வெள்ளி, 16 நவம்பர், 2018

நாமக்கல்லில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டு போட்டி



தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் நாமக்கல் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டியை மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் தொடங்கி வைத்தார்.



இதையொட்டி கால், கை ஊனமுற்றோர், குள்ளமானோர்களுக்கு 50 மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், கால் ஊனமுற்றோருக்கு குண்டு எறிதல் போட்டியும், இருகால்களும் ஊனமுற்றோருக்கு 100 மீட்டர் சக்கர நாற்காலி போட்டியும் நடத்தப்பட்டன.
இதேபோல் முற்றிலும் பார்வையற்றோர் மற்றும் மிக குறைந்த பார்வையற்றோருக்கு ஓட்டப்பந்தயம் மற்றும் குண்டு எறிதல் போட்டிகளும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 50 மற்றும் 100 மீட்டர் ஓட்டப்பந்தயமும், காது கேளாதவர்களுக்கு 100 மீட்டர், 200 மீட்டர் மற்றும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் போட்டிகளும் நடத்தப்பட்டது.
இதுதவிர கை, கால் ஊனமுற்றோருக்கு இறகுப்பந்து, மேசைப்பந்து போட்டிகளும், பார்வையற்றோருக்கு கைப்பந்து போட்டியும், மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு எறிபந்து போட்டியும், காது கேளாதவர்களுக்கு கபடி போட்டியும் நடத்தப்பட்டது. இதில் சுமார் 500 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை மாவட்ட விளையாட்டு அலுவலர் பெரியகருப்பன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெகதீசன் மற்றும் பணியாளர்கள் செய்து இருந்தனர்.


தூய்மையான பள்ளிகள் குறித்த விழிப்புணர்வு போட்டி: வெற்றிபெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு கலெக்டர் ஆசியா மரியம் வழங்கினார்



நாமக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் மற்றும் பள்ளி கல்வித்துறையின் மூலம் “தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி திட்டம்“ சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வரும் குமாரபாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாநில அளவிலான விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இப்பள்ளிக்கு தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.30 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் நற்சான்றிதழ் வழங்கினார்.

இதேபோல் பரளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, எலச்சிபாளையம், கொழிஞ்சிப்பட்டி, ஆர்.புதுப்பட்டி ஆகிய 3 ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், வலையப்பட்டி மற்றும் வரகூர் அரசு மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் பாண்டமங்கலம் விவேகானந்தா மேல்நிலைப்பள்ளி ஆகிய 7 பள்ளிகள் மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகளாக தேர்வு செய்யப்பட்டு இருந்தன. இந்த பள்ளிகளுக்கு மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் ரூ.10 ஆயிரம் காசோலையும், நற்சான்றிதழும் வழங்கினார். மேலும் சுகாதாரம் சார்ந்து சிறப்பாக செயல்பட்டு வரும் 39 பள்ளிகளுக்கு ரூ.5 ஆயிரம் காசோலையும், நற்சான்றிதழும் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் “தூய்மையான பாரதம், தூய்மையான பள்ளி” குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் பொருட்டு மாவட்ட அளவில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கட்டுரை போட்டி மற்றும் ஓவியப்போட்டி நடத்தப்பட்டது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கும் மாவட்ட கலெக்டர் ஆசியா மரியம் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார். இதில் முதன்மை கல்வி அதிகாரி உஷா மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


ஆந்திராவில் சிபிஐயை தடைசெய்தது சந்திரபாபு நாயுடு அரசு!


     

ஆந்திராவில் சிபிஐ தன்னுடைய அதிகாரத்தை பயன்படுத்துவதற்கு வழங்கிய அனுமதியை சந்திரபாபு நாயுடு அரசு திரும்ப பெற்றது

 ஆந்திராவில் சோதனைகள் மற்றும் விசாரணைகளை மேற்கொள்ள வழங்கிய அனுமதியை அம்மாநில அரசு திரும்ப பெற்றது. இந்த உத்தரவை அடுத்து சிபிஐ ஆந்திரா எல்லைக்குள் எந்தஒரு சோதனையும் மேற்கொள்ள முடியாது, விசாரிக்கவும் முடியாது. சிபிஐ டெல்லி சிறப்புப்படை பிரிவு சட்டத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது. சட்டத்தின்படி, டெல்லியில் மட்டுமே சிபிஐ அதிகாரம் பெற்றது. பிற மாநிலங்களில் நுழைய அம்மாநிலங்களில் ஒருமனதான சம்மதத்தை பெற வேண்டியது கட்டாயமாகும். இந்நிலையில் ஆந்திராவில் சிபிஐயின் அதிகாரத்தை தடுக்கும் வகையில் ரகசிய உத்தரவை அம்மாநில உள்துறை கொள்கை செயலாளர் ஏ.ஆர். அனுராதா நவம்பர் 8-ம் தேதி பிறப்பித்துள்ளார். 


இது, நேற்று இரவு வெளியே தெரியவந்துள்ளது. டெல்லி சிறப்பு போலீஸ் படை சட்டத்தின் பிரிவு 6-ன் படி மாநில அரசு ஒப்புதலை திரும்ப பெறலாம். அதன்படியே மாநில அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அனுமதி வழங்கிய மூன்று மாதங்களில் ஆந்திர மாநில அரசிடம் இருந்து இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 சிபிஐக்கு அனுமதி வழங்கும் வகையில் ஆகஸ்ட் 3-ம் தேதி ஆந்திரா அரசு உத்தரவை வெளியிட்டு இருந்தது. இதற்கிடையே மாநில விசாரணைப்பிரிவின் அதிகார வரம்பை விஸ்தரிக்க ஆந்திரா அரசு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 
இந்நடவடிக்கையை ஆதரித்துள்ள ஆந்திர பிரதேச மாநில துணை முதல்வர் சின்ன ராஜப்பா, சிபிஐக்கு எதிராக குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் காரணமாகவே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். “எங்களுக்கு சிபிஐயின் மீது நம்பிக்கையுள்ளது. ஆனால் சிபிஐயின் தலைமை அதிகாரிகளுக்கு எதிரான சமீபத்திய குற்றச்சாட்டுக்கள் எங்களுடைய ஒப்புதலை திரும்ப பெற செய்யும் கட்டாயத்திற்கு தள்ளியது. சிபிஐ ஒவ்வொரு வழக்கிற்கும் அனுமதியைப் பெற வேண்டும்,” என கூறியுள்ளார். வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட நிபுணர்களுடனான ஆலோசனையை அடுத்தே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார். 

கர்நாடக அரசும் அனுமதியை திரும்ப பெற்றுள்ளது என்று கூறியுள்ள ராஜப்பா, மாநிலத்தில் உள்ள மத்திய அரசு அதிகாரிகளுக்கு எதிராக விசாரணையை மேற்கொள்ள சிபிஐக்கு எந்தஒரு தடையும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார். 
“எங்களுக்கு எப்போது எல்லாம் விசாரணை தொடர்பாக சிபிஐ கோரிக்கை விடுக்கிறதோ அப்போது எல்லாம் தேவையான அனுமதியை வழங்குவோம்,” எனவும் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையே சிபிஐயை தடை செய்வதன் உள்நோக்கம் என்ன என்பதை விளக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கேள்வியை எழுப்பியுள்ளது. சந்திரபாபு நாயுடுவின் நடவடிக்கையை மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி வரவேற்றுள்ளார். சிபிஐயை ஆந்திராவிற்கு பிரவேசிக்க அனுமதிக்க மாட்டோம் என சந்திரபாபு நாயுடு சரியான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். பா.ஜனதாவால் நோட் ஜேஞ்சராக வேண்டுமென்றால் இருக்கலாம், கேம் ஜேஞ்சராக இருக்க முடியாது என மம்தா பானர்ஜி கூறியுள்ளார் .

Naval Dockyard Visakhapatnam-275 Apprentices Recruitment 2018-2019


Naval Dockyard Visakhapatnam Recruitment 2018 2019 | Naval Dockyard Visakhapatnam invites Online Application for the post of 275 Electrician, Electronics Mechanic & Mechanic (Radio & T.V.), Machinis, R & A/C Mechanic, Carpenter Posts. Naval Dockyard Visakhapatnam Apprentices Jobs Notification 2018 Released. Naval Dockyard Visakhapatnam invites online applications for appointment in following Apprentices post in Naval Dockyard Visakhapatnam. Opening Date and time for Submission of Application is 10.11.2018 and end up by 12.12.2018. You can check here Naval Dockyard Visakhapatnam Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, Naval Dockyard Visakhapatnam Selection Process, How to apply, Naval Dockyard Visakhapatnam Syllabus, Naval Dockyard Visakhapatnam Question Paper, Naval Dockyard Visakhapatnam Admit Date Release Date, Naval Dockyard Visakhapatnam Exam Date, Naval Dockyard Visakhapatnam Result Release Date & other rules are given below.



Naval Dockyard Visakhapatnam Recruitment 2018 Notification Highlights

Organization Name: Naval Dockyard Visakhapatnam
Job Category: Central Govt Apprentices Training
Official Website: www.apprenticeship.gov.in
No. of Posts: 275 Vacancies
Name of the Posts: Electrician, Electronics Mechanic & Mechanic (Radio & T.V.), Machinis, R & A/C Mechanic, Carpenter & Various Posts
Job Location: Visakhapatnam
Selection Procedure: Written Exam, Medical Exam, Interview
Starting Date: 10.11.2018
Last Date: 12.12.2018
Application Apply Mode: Online


Educational Qualification:

Apprentices – SSC / Matric / Std X with minimum of 50% (aggregate) and ITI (NCVT) in relevant trades with minimum 65% (aggregate).

Age Limit:

For Gen/ UR Candidates – 01 Apr 1998 to 01 Apr 2005
Go through Naval Dockyard Visakhapatnam official Notification 2018 for more reference

Naval Dockyard Visakhapatnam Apprentices Selection Procedure:

Written Exam, Medical Exam

Interview

How to apply Naval Dockyard Visakhapatnam Apprentices Vacancy?

Step 1: Log on to Naval Dockyard Visakhapatnam Careers Page at official website to www.apprenticeship.gov.in
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit”
Step 8: Take a print out of online application for future use.
Step 9: Hard Copies of the signed application (registered online) along with photocopies of (i) ID proof (ii) Proof of Date of Birth (iii) Educational Certificates: Mark-Sheets/Degree Certificate (iv) Caste and attested copies of relevant documents should be addressed to “The Officer-in-Charge (for Apprenticeship), Naval Dockyard Apprentices School, VM Naval Base S.O., P.O., Visakhapatnam – 530 014, Andhra Pradesh ” by post so as to reach us by 12.12.2018. Envelope must be super-scribed with “APPLICATION FOR THE POST OF “…………….”

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 10.11.2018
Last date for Submission of Application: 12.12.2018
Last Date of Receipt of the Printout of Online Applications Form: 12.12.2018
Date of Examination: Jan/Feb 2019

Online Application & Official Notification Links:




Apply Mode: Online


GAIL Recruitment 2018Notification Highlights 160 posts


GAIL Recruitment 2018 2019 | GAIL invites Online Application for the post of 160 Junior Engineer (JE), Foreman, Junior Chemist, Junior Superintendent, Technician, Assistant Posts. GAIL Foreman, Technician Jobs Notification 2018 Released. GAIL invites online applications for appointment in following Foreman, Technician post in GAIL (India) Limited. Opening Date and time for Submission of Application is 14.11.2018 and end up by 30.11.2018. You can check here GAIL Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, GAIL Selection Process, How to apply, GAIL Syllabus, GAIL Question Paper, GAIL Admit Date Release Date, GAIL Exam Date, GAIL Result Release Date & other rules are given below.



GAIL Recruitment 2018Notification Highlights – Apply Now

Organization Name: GAIL (India) Limited
Job Category: Central Govt Jobs
Official Website: http://gailonline.com/
No. of Posts: 160 Vacancies
Name of the Posts: Junior Engineer (JE), Foreman, Junior Chemist, Junior Superintendent, Technician, Assistant & Various Posts
Qualification: ITI, Diploma, Any Degree, M.Sc
Job Location: All Over India
Selection Procedure: Written Test, Skill Test
Starting Date: 14.11.2018
Last Date: 30.11.2018
Application Apply Mode: Online

Application Fee/Exam Fee:

1. Net banking of any Nationalised/ Private Banks
2. Card payments of any Nationalised/ Private Banks
3. Other Payment Mode: Pre Acknowledgement Payment (PAP) form through State Bank of India Branch.

How to apply GAIL Foreman, Technician Vacancy?

Step 1: Log on to GAIL Careers Page at official website to http://gailonline.com/
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit” & Make Payments
Step 8: Take a print out of online application for future use.

Important Dates to Remember:

Starting Date for Submission of Application: 14.11.2018
Last date for Submission of Application:30.11.2018
Date of Examination: Jan/Feb 2019

Online Application & Official Notification Links:




Apply Mode: Online


சிறப்பு தற்செயல் விடுப்பு விதிகளில் திருத்தம் செய்து அரசாணை எண் 147 வெளியீடு



கல்வி உதவித் தொகை புதுப்பிப்பு விண்ணப்பம்: சி.பி.எஸ்.இ. வரவேற்பு



கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து மத்திய அரசு கல்வி உதவித் தொகைக்கான புதுப்பிப்பு விண்ணப்பத்தை மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) வரவேற்றுள்ளது.
பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு, உயர் கல்வி பெறுவதற்கான கல்வி உதவித் தொகையை படிப்பு க் காலம் முழுவதும் மத்திய அரசு வழங்குகிறது.
கடந்த 2014-இல் இந்த மத்திய கல்வி உதவித் தொகையை வாங்க ஆரம்பித்த கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களிடமிருந்து 4-ஆவது புதுப்பித்தல் விண்ணப்பத்தை சி.பி.எஸ்.இ. வரவேற்றுள்ளது.
இந்த விண்ணப்பப் படிவம் www.cbse.nic.in  என்ற இணையதளத்தல் வெளியிடப்பட்டுள்ளது. ஆன்-லைனில் விண்ணப்பப் பதிவு செய்ய டிசம்பர் 15 கடைசி நாளாகும். அவ்வாறு பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, சமர்ப்பிக்க டிசம்பர் 31 கடைசி நாள் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது.



உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் கல்வெட்டியல் ஓராண்டு பட்டயப் படிப்பு விண்ணப்பிக்கலாம்


சென்னை தரமணியில் உள்ள உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வரும் ஜனவரி முதல் தொடங்கவுள்ள கல்வெட்டியல் மற்றும் தொல்லியல் பட்டயப்படிப்பு படிக்க ஆர்வமுள்ளவர்கள் டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி: கல்வெட்டு, தொல்லியல், அகழாய்வு ஆகியவற்றில் (2019-2020) ஓராண்டு கால பட்டயப் படிப்பு வரும் ஜனவரி மாதம் முதல் சென்னை தரமணியில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்படவுள்ளது.

இந்தப் பயிற்சியில் கல்வெட்டியல், தொல்லியல், தமிழக வரலாறு, பண்பாடு, கலை, இலக்கியம் குறித்து அறிந்து கொள்வதற்கும், கல்வெட்டுப் படியெடுத்தல் மற்றும் ஆவணப்படுத்துதலுக்கான பயிற்சியும் அளிக்கப்படும்.
இந்தப் பட்டயப்படிப்பு சனி, ஞாயிறு ஆகிய விடுமுறை நாள்களில் ஓராண்டு காலம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு கிடையாது.

ஆர்வமுள்ளவர்கள் இந்தப் பட்டய படிப்புக்கான விண்ணப்பத்தினை ulakaththamizh.org என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பயிற்சிக்கான சேர்க்கைக் கட்டணம் ரூ.2,500. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், மத்திய பாலிடெக்னிக் கல்லூரி அருகில், தரமணி, சென்னை என்ற முகவரிக்கு டிசம்பர் 20-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இது குறித்து மேலும் தகவல் பெற 044-22542992, 95000 12272 என்ற எண்களில் தொடர்புகொள்ளலாம்.


IIT Madras Recruitment 2018 Notification Highlights – Apply Online


IIT Madras Recruitment 2018 2019 | IIT Madras invites Online Application for the post of Senior Research Fellow (SRF), Project Associate, Project Technician Posts. IIT Madras SRF, Project Technician Jobs Notification 2018 Released. IIT Madras invites online applications for appointment in following SRF, Project Technician post in Indian Institute Of Technology Madras. Opening Date and time for Submission of Application is 09.11.2018 and end up by 24.11.2018. You can check here IIT Madras Recruitment Eligibility Criteria, Pay Scale, Application Fee/Exam Fee, IIT Madras Selection Process, How to apply, IIT Madras Syllabus, IIT Madras Question Paper, IIT Madras Admit Date Release Date, IIT Madras Exam Date, IIT Madras Result Release Date & other rules are given below.


IIT Madras Recruitment 2018 Notification Highlights – Apply Online
Organization Name: Indian Institute Of Technology Madras
No. of Posts: Vacancies
Name of the Posts: Senior Research Fellow (SRF), Project Associate, Project Technician Posts
Job Location: Chennai
Selection Procedure: Written Test, Skillt Test & Interview
Application Apply Mode: Online
Last Date: 24.11.2018
Name of the Post & No of Vacancies:
Senior Research Fellow
Senior Research Fellow
Project Associate
Project Technician
Security-cumFire Officer
Project Technician
Eligibility Criteria for IIT Madras SRF, Project Technician:
Senior Research Fellow – M.Tech / M.E in Computer Science/ Engineering from a reputed university with an average mark of 60% or 6.5 CGPA and above
Senior Research Fellow – M.Tech/ M.E in Civil Engineering from a reputed university with an average mark of 60% or 6.5 CGPA and above
Project Associate – B.Tech/ B.E in Civil/ Mechanical/ Electrical Engineering from a reputed university with an average mark of 60% or 6.5 CGPA and above.
Project Technician – Diploma in Civil/ Mechanical/ Electrical Engineering with an average mark of 60% and above.
Age Limit:
Go through IIT Madras official Notification 2018 for more reference
Salary Details:
Senior Research Fellow – Rs.30,000 per month
Project Associate – Rs.21500/-
Project Technician – Rs.16000/-
IIT Madras SRF, Project Technician Selection Procedure:
Written Test
Skill Test & Interview
How to apply IIT Madras SRF, Project Technician Vacancy?
Step 1: Log on to IIT Madras Careers Page at official website to https://icsris.iitm.ac.in/recruitment/
Step 2: Eligible candidates are advised to open Notification
Step 3: Read the Advertisement carefully to be sure about your eligibility
Step 4: Click on “Click here for New Registration”, if you are a new user.
Step 5: Fill your Academic Qualification & Other Related Information as per the instructions
Step 6: Ensure the information provided is correct
Step 7: Complete the Registration & Click on “Submit”
Step 8: Take a print out of online application for future use.
Step 9: If there is an issue to submit the application please send E-mail to recruitment@imail.iitm.ac.in / icsrrecruitment@iitm.ac.in
Important Dates to Remember:
Starting Date for Submission of Application: 09.11.2018
Last date for Submission of Application: 24.11.2018
IIT Madras Important Links:
IIT Madras Official Website Career Page: Click Here

IIT Madras Official Notification PDF: Click Here

IIT Madras Online Application Form: Click Here

Apply Mode: Online

குருப்-2 தேர்வுக்கான கீ-ஆன்சர் வெளியீடு~புதிய முறை அமல்~ டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு...

2021ல் மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புவோம்~ இஸ்ரோ தலைவர் சிவன் பேட்டி ...

பிரசவ விடுமுறை தரும் நிறுவனங்களுக்கு 7 வார சம்பளத்தை அரசே வழங்கும்: பெண்கள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவிப்பு







புதுடெல்லி : பிரசவ விடுமுறை தரும் நிறுவனங்களுக்கு கர்ப்பிணிகள் வேலைக்கு வராத 7 வாரங்களுக்கான சம்பளத்தை அரசே வழங்கும் என்று பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களுக்கு 12 வாரமாக இருந்த பிரசவ விடுப்பை கடந்த ஆண்டு 26 வாரங்களாக உயர்த்தி மத்திய அரசு அறிவித்தது. விடுமுறை நீட்டிப்பை பல அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் வழங்க மறுப்பதாக அரசுக்கு புகார்கள் வந்தது. 

இதையடுத்து 15 ஆயிரம் ரூபாய் சம்பளம் பெறும் பெண் தொழிலாளர்கள் பிரசவ விடுப்பு எடுக்கும் 26 வார காலத்தில் 7 வாரங்களுக்கான சம்பளத்தை வேலைவழங்கும் நிறுவனங்களுக்கு அரசே வழங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 
இது தொடர்பாக மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சக செயலாளர் ராகேஷ் ஸ்ரீவத்சவா கூறியதாவது: மாநில அரசுகளிடம் பணியாளர் நலவரி குறைவாக இருப்பதால் அதை மத்திய தொழிலாளர் அமைச்சகமே இந்த தொகையை பிரசவ விடுமுறை அளிக்கும் நிறுவனங்களுக்கு வழங்கும். கூடுதலாக பிரசவ விடுமுறை அறிவிக்கப்பட்ட 14 மாதங்களில் பாதி காலத்திற்கான தொகையை அரசு ஏற்கும். அதன்படி மாதச்சம்பளம் ரூ.15 ஆயிரத்திற்கும் அதிகமாக பெறும் பெண் ஊழியர்களுக்கான 7 வார பிரசவ விடுப்புக்கான சம்பள தொகை சம்மந்தப்பட்ட வேலை வழங்கும் நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதனால் கர்ப்பிணி ஊழியர்கள் மீண்டும் பணிக்கு திரும்பும்போது எந்த பாதிப்பும் ஏற்படாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.



பாடப் புத்தகங்கள் வழங்குவதில் காலதாமதம்: சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு பாதிப்பு


பாடப் புத்தகங்கள் வழங்குவதில் கல்வித் துறை காலம் தாழ்த்தி வருவதால் சிறுபான்மை மொழிகளில் படித்து வரும் மாணவர்கள் புத்தகங்கள் இன்றி அவதிக்குள்ளாகி வருவதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட அரசுப் பள்ளிகளில் தெலுங்கு, உருது, கன்னடம் ஆகிய சிறுபான்மை மொழிகளில் படித்து வரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்குவதில் ஏற்படும் காலதாமதத்தால், அவர்களது கல்வித் தரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. கட்டாய தமிழ் வழிக்கல்வி சட்டத்தை தொடர்ந்து, கடந்த 2006-ஆம் ஆண்டு முதல் தமிழ் அல்லாத சிறுபான்மை மொழிகளில் படித்து வரும் மாணவர்கள், தமிழை ஒரு பாடமாக கட்டாயம் படிக்க வேண்டும் என்ற நிலை உள்ளது.
அனைவருக்கும் ஒரே விதமான சமச்சீர் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்த தமிழக அரசு, மாணவர்களுக்கு புத்தக சுமையைக் குறைக்கும் நோக்கில் பாடப் புத்தகங்களை பருவ முறையைப் பின்பற்றி மூன்று பருவங்களாகப் பிரித்து வழங்கி வருகின்றது. கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறந்த முதல் நாளே மாணவர்கள் அனைவருக்கும் பாடப் புத்தகங்கள் உள்பட கல்வி உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளில் சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு பள்ளிகள் திறந்து 5 மாதங்கள் கடந்த நிலையிலும், பாடப் புத்தகங்கள் கிடைக்கவில்லையாம். தற்போது இரண்டாம் பருவ பாட நூல்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டாலும், சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு முதல் பருவ பாட நூல்கள் கிடைக்காததால் மாணவர்களின் கல்வித் தரம் கேள்விக் குறியாகி உள்ளது.

தமிழ்ப் பாட நூல்களை வைத்து சிறுபான்மை ஆசிரியர்கள் மாணவர்களுக்கு வகுப்பு எடுத்து நோட்டுப் புத்தகங்களில் மாணவர்கள் எழுதிக்கொண்டு படிக்க வேண்டிய நிலை உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் மட்டும் 30-க்கும் மேற்பட்ட தெலுங்கு தொடக்கப் பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் பயின்றுவரும் மாணவர்களுக்கு பாடப் புத்தகங்கள் கிடைக்காத நிலையில், கற்றல் திறன் குறைந்து வருகிறது. தமிழக அரசு பாட நூல்கள் குறித்து விளக்கம் அளித்தால் மட்டுமே பெற்றோர்கள் அடுத்த கட்டமாக தங்கள் குழந்தைகளை எங்கு சேர்க்க வேண்டும் என்று முடிவை செய்ய முடியும் என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், பாட நூல்களை மொழிமாற்றம் செய்யும் பணிகளில் தெலுங்கு மற்றும் சிறுபான்மை மொழி ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் மொழிப் பெயர்ப்பு பணிகள் வேகமாக நடைபெற்று 95 சதவீதம் பணிகள் முடிந்துவிட்டன. தற்போது புத்தகங்கள் அச்சிடும் பணிகள் துரிதகதியில் நடந்து வருகின்றன. விரைவில் தெலுங்கு மற்றும் சிறுபான்மை மொழி மாணவர்களுக்கு பாட நூல்கள் வழங்கப்படும் என்றார்.