வெள்ளி, 31 ஜூலை, 2020

விடுதலைநாள்விழாகொண்டாட்டம்!பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை!

விடுதலைநாள்விழாகொண்டாட்டம்!பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை!

ஜூலை 31, வரலாற்றில் இன்று.இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் இன்று

ஜூலை 31,  வரலாற்றில் இன்று.

இந்திய சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் இன்று
.

பாண்டிய மண்டலத்தின் படைத்தளபதியாக இருந்த கரியான் சர்க்கரை என்ற தளபதிக்கு பாண்டி வேந்தன் காங்கயத்தை ஒட்டிய நத்தக் கரையூரை பரிசாக அளித்தான். இந்த சர்க்கரை மரபில் பிறந்தவர்தான் சின்னமலை. பெற்றோர் வைத்த பெயர் தீர்த்தகிரி. பழையகோட்டைக்குப் பக்கத்தில் மேலப் பாளையத்தில் 1756 ஏப்ரல் 17ஆம் தேதி பிறந்தார் என்று பழையகோட்டை ஜமீன் பரம்பரைக் கணக்குப் பிள்ளையின் வீட்டில் அண்மையில் கிடைத்த ஓலைச்சுவடிகள் தெரிவிக்கின்றன.

1760இல் மைசூர் மன்னர் ஆனார் ஹைதர் அலி. அப்போது கொங்குநாடு மைசூரின் ஆளுகைக்கு உட்பட்டிருந்த்து. தென் கொங்கு மண்டலத்தில் வசூலிக்கப்படும் வரிப்பணம் மைசூருக்கு அனுப்பப்பட்டு வந்தது. ஆங்கிலேயருக்கு எதிராகப் போரில் தோற்று விட்டார் ஹைதர் அலி.

மைசூருக்குச் செல்ல வேண்டிய வரிப்பணத்தைப் பறித்து ஏழைகளுக்குப் பகிர்ந்தளித்தார் தீர்த்தகிரி. திவானுக்கு என்ன பதில் சொல்வது என்று சிப்பாய்கள் கேட்டதற்கு, “சென்னிமலைக்கும் சிவன்மலைக்கும் நடுவே ஒரு சின்னமலை பறித்துக்கொண்டான்” என்று சொல் என்றாராம் தீர்த்தகிரி. அது முதலாக, சின்னமலை என்ற பெயர் நிலைத்து விட்டது.

ஹைதர் அலிக்குப் பிறகு பதவியேற்ற திப்பு சுல்தானை சந்திக்கச் சென்ற சின்னமலை அங்கேயே போர்ப் பயிற்சி பெற்றார். பின்னர் ஆங்கிலேயர்களுக்கு எதிரான போரில் சின்னமலையை தளபதியாக்கினார் திப்பு சுல்தான்.

மாலஹள்ளி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் 40,000 சிப்பாய்களை விரட்டியடித்தார் சின்னமலை. பின்னர் 1799ஆம் ஆண்டு நான்காவது மைசூர் போரில் திப்பு சுல்தான் சேனை வீழ்ந்த்து. தப்பிவந்த சின்னமலை, நொய்யல் ஆற்றின் கரையில் ஓடாநிலை என்னும் இடத்தில் வலுவான கோட்டை ஒன்றை அமைத்துக் கொண்டார்.

கோவை கோன் என்றழைக்கப்பட்ட சின்னமலை ஐந்தாண்டுகள் சிறப்பாக ஆட்சி புரிந்தார். திப்புவின் ஆட்சிக்கு உட்பட்ட அனைத்துப் பகுதிகளும் ஆங்கிலேயர் வசமாகி விட்டன. ஆனால் கொங்கு மண் மட்டும் அவர்களுக்கு பெரிய சவாலாக இருந்த்து.

சின்னமலையை வீழ்த்த வேண்டும் என்று கர்னல் மேக்ஸ்வெல் தலைமையில் திரண்டு வந்த ஆங்கிலேயப் படைக்கும் சின்னமலையின் படைக்கும் இடையே 1801ஆம் ஆண்டு முதல் போர் நிகழ்ந்தது. வெற்றி சின்னமலைக்கே கிடைத்த்து. 1802ஆம் ஆண்டு மேக்ஸ்வெல் மீண்டும் படை திரட்டி வந்தான். அவனுடைய தலையைக் கொய்து காட்சிக்கு வைத்தார் சின்னமலை.

சின்னமலையின் படைத்தலைவர் கருப்பச் சேர்வை பிரெஞ்ச் மொழி பயின்றிருந்தார். பிரெஞ்சுக்காரர்களை வரவழைத்து துப்பாக்கிப் பயிற்சிகள் தரப்பட்டது. பீரங்கிகளையும் துப்பாக்கிகளையும் தயாரிக்கும் தொழில் நுட்பத்தையும் அறிந்து கொண்டார் சின்னமலை.

1804ஆம் ஆண்டு கர்னல் ஹாரிஸ் தலைமையில் ஆங்கிலேயப் படை சின்னமலையுடன் மோதியது. அப்போதும் சின்னமலை வெற்றி பெற்றார். ஆத்திரமடைந்த ஆங்கிலேயர்கள் பெரும்பெரும் பீரங்கிகளுடன் புறப்பட்டனர். பீரங்கிகளை எதிர்த்துப் போரிட முடியாது என்பதால், பழனி மலைப்பகுதியில் இருந்த கருமலையில் தஞ்சம் புகுந்து விட்டார் சின்னமலை. அவரது கோட்டை தகர்க்கப்பட்டது.

வீரத்தால் அவரைப் பிடிக்க முடியாத ஆங்கிலேயர்கள் தமது வழக்கமான சூழ்ச்சியைப் பயன்படுத்தினர். வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு ஒரு எட்டப்பன் வாய்த்தது போல, சின்னமலையைக் கைது செய்ய அவருடைய சமையல்காரனாக இருந்த நல்லப்பன் வாய்த்தான். சூழ்ச்சியால் சின்னமலையைக் கைது செய்த ஆங்கிலேயர்கள் 1805 ஜூலை 31ஆம் நாள் அவரைத் தூக்கிலிட்டனர்.

வெள்ளையரை எதிர்த்து போரில் மூன்றுமுறை வெற்றி பெற்ற சின்னமலையின் வரலாறு இன்னும் பலருக்கும் தெரியாது, முழுமையாகவும் தெரியாது.

சின்னமலை தூக்கிலிடப்பட்ட சங்ககிரியில் தீரன் சின்னமலை நினைவு மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

ஜூலை 31, வரலாற்றில் இன்று. உத்தம் சிங் நினைவு தினம் இன்று (1940).

ஜூலை 31, வரலாற்றில் இன்று.

உத்தம் சிங் நினைவு தினம் இன்று (1940).

ஜாலியன் வாலாபாக்கில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்று குவித்த ஜெனரல் டையரை நமக்குத் தெரியும்...

இந்திய வரலாற்றின் மறக்க முடியாத அந்தக் ஜாலியன் வாலாபாக் கோரச் சம்பவம், 15 நிமிடங்களுக்குள் நடந்தேறியது.

 1000 பேருக்கும் மேலான மக்கள் ஜெனரல் டயர் என்பவனால், கொன்று குவிக்கப்பட்டனர்.

 2,000 பேருக்கும் அதிகமானோர் குற்றுயிரும் குலை உயிருமாகத் துடித்துக்கொண்டு இருந்தனர்.

 ஒவ்வொரு துப்பாக்கி வீரனும் 33 ரவுண்ட் சுட்டு இருந்தான். மொத்தம் 1,650 ரவுண்ட் சுடப்பட்டது. செத்து விழுந்த உடல்கள் ரத்த வெள்ளத்தில் மிதந்தன. தப்பிப் பிழைத்தவர்கள், நடக்க முடியாமல் வீதியில் விழுந்து கிடந்தனர்.

"என்னை மதிக்காத இந்தியர்களுக்கு நான் அளித்த தண்டனை இது. ஒரு ராணுவ அதிகாரியாக இந்தச் செயலுக்காக நான் சந்தோஷம் அடைகிறேன். என்னிடம் இன்னும் அதிக ஆயுதங்கள் இருந்திருந்தால், அதிக நேரம் சுட்டிருப்பேன்’ என்று வெளிப்படையாகத் தெரிவித்தான் ஜெனரல் டயர்.

இங்கிலாந்தில் இருந்து வெளியாகும் 'மார்னிங் போஸ்ட்’ என்ற பத்திரிகை ஜெனரல் டயரை 'வெற்றி நாயகன்’ என்று பாராட்டி எழுதியது..

ஜாலியன் வாலாபாக் படுகொலை, இந்தியாவை உலுக்கியது. அந்தப் பாதகச் செயலுக்கு காரணமாக விளங்கிய பஞ்சாப் கவர்னர் மிக்கேல் ஓ டயர் மற்றும் ஜெனரல் டயர் ஆகியோரைப் பழிவாங்குவேன் என்று, உத்தம்சிங் என்ற பஞ்சாப்  இளைஞன் சபதம் செய்தான்...

சொன்னபடியே சரியாக 21 ஆண்டுகள் காத்திருந்து இங்கிலாந்தில் எச்சில் தட்டு கழுவி, கூலி வேலை செய்து கிடைத்த பணத்தில் துப்பாக்கி வாங்கி 1940-ம் ஆண்டு மார்ச் 13-ம் தேதி கவர்னர் ஓ டயரைச் சுட்டுத் தள்ளினார் உத்தம் சிங்.

உத்தம் சிங்கின் செயல் இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஆனால் இதை “பைத்தியகாரத்தனமான செயல்” என்று கூறி காந்தி அறிக்கை வெளியிட்டார்.

இதனை கடுமையாக எதிர்த்து, உத்தம் சிங்கின் செயலைப் பாராட்டி கடிதம் எழுதினார் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்.

அந்தக் கொலை வழக்கில், உத்தம் சிங்குக்கு தூக்குத் தண்டனை விதித்தது இங்கிலாந்து நீதிமன்றம்.

"தூக்கில் போட்டவுடன் இங்கிலாந்து மண்ணிலேயே என்னைப் புதைத்து விடுங்கள்.
இத்தனை ஆண்டுகள் இந்திய மண்ணை இங்கிலாந்து ஆண்டது போல், இங்கிலாந்தின் ஆறடி மண்ணை ஓர் இந்தியன் நிரந்தரமாக அபகரித்துக் கொண்டான் என்பது ஒரு மாறாத அவமானமாக உங்களுக்கு அமையட்டும்"
என்று முழங்கினர் உத்தம் சிங்.

ஜூலை 31, 1940 அன்று அவர் வந்தே மாதர கோஷத்துடன் தூக்குக் கயிறை முத்தமிட்டார்.

“தியாகச்சிங்கம்” என அழைக்கப்பட்ட அவரது உடல் சீக்கிய மதச்சடங்குகளுக்கு தடை விதிக்கப்பட்டு சிறைச்சாலையில் புதைக்கப்பட்டது.

பஞ்சாப் மாநிலம் சுல்தான்பூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் எஸ்.சாது சிங்,

“உத்தம் சிங்கின் எலும்புக் கூடுகளையாவது இந்தியாவிற்கு எடுத்து வர வேண்டும்” என்று மைய அரசிடம் கேட்டுக் கொண்டார். அன்றைய பிரதமர் இந்திரா காந்தி இதற்கான முயற்சிகளை மேற்கொண்டார்.

முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்னர், 1975 ஆம் ஆண்டு இங்கிலாந்து அரசு உத்தம் சிங் புதைக்கப்பட்ட இடத்தை மீண்டும் தோண்டி, மிச்சம் மீதி எலும்புக் கூடுகளை பொறுக்கிக் கட்டி இந்தியாவிற்கு அனுப்பியது.

உத்தம்சிங்கின் எலும்புக்கூடுகள் ராஜ மரியாதையோடு இந்தியாவில் வரவேற்கப்பட்டு, உத்தம்சிங்கின் சொந்த ஊரில் எரியூட்டப்பட்டு, சாம்பல் கங்கை ஆற்றில் கரைக்கப்பட்டது.

தேசத்தை நேசிக்கும் அனைவரும் அவரது தியாகத்தைப் போற்றுவோம். எத்தனை பேர் அறிந்திருப்பீர்கள் உத்தம்சிங் பற்றி? இந்த பதிவைப் படித்தறிந்து இக்கால தலைமுறையினரையும் உத்தம் சிங் பற்றி தெரிந்து கொள்ள செய்யுங்கள்.

உங்கள் குழந்தைகளுக்கு வீர வரலாற்றை உணர்வாக சொல்லிக் கொடுங்கள்.

ஜூலை 31, வரலாற்றில் இன்று.இந்தியாவில் செல்போன் சேவை தொடங்கிய தினம் இன்று (1995).

ஜூலை 31,
வரலாற்றில் இன்று.

இந்தியாவில் செல்போன் சேவை தொடங்கிய தினம் இன்று (1995).


1995 ஆம் ஆண்டு இதே நாளில் முதன் முதலாக மக்களுக்கான செல் போன் சேவை இந்தியா- கொல்கத்தாவில் துவங்கியது....
1995 ஜூலை 31 அன்றே மத்திய தொலை தொடர்புத்துறை அமைச்சர் சுக்ராம் அவர்கள் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசு அவர்களுடன்  செல்போனில் பேசி தொடங்கி வைத்தார்.

ஜூலை 31, வரலாற்றில் இன்று. சாரணர் இயக்கம் தொடங்கப்பட்ட தினம் இன்று.

ஜூலை 31,
வரலாற்றில் இன்று.


சாரணர் இயக்கம் தொடங்கப்பட்ட தினம் இன்று.

சாரணர் இயக்கம் உலகளாவிய அளவில் செயல்படும் ஓர் இளைஞர் இயக்கமாகும். இது 1907 ஆம் ஆண்டு ஜூலை 31 ஆம் தேதி சர் பேடன் பவல் பிரபு என்பவரால் தொடங்கப்பட்டது. இவ்வியக்கம் இளைய சமூகத்தினர் மத்தியில் உடல், உள, சமூக ரீதியான பல மேம்பாடுகளை ஏற்படுத்தவே உருவாக்கப்பட்டது. இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் சாரணர் இயக்கம் ஆண்கள் மட்டும் இந்த இயக்கத்தில் இருந்தனர். அதன்பின் 1910 ஆம் ஆண்டில் பெண்களுக்காக இவ்வமைப்பு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது உலகின் 216 நாடுகளில் 8 மில்லியனுக்கும் அதிகமான சாரணர்கள் உள்ளனர்.

இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை வெளியீடு _ தமிழக பள்ளிக்கல்வித்துறை

இணையவழி வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அரசாணை வெளியீடு _
தமிழக பள்ளிக்கல்வித்துறை........


Click here to G.O

புதியகல்விக்கொள்கை-2020 வெளியீடு! மத்திய அரசின் கல்வித்துறை வலைத்தளத்தில் பதிவேற்றம்!

புதியகல்விக்கொள்கை-2020 வெளியீடு!
மத்திய அரசின் கல்வித்துறை
வலைத்தளத்தில் பதிவேற்றம்!


 For English Version Click Here


For Tamil Version Click Here

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளம் வழங்க கல்வித்துறை உத்தரவு..

பகுதிநேர ஆசிரியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான சம்பளம் வழங்க கல்வித்துறை உத்தரவு..

மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு” (FSO-TN) கலந்துரையாடல் கூட்டத்தில் ‘தேசியக் கல்விக் கொள்கை-2019யை ஒழித்துக் கட்டுவோம்!’ என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

‘தேசியக் கல்விக் கொள்கை 2019-யை ஒழித்துக்கட்டுவோம்!

"""""""”""""""""""""'"'''''''''''''''''''''''''''''''''''''''""""'''
மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு” (FSO-TN) கலந்துரையாடல் கூட்டத்தில் ‘தேசியக் கல்விக் கொள்கை-2019யை ஒழித்துக் கட்டுவோம்!’ என்பது உள்ளிட்ட முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

29.07.2020 புதன்கிழமை மாலை 3 மணியளவில் காணொலி வாயிலாக நடைபெற்ற ”மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு - தமிழ்நாடு” (FSO-TN) கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்கலந்துரையாடல் கூட்டத்திற்கு கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளரும் தி.மு.க மாநில மாணவர் அணி செயலாளருமான சி.வி.எம்.பி.எழிலரசன் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் கூட்டத்தை ஒருங்கிணைத்தார். அனைத்திந்திய மாணவர் பெருமன்ற மாநிலத் தலைவர் குணசேகரன், மாநிலச் செயலாலர் சீ.தினேஷ், இந்திய மாணவர் சங்க மாநிலப் பொறுப்பாளர் நிரூபன், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாணவர் அணிச் செயலாளர் பால சசிக்குமார், சமூகநீதி மாணவர் இயக்கத்தின் குர்ஷித், இர்ஷத், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கஸாலி, அகில இந்திய கிராமப்புற மாணவர் சங்கச் செயலாலர் கா.அமுதரசன், ஸ்டூடண்ட்ஸ் இஸ்லாமிக் ஆர்கனைசேசன் முகமது ரியாஸ், தி.மு.க. மாணவரணி மாநில துணைச் செயலாளர்கள் பூவை.ஜெரால்டு, மன்னை த.சோழராஜன், வீ.கவி கணேசன், உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு :

தீர்மானம்-1 :

தேசியக் கல்விக் கொள்கை-2019யை ஒழித்துக் கட்டுவோம்!

2016-ஆம் ஆண்டும், அதற்குப் பிறகு 2019-லும் தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மாணவர், ஆசிரியர், பெற்றோர் அனைவருக்கும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையிலும், கல்வி உரிமையையும், கல்வி துறையில் மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையிலும், குலக் கல்வி முறையைக் கொண்டு வந்து, பள்ளிகளின் எண்ணிக்கையை குறைத்து, கல்வி உதவித் தொகை, இட ஒதுக்கீடு போன்ற சமூகநீதி வாய்ப்புகளை ஒழித்து கல்வியை முழுக்கவும் வணிகப் பொருளாக மாற்றவும், உயர்கல்விக் கட்டமைப்பை ஒழித்து வணிகக் கொள்ளைக்கு வழிவகுக்கவும், காவி+கார்ப்பரேட் கூட்டணிக்குள் மாணவர்களைச் சிக்க வைக்கவும் மத்திய பா.ஜ.க. அரசு திட்டமிட்டுள்ளதை மக்கள் மத்தியில் தொடர்ந்து அம்பலப்படுத்தி, காரண காரிய விளக்கங்களோடு, கடும் எதிர்ப்பலையைப் பதிவு செய்துள்ளோம். இத்தனை எதிர்ப்புக்குப் பிறகும், இந்தக் கொரோனா பெருந் தொற்றுக்காலத்தைப் பயன்படுத்தி, தேசியக் கல்விக் கொள்கை வரைவை மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டு நடைமுறைப்படுத்தத் தயாராக இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. இதை ஒழித்துக் கட்டும் வரை தொடர்ந்து போராடுவது என்று முடிவு செய்யப்படுகிறது. ஒருபோதும் காவிகளின் கனவு நிறைவேற மாணவர் சமூதாயம் அனுமதிக்காது என்பதையும் திட்டவட்டமாகத் தெரிவித்துக் கொள்கிறோம்.

‘தேசியக் கல்விக் கொள்கை 2019-யை ஒழித்துக் கட்டுவோம்!’ : மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்!

தீர்மானம் - 2 :

மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பின்படி உடனடியாக அமல்படுத்துக !

மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பு இடங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த எந்தத் தடையும் இல்லை என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை பாராட்டி வரவேற்கிறோம். சமூகநீதியை நிலைநாட்ட ஒரே குரலில் ஒலித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த அனைத்து கட்சிகளுக்கும், அமைப்புகளுக்கும், தமிழ்நாடு என்றென்றும் சமூகநீதி மண், தந்தை பெரியார் மண், இந்தியாவிற்கு வழிகாட்டும் முன்னோடி மாநிலம் என்ற சிறப்பை உறுதி செய்து வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகளுக்கும், வாதாடிய வழக்குரைஞர்களுக்கும் நன்றியையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இவ்வளவு கடுமையான சட்டப் போராட்டத்திற்குப் பிறகும், மருத்துவ மேல்பட்டப்படிப்புக்கான இடங்களுக்கு, இந்த தீர்ப்பு இவ்வாண்டுக்குப் பொருந்தாது என்பது ஏமாற்றமே! எனினும், எம்.பி.பி.எஸ் படிப்புக்கு இவ்வாண்டே இத்தீர்ப்பை அமல் செய்வதற்கு வாய்ப்பு இருப்பதாகவே தீர்ப்பை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அந்த வாய்ப்பை நழுவ விடாமல் தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்பதோடு, மத்திய அரசிடம் விழிப்பாக இருந்து போராட வேண்டும் என்று ‘மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு-தமிழ்நாடு’ வலியுறுத்துகிறது.

தமிழ்நாட்டில் 69% இடஒதுக்கீடு சட்டம் அமலில் உள்ளதால் பிற்படுத்தப்பட்டோருக்கான (தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இணைந்து) 50% இடஒதுக்கீடு என்ற கோரிக்கையை நிராகரிக்க முடியாது என்பது தெளிவாகி உள்ளது. எனவே பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் உள்ஒதுக்கீட்டை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும். அதை விடுத்து, இதில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டுக்குச் சென்று பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மீண்டும் துரோகம் இழைக்க மத்திய அரசு முயலக் கூடாது.

பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக அமைக்கப்பட வேண்டிய கமிட்டியை அமைப்பtஹை தாமதப்படுத்தியோ, அல்லது அந்தக் குழுவின் பரிந்துரைகளிலோ இத் தீர்ப்பின் சாரத்தை நீர்த்துப் போகச்செய்யும் நடவடிக்கைகளில் இறங்காமல், உடனடியாக கமிட்டி அமைத்து சமூகநீதியைக் காக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்படுகிறது.

‘தேசியக் கல்விக் கொள்கை 2019-யை ஒழித்துக் கட்டுவோம்!’ : மாணவர் இயக்கங்களின் கூட்டமைப்பு தீர்மானம்!

தீர்மானம் 3 :

நீட் தேர்வை ரத்து செய்க !

கிராமப்புற, ஏழை, எளிய மாணவர்கள் மற்றும் சமூக நீதிக்கு எதிராக நடத்தப்பட்டு வரும் நீட் தேர்வினை உடனடியாக நிறுத்த வேண்டும் என்பது எல்லா தரப்பு மக்களின் கோரிக்கையாக இருந்து வருகிறது. கொரோனா பெருந்தொற்று பாதிப்பில் உலக அளவில் மூன்றாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில், தொடர்ந்து நிலவி வரும் அசாதாரணமான சூழலையும் , மாணவர்களின் மனநிலையையும், எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு இந்த ஆண்டு நடைபெற உள்ள நீட் ஆன்லைன் தேர்வை ரத்து செய்ய வேண்டும். நேரடியாகப் பங்கேற்ற கடந்த ஆண்டுத் தேர்வுகளிலேயே, கடும் சோதனைகளையெல்லாம் மேற்கொண்டு தமிழ்நாட்டு மாணவர்களின் மனநிலையைக் குலைத்துச் சதி செய்த அதே வேளையில், பணக்கார, பிற மாநில ஆதிக்க சக்திகள் எண்ணற்ற ஆள்மாறாட்டங்கள், தில்லுமுல்லுகளில் ஈடுபட்டதும், அவை வெளிச்சதுக்கு வந்ததும் நீட் தேர்வின் லட்சணத்தை அம்பலப்படுத்தியுள்ளன. இந்நிலையில் ஆன்லைன் தேர்வு என்பது மோசடிகளின் மொத்தக் கூடாரமாகவே அமையும் என்பதால், நீட் ஆன்லைன் தேர்வு என்ற சிந்தனையை அடியோடு விட்டுவிட்டு, பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிகளுக்கு இடம் ஒதுக்கப்படவேண்டும்.

நீட் தேர்வு என்பது நகர்ப்புற மேல்தட்டு மாணவர்களுக்கும், வசதிவாய்ப்புள்ளவர்களுக்குமான தேர்வாக இருந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவல் உள்ள காலத்தில் நீட் தேர்வை நடத்தினால் அது ஏழை, எளிய மாணவர்கள், கிராமப்புற மற்றும் மலைவாழ் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி. ஆகவே இந்த ஆண்டு மருத்துவக் கல்விக்கான மாணவர் சேர்க்கையை, பன்னிரெண்டாம் வகுப்பின் மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்த வேண்டும் எனவும், இனி வரும் ஆண்டுகளிலும் இதே முறையை நடத்த வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகளை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் - 4 :

கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களின் பருவத் தேர்வை ரத்து செய்ய வேண்டும்!

கொரோனா பெருந் தொற்றால் கல்லூரிகள் இயங்க முடியாத சூழலும், தேர்வுகள் நடத்த முடியாமலும் உள்ளது. கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர மற்ற மாணவர்களின் செமஸ்டர் எனும் பருவத் தேர்வை UGC ரத்து செய்வதாக அறிவித்து இருந்தது. கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கும் பருவத் தேர்வை ரத்து செய்து, முந்தைய தேர்வுகளின் அடிப்படையில் அவர்களுக்கு தேர்ச்சி அளிக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை இக் கூட்டம் வலியுறுத்துகிறது.

தீர்மானம் 5 :

CAA போராட்டத்தில் கைதான மாணவர்களை விடுதலை செய்க - பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடுக !

கொரோனா தொற்றுக்கு முன்பாக நாடு முழுவதும் எழுச்சியாக நடைபெற்று வந்த குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கில் அவர்களைக் கைது செய்து சிறையில் அடைத்த மத்திய அரசு, அவர்களை விடுதலை செய்யத் தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும் போராடிய மாணவர்களைப் பழிவாங்கும் நோக்கில் வழக்குப் பதிவு செய்து வருகிறது.குறிப்பாக டெல்லி உள்ளிட்ட வட மாநிலங்களில் இந்த பழிவாங்கும் நடவடிக்கை தொடர்ந்து வருவதை மிக வன்மையாக கண்டிக்கிறோம். போராடுவது என்பது ஜனநாயகத்தின் அடிப்படை உரிமை! ஜனநாயக வழியில் போராடிய மாணவர்கள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதுடன், கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகிறோம்.

காஷ்மீர், குடியுரிமைச் சட்டம் தொடர்பாக ட்விட்டரில் கருத்துத் தெரிவித்த காரணத்துக்காக கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசியத் தலைவர் மீது பதியப்பட்டிருக்கும் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்றும், கருத்துரிமையை நசுக்கக் கூடாது என்றும் வலியுறுத்துகிறோம்.

தீர்மானம் - 6:

ஆன்லைன் கல்விக் குளறுபடிகள்

ஆன் லைன் வகுப்புகளால், பள்ளி, கல்லூரி வகுப்பறைகளை ஈடு செய்ய முடியாது என்பது அனைவரும் அறிந்த ஒன்றாகும். இந்தியா போன்ற வளரும் நாட்டில், அனைவருக்கும் தடையில்லா மின்சாரம், இணைய இணைப்பு, கருவிகள் போன்றவை கிடைக்காத நாட்டில், ஆன்லைன் கல்வி என்பது நடைமுறைக்குச் சாத்தியமற்ற ஒன்று. தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி என்ற பெயரால் மாணவ்வர்கள் மீது நிகழ்த்தும் அராஜகம் ஏற்கக்கூடியதல்ல. கணினியின் முன்னால், திறன்பேசிக் கருவிகளின் முன்னால் நாள்தோறும் மாணவர்களை அமர்த்துவதன் மூலம் உடல், மனநில்லையில் சிக்கல் எழும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். தேவையான கருவிகளையும், தடையில்லா இணைய இணைப்பையும், ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தால், அத்தனை பேரும் படிக்க அத்தனை கணினிகள்/ கருவிகளையும் வாங்க வழியில்லாமல் மன உளைச்சலுக்கு பெற்றோரை உள்ளாக்குவதும் குரூரமானது. எனவே, இத்தகைய போக்குகளை இளம் பிஞ்சுகள் மீது திணிப்பதைப் பிற மாநிலங்கள் தடுத்திருப்பதைப் பார்த்தாவது, தமிழக அரசு அது குறித்துச் சிந்திக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

ஆன்லைன் கல்வி என்னும் போக்கால் சந்திக்கும் பிரச்சினைகளையும், கட்டணக் கொள்ளை குறித்தும் விவரம் திரட்டி, நடவடிக்கை எடுக்க ஒரு குழு அமைத்து செயல்படுவதெனத் தீர்மானிக்கப்படுகிறது.

தீர்மானம் - 7:

வெளிநாட்டில் பயிலும் தமிழக மாணவர்களின் பாதுகாப்பும், திரும்புவதற்கான ஏற்பாடுகளும் தேவை

வெளிநாட்டில் பயின்று வரும் தமிழக மாணவர்களில் சிலர் தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கும் நிலை இருப்பதாகத் தகவல்கள் கிடைத்துள்ளமையால், அத்தகைய மாணவர்கள் குறித்து விவரங்களைத் திரட்டி நடவடிக்கைகளை மேற்கொள்ள ஒரு குழு அமைக்கப்படுகிறது. அம் மாணவர்கள் தாயகம் திரும்பத் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசும், இந்திய அரசும் உடனடியாக மேற்கொள்ள வேண்டுமென்று இக் கூட்டம் வலியுறுத்துகிறது. அந்தந்த நாடுகளிலேயே இருக்க வேண்டிய அவசியமுள்ள மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அரசுகள் கவனமெடுக்க வேண்டுமென்பதையும் இக்கூட்டம் சுட்டிக் காட்டுகிறது.

இவ்வாறாக தீர்மானங்கள் இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.