வியாழன், 23 நவம்பர், 2017

SSA - VIDEO CONFERENCE FOR BLOCK LEVEL "EMIS" - CO - ORDINATORS

+1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை-அரசு தேர்வுகள் இயக்ககம்


2017-2018ம் ஆண்டு முதல் +1 பொதுத் தேர்வு எழுதும் தனித் தேர்வர்களுக்கு அகமதீப்பீடு இல்லை.

தேர்ச்சி பெறுவதற்கான குறைந்தபட்ச மதிப்பெண் 35 என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

90 மதிப்பெண்களுக்கு தேர்வு எழுதும் தனித்தேர்வர்களின், மொத்த மதிப்பெண்கள் 100 மதிப்பெண்களுக்கு மாற்றி கணக்கிடப்படும்.

அகமதிப்பீடு தனித் தேர்வர்களுக்கு மட்டும் ரத்து செய்யப்படுகிறது.

SSA - ALM- NOTES OF LESSON MODEL (TIGER METHOD)

ஒரு மதிப்பெண் தேர்வு: பள்ளிகளில் அறிமுகம்


மத்திய அரசின், 'நீட்' உள்ளிட்ட நுழைவுத் தேர்வுகளில்,அதிக மதிப்பெண் பெறும் வகையில், 'ஒரு மதிப்பெண் தேர்வு' என்ற, புதிய பயிற்று முறை, அரசு பள்ளிகளில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பிளஸ் 2 முடிக்கும் 
மாணவர்களில்,மருத்துவம் படிக்க விரும்புவோர், 'நீட்' தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டு முதல், இது கட்டாயம் என்பதால், தமிழகத்தில், அரசு பள்ளி மாணவர்களை, நுழைவுத் தேர்வுகளுக்கு தயார்படுத்த, பயிற்சி திட்டம் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கேற்ப, பள்ளிகளில் கற்பித்தல் முறையிலும் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது. அதன்படி, அரசு பள்ளிகளில், பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள், 100 சதவீதம் தேர்ச்சி பெறவும், நுழைவுத் தேர்வில் வெற்றி பெறவும், புதிய பயிற்று முறைகளை, பள்ளிக் கல்வி இயக்குனர், இளங்கோவன் அறிவித்துள்ளார்.இதில், ஓர் அம்சமாக, ஒரு மதிப்பெண் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

தேசிய பசுமைப்படை திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளுக்கான நிதி ரூ.5 ஆயிரமாக உயர்வு


தமிழகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்களுக்கு சுற்றுச்சூழல் குறித்த ஆர்வத்தை ஏற்படுத்தவும், இயற்கையை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்காக மத்திய அரசின் சார்பில் மாநில அரசின் மூலம் ஒவ்வொரு பள்ளியிலும் பசுமைப்படை அமைக்கப்படுகிறது.

சுற்றுச்சூழல் மீது ஆர்வமுள்ள மாணவர்கள், இதன் உறுப்பினர்களாக சேர்க்கப்படுகின்றனர். கடந்த ஆண்டு வரை இத்திட்டத்துக்கு மத்திய அரசின் சார்பில் ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.2,500 வழங்கப்பட்டு வந்தது. தற்போது அது உயர்த்தப்பட்டு, இந்த ஆண்டு முதல் ரூ.5 ஆயிரமாக வழங்கப்படுகிறது. தமிழகத்தில் தற்போது அரசு பள்ளிகளில் தேசிய பசுமைப்படை திட்டம் செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை 30 ஆயிரம் தொடக்கப்பள்ளிகளும், 8,500 நடுநிலைப்பள்ளிகளும் பெறுகின்றன.

இந்த தொகையில் பள்ளிகளில் மூலிகை மற்றும் காய்கறி தோட்டம் அமைப்பது, மாணவர்களுக்கு பருவநிலை மாறுபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மரக்கன்றுகளை நடுவதன் அவசியம் குறித்த செயல்பாடுகள் நிகழ்த்த கல்வி அதிகாரிகள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்

01-01-2016 முதல் 31-10-2017 வரை ஓய்வுபெற்ற மற்றும் பணியிடையே மரணமடைந்த அரசு ஊழியர் ஆசிரியர்கள் திருத்திய ஓய்வூதிய கருத்துருக்கள் பணிப்பதிவேட்டுடன் மாநிலகணக்காயர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும்...

TN Govt G.O. Ms No 340 Dated 20-11-2017 for the Revision of Pension/Family Pension and Retirement benefits order issued.

SCHOOL TEAM VISIT - பள்ளி ஆய்வின் போது , ஆய்வு அலுவலர்களால் பள்ளிகளில் கவனிக்க வேண்டியவை விவரம் - தர்மபுரி மாவட்டம்.