செவ்வாய், 5 மே, 2020

கொரோனா ஊரங்கு காலத்தின் தொடக்கத்தில் மாண்புமிகு .
இந்தியநிதி அமைச்சர் அவர்கள் தொலைக்காட்சிகளில்  தோன்றி் நாட்டு மக்களுக்கு  ஆற்றிய உரையில்  மூன்றுமாதக் காலக்கடன் தவணைகள் ஒத்திவைப்பு பற்றி   தெரிவித்து உள்ளார்கள்.
இதன் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆணைகள் வெளியிட்டு உள்ளது. 
தமிழ்நாடு அரசும் ஆணைகள் தந்துள்ளது. 

தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் மதிப்புமிகு.பதிவாளர் அவர்களும் இப்பொருள் சார்ந்து  சுற்றறிக்கையினை வெளியிட்டு உள்ளார்கள்.

தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களின் கூட்டுறவு இணைப்பதிவாளர்கள் /சரக துணைப்பதிவாளர்கள் மூன்று மாத தவணைகள் ஒத்திவைப்பு  குறித்து செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்கள் என சமூக ஊடகங்களின் வழியில்  அறியமுடிகிறது. நாமக்கல் மாவட்ட செயல்முறையை இதுவரையிலும் அறியமுடியவில்லை.

நாமக்கல் மாவட்டத்தின் 15 ஊராட்சி ஒன்றியங்களில்  இயங்கிடும்  ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனநாணய  மற்றும் கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும்,அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் மூன்று மாத காலம்  கடன் தொகையை திரும்பச் செலுத்துவதற்கு  கால அவகாசம் (ஒத்திவைப்பு) அளித்திடுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் ,நாமக்கல் மாவட்ட அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எங்களது அமைப்பு மேற்கண்டவாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்ளவேண்டிய தேவையே எழாத வகையில் மாவட்ட கூட்டுறவுத்துறை செயல்முறைகள் வெளியிட்டு இருத்தல் வேண்டும்.
இவ்வாறு நடைபெறாதது
மட்டுமில்லாது, எங்களது அமைப்பின்  இக்கோரிக்கை குறித்து வாய்மொழியாகவோ,
எழுத்துப்பூர்வமாகவோ  எவ்விதமான  ஏற்புரையோ,
மறுப்புரையோ ,
நிராகரிப்போ,
பரசீலனையோ  என இவற்றில்  எதையுமே  நாமக்கல் மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் வெளியிடவில்லை.இந் நிலையை என்னவென்று சொல்வது?எங்கு முறையிடுவது?

இத்தகு பாராமுகம் என்பது   
மக்களாட்சித் தத்து வத்தையும், சனநாயகத் தன்மையையும்,
சட்ட நெறிமுறைகளையும் ,உயர் அலுவலர்களின் ஆணைகளையும் ,மனித மாண்புகளையும் , உதாசீனம் செய்வதற்கு ஒப்பான செயலாகும்.
இத்தகு அறமற்ற  செயல்பாடுகள் முற்றிலுமாக கைவிடப்பட   வேண்டும்.

ஒன்றிய பணியாளர் 
மற்றும்  ஆசிரியர் கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஆசிரியர்களுக்கும்,அரசு அலுவலர்களுக்கும்  மாதாமாதம் ஊதியம் வரும் பொழுது கடனை திரும்ப  கட்டுவதற்கு என்ன கேடு?!வந்தது என்று கூட   கருதலாம்.
நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை  இவ்வாறு கருதினீர்களா?!என்பதை யான்   அறியேன்!.

மேற்கண்டவாறு  எல்லாம்  நினைக்காது பல்வேறு மாவட்ட இணைப்பதிவாளர்கள்,சரக துணைப்பதிவாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கடன் ஒத்தி வைத்து
செயல்முறைகள் வெளியிடத்தான்செய்கிறார்கள். 

நாட்டின் எல்லா வங்கிகளிலும்     வீட்டுக்கடன்,
வண்டிக்கடன்,
தனிநபர் கடன் பெற்றுள்ளவர்களில் ஆசிரியர்களும்,
அரசுப்பணியாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்களை விட மிகப்  பெரிய கோடீச்சுவரன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் கடன் பெற்றும் தான் இருக்கிறார்கள்.
கட்டியும்,கட்டாமலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும்  இவ்வங்கிகள் எல்லாம்  இவர்களுக்கு இந்திய ரிசர்வ்வங்கியின் ஆணையினைச்சொல்லி,
வங்கியின் நடைமுறைகளை எல்லாம்  சொல்லி தவணை செலுத்துவதற்கு கால அவகாசம் வேண்டுமா?வேண்டாமா?
என கேட்கத்தான் செய்கின்றது. ஏன்?இதுபோல இந்த 15 ஒன்றிய பணியாளர் மற்றும் கடன் சங்கங்கள் தங்களது உறுப்பினர்களிடம் கேட்கவில்லையே?கேட்கச்சொல்லி சொல்லப்படவில்லையே?அதுதான் ஏன்?என்று எங்களது அமைப்பு திறந்தமடல் வழியில் கேட்கிறது.

திறந்த மடலுக்கு கூட  தேவை வந்தது?ஏன்?எனில், மின்னஞ்சல்  வழியிலான எங்களது அமைப்பின்  விண்ணப்பங்கள் தங்களது பார்வைக்கு வருவதில்லையோ?எனும் ஐயமே  இத்திறந்த மடல் எழுதிட காரணமாயிற்று.வேறு எந்த நோக்கமும் இல்லை.

எங்களது அமைப்பின் கோரிக்கையாக மூன்று மாதக்கால கடன் தவணை ஒத்திவைப்பை நாமக்கல் மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் பார்க்கவேண்டியதில்லை.

மாண்புமிகு .
மத்தியநிதி அமைச்சர்,
இந்திய ரிசர்வ்வங்கி,
தமிழக அரசு,
கூட்டுறவு பதிவாளர் ,
கூட்டுறவுத்துறையில்  தங்களையொத்த பதவி நிலையில் உள்ளோர் உரைத்திருப்பதை,  சுற்றறிக்கையில் சொல்லிஇருப்பதை ,
செயல்வடிவில் செய்திருப்பதை கேளுங்கள்; பாருங்கள் என்றே கோருகிறேன். இப்பொருளில் 
சுய கெளரவம் பார்க்கவோ, சுயக்கருத்தை செலுத்தவோ வேண்டியதில்லை என்றே சுட்டிக்காட்டுகிறேன். 

மத்திய,மாநில அரசுகளின் நிலையினை ஒட்டி செயல்படுங்கள்!
அரசுகளுக்கு அவப்பெயர் தேடித்தராதீர்கள்!

கடன் பெற்றோர் கடனை திரும்பச்செலுத்துவர் என்று நம்பிக்கைக் கொள்ளுங்கள்!
அவநம்பிக்கையை கைவிடுங்கள்! அரசுகளின் அறிவிப்பை அர்த்தமுள்ளதாக்கும் வகையிலான நல்லதொரு  செயல்முறையை எதிர்நோக்கி 
நன்றி உரைக்கிறேன்!
-முருகசெல்வராசன்,
மாநில செயலாளர்,
த.நா.தொ.ப.ஆசிரியர்மன்றம்

நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளருக்கு/திருச்செங்கோடு-நாமக்கல் சரக துணைப்பதிவாளர்களுக்கு திறந்தமடல்:
--------------------------------
கொரோனா ஊரங்கு காலத்தின் தொடக்கத்தில் மாண்புமிகு .
இந்தியநிதி அமைச்சர் அவர்கள் தொலைக்காட்சிகளில்  தோன்றி் நாட்டு மக்களுக்கு  ஆற்றிய உரையில்  மூன்றுமாதக் காலக்கடன் தவணைகள் ஒத்திவைப்பு பற்றி   தெரிவித்து உள்ளார்கள்.
இதன் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி ஆணைகள் வெளியிட்டு உள்ளது.
தமிழ்நாடு அரசும் ஆணைகள் தந்துள்ளது.

தமிழ்நாடு கூட்டுறவுத்துறையின் மதிப்புமிகு.பதிவாளர் அவர்களும் இப்பொருள் சார்ந்து  சுற்றறிக்கையினை வெளியிட்டு உள்ளார்கள்.

தமிழ்நாடு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களின் கூட்டுறவு இணைப்பதிவாளர்கள் /சரக துணைப்பதிவாளர்கள் மூன்று மாத தவணைகள் ஒத்திவைப்பு  குறித்து செயல்முறைகள் வெளியிட்டு உள்ளார்கள் என சமூக ஊடகங்களின் வழியில்  அறியமுடிகிறது. நாமக்கல் மாவட்ட செயல்முறையை இதுவரையிலும் அறியமுடியவில்லை.

நாமக்கல் மாவட்டத்தின் 15 ஊராட்சி ஒன்றியங்களில்  இயங்கிடும்  ஒன்றிய பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டுறவு சிக்கனநாணய  மற்றும் கடன் சங்கத்தின் உறுப்பினர்களுக்கும்,அவர்களது விருப்பத்தின் அடிப்படையில் மூன்று மாத காலம்  கடன் தொகையை திரும்பச் செலுத்துவதற்கு  கால அவகாசம் (ஒத்திவைப்பு) அளித்திடுமாறு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் ,நாமக்கல் மாவட்ட அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எங்களது அமைப்பு மேற்கண்டவாறு வலியுறுத்தி கேட்டுக்கொள்ளவேண்டிய தேவையே எழாத வகையில் மாவட்ட கூட்டுறவுத்துறை செயல்முறைகள் வெளியிட்டு இருத்தல் வேண்டும்.
இவ்வாறு நடைபெறாதது
மட்டுமில்லாது, எங்களது அமைப்பின்  இக்கோரிக்கை குறித்து வாய்மொழியாகவோ,
எழுத்துப்பூர்வமாகவோ  எவ்விதமான  ஏற்புரையோ,
மறுப்புரையோ ,
நிராகரிப்போ,
பரசீலனையோ  என இவற்றில்  எதையுமே  நாமக்கல் மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் வெளியிடவில்லை.இந் நிலையை என்னவென்று சொல்வது?எங்கு முறையிடுவது?

இத்தகு பாராமுகம் என்பது  
மக்களாட்சித் தத்து வத்தையும், சனநாயகத் தன்மையையும்,
சட்ட நெறிமுறைகளையும் ,உயர் அலுவலர்களின் ஆணைகளையும் ,மனித மாண்புகளையும் , உதாசீனம் செய்வதற்கு ஒப்பான செயலாகும்.
இத்தகு அறமற்ற  செயல்பாடுகள் முற்றிலுமாக கைவிடப்பட   வேண்டும்.

ஒன்றிய பணியாளர்
மற்றும்  ஆசிரியர் கடன் சங்கத்தில் உறுப்பினராக உள்ள ஆசிரியர்களுக்கும்,அரசு அலுவலர்களுக்கும்  மாதாமாதம் ஊதியம் வரும் பொழுது கடனை திரும்ப  கட்டுவதற்கு என்ன கேடு?!வந்தது என்று கூட   கருதலாம்.
நாமக்கல் மாவட்ட கூட்டுறவுத்துறை  இவ்வாறு கருதினீர்களா?!என்பதை யான்   அறியேன்!.

மேற்கண்டவாறு  எல்லாம்  நினைக்காது பல்வேறு மாவட்ட இணைப்பதிவாளர்கள்,சரக துணைப்பதிவாளர்கள் தமிழ்நாட்டில் இருக்கத்தான் செய்கிறார்கள்.
கடன் ஒத்தி வைத்து
செயல்முறைகள் வெளியிடத்தான்செய்கிறார்கள்.

நாட்டின் எல்லா வங்கிகளிலும்     வீட்டுக்கடன்,
வண்டிக்கடன்,
தனிநபர் கடன் பெற்றுள்ளவர்களில் ஆசிரியர்களும்,
அரசுப்பணியாளர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
இவர்களை விட மிகப்  பெரிய கோடீச்சுவரன்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்கள் எல்லாம் கடன் பெற்றும் தான் இருக்கிறார்கள்.
கட்டியும்,கட்டாமலும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனாலும்  இவ்வங்கிகள் எல்லாம்  இவர்களுக்கு இந்திய ரிசர்வ்வங்கியின் ஆணையினைச்சொல்லி,
வங்கியின் நடைமுறைகளை எல்லாம்  சொல்லி தவணை செலுத்துவதற்கு கால அவகாசம் வேண்டுமா?வேண்டாமா?
என கேட்கத்தான் செய்கின்றது. ஏன்?இதுபோல இந்த 15 ஒன்றிய பணியாளர் மற்றும் கடன் சங்கங்கள் தங்களது உறுப்பினர்களிடம் கேட்கவில்லையே?கேட்கச்சொல்லி சொல்லப்படவில்லையே?அதுதான் ஏன்?என்று எங்களது அமைப்பு திறந்தமடல் வழியில் கேட்கிறது.

திறந்த மடலுக்கு கூட  தேவை வந்தது?ஏன்?எனில், மின்னஞ்சல்  வழியிலான எங்களது அமைப்பின்  விண்ணப்பங்கள் தங்களது பார்வைக்கு வருவதில்லையோ?எனும் ஐயமே  இத்திறந்த மடல் எழுதிட காரணமாயிற்று.வேறு எந்த நோக்கமும் இல்லை.

எங்களது அமைப்பின் கோரிக்கையாக மூன்று மாதக்கால கடன் தவணை ஒத்திவைப்பை நாமக்கல் மாவட்ட கூட்டுறவு நிர்வாகம் பார்க்கவேண்டியதில்லை.

மாண்புமிகு .
மத்தியநிதி அமைச்சர்,
இந்திய ரிசர்வ்வங்கி,
தமிழக அரசு,
கூட்டுறவு பதிவாளர் ,
கூட்டுறவுத்துறையில்  தங்களையொத்த பதவி நிலையில் உள்ளோர் உரைத்திருப்பதை,  சுற்றறிக்கையில் சொல்லிஇருப்பதை ,
செயல்வடிவில் செய்திருப்பதை கேளுங்கள்; பாருங்கள் என்றே கோருகிறேன். இப்பொருளில்
சுய கெளரவம் பார்க்கவோ, சுயக்கருத்தை செலுத்தவோ வேண்டியதில்லை என்றே சுட்டிக்காட்டுகிறேன்.

மத்திய,மாநில அரசுகளின் நிலையினை ஒட்டி செயல்படுங்கள்!
அரசுகளுக்கு அவப்பெயர் தேடித்தராதீர்கள்!

கடன் பெற்றோர் கடனை திரும்பச்செலுத்துவர் என்று நம்பிக்கைக் கொள்ளுங்கள்!
மே 5, வரலாற்றில் இன்று.

பி.யூ.சின்னப்பா பிறந்த தினம் இன்று.

"நடிக மன்னன்" என்று புகழ் பெற்றவரும், வீரதீரச் செயல்கள் செய்வதில் இணையற்ற வருமான பி.யு.சின்னப்பா மிகவும் சிக்கனமானவர். பீடிதான் குடிப்பார்; சாராயம்தான் அருந்துவார். சினிமா மூலம் கிடைத்த வருமானத்தை வீணாக்காமல், புதுக்கோட்டையில் வீடுகள் வாங்கிக் குவித்தார். எங்கு பார்த்தாலும், சின்னப்பாவின் வீடுகள். இதுபற்றி புதுக்கோட்டை மன்னருக்கு தகவல் போயிற்று. "இனிமேல் சின்னப்பா வீடு வாங்கக்கூடாது" என்று தடை விதிக்கப்பட்டது. இதனால், சென்னையில் வீடுகள் வாங்கினார்.

1951ல் "வனசுந்தரி" என்ற படத்தில் சின்னப்பா நடித்தார். ஜோடி டி.ஆர்.ராஜகுமாரி. படம் சுமார் ரகம். இந்த சமயத்தில், தமிழ்ப்பட உலகில் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. நடிகர்களுக்கும், நடிகைகளுக்கும், பின்னணி பாடும் முறை வந்துவிட்டது. எனவே, கதாநாயகனாக நடிப்பவர்கள் சொந்தமாகப் பாடும் திறமை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலைமைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

1946ல் வெளிவந்த "ஸ்ரீவள்ளி" மூலம், டி.ஆர்.மகாலிங்கம் ஒரு சூப்பர் ஸ்டாராக உருவானார். "நாம் இருவர்" படம், அவர் புகழை மேலும் உயர்த்தியது. ஜ×பிடர் தயாரிப்பான "ராஜகுமாரி" மூலம் எம்.ஜி.ஆர். கதாநாயகனாக அறிமுகமாகி முன்னேறிக்கொண்டிருந்தார். கே.ஆர்.ராமசாமியும் நட்சத்திர அந்தஸ்து பெற்றார். "சந்திரலேகா", "ஞானசவுந்தரி", "ஏழைபடும்பாடு", "வேலைக்காரி" முதலிய தரமான படங்கள் வெளிவந்து வெற்றி பெற்று, ரசிகர்களின் ரசனையில் மாற்றம் ஏற்பட்டிருந்தது. இதனால், சின்னப்பாவின் முன்னேற்றத்தில் தேக்க நிலை ஏற்பட்டது. படம் குறைந்து போனதால், சின்னப்பா ஸ்பெஷல் நாடகங்களில் நடித்தார்.

"வானவிளக்கு" என்ற பெயரில் நடத்தி வந்த நாடகத்தை சொந்தத்தில் படமாகத் தயாரிக்கத் திட்டமிட்டார். கத்திச்சண்டையில் "சுருள் பட்டா" என்பது புதுமையானது; ஆபத்தானது. சுருளின் முனையில் கூரிய கத்தி பொருத்தப்பட்டு இருக்கும். கைப்பிடியை பிடித்தபடி "சுருள் பட்டா"வை வீசினால், கத்தி சுழன்றபடியே சென்று, எதிரியின் தலையை கொய்து கொண்டு வரும்! குறி தவறினால், வீசியவனின் தலைக்கு ஆபத்து! இந்த "சுருள் பட்டா" சாகசச் செயலை "வான விளக்கு" படத்தில் புகுத்த சின்னப்பா திட்டமிட்டிருந்தார். புதுக்கோட்டையில் தன் வீட்டில் தங்கியிருந்த சின்னப்பா, அன்றைய தினம் "மணமகள்" சினிமா படம் பார்க்க நண்பர்களுடன் சென்றார்.

கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சொந்தமாகத் தயாரித்து, டைரக்ட் செய்திருந்த படம் இது. லலிதா, பத்மினி, டி.எஸ்.பாலையா நடித்திருந்தனர். படம் பார்த்துவிட்டு இரவு சுமார் 10 மணிக்கு வீடு திரும்பிய சின்னப்பா, நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்தார். திடீரென்று, "மயக்கம் வருகிறதே" என்றார். உடனே ரத்த வாந்தி எடுத்தபடி மயங்கி விழுந்தார். ஒரு சில நிமிடங்களில் மரணம் அடைந்தார். உடன் இருந்த நண்பர்கள் கதறி அழுதனர். சின்னப்பா இறந்தபோது, அவருடைய தந்தை உலகநாதப் பிள்ளை உயிருடன் இருந்தார். மகன் புகழின் சிகரத்தை அடைந்ததைக் கண்டு மனம் மகிழ்ந்திருந்த அவர், மகனின் எதிர்பாராத மரணத்தால் கதறித் துடித்தார். மறுநாள் இறுதி ஊர்வலம் நடந்தது.

ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். சின்னப்பாவின் சொந்த தோட்டத்தில், அவர் உடல் அடக்கம் செய்யப்பட்டது. இறக்கும்போது சின்னப்பாவுக்கு வயது 35தான். நோய் நொடியின்றி ஆரோக்கியமாக இருந்த அவர் திடீரென்று மரணம் அடைந்தது, திரை உலகை அதிர்ச்சி அடையச் செய்தது.

இறக்கும்போது, "சுதர்சன்" என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே சின்னப்பா நடித்துக்கொண்டிருந்தார். கிட்டத்தட்ட அவர் நடிக்க வேண்டிய காட்சிகள் படமாகி முடிந்துவிட்டன. "கோராகும்பர்" என்ற பெயரில் ஏற்கனவே படமாக வெளிவந்த புராணக் கதைதான் இது. சின்னப்பாவுடன் ஜோடியாக கண்ணாம்பாவும் (யோக) மங்களமும் நடித்தனர். பாகவதர் நடித்த "ஹரிதாஸ்" படத்தை எடுத்த ராயல் டாக்கீசார்தான் இப்படத்தைத் தயாரித்தனர். கதை வசனத்தை ஏ.எஸ்.ஏ.சாமியும், இளங்கோவனும் இணைந்து எழுதினர். "ஹரிதாஸ்" படத்தை இயக்கிய கந்தர்ராவ் நட்கர்னியும், ஏ.எஸ்.ஏ.சாமியும் டைரக்ட் செய்தனர். சின்னப்பாவின் மரணத்துக்குப் பின்னர் இந்தப்படம் வெளிவந்தது. சரியாக ஓடவில்லை.
மே 5,
 வரலாற்றில் இன்று.

சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சர்
ஆர். கே. சண்முகம் நினைவு தினம் இன்று.

சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் (அக்டோபர் 17, 1892 – மே 5, 1953) இந்தியப் பொருளாதார நிபுணர். இந்தியாவின் போற்றத்தக்க பாராளுமன்ற வாதி, சிறந்த பேச்சாளர், தமிழிசை இயக்கத்தை உருவாக்கி வேரூன்றச் செய்தவர்.

1947 ஆம் ஆண்டு இந்திய விடுதலைக்குப் பின்னர் பதவியேற்ற இந்திய அரசின் முதல் நிதியமைச்சர், மற்றும் இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பல பெருமைகளை உடையவர். நாட்டுப் பிரிவினை போது எழுந்த கணக்கு பிணக்குகளுக்கு சரியான முடிவு கண்டவர்.

 கோயம்புத்தூர் நகரில் பல தொழிற்சாலைகளுக்கு உரிமையாளர்களான வாணிய செட்டிக் குடும்பத்தில் ஆர். கந்தசாமி செட்டியார் - ஸ்ரீரங்கம்மாள் தம்பதிக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சண்முகனாருடன் பிறந்தவர்கள் மூன்று தம்பிகள், இரண்டு தங்கைகள்.

கோவை யூனியன் உயர்நிலைப் பள்ளியில் தமது பள்ளிக் கல்வியைப் பயின்றார். பின்னர் சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் பட்டப் படிப்பையும், சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்தார். மிகக் குறுகிய காலமே வழக்குரைஞராகப் பணியாற்றி, பின்னர் பொதுவாழ்வில் ஈடுபட்டார்.

 வாழ்வில் பல முக்கிய பொறுப்புகளை வகித்தார். கோவை நகர் மன்ற உறுப்பினராகவும், நகர் மன்றத் துணைத் தலைவராகவும், சென்னை ராஜதானியின் சட்டமன்ற உறுப்பினராவும், இந்திய தேசிய சட்ட சபையின் (அன்றைய பாராளுமன்றம்) உறுப்பினராகவும் திறம்படப் பணியாற்றினார்.

சர் ஆர்.கே.சண்முகம் செட்டி 1920இல் அன்னி பெசன்ட் அம்மையாருடன் சில மாதங்கள் இங்கிலாந்து சென்று பல பொதுக் கூட்டங்களில் உரையாற்றி, இந்திய சுயாட்சிக்காக தமது கருத்துகளை வெளியிட்டார்.

1931 முதல் 1945 வரை கொச்சி அரசின் திவானாகப் பணிபுரிந்தார். அவரது ஆட்சிக்காலத்தில் அனைத்து துறைகளிலும் நிர்வாக சீர்மை மேம்பட்டது. அவரது கண்காணிப்பில் கொச்சி அரசின் தலைமையகம் நவீனப்படுத்தப்பட்டது.

1929 இல் பன்னாட்டு தொழிலாளர் நிறுவன மாநாட்டில் இந்தியப் பிரதிநிதியாக கலந்து கொண்டார். 1923 முதல் 1929 வரை மத்திய சட்டமன்ற கீழவையில் உறுப்பினராக இருந்தார். அந்த அவையின் துணைத்தலைவராக 1931-33 ஆண்டுகளிலும், தலைவராக 1933-34களிலும் பதவியில் இருந்தார். 1938 ஆம் ஆண்டு ஜெனிவாவில் உலகநாடுகள் சங்க (League of Nations) கூட்டத்திற்கு இந்தியாவின் சார்பாக சென்றிருந்தார். 1944ஆம் ஆண்டு பிரெட்டன் வுட்ஸ் உலக நாணய மாநாட்டிலும் கலந்து கொண்டார். 1945 ஆம் ஆண்டு மன்னர்கள் சங்கத்திற்கு அரசியலமைப்பு ஆலோசகராகப் பணியாற்றினார். இந்திய அரசியலமைப்பு சட்டமன்றத்திலும் உறுப்பினராகப் பங்கேற்றார்.

நாடாளுமன்றத்தின் சுயராஜ்யக் கட்சியின் (காங்கிரஸ்) தலைவராக நேருவும், செயலாளராக சித்தரஞ்சன் தாசும், கொறடாவாக ஆர்.கே.சண்முகனாரும் பணியாற்றிச் சிறப்பித்தனர்.

இளம் வயதிலேயே பல மொழிகளைக் கற்றறிந்தார். கோவை மாநகரில் ரேஸ் கோர்ஸ் பகுதியில் இருந்த இவரது ஹவார்டன் எனும் இவரது இல்லத்திலிருந்த நூலகம் இந்தியாவிலுள்ள வீட்டு நூலகங்களில் மிகப்பெரிய வீட்டு நூலகங்களில் ஒன்று.

கோவை அவினாசி சாலையில் 1953ஆம் ஆண்டு தனது தாயார் சீரங்கம்மாள் நினைவாக ஆர்.கே. சீரங்கம்மாள் கல்வி நிலையம் என்று 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்பு வரை போதிக்கும் கல்வி நிறுவனம் ஒன்றைத் துவக்கினார். ஆனால், பள்ளி துவக்க விழாவிற்கும் அதன் செயல்பாட்டினைக் காணும் நிலையில் 1953 மே 5ஆம் நாள் காலமானார்.

இந்திய தேசிய சட்ட சபையின் சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், இந்திய நாடாளுமன்றத்தின் முதல் தமிழ் சபாநாயகர் என்ற பெருமைக்குரியவர்.

அவர் போராட்டங்களின்றி சட்டவழியே தன்னாட்சி மற்றும் விடுதலை பெறுவதை விரும்பினார். அவர் நீதிக்கட்சியில் சிலகாலம் உறுப்பினராக இருந்தார். பின்னர் சுதந்திராக் கட்சியின் முதன்மை கொறடாவாகவும் இருந்தார்.

இந்திய விடுதலையின்போது "உலக நிகழ்வுகளின் முதன்மைக் காரணத்தாலும், இதுவரை ஆட்சி புரிந்தவர்களின் பெருந்தன்மையான விட்டுக்கொடுத்தலினாலும் வெளிநாட்டு ஆட்சியிலிருந்து விடுதலை பெற்றுள்ளோம் " என்று கூறியுள்ளார்.

1941இல் இரண்டாம் உலகப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, இந்தியாவின் நிரந்தர வர்த்தகப் பிரதிநிதியாக ஐக்கிய அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டார். பன்னாட்டு நிதியம், உலக வங்கி ஆகிய அமைப்புகளைத் தோற்றுவிக்க இவர் ஆற்றிய பணிகள் பல.

1947இல் இந்தியா விடுதலை அடைந்த பின்னர், மகாத்மா காந்தியின் விருப்பப்படி முதல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார். உலகப் போரின் பின்னர் பெரும் பொருளாதார வீழ்ச்சி அடைந்த அந்தக் கால கட்டத்தில் உலக வரலாற்றில் இந்தியப் பிரிவினையின் காரணத்தால் நடைபெற்ற மிகப்பெரிய மதக் கலவரங்கள், இனப் படுகொலைகள், பலகோடி மக்களின் இடமாற்றம், இவற்றால் ஏற்பட்ட பெரும் பொருளாதார வீழ
மே 5,
வரலாற்றில் இன்று.

முன்னாள் குடியரசுத் தலைவர் ஜெயில் சிங்  பிறந்த தினம் இன்று.

கியானி ஜெயில் சிங் (மே 5, 1916 – டிசம்பர் 25, 1994) 1982 முதல் 1987 வரை இந்தியாவின் குடியரசுத் தலைவராக இருந்தார். இந்தியாவின் குடியரசுத் தலைவரான முதல் சீக்கியரும் இவரே ஆவார். இவர் ஒரு விடுதலைப் போராட்ட வீரராகவும், காங்கிரஸ் கட்சித் தலைமைப் பதவிகளிலும், முதலமைச்சர், நடுவண் அமைச்சர் என பல தளங்களிலும் செயல்பட்டவர்.
மே 5,
 வரலாற்றில் இன்று.

மனிதகுலத்தை உய்விக்கும் சிந்தனை எழுச்சியை தந்த கார்ல் மார்க்ஸ் பிறந்த தினம் இன்று .

உலகின் தலைசிறந்த காதல்,நட்பு ,சித்தாந்தம் எல்லாம் ஒரே ஒரு மனிதன் வசம் என்றால் மார்க்ஸுக்கு தான் அப்பெருமை.

போராட்டம், வறுமை, வலிகள், பசி இவையே வாழ்க்கையின் ஒவ்வொரு அங்குலத்திலும் நிறைந்திருந்த பொழுது எளியவர்களும், பாட்டாளிகளும் எப்படி துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவது என ஓயாமல் சிந்தித்த அசாதாரணமான மனிதர் அவர்.

ஜெர்மனியில் மே  5, 1818இல் பிறந்த மார்க்ஸுக்கு அவரின் அப்பா எல்லையற்ற சுதந்திரம் தந்தார் ;மகனின் போக்கிலேயே இருக்க விட்டார் . மார்க்ஸ் இறக்கும் வரை அப்பாவின் புகைப்படம் சட்டைப்பையில் இருக்கிற அளவுக்கு இருவருக்குமான பந்தம் உறுதியானது ..

தத்துவஞானி ஹெகலை ஆதரித்த குழுவில் தன்னையும் இணைத்துக்கொண்ட மார்க்ஸ் மதத்தை மறுத்தார் ;மதம் என்பது மனிதத்தன்மை அற்றது,அது போதைப்பொருளை போன்றது என கடுமையான விமர்சனங்களை வைத்தார். ஷேக்ஸ்பியர், கதே என எண்ணற்ற இலக்கிய ஆளுமைகளின் எழுத்துக்களில் ஆர்வம் கொண்டிருந்த அண்டை வீட்டு நண்பரிடம் அடிக்கடி உரையாடும் பொழுது தான் அவரை விட ஏழு வயது முதிர்ந்த ஜென்னியிடம் காதல் பூத்தது .

கரடுமுரடான சுபாவம் கொண்ட,ஏழ்மையில் உழன்ற மார்க்ஸை செல்வ வளம் மிகுந்த குடும்பத்தின் நங்கையான ஜென்னி மனதார நேசித்தார். அவர்களின் காதல் பல வருடங்கள் காத்திருப்புக்கு பின் கனிந்தது. அப்பொழுது தான் மார்க்ஸ் ஒரு பத்திரிக்கையின் ஆசிரியர் ஆகியிருந்தார்;அவரின் எழுத்துகள் பாட்டாளிகள் எப்படி முதலாளிகளால் சுரண்டப்படுகிறார்கள் என தெளிவுபடுத்தின. எப்படி சிலரிடம் செல்வம் தேங்கி கிடக்கிறது என்பதையும் விளக்கினார். எல்லாவித அடக்குமுறைகளையும் பாட்டாளிகள் தகர்த்தெறிய ஒன்று சேர வேண்டும் என அவரின் எழுத்துகளின் மூலம் உத்வேகப்படுத்தினார் .

அவரை ரஷ்ய அரசு நாடு கடத்தியது. இவரின் சிந்தனை வேகத்தை பார்த்து பிரான்ஸ் அரசு ஒரு நாளுக்குள் வெளியேற வேண்டும் என்றது . பெல்ஜியத்தில் போய் குடியேறினார் மார்க்ஸ் .நிலைமை இன்னமும் மோசம் ;எல்லா இடங்களுக்கும் ஜென்னி புன்னகை மாறாமல் உடன் வந்தார் .

ஒரு முறை விபசார விடுதியில் ஒரு நள்ளிரவு முழுக்க சந்தேகப்பட்டு போலிஸ் அடைத்துவைத்த பொழுது கூட சின்ன முகச்சுளிப்பை கூட மார்க்ஸை நோக்கி காட்டாத மங்கை அவர். எங்கெல்ஸை ஏற்கனவே ஒரு முறை சந்தித்திருந்த மார்க்ஸ் மீண்டுமொரு முறை சந்தித்த பொழுது எண்ணற்ற தளங்களில் தங்களின் சிந்தனை ஒத்திருப்பதை கண்டார். இவரை காப்பதை தன் வாழ்நாள் கடமையாக செய்தார் ஏங்கல்ஸ். வருடத்திற்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அனுப்பிக்கொண்டே இருந்தார் . இங்கிலாந்தின் நூலகங்களில் தவங்கிடந்து மூலதனத்தை உருவாக்கினார்கள்
ஒரு
பொருளை நீங்கள் வாங்குகிறீர்கள் என்றால் அதற்கு ஒரு விலை தந்தே அதை வாங்குவீர்கள் .அந்த பொருளை பல்வேறு துன்பங்களுக்கு உள்ளாகி தயாரிக்கும் தொழிலாளிக்கு நீங்கள் கொடுக்கும் பணம் போய் சேர்கிறதா என்றால் இல்லை -மூலதனத்தை போட்ட முதலாளி ஒட்டுமொத்த லாபத்துக்கும் சொந்தக்காரர் ஆகிறார்

அப்படியில்லாமல் மூலத்தை உழைக்கிறவனுக்கு பிரித்து தரவேண்டும் என்பதே அதன் சாரம் .உலகின் பொருளாதரத்தை பற்றி மார்க்ஸ் எழுதிய காலத்தில் வீட்டு நிலைமை ஏகத்துக்கும் மோசமானது .பிள்ளைகள் மாண்டு போனார்கள் ;"பிறந்த பொழுது உனக்கு தொட்டில் கட்ட காசில்லை ;இப்பொழுது அடக்கம் செய்ய காசில்லை !"என ஜென்னி கண்ணீர் விடுகிற அளவுக்கு நிலைமை மோசம் ,பசியால் நொடிந்து போய் மார்பிலிருந்து ரத்தம் சொட்ட பிள்ளைக்கு பாலூட்டிய கொடுமையிலும் மார்க்ஸை அன்போடு சுருட்டு வாங்கித்தந்து காத்தார் ஜென்னி .

ஜென்னி இறந்த இரண்டு வருடங்களில் ஏற்கனவே மனதளவில் இறந்து போயிருந்த மார்க்ஸ் மீளாத்துயில் கொண்டுவிட்டார் . காரல் மார்க்ஸ் கண்ட கனவான பாட்டாளிகளின் புரட்சி அடுத்த நூற்றாண்டில் பல நாடுகளில் காட்டாற்று வெள்ளம் போல பொங்கிப்பெருகிற்று .சூரியனின் கதிர்கள் போல உலகம் முழுக்க கம்யூனிசம் நீக்கமற மக்களின் சிந்தனையில் புகுந்தது .