- இயக்குனர் செயல்முறைகள்...

EMIS - SPD - VIDEO CONFERENCE MEETING(20-12-17)- SPD'S Instructions....


🖥ஆதார் பதிவு ELCOT மூலம் எடுப்பது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

🖥ஆதார் எடுப்பதற்கு தேவையான வசதிகளை (permanent aadhaar kit with technicians) ஒரு ஒன்றியத்தில் ஒரு உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்பாடுகள் செய்வது.

🖥EMIS entry தற்போது உள்ள இரண்டு மாவட்ட தொகுப்பினை மூன்று மாவட்ட தொகுப்பாக மாற்றம் செய்வது.

🖥அரசின் அதிகாரப்பூர்வமான EMIS - Mobile phone android Application இன்று (20/12/17) மாலை 4.00 மணிக்கு மேல் வெளியிடுவதாக தகவல். Application download செய்வது சம்பந்தப்பட்ட தகவல்கள் வந்த பிறகு பணிகள் மேற்கொள்ளவும். இதர application download செய்து பதிவேற்றம் செய்ய வேண்டாம்.

🖥EMIS entry- மேற்கொள்வதற்கான data recharge செலவு அனைத்து பள்ளிகளின் SMC A/cல் செலுத்தப்படும்.
மேற்படி தொகையினை பணி மேற்கொள்வோர்களுக்கு அந்தந்த பள்ளிகள் மூலம் வழங்குவது.