ஞாயிறு, 3 டிசம்பர், 2017

படைப்பாற்றல் கல்வி முறை (ALM-Active Learning Methodology)...

படைப்பாற்றல் கல்வி முறை...

தமிழ்நாட்டுத் தொடக்கக் கல்விமுறைதொகுப்பு

படைப்பாற்றல் கல்வி முறை (Active Learning Methodology)

அறிமுகம் : 

படைப்பாற்றல் கல்வி முறையானது தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு கற்றல் கற்பித்தலுக்கான ஒரு முறையாகும். இது மாணவர்களின் படைப்பற்றல் திறனை வெளிக்கொணர்வதற்கு உதவும் முறையாகக் கருதப்படுகிறது. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் 120 பள்ளிகளில் இப்புதிய கற்றல் முறை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு சூலை - 2007ல் நடைபெற்ற பட்டறை மூலம் ரிசி பள்ளத்தாக்கு பள்ளி ஆசிரியர்களும், ஆசிரியப் பயிற்றுநர்களும் இணைந்து இப்புதிய கற்றல் முறைக்கு ஏதுவான கட்டகங்களையும் பாடத்திட்டங்களையும் கால அட்டவணைகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு 2000-க்கு அதிகமான மனித நாள்கள் இப்பணிக்காக செலவிடப்பட்டு அக்டோபர் 2007-ல் தமிழக அரசு அரசாணை எண்: 260 நாள்: 12-10-2007 மூலம் படைப்பாற்றல் கல்வி எனப்படும் செயல்வழிக் கற்றல் முறை நடைமுறைப்படுத்தப்பட்டது. முதலில் ஆறு முதல் எட்டு வரையிலான வகுப்புகளுக்கு ஆங்கிலம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு நாளடைவில் பிறபாடங்களும் இம்முறையில் கற்பிக்கப்பட்டு வருகிறது. 

படைப்பாற்றல் கற்றலின் படிநிலைகளை முழுமையாக பின்பற்றி ஓர் அலகினைக் கற்பிக்க அளிக்கப்பட்டுள்ள காலம் 90 நிமிடங்கள் ஆகும்.

படைப்பாற்றல் கற்றல் படிநிலைகள் ஒன்பதாகும்... 
அவை, 
1)அறிமுகம் : (10 நி)

முந்தைய பாடங்களில் தொடர்புடைய கருத்துகள் இருப்பின் அதனை நினைவுகூர்ந்தும், ஆர்வமூட்டும் செயல்பாடுகளின் வாயிலாகவும் பாடத்தினை அறிமுககப்படுத்துதல். 

2) படித்தல்: (10 நி)

பாடப்பகுதியை முதலில் ஆசிரியர் படித்தல். பின்பு ஆசிரியர் வழிகாட்டுதலுடன் மாணவர் படித்தல். மாணவர் அடிக்கோடிட்ட புதிய சொற்களுக்கு ஆசிரியர் பொருள் கூறல். (மொழி பாடங்களுக்கு குரல் ஏற்ற இறக்கம், உணர்ச்சி வெளிப்படுத்துமாறு படித்தல்). 

3)மனவரைபடம்: (15 நி)

பாடக்கருத்துக்கு ஏற்ற மன வரைபடத்தினை மாணவர்கள் வரைதல். ஒரு குழு மன வரைபடத்தை வழங்குதல். விடுபட்ட கருத்துகளுடன் ஆசிரியர்தம் மன வரைபடத்தினை வழங்குதல். 

4)தொகுத்தலும் வழங்குதலும்(10 நி) :

பாடக்கருத்தினை மாணவர்கள் கீழ்கண்ட ஏதேனும் ஒருமுறையில் தொகுத்தல் 
1.வார்த்தை வலை(Word web
 2. அட்டவணை(Tables).
 3. குறிப்புகள்(Hints).
 4. வரிசைமுறையில் எழுதுதல். 
5. படங்கள் வரைதல். 
6. உண்மைத் தகவல்கள். 7. காலங்கள். 
8. மீன்முள் 
9.தகவல் பலகை மாணவர்கள் ஏதேனும் கருத்தை விட்டிருப்பின் அதனை இணைத்து, ஆசிரியர் தம் தொகுத்தலை வழங்குதல்.

 5) வலுவூட்டுதல்: (15 நி) 

பாடப்பொருளை வலுவூட்டும் வகையில், ஏற்ற செயல்பாடுகளை வடிவமைத்து வழங்குதல். 

6) மதிப்பீடு: (15 நி) 

மாணவர்களின் அடைவுத்திறனை சிறு வினாக்கள் கேட்பதன் வாயிலாக மதிப்பீடு செய்தல்.

 7)குறைதீர் கற்றல்: (15 நி) 
கற்றல் அடைவில் குறைபாடுடைய மாணவர்களை மதிப்பீட்டின்போது கண்டறிந்து, அவர்களுக்கு ஏற்ற குறைதீர் கற்றலை வழங்குதல்.

8)எழுதுதல்:

பாடக்கருத்துகளை வலுப்படுத்தும் வகையிலும், இதன் மூலம் எழுதும் திறன் வளரும் வகையிலும் செயல்பாடுகளை வடிவமைத்தல்.

 9)தொடர்பணி

பாடக் கருத்துகளுக்கு பொருத்தமான செயல்திட்டங்களை அளித்தல். ஆசிரியர் வழிகாட்டுதலுடன் தனியாகவோ அல்லது குழுவாகவோ செயல்படுத்தலாம் எனவும் வலியுறுத்தப்படுகிறது.

சிறப்புக்கள்:

படைப்பாற்றல் கல்வி முறை என்பது ஒரு திட்டமிட்ட கற்றல் முறையாக முன்வைக்கப்படுகிறது. மாணவர்களும் ஆசிரியரும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடியதாகவும் இம்முறையானது கருதப்படுகிறது.

Maternity Leave Clarification - இனி மகப் பேறு விடுப்பில் செல்லும் அனைவருக்கும் அந்தந்த மாதங்களில் சம்பளம் வாழங்க வேண்டும் - ஆணை வெளியீடு!

G.O 303 : 01-01-2016 TO 30-09-2017 PENSIONERS LIST PUBLISHED - ALL DEPARTMENTS... G.o 303 ன்படி 1-1-2016 முதல் 30-9-2017 வரை ஒய்வூதிய பலன் பெறுபவர்களின் பட்டியல் A.G office web siteல் 1208 பக்கங்கள் வெளியீடு செய்யப்பட்டடுள்ளது.அதில் தேதி வாரியாகவும்,துறை வாரியாகவும் உள்ளது...

CLICK HERE FOR PENSIONERS LIST(01.01.2016 - 30.09.2017)

CLICK HERE FOR FAMILY PENSIONERS LIST (01.01.2016 - 30.09.2017)

How To Link Your LIC Policy With Aadhaar Card PAN Card Online!


As per a government directive, you have to link your Aadhaar and PAN to your LIC (Life Insurance Corporation) policies, says India's biggest life insurer on its website. LIC has come up with a facility which enables policyholders to link Aadhaar with their policies online. Insurance regulator IRDAI (Insurance Regulatory and Development Authority of India) had earlier said linkage of Aadhaar number with insurance policies is mandatory and asked insurers to comply with the statutory norms. "The Authority clarifies that, linkage of Aadhaar number to insurance policies is mandatory under the Prevention of Money Laundering (Maintenance of Records) Second Amendment Rules, 2017," IRDAI said.

Separately, LIC has said that it has not launched any facility enabling linking of Aadhaar with its policies through an SMS-based service. "Our attention is drawn to some messages circulated in social media with our Emblem and logo asking policyholders to link their Aadhaar number by sending SMS to designated number…no such message has been sent by LIC. Also no facility to link Aadhaar number to policies is available through SMS in LIC," the state-run life insurer said on microblogging site Twitter.

"As and when LIC will enable linking of Aadhaar number with policies through SMS, our website will be duly updated of this option," LIC added.

LIC has on its website – licindia.in – listed steps to link policies with Aadhaar and PAN online:

1) Keep your Aadhaar Card and PAN card handy along with the list of policies.

2) Log in to LIC's website.  The link for linking Aadhaar and PAN with LIC policies is displayed prominently on LIC's homepage.

3) Click on the link and LIC gives you a to-do checklist. Read the instructions.

4) Mobile Number as registered with UIDAI has to be entered. OTP will be sent to the number provided.

5) In case your mobile number is not updated in Aadhaar, kindly contact nearby LIC Branch Office for Aadhaar linking, says LIC.

6) After reading the checklist, click on the Proceed button at the bottom of the page.

After submitting the details in the form, a message will be shown on the success of the registration for linkage.

After verification with UIDAI or Unique Identification Authority of India, which issues Aadhaar card, a SMS/mail confirmation will be sent to you, says LIC. The verification may take few days, the insurer adds.

Google-டேட்டாலி (Datally) என்ற புதிய அப்ளிகேஷனை வெளியிட்டுள்ளது...


கூகுள் நிறுவனம் ஆன்ட்ராய்டு ஓஎஸ்களைத் தயாரித்தது வெளியிட்டுப் பயனர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதன் தொடர்ச்சியாக நம்பகத்தன்மை கொண்ட அப்ளிகேஷன்களையும் அவ்வப்போது வெளியிட்டுப் பயனர்களின் கவனத்தைத் தன்வசம் ஈர்க்கிறது.
 
இந்த முறை டேட்டாலி என்ற புதிய அப்ளிகேஷன் மூலம் பயனர்களின் டேட்டா பயன்பாட்டினை கண்காணித்து அதனைக் கட்டுப்படுத்தும் முயற்சியை கூகுள் நிறுவனம் மேற்கொண்டுள்ளது.


அதன்படி டேட்டாலி என்ற புதிய அப்ளிகேஷன் மூலம் பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் போன்களில் தினந்தோறும், வாரந்தோறும் அல்லது மாதந்தோறும் எந்த அளவிற்கு டேட்டாவை (இணையப் பயன்பாட்டின் அளவு) பயன்படுத்திவருகின்றனர் என்பதைக் கண்டறிய இந்த அப்ளிகேஷன் பயன்படுகிறது.

அதுமட்டுமின்றி பின்புறத்தில் செயல்படும் அப்ளிகேஷன்களைக் கண்டறிந்து அதனைத் தடை செய்யவும் இந்த அப்ளிகேஷன் உதவுகிறது. இந்த அப்ளிகேஷனில் பயனர்கள் பயன்படுத்தும் டேட்டா தகவல்களும் சேமிக்கப்படுகின்றன.

எந்த அப்ளிகேஷன் அதிக டேட்டாவைப் பயன்படுத்தியுள்ளது என்பதைக் கண்டறிய டேட்டாலியில் வசதிகள் வழங்கப்பட்டுள்ளது. அதிகம் டேட்டா பயன்படுத்தும் அப்ளிகேஷனிடமிருந்து டேட்டா அளவினைக் குறைக்க இதில் வசதிகள் இணைக்கப்பட்டுள்ளன.

ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களில் பயனர்கள் எந்த அளவுக்கு டேட்டாவைப் பயன்படுத்துகிறார்கள் என்ற தகவல் இதற்கு முன்னரே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் டேட்டா சேவிங்ஸ் என்ற ஒன்றினை இதில் புதிதாக கூகுள் நிறுவனம் இணைத்துள்ளது. அதேபோல் அருகில் இருக்கும் வைஃபைகளைக் கண்டறியும் வசதியும் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் குறித்த வீடியோ பதிவினையும் கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

Cell Phone பயன்படுத்தினால் மூளை புற்றுநோய்க்கு 400% வாய்ப்பு...

இனி செல்போன் செயலி மூலமாகவே சிம்கார்டுடன் ஆதாரை இணைக்கலாம்!

செல்லிடப்பேசிகளில் பயன்படுத்தப்படும் சிம் கார்டுடன் – ஆதார் எண்
இணைப்பதற்கான நடைமுறையை எளிதாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அந்த வகையில், இணையதளம் வாயிலாகவோ அல்லது ஐவிஆர் எனப்படும் செல்போன் அழைப்பு மூலமாகவோ அல்லது செல்போன் செயலி மூலமாகவோ இருந்த இடத்தில் இருந்தே செல்போன் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

செல்லிடப்பேசி பயன்படுத்தி வரும் அனைவரும் தங்கள் எண்ணை ஆதாருடன் இணைக்க வேண்டுமென்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்கு அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை கால அவகாசம் உள்ளது.

ஆதார் எண்ணை இணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்கள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. இப்போது வாடிக்கையாளர்கள், தொலைத்தொடர்பு நிறுவன மையங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைத்து வருகின்றனர்.

எனினும், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், நோய்வாய்பட்டிருப்பவர்கள் நேரடியாக சென்று ஆதார் எண்ணை இணைப்பதில் சிரமம் உள்ளது.

எனவே, இதுபோன்ற சூழ்நிலையில் இருப்பவர்களின் இல்லங்களுக்கு நேரடியாகச் சென்று ஆதார் எண்ணை இணைக்க தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தவிர செல்லிடப்பேசி செயலி, இணையதளம் மூலம் ஆதாரை இணைக்க வசதி செய்யப்பட்டுள்ளது. முக்கியமாக இந்த வசதிகளைப் பயன்படுத்தி ஆதார் எண் பெறும்போது அளித்த செல்லிடப்பேசி எண்ணை மிக எளிதாக இணைக்க முடியும்.

ஏனெனில் ஆதார் எண் பெறும்போது சுமார் 50 கோடி பேர் தங்கள் செல்லிடப்பேசி எண்ணை அளித்துள்ளனர். அவர்கள் அந்த எண்ணை மிக எளிதாக ஆதாருடன் இணைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி செல்போனில் பதிவிறக்கம் செய்யப்படும் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் உதாரணமாக வோடஃபோன், ஏர்டெல் போன்ற நிறுவனங்களின் செயலியை பதிவிறக்கம் செய்து அதன் மூலம் எளிதாக ஆதார் எண்ணை இணைத்து விடலாம்.

செல்போன் செயலியில் ஆதார் எண்ணை எப்படி இணைப்பது என்று பார்க்கலாம்?
எந்த செல்போன் நிறுவனத்தின் சிம்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டுமோ அந்த நிறுவனத்தின் செயலியை பதவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.

அந்த செயலியை திறந்து, அதில்  KYC என்ற வசதியை க்ளிக் செய்து, அதில் 10 இலக்கங்கள் கொண்ட உங்கள் செல்போன் எண்ணைப் பதிவு செய்யுங்கள். தொடர்ந்து உங்கள் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் எண்ணையும் பதிவு செய்ய வேண்டும்.

பிறகு உங்களுக்கு ஒரு ஓடிபி எனப்படும் ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பி வைக்கப்படும். இந்த ஓடிபி என்பது, நீங்கள் ஆதார் அட்டை பெறும் போது அதில் பதிவு செய்த செல்போன் எண்ணுக்குத்தான் அனுப்பி வைக்கப்படும்.

செயலியில் அளிக்கப்படும் குறிப்பிட்ட நேரத்துக்குள் ஓடிபியை பதிவு செய்வது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த ஓடிபியை பதிவு செய்ததும், உங்கள் செல்போன் எண்ணுடன் ஆதார் இணைக்கப்பட்டுவிடும். அதற்கான குறுந்தகவலும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி வைக்கப்படும்.


அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் சாப்பிட குழந்தைகளுக்கு ஆதார் கட்டாயம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது!


அங்கன்வாடி பள்ளிக்கூடங்களில் குழந்தைகள் சாப்பிட தேசிய ஊட்டச்சத்து 
மிஷன் அடிப்படையில் ஆதார் அவசியம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ஆதார் மூலமாக குழந்தைகள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பால் கொடுக்கும் தாய்மார்களைக் கண்காணிக்கவும், அவர்களுக்கு ஊட்டச்சத்து முறையாக கிடைப்பதை உறுதி செய்யவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இதன்மூலம் குழந்தைகளின் பெயரைச்சொல்லி அரசின் வளங்கள் சுரண்டப்படுவதையும், குழந்தைகளுக்கு முறையாக அரசின் வளங்களைக் கொண்டுசேர்ப்பதை உறுதி செய்வதற்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய குழந்தைகள் மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர், அசாம் மாநிலத்தில் மட்டும் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட போலியான பெயர்களைப் பயன்படுத்தி அங்கன்வாடி உணவுகள் வீணாகின்றன. இதனால், அரசுக்கு நாளொன்றுக்கு ரூ.30 லட்சம் வரை செலவாகிறது என குறிப்பிட்டுள்ளார்.

ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் இல்லை என்பதால், இந்தத் திட்டத்திற்காக வயது வரம்பை மூன்றாக குறைக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குழந்தைகள் தினமும் ஆதார் கொண்டு செல்லத் தேவையில்லை என்றும், அதைப் பராமரிக்க பணியாளர்கள் நியமிக்கப் படுவார்கள் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

G.O 303 : 01-01-2016 TO 30-09-2017 PENSIONERS LIST PUBLISHED - ALL DEPARTMENTS...