திங்கள், 13 ஜனவரி, 2020

Go No:05 date:06.01.2020 fundamentals rules - Special casual leave - government servant under going chemotherapy/radiotherapy treatment of cancer - amendment of FR- 85 orders issued

போகிப்பண்டிகை அன்று பழையபொருட்களை எரிக்க வேண்டாம் ~கலெக்டர் வேண்டுகோள்…

Go No:193 date:23.12.2019 Fundamentals rules-FR56 -retierment in the event of retirement on superannuation/voloutary/compulsory/medical invalidation -standard format of retirement orders - issued

வருமான வரி படிவம் தயார் செய்ய மார்ச் 19 முதல் டிசம்பர் 19 வரையிலான E payslip பதிவேற்றம்...

 தங்களின் மார்ச் 19 முதல் டிசம்பர் 19 வரையிலான ஊதிய விவரங்களை கீழ் கண்ட link ஐ click செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம்...

Link...

2020 ஆம் ஆண்டின் வரையறுக்கப்பட்ட விடுப்புகள்...


✳புகையில்லா போகி 2020 கொண்டாடுதல் சார்பான நாமக்கல் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செயல்முறைகள்.
ஜனவரி 13,
வரலாற்றில் இன்று.

மிக்கி மவுஸ்,
 கார்ட்டூன் துணுக்குகளாக முதன் முதலாக வெளிவரத்தொடங்கிய தினம் இன்று (1930).
ஜனவரி 13,
வரலாற்றில் இன்று.


உலகம் முழுவதும் கிளை பரப்பி தொண்டாற்றிவரும் சர்வதேச அரிமா சங்கத்தின் நிறுவனர் மெல்வின் ஜோன்ஸ் (Melvin Jones) பிறந்த தினம் இன்று.

அமெரிக்காவின் அரிசோனா மாநிலம் ஃபோர்ட் தாமஸ் நகரில் (1879) பிறந்தார். தந்தை ராணுவ கேப்டன். கல்லூரிப் படிப்பை முடித்த மெல்வின் சிகாகோவில் காப்பீடு நிறுவனத்தில் விற்பனையாளராகப் பணிபுரிந்தார். அதில் ஏற்பட்ட அனுபவத்தால், 1913இல் சொந்தமாக காப்பீடு ஏஜென்ஸி தொடங்கினார்.


 விரைவில் சிகாகோ நகரின் வெற்றிகரமான தொழிலதிபராக மாறினார். அப்போது, வணிக வளர்ச்சி குறித்து கருத்து பரிமாற்றம் செய்துகொள்வதற்காக சிகாகோவில் வணிக வட்டம் என்ற அமைப்பு செயல்பட்டது. இதன் உறுப்பினரான மெல்வின் தன் திறமையால் சங்கத்தின் செயலாளர் ஆனார்.


 பேச்சாற்றலாலும், திட்டங்களாலும் அனைவரையும் கவர்ந்தார். 1916இல் வணிக வட்டத்தின் இயக்குநர்கள் கூட்டத்தில், ‘சங்கம் தன் குறுகிய வட்டத்தில் இருந்து வெளியே வந்து சமுதாயத்துக்கும் ஏழை மக்களுக்கும் தொண்டாற்ற வேண்டும்’ என்ற கருத்தை எடுத்துக் கூறினார். இதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.

 அரிமா சங்கத்துக்கான அடித்தளம் அமைந்தது இப்படித்தான்.

 அமெரிக்கா முழுவதும் இதுபோல பல வணிக வட்டங்கள் இயங்கி வந்தன. அவை ஒருங்கிணைந்து உயர்ந்த இலக்கை நோக்கி பாடுபடவேண்டும் என்று அனைத்து சங்கங்களுக்கும் தொடர்ந்து கடிதம் எழுதினார்.


 இதை வலியுறுத்தி பல கூட்டங்களுக்கும் நேரில் சென்று உரையாற்றினார். இவரது தொடர் முயற்சிகளுக்கு பலன் கிடைத்தது.

1917 ஜூன் 7ஆம் தேதி நாடு முழுவதும் ஏறக்குறைய அனைத்து வர்த்தக வட்டங்களில் உள்ள உறுப்பினர்களும் கலந்துகொண்ட மாபெரும் கூட்டம் நடந்தது.


அனைத்து வர்த்தக வட்ட அமைப்புகளும் இனி ஒருங்கிணைந்து ‘லயன்ஸ் கிளப்’ என்ற பெயரில் செயல்படுவது என அந்த கூட்டத்தில் ஒருமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ‘லயன்ஸ் கிளப்’ அமைப்பின் முதல் செயலாளராக மெல்வின் தேர்ந்தெடுக்கப்பட்டார்.


 இந்த அமைப்புக்கென சட்ட திட்டங்கள், கொள்கைகள், கோட்பாடுகள் வகுக்கப்பட்டன. சமுதாய உணர்வு கொண்ட உறுப்பினர்கள் ஏராளமாக அதில் இணைந்தனர். கனடாவில் 1920இல் ஒரு கிளை தொடங்கப்பட்டது. வெகு வேகமாக உலகெங்கும் பரந்து விரிந்து பன்னாட்டு இயக்கமாக மலர்ந்தது.


1926இல் தனது காப்பீட்டுத் தொழிலை விட்டுவிட்டு அரிமா சங்கத்தின் முழு நேரப் பணியாளராகப் பொறுப்பேற்றார். இவரது செயல்திறன் மிக்க தலைமையின் கீழ் லயன்ஸ் கிளப் அபார வளர்ச்சி பெற்றது. இதில் உறுப்பினராக இருப்பது கவுரவம், அந்தஸ்துக்கு உரியதாகவும் மாறியது.

ஆண்டுகள் ஆகஆக இதன் வளர்ச்சி பல மடங்கு அதிகரித்தது. 1950இல் உறுப்பினர் எண்ணிக்கை 4 லட்சத்தை எட்டியது. இதையடுத்து, சர்வதேச அரிமா சங்கத்தின் ஆயுட்காலப் பொதுச் செயலாளர் என்ற பதவியை நிர்வாகக் குழு இவருக்கு வழங்கியது.

லயன்ஸ் கிளப் (அரிமா சங்கம்) வளர்ச்சிக்காகவும் சமுதாய மேம்பாட்டுக்காகவும் தன் வாழ்நாள் இறுதிவரை தொண்டாற்றிய மெல்வின் ஜோன்ஸ் 82ஆவது வயதில் (1961) மறைந்தார்.

இவரது பிறந்த தினமான ஜனவரி 13ஆம் தேதி உலகம் முழுவதும் அரிமா சங்கத்தினரால் ‘டே ஆஃப் மெமரி’யாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.
ஜனவரி 13,
வரலாற்றில் இன்று.

ப்ளாஸ்டிக் கார் தயாரிக்கும் முறைக்கு ஹென்றி ஃபோர்ட் காப்புரிமை பெற்ற தினம் இன்று (1942).

 சோயாபீன், கோதுமை, மக்காச்சோளம் உள்ளிட்ட விவசாய உற்பத்தித் பொருட்களைப் பயன்படுத்தி, ஜார்ஜ் வாஷிங்டன் கார்வர் என்ற தாவரவியலாளரின் உதவியுடன் ஃபோர்ட் உருவாக்கிய இந்தக் கார், 1941 ஆகஸ்டிலேயே பொதுமக்கள் பார்வைக்குக் காட்சிப்படுத்தப்பட்டது.

 சணல் செடியிலிருந்து உருவாக்கப்படும் உயிரி எரிபொருளால் இயங்கக்கூடியதாக இருந்த இந்தக் காரை, விவசாயத்தையும், தொழில்துறையையும் ஒருங்கிணைப்பதற்காக உருவாக்கியதாகவும், உலோகத்தாலான கார்களைவிடப் பாதுகாப்பானது என்றும் ஃபோர்ட் குறிப்பிட்டார்.

 இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் நிலவிய இரும்புத் தட்டுப்பாட்டால், பெருமளவு இரும்பு ஆயுதத் தயாரிப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலையில், வாகனத் தயாரிப்புக்கு மிகக் குறைந்த அளவு இரும்பே ஒதுக்கீடு செய்யப்பட்டதற்குத் தீர்வாக இந்தக் காரை உருவாக்கியிருந்தார். உலோகத்தாலான வழக்கமான கார்களின் எடையில் முக்கால் பங்கு மட்டுமே இருந்ததால், இது எரிபொருளையும் குறைவாகப் பயன்படுத்தியது. ஆனால், இரண்டாம் உலகப்போர்க் காலத்தில், அமெரிக்கக் கார்த் தொழிற்சாலைகளை, அரசு ஆயுதம் தயாரிக்கப் பயன்படுத்திக்கொண்டதால், இந்தக் கார் உற்பத்தி செய்யப்படாமலேயே நின்றுபோனது.  மோட்டார் காரைக் கண்டுபிடித்தவர் ஃபோர்ட் இல்லையென்றாலும்,  கார் உற்பத்தியில் அவர் கொண்டு வந்த முன்னேற்றங்கள்தான், 1920-40 காலத்தில் உலகிலிருந்த மொத்தக் கார்களில் பாதி ஃபோர்ட் கார்களாக இருக்கக் காரணமாயின. அவர் கொண்டுவந்த முன்னேற்றங்களில் முக்கியமானது, 1930களிலேயே கார்களில் ப்ளாஸ்டிக் பாகங்களை அறிமுகப்படுத்தியதாகும்.

கார்கள் வெளியிடும் மாசுக்கான சுற்றுச்சூழல் கட்டுப்பாடுகளுக்குத் தீர்வாக, தற்காலத்திய முன்னேறிய கார்களில் 50 சதவீதம் வரை ப்ளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஆனாலும், இவை காரின் எடையில் 10 சதவீதம் மட்டுமே இருப்பதால், காரின் எடையை மிகப்பெரிய அளவுக்குக் குறைத்து, எரிபொருளைச் சேமிக்கின்றன. தேவையான வடிவங்களை உருவாக்குவதற்கு, உலோகத்தைவிட ப்ளாஸ்டிக் சிறந்த தேர்வு என்பதுடன், பாதுகாப்பும் அதிகம், எரிபொருளும் குறைவாகச் செலவாகும் ஆகிய காரணங்களால், கார்களில் ப்ளாஸ்டிக் பாகங்கள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன.
ஜனவரி 13, வரலாற்றில் இன்று.

விண்ணில் பறந்த முதல் இந்தியர் ராகேஷ் ஷர்மா பிறந்த தினம் இன்று.

 கடந்த 1984ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி ரஷ்யாவின் ‌சோயூஸ் விண்கலம் வாயிலாக விண்ணிற்கு செல்லும் குழுவில், இந்தியாவின் ராகேஷ் ஷர்மா  இடம்பெற்றார். இவர் தான் விண்ணிற்கு அனுப்பிவைக்கப்பட்ட முதல் இந்தியர் என்ற பெருமையினை பெற்றார்.

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவைச்சேர்ந்த ராகேஷ் ஷர்மா. 1949ஆம் வருடம் ஜனவரி 13ஆம் தேதி பிறந்தார். தமது 21 வயதிலேயே (1970) இந்திய விமானப்படையில் சேர்ந்தார். பின்‌னர் படிப்படியாக பல்வேறு விமானப்படையில் பல்வேறு பொறுப்புக்களை வகித்து, மிக் ரக போர் விமானங்களை இயக்கி அதில் வெற்றியும் கண்டார். அன்றைய ‌‌‌சோவியத் யூனியன் (ரஷ்யா,) பிரான்ஸ் மற்றும் வார்சா ஒப்பந்த நாடுகளுக்கு போர்விமானங்கள் குறித்த பயிற்சிக்கு சென்றார். இவரின் துடிப்புமிக்க பணியினை வெளிநாட்டவர்களே பாராட்டினர். இந்த சூழ்நிலையில் தான் கடந்த 1982ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி ரஷ்ய விண்வெளி ஆய்வு மையம், விண்ணிற்கு மனிதனை அனுப்பும் முயற்சியில் இறங்கியது. இதற்காக சோயூஸ் விண்கலம் தயாரானது. இதில் அந்நாட்டைச்சேர்ந்த இரு விண்வெளி வீரர்களில் மூன்றாவது வீரராக இந்தியாவின் ராகேஷ் ஷர்மாவும் தேர்வு செய்யப்பட்டார். இதன்படி ரஷ்யாவின் கஜகஸ்தான் மாகாணத்தின் பைகானூர் விண்வெளி நிலையத்திலிருந்து சோயூஸ்-டி.11 விண்கலம் கடந்த 1982ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி விண்ணில் புறப்படத்தயாரானது. மொத்தம் 7 டன் எடைகொண்ட இந்த விண்கலத்தில், விண்வெளி விஞ்ஞானிகள் கையசைத்து வழியனுப்பி வைக்க விண்ணில் பறந்தார் ஷர்மா. மொத்தம் 7 நாட்கள், 21 மணிநேரம், 40 நிமிடங்கள் விண்வெளியில் பயணித்தார். இதன் மூலம் விண்ணில் கால்தடம் பதித்த முதல் இந்தியர் என்ற பெருமையினை பெற்றார். விண்வெளிக்கு சென்று வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினார். ஷர்மாவை அப்போதைய பிரதமர் இந்திரா பாராட்டினார்.

ரஷ்யாவின் உயரிய விருது, இந்தியாவில் அ‌சோக்சக்ரா விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் (ஹெச்.ஏ.எல்.), தேசிய விமான பயிற்சி மையம் (என்.எப்.டி.சி) உள்ள மையங்களில் பல்வேறு பொறுப்புக்களை வகித்த ஷர்மா கடந்த 2001ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

இவர் ஓய்வு பெற்றாலும், இந்திய விண்வெளித்துறைக்கு இவர் ஆற்றிய சேவை அளப்பரியது.இதன்பின்னர் , இந்தியாவின் கல்பனா ‌சாவ்லா, சுனிதா வில்லிம்ஸ் ஆகி‌யோர் விண்வெளிக்கு சென்றிருந்தாலும், இவர்கள் அமெரிக்கவாழ் இந்திய வம்சாவழியினர் ஆவார். ஆனால் ராகேஷ் ஷர்மா இந்தியர் என்பதால் இவருக்கு இப்பெருமை உள்ளது.

ITR -1 படிவம் யாருக்கு? 5 புதிய மாற்றங்கள் அறிமுகம்...