புதன், 22 ஜனவரி, 2020

தமிழ் நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில , மாவட்ட , ஒன்றியப் பொறுப்பாளர்கள் இராசிபுரம் ஒன்றிய குழு பெருந் தலைவர் திரு. ஜெகநாதன் அவர்களை மரியாதை நிமித்தமாக இன்று (22.01.2020) மாலை சந்தித்தனர். தனக்கு வாழ்த்து கூறிய ஆசிரியர்கள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்த அவரின் பண்பாடு கண்டு மகிழ்கிறோம், வாழத்துகிறோம்
















தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றியப் பொறுப்பாளர்கள் நாமக்கல் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் திரு.இராஜேந்திரன் அவர்களை (இராசிபுரம்) மரியாதை நிமித்தமாக இன்று (21/01/2020) மாலை 5.00 மணிக்கு சந்தித்தனர்.










ஊதிய குறைபாடு நிவர்த்தி செய்ய உச்சநீதிமன்ற ஆணையின்படி நியமிக்கப்பட்ட நீதிபதி தலைமையில் அமைக்கப்பட்ட குழுவிலிருந்து தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்திற்கு அழைப்பு


SMC பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டிய உறுப்பினர் எண்ணிக்கை விவரம்...

தொடக்கக் கல்வி - குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் (திருத்தம்) சட்டம், 2019 - மாநிலப்பாடத்திட்டத்தினைப் பின்பற்றும் அனைத்து வகைப் பள்ளிகளில் பயிலும் 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு பொதுத் தேர்வு நடத்துதல் -* *அறிவுரைகள் வழங்குதல் - சார்ந்து. தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்...






மதிப்பெண் மட்டுமே எல்லாம் ஆகிவிடாது ~ மாணவர்களுக்கு பிரதமர் அறிவுரை…

ஜனவரி 22, வரலாற்றில் இன்று.

ஆப்பிள் கணினி அறிமுகம் செய்யப்பட்ட தினம் இன்று.

1984ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி ஆப்பிள் மக்கின்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது.
ஜனவரி 22,
வரலாற்றில் இன்று.

 உலகின் முதல் வானொலி வர்ணனை, ஹைபரியில் நடைப்பெற்ற ஷெப்பீல்ட் யுனைடெட் இங்கிலாந்து லீக் கால்பந்து போட்டி ஒலிபரப்பான தினம் இன்று (1927).



 In 1927, January 22 Teddy Wakelam, gave the first 'live' radio commentary of a football match between Arsenal & Sheffield United at Highbury.....
ஜனவரி 22, வரலாற்றில் இன்று.

தி.வே.கோபாலையர் பிறந்த தினம் இன்று.

✍ தமிழ் நூற்கடல் என்று போற்றப்பட்ட தி.வே.கோபாலையர் 1926ஆம் ஆண்டு ஜனவரி 22ஆம் தேதி திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிறந்தார்.

✍ இவர் இலக்கணம், இலக்கியம், சமய நூல்கள் குறிப்பாக வைணவ இலக்கியங்களை கற்றறிந்தவர். மேலும் தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், பிரெஞ்ச் மொழிகளில் புலமைமிக்கவர்.

✍ எழுத்ததிகாரம், சொல்லதிகாரம், இலக்கணக் கொத்து உரை, பிரயோக விவேகம், வீர சோழிய உரை உள்ளிட்ட பல அரிய நூல்களைப் பதிப்பித்தவர். மேலும் தொல்காப்பியச் சேனாவரையம், கம்பராமாயணத்தில் முனிவர்கள், சீவக சிந்தாமணி காப்பிய நலன், பாலகாண்டம், சுந்தரகாண்டம் உள்ளிட்ட பல நூல்களைப் படைத்தார்.

✍ செந்தமிழ்க் கலாநிதி, சைவ நன்மணி, அறிஞர் திலகம், சிந்தாமணிக் களஞ்சியம், சாகித்திய வல்லப, பொங்கு தமிழ் விருது போன்ற ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார்.

✍ பழந்தமிழ் இலக்கண, இலக்கிய நூல்கள் அழிய நேர்ந்தாலும் கவலைப்பட வேண்டியதில்லை. தி.வே.கோபாலையர் இருந்தால் போதும் அவரது நினைவில் இருந்தே அனைத்து நூல்களையும் பதிப்பித்துவிட முடியும் என்று பல தமிழ் அறிஞர்களாலும் போற்றப்பட்ட இவர் 2007-ல் மறைந்தார்.
.
ஜனவரி 22,
வரலாற்றில் இன்று.


 உலகின் முதல் பயணிகள் ஜெட் விமான சேவை துவங்கப்பட்ட தினம் இன்று (1952).


On January 22, 1952, the first commercial jet plane, the BOAC's Comet, is put into service.