திங்கள், 5 நவம்பர், 2018

ஆன்லைன் மூலம் கற்பித்தல்: பள்ளிகளில் ஆய்வு

ஆன்லைன் மூலம் கற்பித்தல்: பள்ளிகளில் ஆய்வு நடத்த முடிவு

பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் கற்பிக்க றிமுகப்படுத்தப்பட்டுள்ள க்.யூ. ஆர். கோடு, தீக்ஷா செயலி ஆகியவை எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பது குறித்து பள்ளிகளில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. தமிழக பள்ளிகளில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில், "க்யூ.ஆர்.,' கோடு மூலமாக கற்பிக்கும் முறை நிகழாண்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆசிரியர்கள் மட்டுமல்லாமல், பெற்றோரும் பாடத்திட்ட கருத்துகளை தெரிந்து கொள்ள முடியும். இத்துடன் " தீக்ஷா' செயலியில் உள்ள விடியோகளை பதிவிறக்கி வகுப்புகளில் கையாளவும், ஆன்லைன் தேர்வு நடத்தவும் ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தத் திட்டங்கள் செயல்படும் விதம் குறித்து, பள்ளிக் கல்வித்துறையின் "தீக்ஷா' திட்ட குழுவினர், பள்ளிகளில் முன்னறிவிப்பின்றி ஆய்வு நடத்தவுள்ளனர்.
இது குறித்து "சமக்ர சிஷ்யா அபியான்' கூடுதல் திட்ட இயக்குநர் குப்புசாமி வெளியிட்ட அறிக்கையில், "மத்திய அரசு உருவாக்கிய, தீக்ஷா செயலியில், மாநில பாடத்திட்டத்திற்கான, டிஜிட்டல் கருத்துகள் அதிகளவில் இடம்பெற்றுள்ளன. இதைப் பயன்படுத்தும் பள்ளிகளை ஊக்குவிக்கவும், ஆசிரியர்களிடம் இருந்து, புதிதாக இச்செயலியில் சேர்க்கப்பட வேண்டியவை குறித்த, கருத்துக்களைப் பெறவும் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்' எனக் கூறப்பட்டுள்ளது.