ஞாயிறு, 7 மார்ச், 2021

*🏛️Breaking News வங்கிகள் வரும் 15, 16ம் தேதி ஸ்டிரைக்.. 4 நாட்கள் வங்கிகள் இயங்காது.*

*🏛️Breaking News வங்கிகள் வரும் 15, 16ம் தேதி ஸ்டிரைக்.. 4 நாட்கள் வங்கிகள் இயங்காது.*

 
 *வங்கிகள் இயங்காது!*

 *சென்னை: பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மத்திய அரசின் முடிவை கண்டித்து அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் சார்பில் வரும் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதற்கு முந்தைய நாளான 13ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதுடன், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திக்குள்ளாகும் அபாயம் உள்ளது.*


  *பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குவதைக் கண்டித்து, அகில இந்திய தேசிய மயமாக்கப்பட்ட வங்கி அதிகாரிகளின் கூட்டமைப்பு சார்பில் சென்னையில் நேற்று பத்திரிகையாளர் சந்தித்தனர். 15, 16ம் தேதி ஸ்டிரைக் செய்தியாளர்களிடம் பேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மாநில பொதுச்செயலாளர் மணிமாறன் பேசுகையில், பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்து வரும் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற போகிறது.*

  *வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் பொதுமக்களுக்கு எந்த மாதிரியான பாதிப்புகள் ஏற்படும் என்பதை வேலை நிறுத்தம் செய்யும் நாட்களில் மக்களிடம் விளக்கி கூறுவோம்.*

*பொதுத்துறை வங்கி வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வங்கி ஊழியர்கள் கலந்து கொள்கின்றனர்.*
  *மேலும், பொதுத்துறை வங்கிகளின் சிறப்பான கடன் வழங்கு அணுகுமுறையால் வேளாண்மை, சிறு மற்றும் குறு தொழில்கள், சேவை துறை ஆகியவை சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது.*

 
 *கடன் வழங்கி உள்ளோம்.*
     *மார்ச் 2020 புள்ளிவிவரப்படி பொதுத்துறை வங்கிகளின் மொத்த கடன், வேளாண் மற்றும் வேளாண்சார்ந்த துறைகளுக்கு ரூ.12,39,575 கோடியாகவும், தொழில் துறைக்கு ரூ.32,52,801 கோடியாகவும் இருந்தது.*
   *இதில், சிறுகுறு தொழில்களுக்கு ரூ.4,37,658 கோடியாகவும், நடுத்தர தொழில்களுக்கு ரூ.1,12,376 கோடியாகவும், பெரும் தொழில்களுக்கு ரூ.26,11,369 கோடியாகவும் இருந்தது.*

 
*கல்வி கடன்:*

     *கோடிக்கணக்கான இளைஞர்களின் உயர்கல்விக் கனவுகளை பொதுத்துறை வங்கிகள் நனவாக்கி உள்ளன.. கல்விக் கடனாக பொதுத்துறை வங்கிகள் வழங்கியுள்ள தொகை ரூ.79,06 கோடிகளாகும்.*
       *அதேபோன்று, நலிவடைந்த பிரிவினருக்கு பொதுத்துறை வங்கிகளின் கடன் உதவி மார்ச் 2020ம் ஆண்டில் ரூ.6,83,876 கோடி வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் கணக்குகள் பொதுத்துறை வங்கிகள் வழங்கிய பெருமளவு கடன்களினால் பல லட்சம் இளைஞர்கள் வேலைவாய்ப்பு வழங்கும் தொழிலதிபர் ஆனார்கள்.*
    *ஜன்தன் யோஜனா திட்டத்தின் கீழ் சாமானிய மக்களுக்கு வங்கிக் கணக்குகள் துவங்க வேண்டும் என்று அரசு அறிவித்தபோது பொதுத்துறை வங்கிகள் 33.17 கோடி ஜன்தன் கணக்குகளை துவங்கின. ஆனால் தனியார் வங்கிகளின் பங்கு வெறும் 1.25 கோடி கணக்குகள் தான் துவங்கின.. எனவே வங்கிகள் தனியார் மயமாக்கப்பட்டதால் சாமானிய மக்கள் மிகவும் பாதிக்கப்படுவார்கள்.*
       *அவர்களுக்கு வங்கி சேவைகள் அவர்களுக்கு எட்டாக்கனியாக்கி விடும். போராட்டம் நடைபெறும் எனவே வங்கிகள் தனியார் மயமாக்கப்படுவதால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மார்ச் 15, 16 ஆகிய தேதிகளில் தெருமுனைக் கூட்டங்கள், வாடிக்கையாளர் சந்திப்புகள், ஆர்ப்பாட்டங்கள், கருப்புப்பட்டை அணிந்து, எதிர்ப்பு முகக்கவசங்கள், சுவரொட்டிகள் பதாகைகள் துண்டு பிரசுரங்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவோம்.*

       *எனவே வங்கிகள் தனியார் மயமாக்குவதை கண்டித்து நடைபெறும் வேலை நிறுத்தத்திற்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்" இவ்வாறு கூறினார்..*
         *வங்கிகள் இயங்காது வங்கிகளை தனியார்மயமாக்குவதை கண்டித்து, வரும் 15, 16 ஆகிய தேதிகளில் வேலை நிறுத்தத்தில் அகில இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பினர் ஈடுபட உள்ளார்கள்.*
   *இந்நிலையில் அதற்கு முந்தைய நாளான 13ம் தேதி இரண்டாவது சனிக்கிழமை என்பதுடன், 14ம் தேதி ஞாயிற்றுக்கிழமை என்பதால் 4 நாட்கள் தொடர்ந்து வங்கி இயங்காது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் சிரமத்திக்குள்ளாகும் அபாயம் உள்ளது.*

*📚1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF...*

*📚1981 முதல் 2012 வரை ஆசிரியர் நியமனம் மற்றும் பணிகள் தொடர்பான அனைத்து அரசாணைகள் (Including G.O - 720 & TET) ஒரே தொகுப்பில் - PDF...*

*🗳️வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip) வழங்குதல் சார்பான தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்களின் செய்தி வெளியீடு எண்.178.நாள்:04.03.2021.*

*🗳️வாக்காளர் தகவல் சீட்டு (Voter Information Slip) வழங்குதல் சார்பான தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அவர்களின் செய்தி வெளியீடு எண்.178.நாள்:04.03.2021.*

*🗳️தேர்தல் 2021 - நான்கு கட்ட பயிற்சி வகுப்புகள் - தேர்தல் கமிஷன் உத்தரவு...*

*🗳️தேர்தல் 2021 - நான்கு கட்ட பயிற்சி வகுப்புகள் - தேர்தல் கமிஷன் உத்தரவு...*

 

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள, அனைத்து பணியாளர்களுக்கும், நான்கு கட்ட பயிற்சி அளிக்கும்படி, மாவட்ட கலெக்டர்களுக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.


இது தொடர்பாக, அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு அனுப்பியுள்ள கடிதம்:தமிழகத்தில், சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி லோக்சபா தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்க வேண்டும்தேர்தல், ஏப்., 6ல் நடக்க உள்ளது. அதற்கு முன், தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, நான்கு கட்டமாக, பயிற்சி அளிக்க வேண்டும்.


மார்ச், 18க்குள், ஓட்டுச் சாவடியில் தேர்தல் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு, முதல் பயிற்சி அளிக்க வேண்டும். அதன்பின், மார்ச், 26க்குள் இரண்டு நாட்கள்; ஏப்ரல், 3க்குள் மூன்று நாட்கள் பயிற்சி அளிக்க வேண்டும்; ஏப்., 5ல், நான்காம் கட்ட பயிற்சி அளிக்க வேண்டும்.


வகுப்பறையில், 40 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மாவட்டத்தில் எவ்வளவு தேர்தல் பணியாளர்கள் தேவையோ, அவர்களுடன் கூடுதலாக, 20 சதவீத பணியாளர்களுக்கு, பயிற்சி அளிக்க வேண்டும். ஓட்டுச்சாவடியில் பின்பற்ற வேண்டிய, கொரோனா விதிமுறைகளையும், தெரியப்படுத்த வேண்டும்.



ஓட்டுச்சாவடியில் ஒவ்வொரு அலுவலர்களும், என்ன செய்ய வேண்டும் என்பதை, தனித்தனியே விளக்க வேண்டும். செயல் விளக்கம் மற்றும் விதிமுறைகள் அடங்கிய கையேடை, தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வழங்க வேண்டும். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது

*🗳️வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் எவை? தேர்தல் ஆணையம் விளக்கம்...*

*🗳️வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் எவை? தேர்தல் ஆணையம் விளக்கம்...*

*What are the documents confirming the identity of the voter? - Election Commission...*


*ஓட்டு போடும்போது வாக்குச்சாவடியில் வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் எவை? என்பது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. புகைப்பட அடையாள அட்டை இதுகுறித்து சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-*

 *நடைபெறவுள்ள சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்பு, வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பிக்க வேண்டும்.*



*மாற்று ஆவணங்கள் எவை?*

*கடவுச்சீட்டு,*

*ஓட்டுனர் உரிமம்,*

*மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,*

*புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள்,*

*வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை,*

*தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு,*

*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை,*

*தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு,*

*புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,*

*நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் அல்லது சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை,*

*ஆதார் கார்டு ஆகியவை ஆகும்.*
 

*தகவல் சீட்டு ஆவணம் அல்ல*

 *வாக்காளர்களுக்கு புகைப்படம் இல்லாத வாக்காளர் தகவல் சீட்டை அளிக்க தேர்தல் ஆணையம் முன்வந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு இந்த சீட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் தரப்படும். ஆனால் வாக்களிக்க வரும்போது, இதை தனித்த அடையாள ஆவணமாக காட்ட முடியாது. இந்தச் சீட்டை வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக வாக்குச் சாவடியில் ஏற்க முடியாது.*


*பட்டியலில் பெயர்*

*ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.*


 *வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*
*What are the documents confirming the identity of the voter? - Election Commission...*


*ஓட்டு போடும்போது வாக்குச்சாவடியில் வாக்காளரின் அடையாளத்தை உறுதி செய்யும் ஆவணங்கள் எவை? என்பது பற்றி தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது. புகைப்பட அடையாள அட்டை இதுகுறித்து சட்டசபை தேர்தல் நடக்கவுள்ள தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 5 மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:-*

 *நடைபெறவுள்ள சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தலில் வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ள அனைத்து வாக்காளர்களும், அவர்கள் வாக்களிப்பதற்கு முன்பு, வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்கவேண்டும். வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க இயலாத வாக்காளர்கள், அவர்களின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்காக, பின்வரும் மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பிக்க வேண்டும்.*



*மாற்று ஆவணங்கள் எவை?*

*கடவுச்சீட்டு,*

*ஓட்டுனர் உரிமம்,*

*மத்திய அல்லது மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்களால் அல்லது வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள்,*

*புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்கு புத்தகங்கள்,*

*வருமான வரி நிரந்தர கணக்கு எண் அட்டை,*

*தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மார்ட் கார்டு,*

*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை,*

*தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீட்டு ஸ்மார்ட் கார்டு,*

*புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம்,*

*நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றம் அல்லது சட்ட மேலவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை,*

*ஆதார் கார்டு ஆகியவை ஆகும்.*
 

*தகவல் சீட்டு ஆவணம் அல்ல*

 *வாக்காளர்களுக்கு புகைப்படம் இல்லாத வாக்காளர் தகவல் சீட்டை அளிக்க தேர்தல் ஆணையம் முன்வந்துள்ளது. வாக்குப்பதிவுக்கு குறைந்தபட்சம் 5 நாட்களுக்கு முன்பு இந்த சீட்டு ஒவ்வொரு வாக்காளருக்கும் தரப்படும். ஆனால் வாக்களிக்க வரும்போது, இதை தனித்த அடையாள ஆவணமாக காட்ட முடியாது. இந்தச் சீட்டை வாக்காளரின் அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கான ஆவணமாக வாக்குச் சாவடியில் ஏற்க முடியாது.*


*பட்டியலில் பெயர்*

*ஒரு வாக்காளர் வேறொரு சட்டமன்ற தொகுதியின் வாக்காளர் பதிவு அதிகாரியால் வழங்கப்பட்ட அடையாள அட்டையை வைத்திருப்பாரேயானால் அந்த அடையாள அட்டையையும் இந்திய தேர்தல் ஆணையம் காட்டும் ஆவணமாகப் பயன்படுத்தலாம். ஆனால் அந்த வாக்காளருடைய பெயர் அந்த வாக்குச்சாவடிக்குரிய வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருக்க வேண்டும்.*


 *வாக்காளர் புகைப்பட அடையாள அட்டை அல்லது இந்திய தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட மேற்கூறிய எந்த ஒரு அடையாள ஆவணம் வைத்திருப்பதால் மட்டுமே ஒரு வாக்காளர் தனது வாக்கைச் செலுத்தி விட முடியாது. அவருடைய பெயர் வாக்குச்சாவடிக்கு அனுப்பப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தால் மட்டுமே அவர் வாக்குரிமையைச் செலுத்த தகுதியுடையவர் ஆவார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.*

எருமப்பட்டி ஒன்றிய ஆசிரியர்-பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தை மீட்டெடுப்போம்!பாதுகாப்போம்!ஆற்றல் மிகு ஆசிரியப்பெருமக்களே!ஆதரவு தருக!போராட்ட நடவடிக்கைகளில் பங்கேற்று வெற்றிகரமாக்கிடுக!தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலச்செயலாளர் தனிச்சுற்று மடல்!

எருமப்பட்டி ஒன்றிய  ஆசிரியர்-பணியாளர் கூட்டுறவு சிக்கன நாணயச்சங்கத்தை மீட்டெடுப்போம்!பாதுகாப்போம்!
ஆற்றல் மிகு ஆசிரியப்பெருமக்களே!ஆதரவு தருக!போராட்ட நடவடிக்கைகளில் பங்கேற்று வெற்றிகரமாக்கிடுக!
தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர்மன்றத்தின் மாநிலச்செயலாளர் தனிச்சுற்று மடல்!

*📘கற்போம் எழுதுவோம் திட்டத்தில் தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது..*

*📘கற்போம் எழுதுவோம் திட்டத்தில் தேர்விற்கான வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளது..*

*📘2021 தமிழக சட்டமன்ற தேர்தல் - மண்டல அலுவலர்களுக்கான (ZONAL OFFICER) பயிற்சி கையேடு.

*📘2021 தமிழக சட்டமன்ற தேர்தல் - மண்டல அலுவலர்களுக்கான (ZONAL OFFICER) பயிற்சி கையேடு.*

*2021 பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவு நகல் !!!.*

*2021 பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த மதுரை உயர் நீதிமன்ற கிளையின் உத்தரவு நகல் !!!.*