வெள்ளி, 2 பிப்ரவரி, 2018

SmartPhoneல் நீங்கள் On/Off செய்ய வேண்டிய முக்கியமான 3 Settings...


ஸ்மார்ட்போனில் உள்ள செட்டிங்ஸ் பற்றிய அனைத்து தகவல்களையும் அறிந்து பயன்படுத்த வேண்டும், அவ்வாறு பயன்படுத்தினால் தான் உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் புகைப்படங்கள் மற்றும் பல்வேறு தகவல்கள் பாதுகாப்புடன் இருக்கும். ஸ்மார்ட்போனில் உள்ள தேவையற்ற செட்டிங்ஸ் முறையை ஆஃப் செய்வது மிகமுக்கியம்.

க்ரோம்:

ஸ்மார்ட்போனில் கூகுள் க்ரோம் மூலம் இண்டர்நெட் பயன்படுத்துவோர் அதிக கவனமாக இருத்தல் வேண்டும், மேலும் உங்களுடைய தகவல்களை கூகுள் க்ரோம் மூலம் ட்ராக் செய்ய வாய்ப்பு உள்ளது, இதனை தவிரிக்க சில வழிமுறைகளை பார்ப்போம். 

வழிமுறை-1: 

முதலில் உங்கடைய கூகுள் க்ரோம் இண்டர்நெட் பக்கத்தை ஓபன் செய்து, அதில் மேலே கொடுக்கப்பட்டடுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். 

வழிமுறை-2: 

அதன்பின்பு செட்டிங்ஸ் பகுதியில் நுழைந்தால், privacy-எனும் அமைப்பை கிளிக் செய்ய வேண்டும். 

வழிமுறை-3: 

அடுத்து privacy-பகுதயில் உள்ள do not track-எனும் அமைப்பு ஆஃப் செய்யப்பட்டிருக்கும், அதை ஆன் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்களுடைய தகவல்கள் பாதுகாப்புடன் இருக்கும் 

பாப்-அப் : 

உங்கள் ஸ்மார்ட்போனில் தேவையற்ற புகைப்படங்கள், விளம்பரங்கள், தகவல்கள் போன்றவற்றை தவிர்க்க பாப்-அப் நோட்டிபிகேஷனை ஆப் செய்ய வேண்டும், இதற்கான சில வழிமுறைகள் உள்ளது. 

வழிமுறை-1: 

முதலில் உங்கடைய கூகுள் க்ரோம் இண்டர்நெட் பக்கத்தை ஓபன் செய்து, அதில் மேலே கொடுக்கப்பட்டடுள்ள மூன்று புள்ளிகளை கிளிக் செய்ய வேண்டும். 

வழிமுறை-2: 

அதன்பின்பு செட்டிங்ஸ் பகுதியில் site setting-எனும் அமைப்பு இருக்கும், அவற்றை கிளிக் செய்து  பாப்-அப் நோட்டிபிகேஷனை ஆப் செய்ய முடியும். 

நோட்டிபிகேஷன்: 

வழிமுறை-1: 

உங்கள் ஸ்மார்ட்போனில் நேரடியாக உள்ள செட்டிங்ஸ் பகுதியில் நோட்டிபிகேஷன் எனும் ஒரு அமைப்பு இருக்கும், அவற்றில் உள்ள don't show notification at all-எனும் விருப்பத்தை கிளிக் செய்தால் உங்கள் ஸ்மார்ட்போனுக்கு வரும் தகவல்கள் மற்றும் செய்திகள் மிகவும் பாதுகாப்புடன் இருக்கும்.

DSE - பள்ளிகளில் டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்பு இயக்குநரின் செயல்முறைகள்...

EMIS மற்றும் பள்ளியின் Attendance Register ஆகியவற்றை பள்ளி வாரியாக ஆய்வு செய்ய குழு - DEEO செயல்முறைகள்...

EMIS-Report as on 02-02-2018 - All District...

தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் தங்களுடைய கணக்கில் வந்து சேரும் என்பதனை அறிய...

தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் தங்களுடைய கணக்கில் வந்து சேரும் என்பதனை அறிய கீழே உள்ள link ஐ click செய்யவும்...

பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுக்க உத்தரவு...


தமிழகம் முழுவதும், பள்ளி செல்லாத குழந்தைகளை கணக்கெடுக்கும்படி, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 

கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஐந்து முதல் 14 வயது வரையுள்ள குழந்தைகள், கட்டாயம் பள்ளியில் சேர வேண்டும். இதற்கு, தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள, பள்ளிகளுக்கு, மத்திய அரசு நிதியுதவி அளிக்கிறது.

அதன்படி, அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், அருகில் உள்ள பகுதிகளை சேர்ந்த 14 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகளை பள்ளியில் சேர்க்க வேண்டும். அதையும் மீறி, சேர்க்கப்படாத குழந்தைகள், படிப்பை பாதியில் முடித்தவர்கள் பற்றிய விபரங்களை கணக்கெடுக்க, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கும், அனைவருக்கும் கல்வி இயக்கமான, எஸ்.எஸ்.ஏ.,வில் இருந்து, இதற்கான சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

அஞ்சல்தலை சேகரிப்பு-உதவித்தொகை திட்டம்...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம் (31-01-2018)~மாநில அமைப்பின் வாழ்த்துக்கள்...

வணக்கம். ஆசிரியர் மன்ற செயற்க்குழு தீர்மான அறிக்கைபடி பாவலரின் அறிவிப்பான

 1.கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வர வேண்டுமென மத்திய அரசை கோரியும், 

2.எ மற்றும் பி பிரிவு ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் மிகை ஊதியம் கோரி மாநில அரசை வலியுறுத்தியும், 

3.தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது அமர்ந்திருந்து தமிழை அவமரியாதை செய்த காஞ்சிபுரம் சங்கர மடம் திரு.விஜயேந்திரர் அவர்களின் செயலை கண்டித்தும் கண்டன ஆர்பாட்ட போர்பாட்டம் செய்யுமாறு தமிழகத்தை 6 மண்டலங்களாக பிரித்து கண்டன முழக்கங்கள் எழுப்புமாறு மன்ற மறவர்களையும் மறத்தியர்களையும் பணித்தார். பாவலரின் கட்டளைக்கு இணங்கி 6 மண்டலங்களிலும் ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொருப்பாளர்களும், மன்ற மறவர்களும், மறத்தியர்களும் பெரும் திரளாக பொங்கி எழுந்து ஒன்று கூடி உணர்வு பூர்வமாகவும் எழுச்சியோடும் ஆர்பாட்ட போர்பாட்டம் நடத்தினார்கள். ஆசிரியர் மன்றத்தின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர பொருப்பாளர்கள் உள்ளிட்ட அத்துனை மன்ற மறவர்களுக்கும் மறத்தியர்களுக்கும் மாநில அமைப்பின் சார்பாக வாடாத வாழ்த்துக்களையும் வற்றாத நன்றிகளையும் இதய பூர்வமான அளவில்லாத ஆசிகளையும் எண்ணிலடங்காத நன்றிகளோடு தெரிவித்துக் கொள்கின்றேன். நன்றி! நன்றி!! நன்றி!!! நன்றி!!!   மாநில அமைப்பு.

நன்றியுடன்  பாவலர். *திரு க.மீனாட்சிசுந்தரம்* பொதுச்செயலாளர், தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம்.

தொடக்கக் கல்வியில் புதிய கற்றல் முறை...

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்~மாபெரும் ஆர்ப்பாட்டப் போராட்டம் (31-01-2018)~நாளிதழ் செய்திகள்...