திங்கள், 4 மே, 2020

கணிணி ஆசிரியர்களுக்கு பைதான் புரோகிராமிங் பயிற்சி பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறை நாள் 04.05.2020




சென்னையில் இருந்து வருவோர் குறித்து தகவல் அளிக்க வேண்டும் ~ ஆணையாளர் வேண்டுகோள்…

பல்வேறு மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு திரும்புகிறவர்கள் விண்ணப்பிக்கலாம் ~ தமிழக அரசு அறிவிப்பு…

ஆன்லைனில் பிஎச்டி, எம்பில் தேர்வுகள்~ யுஜிசி அறிவுரை...

கொரோனா வைரஸ்: எந்தெந்த பரப்புகளில் எவ்வளவு நேரம் உயிர் வாழும்?

ரிச்சர்ட் கேரி
பிபிசிக்காக

 03 மே 2020

கோவிட்-19 வைரஸ் தொற்றை உண்டாக்கும் சார்ஸ்-கொரோனா வைரஸ்-2 (Sars-CoV-2) என்று பெயரிடப்பட்டுள்ள வைரஸ் கிருமியிடம் இருந்து தப்பிக்க கைப்பிடியை பிடிக்காமல் முழங்கையால் அழுத்திக் கதவுகளைத் திறப்பது, அலுவலக மேசைகளை கிருமிநாசினி மூலம் அடிக்கடி சுத்தம் செய்வது, பேருந்துகளில் கைபிடியைப் பிடிக்காமல் பயணிப்பது உள்ளிட்டவற்றை உலகெங்கும் உள்ள மக்கள் பின்பற்றி வருகின்றனர்.

அவற்றின் மேற்பரப்பில் ஒருவேளை கொரோனா வைரஸ் கிருமி இருந்தால் அதை தொற்றிக்கொள்ளாமல் இருக்க இவ்வாறு செய்கின்றனர். ஆனால், எந்தெந்த பொருட்கள் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிருடன் இருக்கும்?

காற்றில் உயிர்வாழும் நேரம்

இருமல் மற்றும் தும்மலின்போது மூக்கு மற்றும் வாய் வழியாக, மிகச்சிறிய, சுமார் 3,000 எண்ணிக்கை அளவிலான உமிழ்நீர்த் துளிகள் வெளிவரும்.

இந்தத் துளிகளின் அளவு 1-5 மைக்ரோ மீட்டர் மட்டுமே. அதாவது மனிதர்களின் சராசரி மயிரிழை ஒன்றின் அகலத்தில் 30இல் ஒரு பங்கு.

ஆடைகள், பொருட்கள் மீது மட்டும் படியாமல் காற்றிலும் கலக்கும் இந்தத் துகள்கள், காற்றில் மூன்று மணிநேரம் வரை உயிர்ப்புடன் இருக்கும்.

ஒரு துளியில் எத்தனை வைரஸ்கள் இருக்கும் என்பது குறித்த சரியான தரவுகள் இல்லை.

இன்ஃபுளூயென்சா வைரஸ்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், பாதிக்கப்பட்டவரின் தும்மலில் வெளியாகும் ஒரு சிறு துளியில் பல பத்தாயிரம் வைரஸ் கிருமிகள் இருப்பது தெரிந்தது.

இந்த அளவு ஒவ்வொரு வகை வைரஸுக்கும் வேறுபடலாம்.

கொரோனா வைரஸ் மலத்தில் எவ்வளவு நேரம் உயிர்வாழும்?

மனித மலத்தின் மீதும் நீண்ட நேரம் இந்த வைரஸ் உயிர்வாழும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் குறிப்பான நேர அளவு எதுவும் இல்லை.

இந்த கொரோனா வைரஸ் பரவியுள்ள கழிவறையை பயன்படுத்திய ஒருவர், முழுமையாக கைகளை சுத்தம் செய்யாமல் எந்தப் பொருட்களைத் தொட்டாலும் அவற்றின்மீது இந்த வைரஸை பரவச் செய்ய முடியும்.

அதைவிட முக்கியமாக அறிந்துகொள்ள வேண்டியது, வைரஸ் தொற்றியுள்ள இடத்தை தொட்டுவிட்டு முகத்தை தொடுவதுதான் மனித உடலுக்குள் இந்த Sars-CoV-2 கொரோனா வைரஸ் செல்வதற்கான முக்கியமான வழியாக உள்ளது என்பது.

உலோகங்கள், பிளாஸ்டிக், கண்ணாடி

கொரோனா குடும்பத்தைச் சேர்ந்த பல்வேறு வைரஸ்களும், முறையாக சுத்தம் செய்ய்யப்படாத உலோகங்கள், பிளாஸ்டிக் மற்றும் கண்ணாடி ஆகியவற்றின் மீது ஒன்பது நாட்கள் வரை உயிர்ப்புடன் இருக்கும் என்று முந்தைய ஆய்வுகள் கூறுகின்றன.

குளிர்ச்சியான சூழல்களில் அவை 28 நாட்கள் வரைகூட உயிர் பிழைத்திருக்க வாய்ப்புண்டு.

அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தற்போது பரவி வரும் Sars-CoV-2 வகை கொரோனா வைரஸ் உலோகம், பிளாஸ்டிக் ஆகியவற்றின் மேற்பரப்பில் இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை உயிர்ப்புடன் இருப்பது தெரியவந்துள்ளது.

எனினும், தாமிர உலோகத்தால் ஆன பொருட்களின் மேற்பரப்பில் நான்கு மணி நேரம் மட்டுமே இவை தாக்குப்பிடிக்கின்றன.

கொரோனா வைரஸ் ஆடைகள் மீது எவ்ளவு நேரம் இருக்கும்?

துணிகள் மற்றும் ஆடைகள் ஆகியவற்றின் மீது இந்த வைரஸ் எவ்வளவு நேரம் உயிர்ப்புடன் இருக்கும் என்று இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

எனினும், ஈரத்தை உறிஞ்சிக்கொண்டு விரைவில் காய்ந்துவிடும் தன்மையுடைய கார்டுபோர்டு அட்டைகளின் மேற்பரப்பில் பிளாஸ்டிக், உலோகம் ஆகிவற்றைவிட குறைவான நேரமே இந்த கொரோனா வைரஸ் உயிர்ப்புடன் இருக்கும்.

சுற்றியுள்ள காற்றின் ஈரப்பதம், வெப்பநிலை ஆகியவற்றில் உண்டாகும் மாற்றம் இந்த நேர அளவின் மீது தாக்கம் செலுத்தும்.

Sars-CoV-2 கொரோனா வைரஸை பொருட்கள் மீது அழிப்பது எப்படி?

தற்போது பரவி வரும் Sars-CoV-2 கொரோனா வைரஸ் 62-71% ஆல்கஹால் அளவுள்ள கிருமி நாசினி அல்லது 0.5% ஹைட்ரஜன் பெராக்ஸைடு பிளீச்சிங் பவுடர் அல்லது 0.1% சோடியம் ஹைட்ரோகுளோரைட் உள்ள வீட்டுப் பயன்பாட்டுக்கான பிளீச்சிங் பவுடர் ஆகியவற்றை பயன்படுத்தி சுத்தம் செய்து ஒரு நிமிடத்துக்கும் குறைவான காலத்தில் ஒழித்து விடலாம்.
மே 4, வரலாற்றில் இன்று.

பிரபல நாவல் ஆசிரியரும், அறுவை சிகிச்சை நிபுணருமான ராபின் குக் (Robin Cook) பிறந்த தினம் இன்று.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் (1940) பிறந்தவர். இவருக்கு 8 வயதாகும்போது குடும்பம் நியூஜெர்சியில் குடியேறியது. வெஸ்லியன் பல்கலைக்கழகத் திலும், கொலம்பியா பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியிலும் பயின்றார். ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் மருத்துவ முதுகலைக் கல்வியை முடித்தார். அங்கு சிறிது காலம் பணிபுரிந்தார்.

பிரான்ஸில் உள்ள காஸ்டியூ சொசைட்டி ரத்த (Blood-Gas) பரிசோதனைக் கூடத்தின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு இவரது கண்ணோட்டம் விரிவடைந்தது. மருத்துவ உண்மைகளை அடிப்படையாகக் கொண்டு கதைகள் எழுதத் தொடங்கினார்.

அமெரிக்க கடற்படையில் 2 ஆண்டுகள் பணிபுரிந்தார். அங்கு லெப்டினன்ட் கமாண்டர் அந்தஸ்துக்கு உயர்ந்தார். இவரது முதல் நாவல் ‘தி இயர் ஆஃப் தி இன்டர்ன்’. கடும் உழைப்பு, ஆராய்ச்சி மூலம் விவரங்களை சேகரித்து அவற்றின் அடிப்படையில் கதைக்களம், கதாபாத்திரங்களை உருவாக்குவது இவரது சிறப்பு அம்சம்.

இவரது மருத்துவ அறிவுதான் இவரது பல நாவல்களுக்கான கருவை வழங்கி வருகிறது. உறுப்பு தானம், செயற்கை கருத்தரிப்பு, மருந்து ஆராய்ச்சிகள், மரபணு பொறியியல், ஆராய்ச்சி மோசடிகள் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் எழுதியுள்ளார்.

இவரது பல நாவல்கள் விற்பனையில் சாதனை படைத்துள்ளன. ‘உடல்நல பாதிப்பில் இருந்து விடுபடுவதை மக்கள் பெரிதாகக் கருதுகிறார்கள். பெரிய ஆபத்தில் இருந்து தப்பியதாக உணர்கிறார் கள். என் நாவல்களின் வெற்றிக்கு அதுவே காரணம்’ என்கிறார்.

முக்கியமான, சிக்கலான மருத்துவ விஷயங்கள் மக்களுக்கு எளிதில் போய்ச் சேரவேண்டும் என்பதற்காகவே மருத்துவ த்ரில்லர் நாவல்களை எழுதுவதாகக் கூறுகிறார். இவரது பல புத்தகங்கள் 40-க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.

ஸ்டெம் செல் ஆராய்ச்சிகளை மையமாகக் கொண்டு இவர் எழுதிய ‘கோமா’, ‘ஷாக்’ நாவல்கள் பெரும் சர்ச்சையைக் கிளப்பின. இன்று மருத்துவ ஆராய்ச்சியில் நிகழும் வேகமான மாற்றங்கள், வெவ்வேறு பிரச்சினைகள், எதிர்காலப் பிரச்சினைகள் ஆகியவற்றை மையமாக வைத்தே அனைத்து நாவல்களையும் எழுதுகிறார்.

இவரது ‘கோமா’, ‘ஸ்பிங்ஸ்’ நாவல்கள் திரைப்படமாக எடுக்கப்பட்டு வெற்றிகரமாக ஓடின. இவரது பல நாவல்கள் வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர்களாக வந்துள்ளன. இவரது நாவல்கள் விறுவிறுப்பாக இருப்பதோடு, மருத்துவ அறிவை ஊட்டுவதாகவும் உள்ளன.

‘மிக அதிகம் விற்பனையாகும் புத்தகங்கள்’ என நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் வெளியிடும் பட்டியலில் இவரது நூல்கள் தொடர்ந்து இடம்பெறுகின்றன. இவரது நூல்கள் ஏறக்குறைய 10 கோடி பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளன.

தான் ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் என்பதை பெருமையாகக் கருதுகிறார். ஒரு எழுத்தாளர் டாக்டராகவும் இருக்கிறார் என்பதைவிட, ஒரு டாக்டர் எழுத்தாளராகவும் இருக்கிறார் என்று கூறப்படுவதையே விரும்புகிறார். தற்போது அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருக்கும் இந்த டாக்டர், நாவல் எழுதும் பணியையும் சிறப்பாக செய்துவருகிறார்.
மே 4,
வரலாற்றில் இன்று.


கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் நினைவு தினம் இன்று.


 முகம்மது இஸ்மாயில்(Muhammad Ismail, முஹம்மது இஸ்மாயில் சூன் 5, 1896 - ஏப்ரல் 4, 1972) சாகிபு இந்தியாவின்  தலைவர்களுள் ஒருவர். காயிதே மில்லத் என்ற உருதுச் சொல்லுக்கு வழிகாட்டும் தலைவர் என்று பொருள்.


திருநெல்வேலியைச் சார்ந்த ஊராகிய பேட்டையில் பிறந்தவர். இவருடைய தகப்பனாரின் பெயர் மியாகான் ராவுத்தர். திருவாங்கூர் அரச குடும்பத்தினருக்கு துணிகள் விற்பனை செய்யும் வணிகராகவும், முசுலிம் மதத் தலைவர் (மவுலவி) ஆகவும் இருந்தார். இசுமாயில் சாகிப் சிறுவயதிலேயே தந்தையை இழந்தார். தாயாரே அரபு மொழியும், மத நூலும் கற்றுக்கொடுத்தார். இவர் மனைவியின் பெயர் சமால் கமீதாபீவி. இவரின் ஒரே மகன் சமால் முகம்மது மியாகான்.



தனது பி. ஏ. பொதுத்தேர்வை எழுதாமல், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமைப் போராட்டத்தில் பங்கு கொண்டு இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடத் துவங்கினார்.

 இந்தியாவில் முசுலிம் மக்களுக்காக 1906இல் நவாப் சலீம் முல்லாகான் அகில இந்திய முசுலிம் லீக் என்ற கட்சியை ஆரம்பித்தார். அவருக்குப் பின்னர் முகமது அலி சின்னா, அதனை நடத்தி வந்தார்,

 பாகிஸ்தான் தோற்றத்தற்குப்பின், காயிதே மில்லத் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலைவரானார். இந்திய அரசியலமைப்பை உருவாக்கிய இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினராகவும் பணியாற்றினார்.



1947 இல் பாகிஸ்தான் உருவானபோது, அங்கு புலம் பெயராமல் அதிக எண்ணிக்கையில் முசுலிம்கள் இந்தியாவில் தங்கிவிட்டதால், அவர்களுக்காகக் கட்சிப் பெயரில் இருந்த "அகில" என்பதை நீக்கிவிட்டு 1949-ல் இந்தியன் யூனியன் முசுலிம் லீக் என்று மாற்றினார் இசுமாயில். இதன் முதல் மாநாடு சென்னையில் உள்ள இராசாசி மண்டபத்தில் நடந்தது. காயிதே மில்லத் நீண்ட காலம் முஸ்லிம் லீக் கட்சித் தலைவராக இருந்தார்.


அனைத்துக் கட்சியினரும் மதிக்கத்தக்க தலைவராக விளங்கினார். இந்திரா காந்தி, லால்பகதூர் சாஸ்திரி, ஜாகீர் உசேன், ஈ.வெ.ரா. பெரியார், ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி ஆகியோருடன் கட்சிப் பாகுபாடின்றி நட்புறவு கொண்டிருந்தார்.

1945 ஆம் ஆண்டில், தமிழ்நாட்டில், தமிழ்நாடு முஸ்லிம் லீக் கட்சியின் தலைவர் ஆனார்.
1948ஆம் ஆண்டு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.
1946 முதல் 52 ஆம் ஆண்டு வரை பழைய சென்னை மாகாண சட்ட சபை உறுப்பினராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்தார்.
1952 ஆம் ஆண்டு முதல் 58 ஆம் ஆண்டு வரை டெல்லி மேல் சபை உறுப்பினராகப் பதவி வகித்தார்.
1962, 1967, 1971 தேர்தல்களில் கேரளா, மஞ்சேரி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு நாடாளுமன்றத்துக்குச் சென்றார்.
1967ல் நடைபெற்ற சென்னை மாநில சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சியைக் கைப்பற்ற முக்கியப் பங்காற்றினார்.


அரசியலில் கவனம் செலுத்தியதோடு, தொழிற்துறையிலும் காயிதெ மில்லத் புகழ் பெற்று விளங்கினார். தோல் பொருட்கள் மற்றும் இறைச்சி ஏற்றுமதி மற்றும் விற்பனையில் கொடிகட்டி பறந்தார். தொழிற்துறையில் புகழ் பெற்றதால் சென்னை துறைமுகப் பொறுப்புக் கழகம், சென்னை வர்த்தகத் துறை, தென்னக ரயில்வே ஆலோசனைக்குழு, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில், தொழில் திட்டக்குழு, சுங்கவரிக் கழகம், தென்னிந்திய தொழில் வர்த்தக சபை உட்பட ஏராளமான அமைப்புகளில் உறுப்பினராக விளங்கினார்.

சென்னை மாநில இறைச்சி விற்பனையாளர்கள் சங்கத் தலைவராக 1946ஆம் ஆண்டு முதல் 1972ஆம்ம் ஆண்டு வரை இருந்தார். மத்திய தோல் மற்றும் தோல் பொருட்கள் குழுத் தலைவராகவும், தென்னிந்திய தோல் வியாபாரிகள் சங்கத் துணைத் தலைவராகவும் இருந்தார். தென்னிந்திய இசுலாமிய கழகத்தின் துணைத் தலைவராக 20 ஆண்டுகள் பணியாற்றியவர். தமிழ் வளர்ச்சிக் கழகத்தை நிறுவி அதன் தலைவராக இருந்தார்.
மே 4,  வரலாற்றில் இன்று.

பியானோ வை கண்டுபிடித்த
பார்தலோமியோ கிறிஸ்டோஃபொரி பிறந்த தினம் இன்று.

 1655ஆம் ஆண்டு வெனிசில் பிறந்த இவர் சுத்தியல் இயங்குமுறையைக் (hammer mechanism) கண்டுபிடித்ததன் மூலம் இசை உலகிற்கு பெரும் பங்களிப்பை செய்தார். இந்த தொழில் நுட்பத்தைக் கொண்டுதான் தேவைக்கு ஏற்றபடி கூட்டி குறைத்து இசையைக் கொண்டு வரும் கருவியை அவர் கண்டுபிடித்தது. இந்த கருவிக்கு இத்தாலியில் இவர் ‘பியானோ போர்ட்’ என்று பெயர் வைத்தார். பியானோ என்றால் ‘மென்மை’ என்றும் ‘போர்ட்’ என்றால் சத்தம் என்றும் அர்த்தம்.
மே 4, வரலாற்றில் இன்று.

திப்பு சுல்தான் நினைவு தினம் இன்று.

புலி என உண்மையாகவே குறிக்க வேண்டிய
வீரர் மற்றும் தலை சிறந்த நிர்வாகி இவர் .
எளிய வீரரராக ,வாழ்க்கையை தொடங்கி
மைசூரின் மன்னர் ஆனார் ஹைதர் அலி .
ஆங்கிலேயருக்கு அடிபணிய மறுத்து
போராடிய அவரின் மகன் தான் திப்பு சுல்தான்.

திப்பு கி.பி 1767ல் தமது 17 ம் வயதில் ஜோசப் ஸ்மித் தலைமையில் போரிட்ட ஆங்கிலப்
படையை எதிர்த்து வாணியம்பாடியில் தமது முதல் வெற்றிக்கனியைப் பறித்தார்.
கி.பி.1767முதல் கி.பி.1769 வரை
தமிழ்நாட்டில் பரவலாக பல இடங்களில்
ஆங்கிலப் படைக்கும், மைசூர் படைக்கும் நடந்த போர்களில் எல்லாவற்றிலும் வெற்றியே பெற்றார் திப்பு.

இரண்டாம் மைசூர் போரில் ஆங்கிலேயரை தோற்கடித்து போடப்பட்ட ஒரு இந்திய
மன்னர் சொல்கிறபடி ஒப்பந்தம் போடுகிற அற்புதம் திப்புவின் வீரத்தால் வாய்த்தது.
ஹைதர் அலி போர் நடந்து கொண்டிருக்கும் பொழுதே மரணம் அடைந்து விட ,  மன்னர்
ஆனார் திப்பு. அவர் ஆட்சியில் இருந்த இருபது வருடத்தில் 18 வருடங்கள்
போரக்களத்திலேயே கழித்தார்.

‘யுத்தத்தைப் போர்க்களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது
ஒருபோதும் வன்முறை நடத்தாதீர்கள். பெண்களைக் கௌரவமாக நடத்துங்கள்.
பிடிபட்ட கைதிகளின் மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும்
முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்’ என்று தன் ராணுவத்துக்கு எழுத்துப்பூர்வமாக உத்தரவு பிறப்பித்தவர் திப்பு சுல்தான்.

உலகத்தரத்திலான ராணுவத்தை உருவாக்கி இருந்தார் ; சொந்த தேதி முறையை
பின்பற்றினார், தனித்த எடை,அளவுகள் ஆகியவற்றை புழக்கத்துக்கு கொண்டு வந்தார். இன்னமும் குறிப்பாக அதுவரை இந்தியாவில் பெரிய ராஜ்யங்களை, அவர் காலத்தில் ஆண்ட மன்னர்கள் முகாலயர்களின் சார்பாக ஆள்கிறோம் என்று சொல்லியபடியே ஆண்ட பொழுது தனித்து நின்று தன் பெயரில் நாணயங்களை வெளியிட்டார்.

நாசாவின் கென்னெடி விண்வெளி மையத்தின் நுழைவாயில் ஒரு ஓவியம்
கொண்டிருக்கிறது -அதில் திப்பு ஏவுகணையை பயன்படுத்தி போரிடுவது
சித்தரிக்கப்பட்டுள்ளது ; போர்களத்தில் ஏவுகணையை முதன்முதலில் உலகிலேயே
பயன்படுத்தியவர் இவர்தான். அது இரண்டு கிலோமீட்டர் தூரம் வரை துல்லியமாக
சென்று தாக்கும் ஆற்றல் பெற்றதாக இருந்தது .அந்த ஆவணங்கள் இன்றும் லண்டனில் பத்திரமாக உள்ளன. அந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கான்கிரீவ் ராக்கெட்களை ஆங்கிலேயர்கள் உருவாக்கினார்கள்.

மத நல்லிணக்கத்துக்கு அற்புதமான எடுத்துக்காட்டு இவர். நூற்றி ஐம்பத்தாறு
கோயில்களுக்கு மானியம் வழங்கப்பட்டு வந்தது . எந்த அளவுக்கு அவரின் ஆட்சியில்
மத நல்லிணக்கம் நிலவியது என்பதற்கு இந்த தகவலே போதும். கோயில்களுக்கு
செலவிடப்பட்ட 2,33,959 ரூபாயில் இந்துக் கோயில்களுக்கும் மடங்களுக்கும் மட்டும்
2,13,959 அளிக்கப்பட்டது. இவர் ஆட்சியில்,
சிருங்கேரி மடத்தலைவருடன் நெருங்கிய
உறவு பாராட்டினார்.

மூன்றாம் மைசூர் போரில் பரசுராம் பாவ் எனும் மராத்தியர் தலைமையிலான படைகள் நாசப்படுத்திய சிருங்கேரி ஆலயத்தை
சீரமைத்துக் கொடுத்தார்.

அவர் காலத்தில் சந்தன விற்பனை தேசியமயமானது. பட்டுப்புழு உற்பத்தியை தன் ஆட்சிப்பகுதியில் அறிமுகப்படுத்தினார்.
கிழக்கிந்திய கம்பெனிக்கு போட்டியாக
இன்னொரு நிறுவனத்தை உருவாக்கவும் முனைந்தார்.  கப்பல் கட்டும் தொழில்நுட்பம்,
முகலாயர்களின் ஆட்சியில் இருந்து மாறுபட்ட
நிர்வாகம்,இடைத்தரகர்கள் இல்லாத நிலவரி விதிப்பு என இவரின் ஆட்சியின்
நிர்வாகப்பாடங்கள் ஏராளம். அந்த நிலவரி விதிப்பால் ஒடுக்கப்பட்ட மக்கள் பலபேர்
நிலங்களை பெற்றார்கள். தமிழ்நாட்டில் இருந்து ஆங்கிலேயர் ஆளுகையில் இருந்த
மக்கள் இந்த முறைகளால், அங்கே இடம் பெயர்வதும் நடந்தது. நான்கு மைல்களுக்கு
ஒரு பள்ளிக்கூடம் என்ற திட்டத்தை செயல்படுத்தினார் அவர் .

ஆடம்பரத்தை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றெண்ணி திருமணத்துக்கு ஒரு
சதவிகிதம் மட்டுமே வருமானத்தில் செலவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.
குடகு பகுதியில் ஒரே பெண்ணைப் பல ஆண்கள் மணந்துகொள்ளும் பழக்கத்தைத்
தடுத்து சட்டம் இயற்றியுள்ளார்.
கோயில்களில் இருந்த தேவதாசி முறையையும் ஒழிக்கச் சட்டம் போட்டதுடன், மதுவிலக்கை அமல்படுத்தி, அதைத் தீவிரமாகக் கண்காணித்தார்.
ஆங்கிலேயரோ அதே காலத்தில் வங்கத்திலும், பீகாரிலும் கஞ்சாவை
உற்பத்தி செய்து சீனாவை நாசமாக்கும் வகையில் அதை ஏற்றுமதி செய்து
கொண்டிருந்தனர்.

திப்பு அதே சமயம் ஆங்கிலேயருக்கு யாரேனும் உதவுகிறார்கள் என்று தெரிந்தால் தயவு தாட்சண்யம் இல்லாமல் தண்டிக்கவும் யோசிக்கவில்லை. இவர் உருவாக்கிய பல்வேறு சத்தமெழுப்பும் இயந்திரப்புலி ஒன்று இன்னமும் இங்கிலாந்து ம்யூசியத்தில் பழுதடைந்து எவ்வளவோ முயற்சிக்குபின் சரி செய்ய முடியாமல் இருக்கிறது.

ஆங்கிலேயரிடம் மூன்றாம் மைசூர் போரில் தோற்று அவரின் மகன்களை
மே 4,  வரலாற்றில் இன்று.

சர்வதேச தீயணைக்கும் படையினர் தினம் இன்று.

ஒவ்வொரு ஆண்டும் மே 4ம் தேதியன்று அனைத்துலக தீயணைக்கும் படையினர் நாள் International Firefighters' Day (IFFD) ஆக கொண்டாடப்பட்டு வருகிறது.

தீயணைக்கும் படையினர் எனும்போது ஒரு நாட்டில் இவர்களின் பணி மிக விசாலமானது.. ஆனால், இப்படையினரின் தேவை அடிக்கடி அவசியப்படாமையினால் இவர்களின் முக்கியத்துவம் பெரிதாக உணரப்படுவதில்லை.

இயற்கை சேதங்களினாலோ அல்லது விபத்துக்களினாலோ அல்லது கலவரங்களினாலோ தீ பற்றும்போது அத்தீயினை அணைப்பதற்காக வேண்டி இவர்களின் சேவை அளப்பரியது. பிற உயிரைக் காப்பதற்கு தனது உயிரை துச்சமாக மதித்து இவர்கள் ஆற்றும் பணி தன்னலமானது. குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் ஏற்படக்கூடிய கலவர நிலைகளிலும் மேற்கத்திய நாடுகளின் காட்டுத் தீ போன்ற இயற்கை அனர்த்தங்களின்போதும், அதே போல சகல தீ அனர்த்தங்களின் போதும் இவர்களின் செயற்பாடானது பாராட்டத்தக்கதாகும்.