திங்கள், 5 நவம்பர், 2018

முன்னறிவிப்பு இன்றி மாணவர்களின் வாசிப்பு திறன் ஆய்வு நடத்த உத்தரவு

பள்ளி மாணவர்களின் வாசிப்பு திறன் எப்படி: ஆய்வு நடத்த உத்தரவு

எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, வாசிப்பு பயிற்சி அளிப்பதற்கான கால அவகாசம் நிறைவடைந்ததால், பள்ளிகளில் ஆய்வு நடத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது

மத்திய அரசின், தேசிய கற்றல் அடைவுத்தேர்வு(நாஸ்) முடிவுகள், வாசிப்பு பயிற்சியில் தமிழக மாணவர்கள் பின்தங்கியிருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது. இதனால், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும், மாணவர்களை தரம் பிரித்து, வாசிப்பு பயிற்சி அளிக்குமாறு, செப். துவக்கத்தில் இயக்குனர் ராமேஸ்வர முருகன் உத்தரவிட்டார்.
பள்ளி நேரத்தில், கற்றலில் பின்தங்கியோருக்கு சிறப்பு வகுப்புகள் எடுக்கவும், அக்., இறுதிக்குள், பயிற்சி அளிக்கவும், ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இயக்குனர் அளித்த காலஅவகாசம், முடிவடைந்த நிலையில், மாவட்ட வாரியாக, மாணவர்களின் வாசிப்பு திறன் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது. தீபாவளி விடுமுறைக்குப் பின், ஆய்வு நடத்த திட்டமிட்டுள்ளதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


முன்னறிவிப்பின்றி ஆய்வுஆசிரியர் பயிற்றுனர்கள் கூறுகையில்,'பள்ளிகளில் தினசரி வாசிப்பு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் எந்தளவுக்கு அதை உள்வாங்கி கொண்டனர் என்பது, ஆய்வின் போது தான் தெரியவரும். முன்னறிவிப்பின்றி பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படும்' என்றனர்.

ஆன்லைன் மூலம் கற்பித்தல்: பள்ளிகளில் ஆய்வு

ஆன்லைன் மூலம் கற்பித்தல்: பள்ளிகளில் ஆய்வு நடத்த முடிவு

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்க றிமுகப்படுத்தப்பட்டுள்ள க்.யூ. ஆர். கோடு, தீக்ஷா செயலி ஆகியவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், "க்யூ.ஆர்.,' கோடு மூலமாக கற்பிக்கும் முறை நிகழாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், பெற்றோரும் பாடத்திட்ட கருத்துகளை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் " தீக்ஷா' செயலியில் உள்ள விடியோகளை பதிவிறக்கி வகுப்புகளில் கையாளவும், ஆன்லைன் தேர்வு நடத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் செயல்படும் விதம் குறித்து, பள்ளிக் கல்வித்துறையின் "தீக்ஷா' திட்ட குழுவினர், பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்தவுள்ளனர்.
இது குறித்து "சமக்ர சிஷ்யா அபியான்' கூடுதல் திட்ட இயக்குநர் குப்புசாமி வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசு உருவாக்கிய, தீக்ஷா செயலியில், மாநில பாடத்திட்டத்திற்கான, டிஜிட்டல் கருத்துகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதைப் பயன்படுத்தும் பள்ளிகளை ஊக்குவிக்கவும், ஆசிரியர்களிடம் இருந்து, புதிதாக இச்செயலியில் சேர்க்கப்பட வேண்டியவை குறித்த, கருத்துக்களைப் பெறவும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.

நடப்பாண்டில் அரசு பணிக்காக 17 ஆயிரம் பேர் தேர்வு: டி.என்.பி.எஸ்.சி செயலாளர் நந்தகுமார்








சென்னை: நடப்பாண்டில் தமிழக அரசுப் பணிக்கு 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய செயலாளர் நந்தகுமார் தெரிவித்துள்ளார்

சென்னையில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் சுதன் மற்றும் டி.என்.பி.எஸ்.சி. செயலாளர் நந்தகுமார் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், நடப்பாண்டில் தேர்வு மூலம் அரசுப் பணிக்கு 17 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விரைவில் பல துறைகளில் பணி அமர்த்தப்பட உள்ளதாக தெரிவித்தனர்.
அனைத்து அரசுத் தேர்வுகளுக்கும் தேர்வு தாள், தமிழ், ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், குரூப் 2 தேர்வுகளில், தமிழில் தேர்வு தாள் தயாரிக்கும் வடிவமைப்பாளர்கள் இல்லாததால் ஒரு சில தேர்வுகளை ஆங்கிலத்தில் நடத்த உள்ளதாக தெரிவித்தனர்.



இணையதளம் மூலம் ஆவணங்கள் சரிபார்ப்பதை அறிமுகப்படுத்தியததால் இந்த ஆண்டு அதிகப்படியான விண்ணப்பம் பதிவு செய்யப்பட்டதாக கூறிய அவர்கள் வரும் 11-ஆம் தேதி தொடங்கும் குரூப் 2 தேர்வுகளை 6 லட்சத்து 26 ஆயிரத்து 503 பேர் தேர்வு எழுதவுள்ளனர் என தெரிவித்தனர்.

மேலும், குரூப்-1 தேர்விற்கு இனி மேல் 10 மாதங்களில் இறுதி முடிவு வெளியிடப்படும். அறிவிக்கை வெளியிட்ட 2 மாதத்தில் முதல்நிலை தேர்வு, அடுத்த 2 மாதத்தில் தேர்வுக்கான முடிவு வெளியாகும்.

அண்மையில் நீதிபதி பணியிடங்களுக்கான முதனிலைத் தேர்வு, முதன்மை எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு உள்ளிட்ட அனைத்தும் முடிக்கப்பட்டு தேர்வு செய்யப்பட்டோரின் விவர பட்டியல் அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கூறினர்.

Indian Coast Guard Recruitment 2018 Assistant Commandant | Any Degree


Indian Coast Guard Recruitment 2018 2019 |Indian Coast Guard invites Online Application for the post of Assistant Commandant Posts. Indian Coast Guard Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) Jobs Notification 2018 Released. Indian Coast Guard invites online applications for appointment in following Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) post in Indian Coast Guard. 

Opening Date and time for Submission of Application is 08.11.2018 and end up by 30.11.2018. You can check here Indian Coast Guard Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, Indian Coast Guard Selection Process, How to apply, Indian Coast Guard Syllabus, Indian Coast Guard Question Paper, Indian Coast Guard Admit Date Release Date, Indian Coast Guard Exam Date, Indian Coast Guard Result Release Date & other rules are given below.

Indian Coast Guard Recruitment 2018 Notification Highlights – Apply Soon

Organization Name: Indian Coast Guard

Job Category: Central Govt Jobs

No. of Posts: Various Vacancies

Name of the Posts: Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) & Various Posts
Qualification: 12th, B.E/B.Tech, Degree in Law

Job Location: All over India

Selection Procedure: Psychological Test/ Group Task/ Medical Standards, Interview
Application Apply Mode: Online

Starting Date: 08.11.2018
Last Date: 30.11.2018
Name of the Post & No of Vacancies:
Assistant Commandant
Eligibility Criteria for Indian Coast Guard Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer):

General Duty – (i) Candidates who have passed Bachelor’s degree from any recognised university with minimum 60% marks in aggregate (i.e. 1 st Semester to 8th Semester for BE/B.Tech Course or 1st year to last year for Bachelor Degree candidates wherever applicable). (ii)Mathematics and Physics as subjects up to intermediate or class XIIthof 10+2+3 scheme of education or equivalent.(Candidates not in possession of Physics and Maths in 10+2(intermediate) or equivalent level are not eligible for General Duty (GD) and General Duty (SSA)
General Duty(SSA) – (i) Candidates who have passed Bachelor’s degree from any recognised university with minimum 60% marks in aggregate (i.e. 1 st Semester to 8th Semester for BE/B.Tech Course or 1st year to last year for Bachelor Degree candidates wherever applicable). (ii)Mathematics and Physics as subjects up to intermediate or class XIIthof 10+2+3 scheme of education or equivalent.(Candidates not in possession of Physics and Maths in 10+2(intermediate) or equivalent level are not eligible for General Duty (GD) and General Duty (SSA)
Commercial Pilot Entry (CPL) (SSA) – Candidates holding current /valid Commercial Pilot Licence (CPL) issued/ validated by Director General of Civil Aviation (DGCA).

 Minimum educational qualification – XIIth pass (Physics and Mathematics)with 60% marks in aggregate

Law – A degree in Law with minimum 60% marks from a recognized university. (Three years degree in law after graduation or Five years after 10+2 examination)

Salary Details:

Assistant Commandant – Rs.56100/-
Deputy Commandant – Rs. 67700/-
Commandant (JG) – Rs. 78800/-
Commandant – Rs. 123100
Deputy Inspector Genera – Rs. 131100/-
Inspector Genera – Rs. 144200/
Additional Director General – Rs. 182200/-
Director General – Rs. 205400/-

Indian Coast Guard Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) Selection Procedure:
Psychological Test/ Group Task/ Medical Standards
Interview
How to apply Indian Coast Guard Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) Vacancy?

Step 1: Log on to Indian Coast Guard Careers Page at official website to www.joinindiancoastguard.gov.in
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit” & Make Payments
Step 8: Take a print out of online application for future use.

Important Dates to Remember:
Starting Date for Submission of Application: 08.11.2018
Last date for Submission of Application: 30.11.2018
Date of Examination: 17 Dec 2018 to 17 Jan 2019

Online Application & Official Notification Links:
Indian Coast Guard Official Website Career Page: Click Here

Indian Coast Guard Official Notification PDF: Click Here

Indian Coast Guard Online Application Form: Click Here

Apply Mode: Online

பிப்ரவரி இறுதியில் CBSE பொது தேர்வு...


அடுத்த ஆண்டு, பிப்ரவரி இறுதி வாரத்தில், பொது தேர்வுகள் துவங்கும்' என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்து உள்ளது.

பத்தாம் வகுப்பு மற்றும், பிளஸ் 2வில், சி.பி.எஸ்.இ., பொது தேர்வுகள் தாமதமாவதால், மாணவர்கள் உயர் கல்வியில் சேர்வது பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக, டில்லி உயர் நீதிமன்றம் மற்றும் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுப்படி, நடப்பு கல்வியாண்டுக்கான தேர்வை முன்கூட்டியே நடத்த, சி.பி.எஸ்.இ., முடிவு செய்துள்ளது.

அதாவது, 2019 மார்ச்சுக்குள் தேர்வை முடிக்க திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரபூர்வ கால அட்டவணை, 15ம் தேதிக்குள் வெளியிடப்படலாம்.இந்நிலையில், அனைத்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும், சி.பி.எஸ்.இ., தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, சன்யம் பரத்வாஜ் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, பிப்ரவரி இறுதியில், பொது தேர்வை துவக்க திட்டமிடபட்டுள்ளது. பிப்., இறுதி வாரத்தில்,தொழிற்கல்வி பாடங்களுக்கு தேர்வுகள் துவங்கும். அதன்பின், மற்ற முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்படும்.எனவே, பள்ளிகள் மாணவர்களின் விபரங்களை, தாமதமின்றி பதிவு செய்ய வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு, அந்தந்த மண்டல அதிகாரிகளை அணுகவும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

அனைத்து தேர்வுக்கும் தமிழ், ஆங்கில வினாத்தாள் ~TNPSC…

அனைத்து தேர்வுகளுக்கும் இனி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வினாத்தாள் அமைக்கப்படும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.

தமிழக அரசு துறையில், காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான,டி.என்.பி.எஸ்.சி., வழியாக போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இந்த தேர்வுகளுக்கு தமிழ் மற்றும் ஆங்கில வழி என இரண்டு வகைகளில் வினாக்கள் வழங்கப்படும்.

இந்நிலையில் சில பாடங்களுக்கு மட்டும், தமிழ் வழியில் வினாத்தாள் தயாரிப்பதில்லை என்ற, புகார் எழுந்தது. இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி.,யின் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சுதன் மற்றும் செயலர் நந்தகுமார் கூறியதாவது: 

'குரூப் - 2' தேர்வில், அரசியல் அறிவியல் பாடத்துக்கு மட்டும், தமிழ் மொழி பெயர்ப்பாளர்கள் சரியாக அமையாததால், அதற்கு, ஆங்கில வழி வினாத்தாள் தயாரிக்கப்படுகிறது.

எதிர்காலத்தில் அனைத்து பாடங்களுக்கும், தமிழ் மற்றும் ஆங்கில வழியில் வினாத்தாள் தயாரிப்பை இலக்காக வைத்து, நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

தீபாவளி தினத்தன்று அரசு அறிவிப்பை மீறி வெடி வெடித்தால் வழக்கு...

டெபிட் கார்டு எண்ணிக்கை 100 கோடியை எட்டுகிறது...

தீபாவளி பண்டிகையையொட்டி தீயணைப்பு படை வீரர்களுக்கு 2நாட்கள் விடுமுறை இல்லை~ 24 மணி நேர கண்காணிப்பில் இருக்க உத்தரவு…

பயோகெமிஸ்ட்ரி படித்தால் பி.எட்., சேர்க்கை இல்லை~ ஆசிரியர் பல்கலைக்கழகம் அறிவிப்பு…

அறிவியல்-அறிவோம்: கண்ணீர் காரணம் அறிவோம்...

பொதுவாக அழுதால்தான் கண்ணீர் வரும்என்று நாம் நம்புகிறோம். ஆனால், சாதாரணமாகவே கண்ணில் கண்ணீர் (Tears) சுரந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும், நாம் அதை பெரும்பாலும் உணர்வதில்லை.

நெற்றியில் புருவம் தொடங்குமிடத்துக்குப் பக்கத்தில் கண்ணுக்கு ஒன்று வீதமாக இரண்டு கண்ணீர் சுரப்பிகள் இருக்கின்றன. கண்ணீர் சுரப்பியில் சுரக்கும் கண்ணீர், கண்இமைத்தலின் மூலமாக மேல் மற்றும் கீழ் இமைகளின் விளிம்போரத்தில் இருக்கும் சிறிய திறப்பு வழியாக, கண்ணீர் நாளக்குழாய் மூலம் கண்ணீர்ப்பையை (Lacrimal Sac) அடைகிறது. பிறகு அங்கிருந்து மூக்குக்கும் தொண்டைக்கும் சென்று ஆவியாகிவிடுகிறது. இது தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு செயல்.


ஒருவர் அழும்போது உணர்ச்சிவசப்படுவதால் கண்ணீர் சுரப்பிகள் தூண்டப்பட்டுக் கண்ணீர் அதிகமாகச் சுரக்கிறது. இதனால், திடீரென வெள்ளப்பெருக்குபோல் உற்பத்தியாகும் கண்ணீர், இமைகளில் உள்ள திறப்புவழியாக முழுவதுமாக வெளியேற முடியாத நிலையில், எஞ்சிய கண்ணீர் கண்ணிலிருந்து தாரை தாரையாகக் கன்னங்களில் வடிகிறது. இதுபோன்ற நேரத்தில்தான், கண்ணீரை நாம் உணர்கிறோம். அழும்போது அதிகப்படியான கண்ணீர் உள்ளே செல்வதால்தான் மூக்கும் ஒழுகுகிறது.


இயல்புக்கு மாறான கண்ணீர்
பிறந்த குழந்தைக்கும் சிலநேரம் இயல்புக்கு மாறாகக் கண்ணிலிருந்து நீர் வடியலாம். கண்ணில் ஏற்பட்ட (Infection) நோய்த்தொற்று, இதற்குக் காரணமாக இருக்கலாம். 

சில நேரம் கண்ணீர்ப்பையில் ஏற்பட்ட அடைப்பும் காரணமாக இருக்கலாம். 

கண்ணில் நோய்த்தொற்று ஏற்பட்டிருந்தால் சொட்டுமருந்து மூலம் சரிசெய்யலாம். 

கண்ணீர்ப்பையில் அடைப்பு ஏற்பட்டிருந்தால், சிலருக்குச் சொட்டுமருந்துடன் மருத்துவர் சொல்கிறபடி மூக்குக்கு அருகில் 'மசாஜ்' செய்ய வேண்டிவரும். ஒருசில குழந்தைகளுக்குச் சிறிய அறுவைசிகிச்சையும் செய்ய வேண்டியிருக்கலாம்.


பள்ளி செல்லும் வயதில் குழந்தைகளுக்குக் கண்ணில் நீர் வடிவதற்கு, பார்வைக் குறைபாடு காரணமாக இருக்கலாம். கண் மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, தேவைப்பட்டால் கண்ணாடி போட்டாக வேண்டும். தாமதித்துச் செல்லும்போது, கண்ணாடியின் 'பவர்' அதிகமாகிவிட வாய்ப்புள்ளது. இது எதிர்காலத்தில் பார்வையைப் பாதிக்கலாம்.

 கண்ணின் இமையோரங்களில் நோய்த்தொற்று இருந்தாலும் நீர் வரலாம். குழந்தைகள் சுயசுத்தத்தை பராமரிக்காததாலும் சத்துக்குறைபாடு காரணமாகவும் இப்பிரச்சினை பெரும்பாலும் ஏற்படுகிறது. சிலருக்குக் கண் இமையோர முடி, கண்ணுக்கு உட்புறமாக வளைந்து விழிக்கோளத்தை உரசுவதன் மூலமும் நீர் வரும். 

இதையெல்லாம் ஒரு கண்மருத்துவர் கண்டறிந்து, உரிய சிகிச்சையைத் தர முடியும்.

மின்னணு சாதனங்களும் கண்ணீரும்
தொலைக்காட்சியில் வைத்த கண் வாங்காமல் நிகழ்ச்சிகளை நீண்டநேரம் பார்க்கும்போது, குழந்தைகள் நீண்டநேரம் வீடியோ கேம்ஸ், மொபைல் கேம்ஸ் விளையாடும்போதும் கண் விரைவாகக் களைத்துப் போய்விடும். இன்றைக்கு டாப்லெட் கணினியிலோ, கைப்பேசியிலோ முகநூல், இணையதளங்களைப் பலரும் மேய்ந்துகொண்டே இருக்கிறார்கள். போதாக்குறைக்கு இப்போது வாட்ஸ்அப் வேறு வந்துவிட்டது. நேரங்காலம் தெரியாமல் நள்ளிரவு 12, 1 மணிவரையிலும், மீண்டும் அதிகாலை 4, 5 மணிக்கெல்லாம் வாட்ஸ்அப்பில் மூழ்கிவிடுகிறார்கள். கண்ணுக்கு நாம் தரும் இதுபோன்ற அதிகப்படியான வேலைப்பளு தொடர் நெருக்கடியால் கண்ணிலிருந்து நீர் வடியலாம்.

சிலர் கண்ணில் நீர் வடிந்தால் உடனே சொட்டுமருந்து வாங்கிப் போடுவார்கள். நீர்வடிதலுக்குக் காரணம், ஒருவேளை கண்ணில் இருக்கும் சிறு தூசியாகக்கூட இருக்கலாம். தூசி இருப்பதை எல்லா நேரமும் கண்டறிந்துவிட முடியாது. இந்தத் தூசி மேல் இமையின் உட்புறத்திலோ அல்லது கருவிழியிலோ ஒட்டியிருக்கக்கூடும். சொட்டுமருந்து போடுவதன் மூலம் தூசி வெளியேற வாய்ப்பில்லை. அந்தத் தூசியைக் கண்ணுக்குப் பாதிப்பின்றிக் கண்மருத்துவரால் மட்டுமே எடுக்கமுடியும். அதை விடுத்துச் சுயமாகச் சொட்டுமருந்தைப் போட்டுக்கொண்டே இருந்தால், தூசி வெளியேறாமல் கருவிழியில் புண் ஏற்பட்டுப் பிரச்சினை மோசமடையவும் சாத்தியம் உண்டு. இது தவிரக் கண்ணில் ஏற்படும் ஒவ்வாமை பிரச்சினைகளாலும் நீர் வடியலாம்.

அறுவைசிகிச்சையும் நீர்வடிதலும்
கண்புரை, கண்நீர் அழுத்த உயர்வு, மாறுகண் என்று பலவிதக் காரணங்களுக்காகக் கண்ணில் அறுவைசிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதில் அறுவைக்குப் பின் நாள்பட்ட நிலையில் கண்ணிலிருந்து நீர் வடிய வாய்ப்பு உண்டு. நோய்த்தொற்றோ அல்லது அறுவைக்குப் போடப்பட்ட தையலின் எச்சங்களோ இருந்தாலும் நீர் வடியலாம்.
கண்ணீர்ப்பை பிரச்சினைகள்
கண்ணிலிருந்து உற்பத்தியாகும் நீர், மேல்-கீழ் இமைகளில் உள்ள சிறிய திறப்புகள் வழியாக வெளியேறி நீர்ப்பையை அடைகிறது. இந்த நீர் செல்லும் பாதையான கண்ணீர் நாளக்குழாயில் எங்கேயாவது தடங்கல் ஏற்பட்டாலும் அல்லது நீர்ப்பையில் நோய்த்தொற்று ஏற்பட்டாலும் நீர் வடியலாம். மருந்தின் மூலமோ அல்லது பிரச்சினைக்கேற்பவோ அறுவைசிகிச்சை செய்ய வேண்டியிருக்கும்.
மற்றக் காரணங்கள்
அதிக ஒளியைப் பார்த்தாலும் சிலருக்குக் கண்ணீர் அதிகமாக வரலாம். தரமான குளிர்க்கண்ணாடி (Sun Glass) அணிவதன் மூலம் இதிலிருந்து விடுபடலாம். அதேபோல வெல்டிங் போன்ற அதிக வெப்பம், அதிக ஒளியில் தொடர்ந்து நீண்ட நேரம் வேலை செய்பவர்கள், அதற்குரிய பாதுகாப்புக் கண்ணாடியை அணிந்துதான் வேலை செய்ய வேண்டும். இது கண்ணை அதிக வெப்பத்திலிருந்து பாதுகாத்து நீர்வடிதலை கட்டுப்படுத்துவதுடன், நாளடைவில் கண்ணின் கருவிழி கெட்டுப்போகாமலும் பாதுகாக்கிறது.
சிலருக்குப் பயம் காரணமாகக் கண்ணீர் வரும். இன்னும் சிலருக்கு எந்தக் காரணமும் இன்றி கண்ணீர் வந்துகொண்டேயிருக்கும். அவர்கள் தீவிர மனச்சோர்வு / மனச்சிதைவால் பாதிக்கப்பட்டிருக்கலாம். முறையான கவுன்சலிங் மூலம் அவர்களை ஆற்றுப்படுத்திக் கண்ணீர் வருவதை நிறுத்தலாம்.